செவ்வாய், ஏப்ரல் 25, 2023

அன்பு ? எப்படிக் காட்டுவது?

 அன்பு என்பதை  எப்படிக் காட்டுவது என்பதே 

 புரியுமா? புரியாதா?

 தெரியாது.

 குழந்தை மிட்டாய் கேட்கும். 

 வாங்கித்தரலாம்.

  ஸ்கூட்டர் சைக்கிள் கார் 

வீடு  அனைத்தும் வாங்குவது கொடுப்பது 

பெற்றோரின் அன்பல்ல 

 பெத்த கடன்.

 படிக்க வைப்பதும் கடன்.

 அதையும் மீறி அன்பு என்பது பெற்றோர் காட்டுவதில்லை. அவர்கள் திருமண சுகம்.

 அதனால் தோன்றிய குழந்தைகள்.

 இப்படி பெற்றோர் பெற்று கடமையைச் செய்கிறார்கள். 

 இன்று பெண்கள் மிக அறிவாளிகள். கணவனுக்கு சமைத்து துவைத்துபஅ போடுவதே பெரிய கடமை.

 ஆண்கள்? 

அவர்களின் மன நிலை பற்றி  ? 

 கைகேயியை மகிழ்ச்சி  படுத்த தசரதன் மகனை காட்டுக்கு அனுப்பினார்.

 தசரது மனவேதனையை சோகத்தை கைகேயி அறியவில்லை.

இதுதான் .  அம்மாவை அப்பா பிரியமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது பெரும்பாலான  குழந்தைகள்  எண்ணம்.

 அப்பாவின் மன நிலை படைத்த பிரம்மாவிற்கே தெரியாது.   

 வள்ளி க்காக முருகன் வேடனாக விருத்தனாக  மாறினாரே ஒழிய வள்ளி என்ன செய்தாள். முருகனை காதலித்தாள்.

 காதலியை அடையதத்தான் போர்.

 மும்தாஜை அடைய ஷாஹ்ஜஹான் கொலை காரணானான்.

   ஆண்டவன் படைப்பில் பெரும் மாயை பெண்கள். அவர்களை மகிழ்ச்சி  படுத்த பல தியாகங்களையும் ஆண்செய்கிறான்.

 என்பதை புரிவது கடினம்.

 ஆணுக்கு திருமணம் ஆனால் அம்மா வீட்டில் பொண்டாட்டி தாசன். மாமனார் வீட்டில் அம்மா  தாசன். அது தான் குழந்தைகள் மனதில் பதிகிறது. அப்பாவின் அம்மா வீட்டை விட அம்மாவின் உறவுகளுக்கு த்தான் உரிமை சலுகை  உதவி அதிகம். உங்கள் தம்பி எனக்கு பெரிதல்ல என்ற  அளவிற்கு  மனமாற்றம்.