சனி, மார்ச் 30, 2013


மனிதர்கள்   நடப்பதெல்லாம் நாராயணின் செயல்  என்று இருந்துவிட முடியாது. ஆகையால் தான் ,

"தெய்வத்.தால்  ஆகாதெனினும்  முயற்சி
 தன்  மெய்வருத்தக்  கூலி தரும்" -என்றனர்.

ஆனால் முயற்சி இன்றி வருவதென்பது ,

நோய். இதில் மன நோய் என்பது ஞானக்  கண் பெற்ற மனிதனுக்கு

அக்ஞானம்  என்றே கருதவேண்டும். இருப்பினும் வேதனைகள் அதிகம் தரும்

மனம்  ஏன்?

மனக்கோட்டை  என்பர்.எளிதாகக் கட்டமுடியும்.

நாயகனாக இருந்து  நாயகியின் கற்பனை,அரசனாக கற்பனை,தான் நினைப்பதெல்லாம்  சாதிக்கும் கற்பனை . இவை எல்லாம் எளிது.ஆனால்,
நடைமுறை மனப்பால் குடிபதைப்போல்  இருக்காது.வாயுவேகம் மனோவேகம்  என்பர்.

நாம் ஞானத்தால் மனதை அடக்கவேண்டும்.
மனிதர்கள் வாழ்க்கையில்  பல போராட்டங்களை செய்யவேண்டி உள்ளது.
ஒருவனுக்கு அறிவு பற்றாக்குறை என்றால் ஒருவனுக்கு ஆனந்தம்.
ஒருவனுக்கு  ஆயுள் குறை;ஒருவனுக்கு ஆரோக்கியம்.
ஒருவனுக்கு ஆஸ்தி  இல்லை;ஒருவனுக்கு ஆதரவு இல்லை;
ஒருவனுக்கு நாதி இல்லை .
ஒருவனுக்கு வேலை இல்லை. ஒருவனுக்கு வேலை பளுவால் ஓயவில்லை.
உழைப்பவனுக்கு சோறில்லை;அவனை சார்ந்தோருக்கு ஓய்வும் உண்டு ;சோறும் உண்டு;
பணம் படைத்தோருக்கு  சந்தானம் இல்லை; சந்தானம் உள்ளோருக்கு லக்ஷ்மி கடாட்சம் இல்லை.

நேர்மையில்லை;அதிகாரம் உண்டு; நேர்மை உண்டு அதிகாரம் இல்லை.
இதுதான் வாழ்க்கை;