ஞாயிறு, ஜனவரி 27, 2013

இன்றைய  பெற்றோர்

 அன்புமகன்  / மகள்  அன்னியமண்ணில்,

அன்பகலா  பேரன் பேத்திகள் ,

காண முடியா பெற்றோர்கள்.

உற்றாரைப்பிரிந்து,
உறவினர்களைப் பிரிந்து,
உற்ற நண்பர்களைப் பிரிந்து,
ஊராரைப்பிரிந்து,
பெற்றோரைப்பிரிந்து,
தனிமையில் தவிக்கும்
இளைஞர்கள் .


இங்கோ,நொந்திருக்கும் பெற்றோருக்கு,
வயதான காலத்தில் தவிக்கும்
தனிமை,
அங்கு பேற்றோறோரின்  பிரிவில் வாடும்,
குழந்தைகள்.
தாத்தா -பாட்டி அன்புக்கு ஏங்கும் மழலைகள்.

இங்குள்ள  மகன்கள்,
பெற்றோர் சேர்ந்திருக்க முடியா நிலை.

வயதான தாய்-தந்தை,
பேரன்-பேத்தி உடன் இருந்தும்
   கொஞ்ச முடியா நிலை.
பார்க்க முடியாநிலை.

அன்னியமண்ணில் ,
தாய் மண்ணில்  அந்நியம்தான்.














புதன், ஜனவரி 23, 2013

அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை வளர்ப்போம்;

இறைவன்  படைப்பில் ,
மனிதன்  உயர்ந்தவன்.
ஔவை  சொன்னபடி ,
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது.
ஆனால் ,மனிதர்கள்  மனிதர்களாய் ,
இல்லை என்றால் ,மானிடப்பிறவி 

மண்ணுலகில்  பயனற்றதாகும்.

மதம் என்ற பெயரில் எத்தனை பிளவுகள்,
மதம் பிடித்த யானை போல் ,
மானிடர்களைத் தாக்கும் மதம்.
மனிதனை மிருகமாக்கும் மதம்.
சிவன் காக்கும் கடவுள் என்றாலும் 
அல்லா அருளும் கடவுள் என்றாலும்,
ஏசு  இறங்கும் கடவுள் என்றாலும் 
இறப்பு என்றால் இறைவனடி சேர்த்தல் 
என்பதே பொது தத்துவம்.
மதமும் மரிப்பவனை காப்பதில்லை.

பணம் -பணம் என்றாலும்,
பயனில்லா  வாழ்க்கை இது.
ஆவிபோவது நிச்சயம்.
கோடிகள்,கருப்புப்பணம் ,
அதிகாரம்,மருத்துவப்படி,
பாது காப்புப் படை  இருந்தாலும்,
பறக்கும் உயிரைப் பிடிக்க முடியாது.
வரும் நோய்களைத் தடுக்க முடியாது.
விபத்துகள் எப்படியும் வரலாம்.
கள்ளப்  பணமோ ,நல்ல பணமோ,
கறுப்புப் பணமோ ,அதிகார பலமோ,
காலனிடம் இருந்து காக்காது.

அறிவயல் விந்தைகள் ஆயிரம் காணலாம்.
ஆவிபிரிந்த பின் உயிர் வருவதைக் காணமுடியாது.

இருக்கும் வரை இறைவனை வழிபடுவோம்.
நன்மைகள் செய்வோம்;நேர்வழி நடப்போம்.
சத்தியம் காப்போம் ;அறவழி நடப்போம்.
அன்பு காட்டுவோம்;பண்பாக இருப்போம்.
உதவிகள் செய்வோம்;
விதிவழி செல்வது இயற்கை.
அதை உணர்வோம்;
அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை 
வளர்ப்போம்;


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=

   உபவாசம் என்பதும் தக்கவர்களின் வழிகாட்டுதலால் இருக்கவேண்டும்.

உபவாசம் இருக்கும் நாளில் குடல் ஒய்வு பெறுகிறது.
  1. வாரம் ஒருமுறை உபவாசம் இருப்பவர் தன்னையும் அறியாமல் ஒரு தெய்வீக சக்தி பெற்று முகத்தில் ஒரு ஒளி தேஜஸ் பெறுகிறார்.
  2. அவர் மனதில் தெய்வீகப் பற்று ஏற்படுகிறது.
  3. உபவாச காலத்தில் ஆண்டவனைப்பற்றிய சிந்தனை அதிகமாகிறது.
  4. இறைவனை சரணாகதி அடையும் நிலையில் லௌகீக கவலைகள் பறந்துவிடுகின்றன.
  5. வயிறுநிறைய  சாப்பிடுபவனுக்கு ஒரு தனிமயக்கம்தான் ஏற்படும்.அவன் ஆசைகளில் தவறான வழிகளைப் பிபற்றுகிறான்.வாழ்க்கையில் ஒரு அரக்க குணம் ஏற்படுகிறது.
  6. உபவாசம் தெய்வீக இன்பத்தையும் பிரம்மானந்தத்தையும் தருகிறது.
  7. அலௌகீக  ஆனந்தம் அநுபூதி உபவாசம் இருப்பதை அதிகரிக்கிறது.
  8. அந்த மெய்யுணர்வு வர்ணிக்க இயலாது.
  9. உபவாசகருக்குத் தெரியாமலேயே வரும் இறைவனின் மேல் ஏற்படும் பக்தி ,தெய்வீக சக்தி,உபவாசம் இருப்பவரை இந்த அழியும் உலகில்  இறைவனின் பேரரசை ஆளும் தன்மை பெறுகிறான்.
  10. அவர் உள்ளத்தில் தோன்றி வெளிப்படும் கருத்துக்கள் புற இருளைப்போக்கி   ஒரு ஆன்மீக ஒளி வீசச் செய்யும்.

செவ்வாய், ஜனவரி 22, 2013

உபவாசம் தொடரும் .-பகுதி -2

 ஸ்ரீ சுவாமி  சிவானந்த எழுதிய "practice of nature cure"  நூலில் உபவாச சிகிச்சை என்பது 14வது அத்தியாயம்.


உபவாசம் நமது உடலில் உள்ள கழிவுகளை  வெளி ஏற்றுகிறது .உபவாசத்தால் சக்தி  அதிகமாகிறது.

உபவாசம் செய்து பிரார்த்தனை செய்தால் நோய்கள் இல்லா வலிமை மிக்க உடல்  ,ஆரோக்யமான உடல்,இறை சக்தி கூடுகிறது.

உபவாசம் இருந்து தியானம் செய்யுங்கள் --உணவில் சுயக்கட்டுப்பாடு அவசியம். அதற்கு இறைவனின் அச்சத்தால் ஏற்படும் விரதம் வழிவகுக்கும்.
இக்காலத்தில்  அறிவியலுக்கு முக்கியத்துவம் தருவதால்,ஆன்மீக பயம் நீங்கி

தவறுகள் நிகழ்கின்றன..அறிவியலில் மாற்றம் உண்டு.ஆன்மீக இறைதத்துவங்களில் மாற்றம் இல்லை.

இறைதத்துவங்களில்  இயற்கை நம்மை குணப்படுத்துவதில் நான்கு தத்துவங்கள்  என்று நம் நாட்டு வைத்திய முறைகள் கூறுவதாக சுவாமிஜி எழுதிஉள்ளார்.
அவை--1.சூரிய வெளிச்சம்.2.புதிய காற்று.3.உபவாசம்.4.ஒய்வு.

நோயின் அறிகுறிகள்--1.சளி,2.தலைவலி 3,லேசான காய்ச்சல்,4.சிறிது இருமல் 5.சுமை ஏறிய  வயிறு.

மேற்கூறிய ஆபத்துக்களைத் தடுக்கவே நம் சாஸ்திரங்கள் கூறியவை.
தெய்வீக அருள் பெறும்  உபவாசங்கள்.உண்ணாநோன்பு.

ஏகாதசி,2.பிரதோஷம்,3.பௌர்ணமி,4,அமாவாசை,5.கார்த்திகை,சோமவாரவிரதம் என்று வார விரதங்கள் முதலியவை.

உபவாசம் தொடரும் .-பகுதி -2

விரதம் உபவாசம் மிகவும் பயனுள்ளதாக ஆயுர்வேதம்,சித்த மருத்துவ முறையில்

நம் முன்னோர்கள்  அடிக்கடி விரதம் இருப்பார்கள்.அன்று எதையும் சாப்பிடமாட்டார்கள்.சிலர் பழரசம் அருந்துவார்கள்.
அவ்வாறு செய்வது ஒரு சிகிச்சை என்பதை அவர்களோ,அவர்களுக்கு முன்னோரோ கூறவில்லை. அவர்கள் ஒவ்வொரு அறிவியலையும் ஆன்மீகத்துடன் இணைத்து தெய்வீக பக்தி என்றே கூறிவந்துள்ளனர்.
  நகத்தைக்கடிப்பது ஆசாரம்,மடி என்றதால் ஏளனம் செய்தோம்.

இன்று அறிவியல் ஆராய்ச்சிப்படி  உபவாசம் என்பதும்  ஒருசிகிச்சை என்று கூறப்படுகிறது.
நீராகாரத்திற்கு  மகத்துவம் அளிக்கப்படுகிறது.
ஜீரண  உறுப்பிற்கு ஓய்வு அளிக்க உண்ணாவிரதம் .
அன்று சாப்பிடும் எண்ணம் தோன்றாது இருக்க .
சாப்பிடும் ஆசை வராதிருக்க இறை பக்தி ஆன்மிகம்  உறுதி அளித்தது.

நமது நாட்டின் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் ஆன்மிகம் என்ற பயத்துடன் உடல் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளித்துவந்துள்ளது .அதில் ஏகாதசி,கார்த்திகை விரதம் உபவாசம்  மிகவும் பயனுள்ளதாக ஆயுர்வேதம்,சித்த மருத்துவ முறையில் விளக்கப்பட்டுள்ளது.
உபவாசத்தின் முக்கியத்துவத்தை அடுத்த பதிவில் காணலாம்.




சனி, ஜனவரி 19, 2013

        மனிதனின்  பேராசை தான் மனிதனை  மிருகம் ஆக்குகிறது. அவன் மற்றவர்களுக்கு துரோகம் செய்கிறான்.மற்றவர்கள் சொத்தை அபகரிக்கிறான்.கொலை செய்கிறான்.பொய் பேசுகிறான்.குற்றங்களையும் ,குற்றவாளி களையும் மறைக்கிறான்.ஏமாற்றுகிறான். பாவங்கள் செய்கிறான். பொறாமைப் படுகிறான்.கோபப்படுகிறான். வெறுக்கிறான்.துன்புறுத்துகிறான்.கருமிஆகிறான் .அதனால் தான் புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார். ஆசைப்படுபவனால்  மனதை சஞ்சலப்படுத்த முடியுமே தவிர  மனக்கட்டுப்பாடு  என்பது இயலாத காரணம்.

 பற்றற்ற  வாழ்க்கை என்பது வேறு.தேசப்பற்று,இறைப்பற்று,மொழிப்பற்று.  ஆசை,பேராசை வேறு.இந்த பற்றை த்தான் உலகப்பற்று.லௌகீகம் என்கின்றனர். உலகத்தில் தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டியும்,
ஒட்டாமல் இருக்கவேண்டும்.  
மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.நடைமுறையில்  மனிதர்கள்  தன்மானம் இழப்பதை விரும்புவதில்லை. அப்பொழுது தான் வெறுப்பும் ,பகையும் அதிகமாகிறது. சிலருக்கு மற்றவர்களை அவமானப்படுத்தி மட்டம் 
தட்டுவதில் எவ்வளவு ஆனந்தம். 
      

வியாழன், ஜனவரி 17, 2013

உள்ளம் மனித உள்ளம்,

உள்ளம்  மனித உள்ளம்,
உலகில்  அறியமுடியாதது.
  புரிய முடியாதது.
நல்ல  உள்ளம்  எப்படி இருக்கும்?
அது மனிதனின் வளர்ந்த விதம்.
சூழல்,ஆசை, அவன் உற்றார்,உறவினர்,
கல்வி,மனதின்  இயற்கை  குணம்,
பரம்பரை,நட்பு,என்ற  அடிப்படையில் 
மாறும்.

அமைதியும் பொறுமையும் ஒருவனுக்கு  இயற்கையாக அமையும்.
சிலரின் முகம் அமைதியாக இருக்கும்.
பேச்சு தித்திக்கும்.
அவன் பெரும் உதவியாளன் போல் தோன்றும்.
அப்படிப்பட்டவனின்  செயல்கள் சுயநலத்தின் ஆணிவேராக இருக்கும்.


சிலரைக் காணும்போதே மரியாதை தோன்றும்.
சிலரைக் காணும்போதே ஏளனம் செய்யத்தோன்றும்.
சிலரைக் காணும்போதே வெறுப்பு தோன்றும்.
சிலரிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் .
சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

ஒரே சொல் ஒருவர் கூறும்போது ஆறுதலாக இருக்கும்.
அதே சொல் மற்றொருவர் சொல்லும் போது கேட்கவே பிடிக்காது.
சிலரைப்பார்க்கப் பிடிக்கும்.சிலரைப்பார்க்கவே  பிடிக்காது.

சிலரிடம் உதவி கேட்கத் தோன்றும்.சிலரிடம் கேட்கத் தோன்றாது.
சிலரின் முகம் தெய்வீகமாக காட்சி அளிக்கும்.
சிலரின் முகத்தில் வில்லத்தனம் தோன்றும்.
உதவி செய்பவர் யார்?புரியாது.
சிலரிடம் கேட்காமலேயே உதவி கிட்டும்.
சிலரிடம் கேட்டாலும் கிட்டாது.
சிலர் நட்பு பாராட்டி,வெறுப்பு காட்டுவர்.
சிலர் ஏமாற்றவே நட்பு பாராட்டுவர்.
தேவைப்பட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவர்.
காரியம் ஆனதும் உதறிவிடுவர்.உயிருக்கே உலைவைப்பர்.
அது மனைவி ஆகவும் இருக்கலாம்.மகனாகவும் இருக்கலாம்.
மகளாகவும் இருக்கலாம்.மருமகளாகவும் இருக்கலாம்.
நண் பனா கவும் இருக்கலாம்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று 
அனைவருக்கும் நல்லது செய்யும் மனம் படைத்தோரும் 
நானிலத்தில் உண்டு.

சூழ் நிலைக்கேற்று  அனைவரையும் கவர்ந்து ஏமாற்றுவோரும் உண்டு.
நன்மை செய்தே  தீய பெயருடன் மற்றவர்களின் வெறுப்புடன் வாழ்வோரும் உண்டு.
தீமை செய்தே  நல்ல பெயருடன் வாழ்பவரும் உண்டு.

ஒரு வீட்டில்  மிகவும் உழைத்து அனைவரின் தேவை அறிந்து 
தன்னலம் கருதாமல் இருப்பவர்களை,அவனால் ஆதாயம் பெற்றவர்கள் வெறுத்து ஒதுக்குவதும் உண்டு.

உற்றாருக்கும்,ஊருக்கும் ,உலக  நடைமுறை நீதிக்கும் பயந்து உண்மை மறைப்பவரும் உண்டு.
தன்னலமே பெரிது என்று சத்தியம்,நேர்மை நாணயம்,அன்பு,என்று அனைத்தையும் குழி தோண்டி புதைப்பவர்களும் உண்டு.
 அன்பு காட்டி காரியம்  சாதித்தவுடன் ,வெறுக்கும் மனைவியும் உண்டு,
தன் தாயார்வீட்டின் தவறுகளை,இழிசெயல்களை மறைத்து,
  செய்யும் நன்மைகளை மறைத்து,சிறிய தவறுகளையே பெரிது படுத்துவோரும் உண்டு.
மனிதர்கள் தான் அவர்கள் குணம் தான் அறியமுடியாது.

எல்லாம் ஆண்டவன் செயல் என்று பற்றற்ற முறையில் எதையுமே கண்டுகொள்ளாமல் வாழ்பவர்கள் ஞானிகளாவார் .
தாமரை  இல்லை தண்ணீர்போல் ஒட்டாமல் வாழ்பது தான் ஞான நிலை.
அந்நிலை அடைந்தால்  துறவறம் தான்.

உலகில் வாழ்ந்தால் உண்மை இது என்று உறுதியுடன் கூறமுடியாது.
நேர்மை இதுதான் என்று கூறமுடியாது.
தவறுசெய்பவர்கள் தாயாகவும் இருக்கலாம்.தந்தையாகவும் இருக்கலாம்.
சகோதரர்களாகவும் இருக்கலாம், இருக்கலாம் அதை வெளிப்படுத்த 
துணிச்சல் வேண்டும். அது எத்தனை பேருக்கு வரும். உலகில்  பெற முடியாது.










திங்கள், ஜனவரி 14, 2013

தைப்பொங்கல் இவ்வாண்டு,

தைப்பொங்கல் இவ்வாண்டு,
பேராசியர்கள்  வீட்டிலும்
பொங்கவில்லை;
நடிகர்களுக்கும் சேவைவரி
துக்கம்;
விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லா,
விளைச்சல் இல்லா வேதனை;
கொடுத்த கவரில் 100 ரூபாய் இல்லை  வெத்துக் கவர்
சிலருக்கு.

நாட்டின் பெரும் கவலை இரண்டு வீரர்களின் 

தலை போனது. பாகிஸ்தானியர்களின் 

இரக்கமற்ற செயல்;

ஊழல்,பலாத்காரம் ,எதுதான் இல்லை;

மயிலையில் தீப்பிடித்த விசாலாக்ஷி நகர்;

போதுமா  வேதனை;

வரும் ஆண்டுகளில் வருத்தம் இல்லா பொங்கல்,
வறட்சி இல்லா பொங்கல்,
தண்ணீர்  காவேரி பிரச்சனையை தீர்ந்த பொங்கல்,

அகில பாரதத்திலும் நேர்மை யுள்ள ஆனந்த பொங்கல்,
அடுத்த ஆண்டில் மன நிறைவுப் பொங்கல்,
அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரும் பொங்கல் 
வர முயற்ச்சிப்போம்;இறைவனை வேண்டுவோம்.

ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;



Tuesday, January 8, 2013


ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

 அன்பும்,பண்பும் ,உயரிய நோக்கம்

கொண்ட  புதுமை இளம் பெண்களே!!!

செய்தித்தாள்களில் வரும் செய்திகள்,

கற்பழிப்புக்கு பெண்களின் ஆடைகள்,அவர்களின் சம்மதமே காரணம்

என்று    சாமியார் ஆசாராம் பாபு கூறியுள்ளார்.

நடுராத்திரியில் பெண்கள் நடமாட்டம் கூடாது
 என்று ஜனாதிபதி மகன்  கூறி உள்ளார்.

திரௌபதி துகில் உரிய  திரௌபதியே  காரணம்.

அவள் சிரித்து துரியோதனின்  கோபத்தைத்  தூண்டியவர்.

அதனால் பெண்களின் அவமானம்  பெண்களால் ஏற்படுவதே.

ஆசாரம் இப்படி கூறியதற்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் அனைவரும் நாய்கள்.

ஆஷ்ரமங்கள் வளர்வதே அமைதி தேடிச்செல்லும் பெண்களால்.

அதனால் அவர்கள் பெண்கள் சில சுலோகத்திற்கும்,ஆஷிர்வாதத்திற்கும்
மயங்குபவர்கள் என்ற எண்ணம்.

அதனால் தான் பெண்கள் தெய்வங்களாக,காளி ,மூளி ,மாரி ,
என்று பயங்கர ஆயுதங்களுடன் ,வெட்டுண்ட தலை கையில் ஏந்தி
முண்டத்தில் மீது நின்று அதி பயங்கரமாக காட்சி அளிக்கின்றனர்.

இன்று பெரும் நகரங்களில் இளம் பெண்கள் பணிபுரிந்து  வீடு திரும்பும் நேரம்  உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் காளி ,மூலி ,நீலி  யாக மாறி தற்காத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்குமா?சீரழிந்த பின் சட்டநடவடிக்கை.

அரசியல் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம்

செய்தால் நீதிமன்றம் தண்டனை வழங்க வாய்ப்பில்லை.அவர்கள் பதவி நீக்கம் செய்ய முடியாது.

   இராமாயண மகாபாரத காலத்தில் இருந்தே இதே நிலை.

  இப்பொழுது ஒரு புதிய கூட்டம்;உயர் சாதிப்பெண்களை  விரட்டி விரட்டி
காதலித்து களங்கப்படுத்தி சீரழிப்பது என பா.மு.க. தலைவர் கூறி உள்ளார்.

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

சுத்தம் சுகம் தர, தனி பிரசார தன்னார்வர்கள் தேவை.

பொங்கல் பண்டிகை போகி அன்று ,
டயர் ரப்பர் கொளுத்தும் பழக்கம்,
எப்படி வந்ததோ தெரியவில்லை.
ஒரு பெரியார் பத்தாது ,
மூடப்பழக்கம் போக்கி ,
பகுத்தறிவு வளர்க்க;
பொங்கல் தமிழரின் ,பழம் விழா,
டயர் இல்லா காலம்  அது.
காற்று மாசுபடுவதால்,
பலருக்கு காற்று ஒவ்வாமை.
மாசுக் காற்று கரியுடன்  கலந்து.
யோசித்து உண்மை நிலை புரிந்து,
எரிப்பதை போக மும்பை அன்று விட்டுவிட 
கடும் முயற்சி எடுத்தாலும்,
இன்று காலை ஜன்னல் திறக்க முடியவில்லை.
பெருங்குடி,இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன்.
வெற்றிலை ,பாக்கு எச்சில் காவிநிறம் 
இதற்கு அரசு என்ன செய்யும் ,
காவல்  துறை என்ன செய்யும்.
பொதுமக்கள் உணரும் காலம் 
என்றுவரும்.
இதைவிட பூனா ,மும்பை ,அதிகம்.
மக்களாக திருந்தாவிட்டால்,
மாசு குறையாது.
சுத்தம் சுகம் தர,
தனி பிரசார தன்னார்வர்கள் தேவை.

ஒன்றே வழி;பெண்ணினம் காக்க





விவேகானந்தர்  ஞானக்  குழந்தை,
அவர் இளைஞர்களுக்கு அறிவுரை அளித்தார்.

பாரதியார் பாப்பாவிற்கு.

ஆனால் அரசின் வாரிசுகளுக்கு ;
ஆணவம் பிடித்தோருக்கு 
அதர்ம  வெறி பிடித்தொருக்கு,
அதிரடி தண்டனை,
உடனடி  தண்டனை தேவை.

பெண்களைபோற்றும்  நாட்டில் ,
பெண்ணடிமை தான் என்றுமே;


ராவணன் சீதையை சிறை வைத்தான்;

அனைத்தும் தெரிந்த ராமன் 

அவளை கானகம்  அனுப்பினான்.

தேவேந்திரன்  செய்த தவறு,
அகலியை   கல்லானாள் .

துகில் உரித்தான் துச்சாதனன்;

அறம்  தக்க தருணத்திற்காக 

அமைதி காத்தது;

அப்பரம்பரை  இன்றும் 
தருணிகளை தரக்குறைவாக பார்க்கிறது.



அமைதி காக்க  இது என்ன வேடிக்கையா?
சல்லிக்கட்டா?  சர்க்கசா?
ராமன் உத்தமபுருஷன்.
சீதையை  கானகம் அனுப்பி 
பெண்ணினத்திற்கு ஒரு தரக்குறைவை 
ஏற்படுத்தினான்.


அன்று கண்ணன் உடனடி காயடித்திருந்தால்,
பெண்ணினம் உயர்ந்திருக்கும்.
தர்மன் பணயப் பொருளாக்கியது.

அதர்மம் போகப் பொருளாக்கு கிறது.
அதிகார வர்க்கம் துணைபோகிறது.
பெண்கள்  ஆடை அரைகுறை;
புத்தி பேதலிக்கும் இளைஞர்கள்.
இதில் தவறு யாரது;
பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி;

வீடு திறந்துள்ளது என்றால் கொள்ளையர் 
புகுவது குற்றம் என்றால்,
ஆடை குறைந்த பெண்களைக் கெடுப்பது 
குற்றமில்லையா?
மனிதன்!புலன் அடக்கம் தேவை?
நாயா?நடுத்தெருவில்......ச்சே!
நாயைவிட கேவலம்;
மிருக ஜன்மம் நான் என்றான் வாலி;
அடுத்தவன் மனைவியை  தனதாக்கி;
அவன் குரங்கினம்;
மனிதனை மனிதனாக்குவதே,
மனதை அடக்குவதும்,காமத்தை அடக்குவதுமே.


புரட்சி எண்ணங்கள் தேவை;புதிய பார்வை தேவை;
புரட்டு எண்ணங்களும் ஊழலும் குறைய,
புவியினில் ஒரு பிரளயம் தேவை,.

உடனடி தண்டனை கடும் தண்டனை 
ஒன்றே  வழி;பெண்ணினம் காக்க.

வெள்ளி, ஜனவரி 11, 2013

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 

தைப் பொங்கல்,
தமிழர் பண்டிகை 
அதே நாள் சங்கராந்தி 
ஆந்திராவில் பண்டிகை;
ஆனந்தப்பண்டிகை;
புதுமை  அனைத்திலும் புதுமை;
தைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டு 
பாரம்பரியத்தை மாற்றும் சூழல்;
இன்று புத்தாண்டு கொண்டாடுவோருக்கும்,
புதுப்பானைவைத்து 
பொங்கல் கொண்டாடுவோருக்கும் 
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டுக்குள் காவிரி 
பொங்கட்டும்;
இந்த ஆண்டு காய்ந்த வயல்கள் 
வரும் ஆண்டு பசுமை யாகட்டும்;
இயற்கை அன்னையின் 
அருள் கிடைக்கட்டும்;
அனைவரின் வாழ்விலும்
 மகிழ்ச்சி  பொங்கட்டும்;
மாரி  அருள் பொழியட்டும்;
முருகன் அருள் மலை பொழியட்டும்;
முக்கண்ணன் அருளால் 
நாட்டில் தர்மம்,நியாயம்,நேர்மை ,சத்தியம்  பெருகட்டும்;
பார் புகழ, 
பாரதம் 
வாழட்டும்.
வளரட்டும்;
வழிபாடுகள் தூய்மை பெறட்டும்.
பொங்கல் நன்னாளில் 
என் 
பிரார்த்தனைகள்.
வாழ்த்துக்கள்.








வியாழன், ஜனவரி 10, 2013

தண்டனையும் நிச்சயம்.

இயற்கை   மருத்துவம்- practice of nature cure--SRI SWAMI SIVAANANDA

நோயின் மூல காரணம்-

மனிதன் பிறக்கும் போதே அழுவதும் ஒரு துன்பத்தை அனுபவிப்பதால் தான்.
எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனம் தான்.

மனிதனுக்கு மன பயம்,மன அழுத்தம் இரண்டுமே பல நோய்களுக்குக் காரணம்.

மனத்தைத் தூய்மையாக வைக்கவேண்டும் .அனால் மனத்தூய்மை என்பது உலகின் மாயை/நண்பர்கள்/உற்றார் உறவினர்கள்/சூழல்களால்  ஏற்படுகிறது.
அச்சமும் நம் மனத் தூய்மையைக் கெடுக்கின்றன.

மனோவலிமைக்குத்  துணையாக இருப்பவை ஆன்மீகப் பயிற்ச்களே.


நமது சமய நூல்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்று கூறுகின்றன.

கருடபுராணம்  ஒரு குறிப்பிட்ட ஒரு நோயின் குறிப்பிட்ட ஒரு காரணத்தை
கூறுகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு எழுதப்பட்ட  இக்குறிப்புகள்  நீதி நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாமையை  எடுத்துக்காட்டி வலியுறுத்துகின்றன.
இது பிற விப்பயனாக  உண்டாகின்றன.
நாம் இதை சமுதாயத்தைப்  பார்த்து இதிலுள்ள  சத்தியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
பிற உயிரினங்களுக்கு நாம் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் .துன்பப்படும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
அறச்செயல்களை  நாம் உடல் நலத்தோடும்,மன நிறைவோடும்,மகிழ்ச்சி யோடும் செய்யவேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல/தீய செயல்களுக்கேற்ற பரிசும் நிச்சயம்;தண்டனையும் நிச்சயம்.

உடல்நலம் என்பது  இயற்கையுடன் வாழ்வதில் தான்  உள்ளது.
"நீங்கள் விதைத்ததை நீங்களே அறுவடை செய்கின்றீர்கள்."






செவ்வாய், ஜனவரி 08, 2013

நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால். எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?

திருமண பந்தம்


   வாழ்க்கையில்  திருமணம் என்பது ஒருமுறை;

  அது வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி தர;

  ஆனால்,  இன்று இளம் தலை முறையினர்
 
இருநாள்  திருமணம் தானே ,ஒருமுறை தானே

என பத்திரிகை அடிக்கவே இருபதாயிரமாம்.

ஒரு பத்திரிகை 100 ரூபாய்;

இது தவிர பெற்றோர் அடிக்கும் பத்திரிக்கை வேறு;

சத்திர வாடகை  75,000/
சாப்பாட்டுச்சிலவு   காலை  ஒரு இலைக்கு 100/
மதியம்  ஒரு இல்லை         160-180/

வரவேற்பு சாப்பாடு 200/

மாலை டிபன்  80/

மொத்தம் 640/ குறைந்த பக்ஷம் 500 =            320000/

மற்ற சிலவுகள் -------------பந்தல்,போகஸ்  விளக்கு ,மேளம்,ப்ரோஹிதர்,
பூ ,அலங்காரம்,அழகு நிலையம்,நகை

நடுத்தர வர்க்கம்  குரிவிபோல் சேர்த்ததோ/கடனோ/பரம்பரை வீடை விற்றோ , தன்  அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் குறை த்தோ

இருநாள் ஆனந்தம்;பல ஆண்டு  பொருளில்லா போராட்டம்.

இதைக் குறைக்கச் சொன்னால் மனப் போராட்டம்; பொருளில்லை என்று.

கர்நாடகத்தில் வீணாகும் திருமண சாப்பாடு 3000/ கோடி  என்ற செய்தி.

இந்தத் துகை  பெருந்துகையோ /சிறுதுகையோ

என் எண்ணத்தில் இது பெரும் முதலீடு;
ஒரு நாள் ஆனந்தம்.

அந்த சிலவு செய்யவில்லை என்றால் என்ன கல் யாணம் என்ற பிடுங்கல்.

அறிவியல் முன்னேற்றம் ஆஸ்தி உள்ளவர்களுக்கே;

ஞானம் உள்ளோர் சிக்கனம்  என்றால் கஞ்சன் என்றே பெயர்;

கஞ்சன் என்றால் தங்கம்;

நாம் நமக்காக வாழ்கிறோம்;

நம் இன்னலில்  பொருள் கொடுக்க மாட்டார்கள்;
பொருளில்லா உலகம் பொருள் இல்லை என்றால் மதிக்காது.

திருமண சிக்கனம் ,நம் மகிழ்ச்சிக்கு.

ஊர்ப்பெருமை,நமக்கு சிலநாள்;
நடுத்தர மக்களே! சிந்திப்பீர்! செயல் படுவீர்;

வீண் சிலவுகள்;வீண் வேதனைகள்;

நமக்காக வாழ்ந்தால்  தான் பெருமை;
பிறருக்காக வாழ்வது இன்னல் தரும் .

நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால்.
எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?














  

ஞாயிறு, ஜனவரி 06, 2013

ஜனநாயக முறைப்படி

பாரதநாடு  உலகில் உயர்ந்தது.
ஆன்மீக நாடு;
இவ்வுலகில் பாவங்களுக்கு 
ஈடில்லா தண்டனை தரும் 
கருட புராணம்;
நீதி தேவன் தண்டனை தரும் 
கருப்பணசாமி ;ஐயனார் ;முனீஸ்வரன்
காளி ;மூழி ;நீலி;
எங்கும் ஆலயம்;
எதிலும் பாவம் புண்ணியம்;
இறைவனின் பயங்கர சிலைகள்;
கற்புக்கரசி கண்ணகி;
ஆனால்  இந்த புண்ணிய பூமியில்,
நாளும் கற்பழிப்புகள்;
ஊழல் புகார்கள்;
இலஞ்சப்புகார்கள்;
காவல்துறையின் அநீதியால்.
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்.
தீவீரவாதம்;
பலாத்காரம் செய்யும் நாடாளுமன்ற 
சட்டமன்ற உறுப்பினருக்கு 
உரிய தண்டனை கொடுக்க வாய்ப்பில்லா  உச்ச நீதிமன்றம்.
பதவியில் இருத்து நீக்க அதிகாரம் 
யாருக்கும் இல்லை;
குற்றவாளிகளின் புகலிடம் அரசியல்;
அரசியலில் வெற்றி தாதாக்கள்  கைகளில்.
மக்கள் வரிப்பணம் விமானப்பயணங்கள்;
ஏழை நடுத்தர மக்கள் வாழும் பகுதிகள் 
புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்;
சாலைகள் கிடையாது;சாக்கடைவசதிகள் கிடையாது;
ஓட்டுப்போட காசுகொடுத்தால் 
ஓட்டுப்போட ஒரு கூட்டம்;

பணம் படைத்தோருக்கு வரி கொடுக்காமல் தப்ப ஆயிரம் வழிகள் ;
கொலை ,கொள்ளைகள் பெருகிவரும் காலம் இது.
கலியுக தெய்வம் கார்த்திகேயனையே 
சுரண்டிய சேதியும் உண்டு.
லஞ்சத்தால் ,ஊழலால் வளரும் 
பெருங்கூட்டம்;
எதிர்காலம்  
ஒளிமயமான எதிர்காலம்
  ஊழல் ஒழிக்கவேண்டும் -என்பதெல்லாம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கே;
மக்களும் தன சுயநலத்தால் 
விரும்புவது  ஊழலே;
ஒழியாது இந்த தொற்றுநோய்;
ஏழைகளை ஒழிக்கவே   இந்த நோய்;
மருந்தில்லை;இதை ஒழிக்க மே மந்திரமில்லை;
ஆதரிக்கும் கூட்டம் அதிகம் என்பதால்.
ஜனநாயக முறைப்படி ,
வாழ்க ஊழல்;








புதன், ஜனவரி 02, 2013

இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.

எளிய  மொழி 

       படித்தவர்கள்  அனைவரும் புரியும் படியான எளிய மொழிநடையைக் கையாள வேண்டும்.
தங்கள் மொழி அறிவை ,மேதாவித்தனத்தை வெளிக்காட்ட கடின சொற்களை பயன் படுத்துவதால் தான் 
தாய் மொழியான தமிழ் கற்க  அல்லது இந்திய மொழிகள் கற்க இன்றைய மாணவர்களின்  ஆர்வம் 
குறைந்து வருகிறது. ஆங்கிலத்தில் வரும் வாக்கியங்கள் ,சொற்கள் மிக நடைமுறையில் உள்ளதாக இருக்கிறது.
ராமாயணம்,மகாபாரதம்  போன்ற காவியங்களை மூலத்தை விட எளிய உரைநடையில் புரிந்து கொள்வோரே அதிகம்.
வால்மீகி ராமயனத்தைவிட  மக்கள் புரிந்து கொள்ளும் துளசிராமாயணம் வட இந்தியாவில் அதிகம் போற்றி படிக்கப்படுகிறது.
திரைப்பட பாடல்கள் மாணவர்கள் மனதில் பதிவது போல் மனப்படப்பகுதியில் உள்ள பாடல் கடினமாக உணரப்படுகிறது.
பாரதியார்,வாலி,கண்ணதாசன்,வைரமுத்துவின் பாடல்களில் பழமையின் அரிய கருத்துக்கள் எளிய தமிழில் 
அறிந்து கொள்ள முடிகிறது.பொருள் அறியாமல் படித்த வடமொழி பேச்சுவழக்கற்றதாக   மாறியதற்கு ,அறிவியல் மொழியானது 
வெறுப்பிற்கும் ஆளானது அதன் கடினத்தன்மையும் ,தவறான உச்சரிப்பு பாவம் என்பதும்  பரந்த  மனப்பான்மையுடன் 
அனைவருக்கும் கற்பிக்காமல் இருந்தததே.அதன் பலனை நாம் இன்று  உணர்கிறோம்.
ஆங்கிலமும்  இந்தியும் வளர்ந்ததற்கு அதன் பரந்த மனப்பான்மையும் தனித்தன்மை அற்றதும் தான்.
தோய மொழிகள் காலப்போக்கில் அழிந்து விடுகின்றன.தமிழ் வாழ்வதற்கு  ஐம்பெருங்  காவியங்களும் ,ஆதி பகவன் என்ற பிரயோகமே.
சூரியனாரயனார் என்ற பரிதிமாற்கலைஞர்  தனிதமிழ்  நடைப்பற்றாளர்கள்  உறுதியாக இருக்க முடியாமல் இருக்க ஆங்கிலம் கலந்த தமிழுக்கு  மரியாதையும்,இந்திய மொழிச் சொற்கள் கலந்தால்  ஏற்காததும் இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.