வியாழன், ஜூன் 06, 2013

பணம் இருந்தும் பொருளற்று ஆகிவிடும்.

      நண்பர்களே ! உற்றார் -உறவினர்களே,


நமது புராணக்கதைகள் ,

நட்புக்கு இலக்கணமாகவும் ,

பங்காளிப்பகையால் ,ஏற்படும்  அழிவையும்

நம்பிக்கை துரோகத்தையும் காட்டுகின்றன.

பொறாமை,வெறுப்பு,பாரபட்சம் ,ஆணவம்,காமம் ,மோசடி.

 ஞானம்  இருந்தும்  செய்து போராடும் குணம்.

அஞ்ஞான லௌகீக  மோகத்தால்,

அழியும் உலகில் போராட்டம். அதனால்

மன அழுத்தம் .கொலைவெறி.

 இரக்க மற்ற தன்மை.

பதவி மோகத்தால் தன சகோதரர்களையே

அழிக்கும்  வரலாற்று நிகழச்சிகள்,

வாலி,சுக்ரீவ் ,ராவணன்,விபீஷணன் ,

சமுதாய கௌரவத்தால் பெற்ற குழந்தையை

ஆற்றில் வீசிய   குந்தி,

குளக்கரையில் விட்டுச்சென்ற கபீர்தாசரின் அன்னை,

மாற்றான் மனைவியின் மோகத்தால்

அவனைக் கொன்று மனைவியை கவர்ந்த கதை,

அகலிகை ஏமாந்து கல்லான கதை.

கோபத்தால் தவ வலிமை  இழக்கும் ரிஷிகள்.

அனைத்தும் கற்பிக்கும் தாய்மொழி வழி  கல்வி

இன்று வேண்டாம் என்ற பெரும்பான்மை

விளைவு ஆன்மீக  நாட்டில்

உணர்த்தும்  நேர்மை,சத்தியம்,இரக்கம்,

கடமை, தானம்,பரோபகாரம்,தியாகம்

நியாயம்  காணா நிலை/குறைந்த நிலை.

பக்தி பெருகினாலும் ,

ஆலயங்கள் அதிகரித்தாலும்

ஆன்மீகப் பிரசாரகர்கள் ,துறவிகள்,

அதிகரித்தாலும் ,

ஊழல் தலைவர்களால்


சுயநல அரசியல்வாதிகளால்,

பணம் படைத்தோரால்,

சுயநல அதிகாரிகளால்,

நாட்டில் கொலைகள்,

கற்பழிப்புகள்,

தற்கொலைகள்,

கையூட்டுகள்,

விளைநிலங்கள் வீடுகளாகும் நிலை.

விளைவு மழை இன்மை.

விலைவாசி உயர்வு.

எத்தனையோ  கஷ்டங்கள்.

இருப்பினும் ஆன்மீக சக்தியால் அனைத்தும்

வெட்ட வெளிச்சமாகும் நிலை.

பாரதத்தைக் காக்கும்  பார்புகழும்

ஆன்மிகம்  விவேகானந்தர் காட்டிய வழி.

அந்த ஆன்மீக தெய்வ பலத்தால் ,


இன்றும் பார்வியக்க வளரும் பாரதம்.

இன்று எந்தக் கதைக் கருவும்  அந்த புராண இதிகாசக்

கதைகளால் உருவானதே.

அக்கதைகளில் காதலும் உண்டு.

காம வெறியர்களும் உண்டு.

சிசுக்கொலை களும் உண்டு.

இனத்  துரோகிகளும் உண்டு.

தேச துரோகிகளும் உண்டு.

அல்லிராஜ்யமும் உண்டு.(ஓரினச் சேர்க்கை}

விந்து பரிமாற்றமும் உண்டு.

விருந்து பரிமாற்றமும் உண்டு.

இந்த பாரதக் கதைகள்

இன்றைய  கல்வி முறையில்

இன்றியமையாத அங்கமாகும்.

ஆனால்,பொருளாதாரம்  ஆங்கிலத்தையும்

ஆங்கிலக்கல்விமுறையையும்  ஆதரிக்கிறது.

அவற்றுக்குமேல்  இந்த ஆன்மீகக் கல்வி

முக்கியத்துவம் பெற்றால்

இன்றைய இளைய தலை முறை

சமுதாயம் அமைதிபெறும்.

அல்லது நல்லோளுக்கமில்லா

பொருளில்லா  பணக்கார வாழ்க்கை

பணம்  இருந்தும் பொருளற்று ஆகிவிடும்.