வியாழன், ஜூன் 28, 2012

நீண்ட ஆயுளுடன் ஆரோக்ய வாழ்க்கைக்கு

மனிதன் உழைப்புக்கேற்ற உணவு உண்ணவேண்டும்.கடுமையாக உழைப்பவர்கள் தான் அரிசியை அதிகமாக சாப்பிடவேண்டும்.பொதுவாக 25 வயதிற்குப்பின் கோதுமை அரிசி உணவு சாப்பிடுதல், கிழங்குவகைகள் சாப்பிடாமல் இருத்தல்.  சர்க்கரை அளவு குறைத்தல், பச்சைக்காய்கரிகள் உண்ணுதல், அரிசியால் செய்யப்படும் இட்லி, தோசை, அடை, ஊத்தப்பம் போன்ற வற்றைத் தடுத்தல்  ஆயுளை அதிகப்படுத்தும் என்கின்றனர்.
சர்க்கரை சோதனையில் சிறிதளவு வுயர்ந்தாலும் உடனே சர்க்கரை மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களைத் நாம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் பல நோய்களுக்கும் அடிப்படை.பக்கவாதம்,இதய நோய்கள் மாரடைப்பு,மேலும்  உயிர்க்கொல்லி  நோய்களை அமைதியாக அதிகரிக்கும்  சர்க்கரை நோய்.

இனிப்பு  ஆராம்பத்தில் கொண்டாட்டம் பின்னர் திண்டாட்டம்.  விளைவு -

  • ஆயுள் காலம்  குறையும்.
  • மருத்துவ சிலவு அதிகரிக்கும்.

ஆகையால் கடின உழைப்பில்லா 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோதுமை உணவு சாப்பிடுவது  பல நோய்களைத் தடுக்கும்.


மேலும் வேக நடைப்பயிற்சியும் அவசியம்.  இருபது நிமிடத்தில் ஒரு மைல்  நடக்கவேண்டும்.


இந்தியாவில் ஆரம்பநிலையில் சர்க்கரை நோயை கண்டுபிடித்து கட்ட்ப்படுத்தாததால்  பலர் 60-65 வயதில் இறைவனடி சேர்ந்து விடுகின்றனர்.
ஆகையால்  அரிசிச்சாப்பாடு  குறைத்து ,  நோய்களைக் குறைத்து

கோதுமை  உணவை  உண்டால்  நோய்கள் கட்டுப்படும். ஆயுளை அதிகப்படுத்தும்.

அக்னி குஞ்சு " என்று கூறிய பாரதியார் அது ஒரு காடே பற்றி எரிய
 காரண மாகியது..அவ்வாறே நோய் ஆரம்ப நிலையிலேயே தடுக்காவிட்டால்
உடல் அழிய காரணமாகும்..


ஆலோசனை  மற்றும் அறிவுரை வழங்கியவர் -

DR.RAVI IYYER M.D.,Ph.D;
INTERNAL MEDICINE & PREVENTIVE CURE.
PHONE 703 404 5900
website: www.driyer.com
driyer.novahealth@gmail.com.

democracy is really success .for whom/



கற்பனையில்  கல் கோட்டை கட்டுதல் என்பார்கள் .

மனிதனின் ஒவ்வொரு கற்பனைகளும் கனவுகளும் நிஜமாகிறதா?என்றால்

அது யார்மூலமாவது செயலாக்கப்படுகிறது.

 நமது எண்ணங்கள் கற்பனைகள் எங்கோ யார்மூலமாகவோ நடக்கிறது.

நான் நினைத்தேன் ;அவன் முடித்தான்.அதில் ஒரு மகிழ்ச்சி

 காண்கிறோம்.நமது எண்ணங்கள் ,கற்பனைகள் மற்றொருவர்

வெளிப்படுத்தும் பொழுது ,அது பலரின் எண்ணங்களாக மாறும் பொழுது

கூட்டம் சேர்ந்து அவனை  மஹானாக  மாற்றுகிறது.

சிலர் அவரின் தொண்டனாகிறார்கள்.

 சிலர் நம் கருத்துக்கள் நாங்கள் தானே என்று நாமும்

 அவ்வாறு ஆகக்கூடாதா  என புதிய முறையில் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அதில் வெற்றி அடைபவன் ஒருவனாகத்தான் இருக்க முடிகிறது.

அதனால் தான்  அவர்கள் நிலைத்து அமரனாக்கிய பின் அவன் தொண்டர்கள்

பல கிளைகளாகப் பிரிந்து பல சம்பிரதாயங்களை உருவாக்குகின்றனர்.

அப்பொழுது தான் போட்டி -பொறாமைகள் ,சண்டை-சச்சரவுகள் ஏற்பட்டு

அந்த மஹான்கள்  ஏற்படுத்திய மனித

நேயம்,சமாதானம்,ஒற்றுமை,நேர்மை,சத்தியம்  போன்றவை ஒவ்வொரு

இனத்திற்கும் மாறு படுகின்றன.

பரந்த மனப்பான்மை மறைக்கப்பட்டு  அல்லது மறுக்கப்பட்டு  இன

வேற்றுமைக்கும் ,குறுகிய மனப்பான்மைக்கும் மனித சமுதாயத்தை

பிரித்து  தலைவர்கள்  மட்டும்  சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

தொண்டர்கள்  தீக்குளித்த வரலாறு உண்டு.

தலைவர்கள் சிறு சிராய்ப்பு கூட இல்லா  இஜட்  பாதுகாப்பில்.
தொண்டர்கள்தான் தடி அடி படுவர்.

இதில் விதிவிலக்கு நமது சுதந்திர போராட்டத் தலைவர்கள்.

ஆனால் நாட்டின் விடுதலைக்குப்பின் ஊழல் செய்த எந்த அரசியல் வாதியும்

தண்டனை பெற்றதில்லை.

ஆனால்  குற்றங்களுக்கான காரணங்கள் ஆராய ஒரு நீதிபதி

.அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை.

அதற்கு பல கோ டிகள்  ரூபாய் சிலவு.


;
.ஆனால்
அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி.மீண்டும் பதவிகள்.

நீதிமன்றத்தில் மட்டும் வழக்கு விசாரணை.ஆனால் தீர்ப்பு எழுதப்படுவதில்லை.

இது தான் மக்களாட்சி.