திங்கள், டிசம்பர் 19, 2011

SARASWATHY



சரஸ்வதி பூஜா

   கலைமகள் போற்றி
அலை பாயும் மனதை,
நிலை நிறுத்த,
அறியாமை
 நோயகற்றும்,
கலைமகளே !!! போற்றி.!!! போற்றி.!!!

அலைமகள் !
அருள் பெற்றவர்களை,
நின் அருள் பெற்றவர்கள்
நாடிச்சென்றாலும்,
அலைகடல்
 தாண்டி சென்று,
அலைமகள்
 கருணைபெற,
கலைமகளே துணை .!!!
உன் அறிவு தரும்
 கருணைக்கு...
கலை மகளே !!!
 போற்றி போற்றி.!!!
மலை மகள்  மகிழ்ந்து,
வீரமதைத் தந்தாலும்,
உன்னருள் இன்றி,
உயர்ந்தவன் ஆவது,
அவனியில் அர்த்தமன்று.
காலம் கண்டு
எதிரியின் செயல் அறிந்து,
பொருள் உணர்ந்து,
உயர்வதற்கு உன்னருள் இன்றி,
கருணை இன்றி
கலக்கமே மிஞ்சும்.
கலக்கமில்லா,
களங்கமில்லா,
காரிருளில்
அறிவொளி தரும்,
அன்னையே!!!  கலை மகளே !!!
போற்றி.!!! போற்றி.!!!

கருத்துகள் இல்லை: