ஞாயிறு, ஜனவரி 06, 2013

ஜனநாயக முறைப்படி

பாரதநாடு  உலகில் உயர்ந்தது.
ஆன்மீக நாடு;
இவ்வுலகில் பாவங்களுக்கு 
ஈடில்லா தண்டனை தரும் 
கருட புராணம்;
நீதி தேவன் தண்டனை தரும் 
கருப்பணசாமி ;ஐயனார் ;முனீஸ்வரன்
காளி ;மூழி ;நீலி;
எங்கும் ஆலயம்;
எதிலும் பாவம் புண்ணியம்;
இறைவனின் பயங்கர சிலைகள்;
கற்புக்கரசி கண்ணகி;
ஆனால்  இந்த புண்ணிய பூமியில்,
நாளும் கற்பழிப்புகள்;
ஊழல் புகார்கள்;
இலஞ்சப்புகார்கள்;
காவல்துறையின் அநீதியால்.
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்.
தீவீரவாதம்;
பலாத்காரம் செய்யும் நாடாளுமன்ற 
சட்டமன்ற உறுப்பினருக்கு 
உரிய தண்டனை கொடுக்க வாய்ப்பில்லா  உச்ச நீதிமன்றம்.
பதவியில் இருத்து நீக்க அதிகாரம் 
யாருக்கும் இல்லை;
குற்றவாளிகளின் புகலிடம் அரசியல்;
அரசியலில் வெற்றி தாதாக்கள்  கைகளில்.
மக்கள் வரிப்பணம் விமானப்பயணங்கள்;
ஏழை நடுத்தர மக்கள் வாழும் பகுதிகள் 
புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்;
சாலைகள் கிடையாது;சாக்கடைவசதிகள் கிடையாது;
ஓட்டுப்போட காசுகொடுத்தால் 
ஓட்டுப்போட ஒரு கூட்டம்;

பணம் படைத்தோருக்கு வரி கொடுக்காமல் தப்ப ஆயிரம் வழிகள் ;
கொலை ,கொள்ளைகள் பெருகிவரும் காலம் இது.
கலியுக தெய்வம் கார்த்திகேயனையே 
சுரண்டிய சேதியும் உண்டு.
லஞ்சத்தால் ,ஊழலால் வளரும் 
பெருங்கூட்டம்;
எதிர்காலம்  
ஒளிமயமான எதிர்காலம்
  ஊழல் ஒழிக்கவேண்டும் -என்பதெல்லாம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கே;
மக்களும் தன சுயநலத்தால் 
விரும்புவது  ஊழலே;
ஒழியாது இந்த தொற்றுநோய்;
ஏழைகளை ஒழிக்கவே   இந்த நோய்;
மருந்தில்லை;இதை ஒழிக்க மே மந்திரமில்லை;
ஆதரிக்கும் கூட்டம் அதிகம் என்பதால்.
ஜனநாயக முறைப்படி ,
வாழ்க ஊழல்;