திங்கள், மார்ச் 05, 2012

man and his sufferings. WHY?wrong thoughts

அவனியில் மரணம் என்று ஒன்று இல்லையெனில்,அசுரசக்தி ஆட்டிப் படைத்துக்  கொண்டு இருக்கும். அசுர  சக்தியை  உருவாக்கிய  ஆண்டவனே
அச்சம் அடையும் அளவுக்கு  அது வளர்ந்து  விட்டது. மனிதன் நல்லவனாக, நேர்மை உள்ளவனாக ,சத்தியவானாக இருக்கத்தான் நினைக்கிறான்.ஆனால்
இந்த   உலக மாயைகள் ,உலக வாழ்க்கை முறை அவனை இறக்கமற்றவனாக்குகிறது .

தனக்காக   சிபாரிசு,லஞ்சம் அளித்தால்-பெறல் ,பெற்றால் கொடுத்தல், பணம் பெற தவறிழைத்தல், தவறு செய்து லஞ்சம் அளித்தல் இது ஆண்டவன் ஆடல்.
அசுரசக்திகளின்  ஆதிக்கம் அதிகமாகும் போது அது அடியோடு  அளிக்கப்படுகிறது
மீண்டும் மீண்டும்  சமுதாய அக்கறைகொண்டவர்கள்  இறை அன்பர்கள் கூறுவதெல்லாம்  ஒன்றே.உன் கர்ம வினை உன்னை விடாது. நீ செய்யும் பாபங்கள்  தொடர்ந்து உனது வாரிசுகளை பாதிக்கும். உன் பாவங்களால் நீ சேர்க்கும்
பொன் பொருள் ஆஸ்திகள் நேர்வழியில்  பயன்படாது . மதுவிற்கும்  மருத்துவத்திற்கும் ,கேளிக்கைகளுக்கும்  என  கரைந்து   வறுமையில்  வாடுவார்கள் . தீராத நோய்களால் அல்லல் படுவர்.பழிச்சொல்லுக்கு ஆளாகி அவமானச்சின்னமாவர்.இந்த உலகிலேயே நரக வாழ்க்கை வாழும்  எத்தனையோ  செலவச்சீமான்களை நாம் கலி உகத்தில்  இந்நிலை உலகில்  பார்க்கிறோம்.
தர்மங்கள் அனைத்துமே கூறும் சத்திய வழி,நியாய வழி..அவைகளை   அறிந்தும்  புரிந்தும்
மனிதன் தவறுவதால்   அவன் துன்பங்களை ஆண்டவன் அளித்ததாகவும் சுகங்களை தன முயற்சியால் அடைவதாகவும்  தப்பான  எண்ணங்கள் .