புதன், ஜனவரி 04, 2012

pillaiyaaridam praarththanai

பிள்ளையாரிடம் ஒரு பிரார்த்தனை.


ஆற்றங்கரையில்  பிள்ளையார்,

அவர் முன் தோப்புக்கரணம்.

அரசரடி பிள்ளையார்,

கம்மாக்கரை பிள்ளையார்,

கல்வி தரும் பிள்ளையார்,

கலக்கம் தீர்க்கும் பிள்ளையார்.

பிணி தீர்க்கும் பிள்ளையார்.

தடை தீர்க்கும் பிள்ளையார்.

மகிழ்ச்சிதரும் பிள்ளையார்.

சர்வ சக்திதரும் பிள்ளையார்.

உன்னிடம் ஒரு வேண்டுகோள்.

கடற்கரை ஓரம் காலையில் ,

நடந்தேன்.

உன் பாதிமுகம் கடல் அலைகளால் ,

அங்கும் இங்கும் அலைபாயக்கண்டேன்.

அகம் நொந்து அங்கிருந்து
ஈரடி   எடுத்துவைத்தேன் .

ஒரு செவியும் பாதி தொந்தியும் ,

ஒதுங்கி இருக்கக்கண்டேன்.

அதனருகில் மலம் கழிக்கும் ,

மனிதனைக்கண்டேன்.

அங்கங்கு உன் சிதறிய உடல் கண்டு ,

கலங்கினேன்.
உன் சிலையை இப்படி,

கடலில் கரைக்கிறேன் என்று ,

பக்தி என்றும் பூஜை என்றும் ,

கொண்டு சென்ற அழகான காட்சி ,
கண்முன்னே தோன்றியது.
அச்சம் போக்கும் அருள்பொழியும் ,
உனது சிலைக்கு காவலர்கள்
காவல் வேண்டப்பட்டது.
அருகில் சில ஏழைக்குழந்தைகள்.
உன் சிலை பத்து இருபது ஆயிரம்
ஆனால்
அக்குழந்தைகள் கண்களில் ஏக்கம்.
உனது சிலை ஊர்வலத்தில்.
பயம்-பயம்-பயம்
உன் சிலைத் தேரில் ,
வாலிபர்கள் .
பக்திக்கா
கலக்கம் உண்டாக்கவா,
புரியவில்லை.
அவர்கள் கைகளில் ,
பருத்த தடிகள்.
எத்தனை உன் சிலைகளோ ,
அத்தனை காவலர்கள்,
பதட்டத்துடன்,
என்ன நடக்குமோ எது நிகழுமோ
௨௦௦ உன் அழகு உருவங்கள்,
சராசரியாக ௨௦௦ நான்காயிரங்கள்.
உப்புக்கடலில் தூக்கிஎரிய ,
உதிரி பாகங்களாக
கரையில் ஒதுங்கி
அசிங்கப்பட.
பிள்ளையாரப்பா!!பிள்ளையாரப்பா!!
மக்களுக்கு ,
அறிவைக்கோடு.
ஞானம் கொடு.
பக்தி என்பது
உன் உருவத்தை கரைக்கவோ,
சின்னா பின்னமாக்கவோ
இல்லை என்பதை ,
உன் பக்தர்களை,
பக்தி என்னும் பெயரில்,
உன்னை சின்னா -பின்னப்படுதி,
உன்னை
 கஜமுகா சூரனாக
சிதைக்கும்
பகதர்களை,
நெறிப்படுத்தி ,
ஒரு தெளிவைக்கோடு.
புத்தர் சிலை உடைத்தவர்களுக்கும்,,
உன்சிலை அழகாய் கடலில்,
தூக்கி எரிவோருக்கும்
என்ன வேறுபாடு/?
உருவக்கலைப்பு,
கருக்கலைப்பு ஆகாதா?
கலங்கும் பக்தனுக்கு,
அருள் புரிந்து,
உன்னைத் துதித்து ,
கடலில் எரிவோரின்
எண்ணம் சிந்தனைகளை மாற்று.
பக்தியின் பண்பை அருள் வந்து கூறு.




hindi -tamil similar words--6

தமிழ்-ஹிந்தி -சமமான சொற்கள் 

ராணி=ரானி=रानी rani
தம்பதி=தம்பதிदंपती=dampathy

மன்மதன்manmathan =manmath =மன்மத்=मन्मथ
தேவபலம் devabalam =தேவ்பல்देवबल =devbal
ஆயுதம்=ஆயுத்=आयुध
ஞானத்ருஷ்டி =ஞானத்ருஷ்டி =ज्ञान दृष्टी

சமம்samam  =சம்=सम =sam
=பகவான்=भगवान=bhagavaan

நியாயம்=நியாய்=न्याय =niyaay
பஞ்சாயத்து =பஞ்சாயத் =पंचायत =panchaayat
பூர்ணம்=பூர்ண =पूर्ण =poorna
unnatham=उन्नत=unnat
ஆவேசம்=ஆவேஷ்=आवेश =aanesh
anubavapoorvam=அனுபவ பூர்வம் =அனுபவபூர்வக் =अनुभव पूर्वक =anubavapoorvak
அசாத்தியம்=asaaththiyam  =அசாத்ய =असाध्य =அசாத்ய
நிரூபணம்=niroopanam  = =निरूपण =niroopan
balaheenam=பலஹீனம்=बलहीन=balheen
  பூகம்பம் =பூகம்பம்                                             भूकंप =பூகம்ப்
ஆபத்து=aapaththu =आपद
udyogam=उद्योग =உத்தியோகம் =உத்யோக்
அங்கம்=அங்க=अंग=angam=ang

முக்கியாம்சம்=முக்யாம்ஸ் =मुख्यांश =mukhyaamsh
வைபவம்=வைபவ் =वैभव=vaibhav
பதார்த்தம்=பதார்த் =पदार्थ =padarth
ஆலயம்=aalay =आलय
வியாபாரி=viyaapaari=व्यापारी -vyaapaari
aanandam  =ஆனந்தம் =आनंद =aanand
விபரீதம்=vipareetham =विपरीत =vipareet
viratham விரதம் =व्रत =vrat=
பிரசாதம்=பிரசாத் =प्रसाद =prasaadham =prasaad
raagam=raag=ராகம்=राग
aadhikaalam =ஆதிகாலம்  =आदिकाल =aadikaal
பலிபீடம்=balipeetam=बली-पीठ =balipeet
naiveththiyam =naivedya =नैवेद्य =நைவேத்தியம்


torch vender Hindi kathai in tamil

டார்ச் விற்பவன்
(சாமியார்கள் போலிகள் உருவாகும் )கதை

ஹரி ஷங்கர் பிரசாத் ஹிந்தியில் சிரிக்க சிந்திக்க கதை எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர்.அவரின் டார்ச் பேச்னே வாலா  என்ற கதையின் சுருக்கம்.

தெருவில் டார்ச் விற்பவன் இரண்டு மாதத்திற்குப்பின் தாடியுடன் தென்பட்டான்.
எழுத்தாளர் அவனிடம்  இரண்டுமாதமாக எங்கு சென்றிருந்தாய்/?தாடி ஏன் என வினவினார்.
அவன் தன் தாடி வளர்த்த கதையைப்பற்றி கூறினான்.:--
அவனும் அவன் நண்பனும் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒன்று செய்யவேண்டும் என்று முடிவெடுத்தனர்.ஆனால் கூட்டு கூடாது என்றும் இருவரும் தனித்தனியாக   செல்வது என்றும் ஐந்தாண்டிற்க்குப்பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதென்றும் முடிவெடுத்தனர் அன்றிலிருந்து இவன் இருள் பயத்தைப்போக்கும் டார்ச் லைட் என்று விளக்கு வியாபாரம் செய்துவந்தானம்.அவன் தன் விளக்கு விற்பனைக்காக விளம்பரம் செய்வான்:-எங்கும் இருள் சூழ்ந்துள்ளது.சிங்கமும் சிறுத்தையும் நாலாபக்கங்களிலும் சுற்றி வருகின்றன.விஷ ஜந்துக்கள் ,பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன.இரவு இருள் சூழ்ந்து இருக்கிறது.கால்கள் முள்ளில் குத்தப்படும் .பாம்பு கொத்தி உயிருக்கே அபாயம் ஏற்படும்.இருள்  வீட்டுக்குள்ளும் சூழ்ந்து இருக்கும்.
இருளில் ஒளி பெற  எனது "சூரியன்"பிராண்ட் கை விளக்கு வாங்குங்கள் என்று
விளக்குகள் விற்றுவந்தானாம்.
நண்பனிடம் முடிவு செய்த படி ஐந்தாண்டுகாலம் முடிந்து விட்டது.இவன் நண்பனை சந்திக்க அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் நண்பனைக் காணவில்லை.அங்கு மக்கள் கூட்டம்.ஒலிபெருக்கி அமைத்த அலங்கரிக்கப்பட்ட மேடை.அங்கு திரைப்படங்களுக்கு ஆலோசனை கூறும் ஆசிகள் கூறும் ஒரு மகான் வருகை தரப்போகிறார் என்று மக்கள் கூறினார்.
மிக உயர்ந்த பட்டாடைகள் அணிந்த தாடி வைத்த,முதுகில் முடிகள் அலைபாயும் ஒரும் சாது வந்தார். அவர் வந்த மகிழுந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த விலை உயர்ந்த மகிழுந்து.
சாது தன் அருளுரை  தொடங்கினார்:-
நான் இன்று மனிதர்களை இருள் சூழ்ந்த சூழலில் பார்க்கிறேன்.இந்த யுகம் இருள் சூழ்ந்த யுகம்.மனிதன் இருளில் வழி   தவறுகிறான்.அவன் ஆத்மா இருள் சூழ்ந்துள்ளது.அவன் உள் மனக்கண்கள் ஒளி இழந்துள்ளன.மனிதனின் ஆத்மா பயத்தாலும் மனவேதனையினாலும்  பீடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களும் பெண்களும் பக்தி சிரத்தையுடன் அவரின் அருளுரை கேட்டு 
மெய்மறந்தனர்.
மேலும் கூறினார்:இருள் உள்ள இடத்தில் ஒளி இருக்கும் இருளில் ஒளிக்கதிர்கள் இருக்கின்றன.அதை மனத்திற்குள் உனக்குள் தேடு.மனத்திற்குள் இருக்கும் ஒளியை எழுப்பு.நான் எல்லோரின் அந்த 
மன ஒளி விழிப்படையச்செய்ய அழைக்கிறேன். அணையா ஒளிவிளக்கு ஏற்ற 
எனது ஆஷ்ரமம் "சாதனா மந்திரத்திற்கு வாருங்கள்.
அருளுரை கூட்டம் முடிந்தது.
அந்த சாதுவை  கைவிளக்கு விற்றவனால்    அடையாளம்  காண  முடியவில்லை .ஆனால்  
அவர் அவனை   அடையாளம் கண்டு  அழைத்தார். அவர்தான் இந்த வியாபாரியின் உயிர் நண்பன்.இவனை தன் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அங்கு இரண்டு மாதம் கழித்து இவன் தாடி வளர்த்து மக்களுக்கு டார்ச் லைட்டுக்குப் பதிலாக  ஆன்ம ஒளி தரும் புதிய  அதே டார்ச் தான் விற்பனை.ஆனால் கம்பெனி சூரியன் பிரண்ட் டார்ச் விளக்கு கிடையாது.
ஆன்ம ஒளி தரும் புதிய கம்பெனி .அது ஒரு கதையல்ல.அது சூக்ஷ்ம ஞானம் தரும் மன இருள் அகற்றும்  பல கோடி லாபம் தரும் "சாதனா மந்திரம்."
இவன் கம்பெனி மாறி விட்டது.
இன்றைய போலி சாதுக்கள் ,ஆனந்தம் மக்களுக்கு புரிய வைக்கும் கதை.
சாமியார்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.