புதன், டிசம்பர் 21, 2011

manthirangal

இறைவனின் அருள் பெற மந்திரம் என்பது அனைத்து மதங்களிலும் வலியுறுத்தப்படுகிறது.
மந்திரம் என்ற சொல் ,வசனம்,ஸ்லோகம் என்று கூறப்படுகிறது.மந்திரங்களின் பொருள் ஆழமானது.அதன் ஒலிவடிவம் சூக்ஷ்ம சக்திகளை இயக்கவல்லது.உயிரனங்களை  ஒலிகளைக்கொண்டு இயக்கமுடியும்.சாடைகள் காட்டியும் இயக்க முடியும்.மனிதர்களை எழுத்தைக்கொண்டும் அது எழுப்பும்  த்வனியைக்கொண்டும் (ஓசை)(ஒலி)கொண்டும் ,நினைவலைகள் மூலமும் தேவதைகள் போன்ற சூக்ஷ்ம சக்திகளை இயக்க அல்லது தொடர்புகொள்ள முடியும்.
இறைவனைக்காண  எழுத்து,குறியீடு,சொற்றொடர் ஆகியவை மந்திரங்களாக அமைக்கப்படுகின்றன.
  "
ஓம்  என்ற வடிவமும் ஒலியும் ஹிந்து மதத்தில் மிக சக்தி  வாய்ந்தது.

காயத்ரி மந்திரம் :-
ஓம்.    பிரணவமாகவும் அனைத்தையும் படைத்து 
வியாபித்து நமது அறிவைத்தூண்டும்
அந்தத்
தெய்வீக ஒளியைத் தியானிப்போம்
.ஓம்.
ॐ भूर्भुवस्सुवः  तत् सवितुवरेण्यं भर्गो देवस्य धीमहि  धियो यो नः प्रचोदयात् ईई

பைபிள்:--
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
உமது ஆட்சி மண்ணுலகிற்கு  வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது   போல
 மண்ணுலகிலும் நிறைவேறுவதாக.
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னித்துள்ளது போல்
எங்கள் குற்றங்களை மன்னியும்
.எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்துஎங்களை. விடுவியும்.
ஆட்சியையும் வல்லமையும் மாட்சியும்
என்றென்றும் உமக்கே. ஆமென்


குரான்:
 பூர்ண அருளையும் கருணையும்  கொண்ட அல்லாவின்  பெயரால் வேண்டுகிறோம்.எல்லாப்புகழும் அல்லாவை சார்ந்ததாகும்.அல்லாவிற்கே உரியதாகும்.
பூர்ண அருளாளர் ஆகவும் கருணையுள்ளவராகவும் இறுதித் தீர்ப்பாளராகவும் அல்லா உள்ளார். உமக்கே நாம் அடிபணிவோம்.எமக்கு நீ நேரான மார்க்கம் காட்டுவாயாக.
அது நீ அருள்புரிந்தவர்களின் வழி.
அது உம்முடைய கோபத்திற்கு ஆளாகாத நெறி  தவறாத   வர்களின் நேர்வழி.


மனமும் மந்திரமும்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.
மனமது செம்மை யானால் வாயுவை வியர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்.
மனது செம்மையானால் மந்திரம் செம்மையாமே -----அகஸ்தியர்.
திருமூலர்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத்தாநிருந்தானே.
கடுவெளி சித்தர்
பாபஞ்செய்யாதிரு மனமே--நாளை
கோபம் செய்தே எமன் கொண்டோடிப்போவான்.

 .

கருத்துகள் இல்லை: