செவ்வாய், மார்ச் 06, 2012

kalvi-indiscipline in education.


கல்வி - ஒழுக்கமின்மை


  ஆசிரியர்கள் பற்றி ப்ளாக்கில்  பாலா என்பவரின்  சிந்தனைகளும் அதில்

நல்ல ஆசிரியர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது  என்ற  குறிப்பும்

 காணப்பட்டது.


அதில் பெரிய திரை சின்னத்திரை ஆசிரியராக

 நடிக்கும் நடிக-நடிகைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

கல்வித்துறை என்பது ஒரு நாட்டின் மிகப் பொறுப்பு  வாய்ந்த முக்கியமான

துறை.நான் படித்த பள்ளியில்  குடிகார ஆசிரியர் என்றே ஒருவர்.

அவர் மேல் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை.காரணம் அவரின் குடும்பம்

என்னவாகும் என்பதே ஆசிரியர் சங்கத்தின் வாதம்.அதிலும் அவ்வாசிரியர்

செல்வாக்கு உள்ளவராக இருந்தால் போதும்.

இதில் ஜாதி-மதம் என்ற  போர்வையில் செய்யும்

அட்டகாசங்கள்.இந்தப்பள்ளியில் இந்த ஜாதிக்கு உயர்வு.இந்த மதத்திற்கு

உயர்வு.ஆகையால் நான் அதற்க்குத்தகுதியில்லாததால் என் மீது நடவடிக்கை

என்று கூறியே பள்ளி நேரத்தில் வகுப்புக்குச் செல்லாமை.

தன்  சொந்த மேல் வருமானத்திற்கு  திட்டம் தீட்டல்,மாணவர்களை டியூஷன்

எடுக்க  கட்டாயப்படுத்துதல்,மாலை நேர வேலைக்கு பள்ளிநேரத்தில்

ஒய்வு.பூர்வ ஜன்ம பலன்.ஒய்வு ஊதியம்.சம்பள நாளன்று ஓய்வூதியம்

வாங்கியாச்சா /?என்ற  குசலம் விசாரிப்பு.

ஆசிரியர்களை    மதிக்கும்  மாணவன் ஆசிரியர்கள்

 அனைவரையும் மதிக்கிறான்

.ஆனால்  குறைகளைக்கண்டால், ஆசிரியர்களின்  பல  ஹீனனங்களை

 தெரிந்து  விட்டால்   போதும் ஆசிரியர்கள் அவ்வளவு தான்

  அடைக்கலம்.

உறவு,செல்வாக்கு ,சங்கம் ,ஜாதி, மதம்,பணம் நடமாட்டம் இருக்கும் வரை

ஒரு ஆசிரியரை   மற்றொரு  ஆசிரியர்   தன்  வகுப்பில்   மட்டம்

தட்டுதல் ,பொறாமை வெறுப்பு
                                                                     இருக்கும் வரை,

நேர்மையான கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்காதவரை


காவல் துறையும் ,கல்வித்துறையும் மட்டமாகத்தான் சித்தரிக்கப்படும்.


 l