ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மாற்றம் தேவை.

நமது சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறதா?

நம் நாட்டில் எத்தனை பேர் நீதிமன்ற அனுபவம்

இனிமை என்று கூறி உள்ளனர்?

உள்ளூர் பஞ்சாயத்தின் நிம்மதி கூட நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதா?

ஒரு வழக்கு 10-15 ஆண்டுகள் நீடிப்பதேன்?

பொய் வழக்குகள் போடப்படுகின்றன  என்பதால் தான் நீதிமன்ற அரசியல்வாதிகள் குற்றம் சாட்டப்பட்டாலும் தேர்தலில் நிற்கலாம் என்ற வாதம் எவ்வளவு சரி?

வழக்கு நடக்கும் போதே தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் ,பின்னர் வழக்கு திசை மாற வாய்ப்புள்ளதா? இல்லையா?


கற்பழிப்பு ,திருட்டுவழக்குகள்   17 வயதில் செய்தால் குற்றத்தின் தன்மை கருதி  கடும் தண்டனை அளிக்கப்படவேண்டுமா?வேண்டாமா?

கல்வி பாதிக்கப்படும் ,வாழ்க்கைப்பாதிக்கப்படும்  என்று இளம் சிறார்கள்

சிறு தண்டனை கொடுத்து சீர் திருத்தலாம் என்றால் அப்பனுக்கே பாடம் கற்றுத்தந்த சுப்பன் கதை எப்படி?

சிறு குழந்தைகளைத் திருடி பிச்சைக்காரர்களாக்கும்  கூட்டம்,இந்த மாதிரியான கொலை,திருட்டு ,கற்பழிப்பு ,கடத்தல் போன்றவற்றிக்காக சிறார்களை  பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.இது நடக்கிறது.

பல சிறார்கள் குற்றம் புரிவது அண்மைக்காலத்தில் செய்திகளாக வருகின்றன,

ஆகையால் குற்றத்தன்மைக்கேற்ப சிறார்களுக்கும் கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றவேண்டும்.


மனுநீதிச் சோழன் ஆண்ட நாடு. மாட்டின் மரணத்திற்கே அரசகுமாரனுக்கு மரண தண்டனை.

இன்று மகாபாவிக்கு மூன்றாண்டு தண்டனை இது சிறார்குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.


இது மிகவும் வேதனைக்குரியது.

இன்றைய அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்ப்படும்பாடு;

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆசிரியையை கொலை  செய்துள்ளான்.



சிந்தியுங்கள்!சட்டம் குற்றங்களை    இளம் குற்றவாளிகளை  தடுக்கிறதா?

வளர்க்கிறதா?

மாற்றம் தேவை.