சனி, டிசம்பர் 29, 2012

சரியான தண்டனை.

பாலியல் பலாத்காரம்
தில்லியில் படு அமர்க்களம்.
தமிழகத்தில் செய்திதாள்களில்
வராத நாளில்லை.
அதுவும் சிசுக்கள்
மனிதர்களா?மிருகங்களா?
நாய் ஜென்மங்களா?
ஈடுபடுவோர் மட்டுமல்ல,
இக் காமக் கொடூரர்களைக்
காக்க  வக்காலத்து வாங்குவோரும்,
அந்த கொடியோர்களை ஆதரிப்போரும்
தண்டனை பெறவேண்டும்.
இக்கொடூர செயல் எந்த உருவத்திலும்
காக்கக் கூடாது.
குற்றவாளிகளை ஆதரிப்போருக்கும்
தண்டனைகள் கடும் தண்டனைகள்
தரப்படவேண்டும்.
பாலியல் கொடுமை,
மரணத்திற்கு மரண தண்டனையே
சரியான தண்டனை.

இனிதே கொண்டாடி, இந்தியப் பண்பு காப்பீர்.

ஆங்கிலப் புத்தாண்டு ,
 ஆடம்பரமாகக் கொண்டாடுவோம்.
ஆங்கிலம் இல்லையேல்
இல்லையே  வேலை.
வேலை இல்லையேல்
வேதனைதானே.
வைத்தியம் ஆங்கிலம்,
கல்வி ஆங்கில வழி
ஆனால்
காலம் தவறாமை,
கடமை தவறாமை,
கண்ணியமான பார்வை,
பொன் ஆசை இல்லாமை
நேர்மை போன்றவை
பின்பற்றப்படாமல் ,
அங்கு வெறுப்பதை
ஒதுக்குவதை  இங்கு  ஏற்பது ஏனோ?
ஆங்கிலம் அனைத்தும்
தந்தாலும்
நள்ளிரவுக் கும்மாளம்
நமக்கு ஏற்றதா?
எத்தனை எத்தனை இழிசெயல்கள்.
கேக் உணபதற்கா? உடலில் பூசவா?
உடலில் பூசும் கேக்கை
உதவும் கரங்களுக்கு ஈயலாமே?
நடுநிசியில் போதை,ஆட்டம்,
நம் நாட்டு சீதோஷ்ணத்திற்குப்
பொருத்தமா?
இறுக்கமான ஆடைகள்
சில தோல்நோய்கள் அரிப்பு,படைக்குக்
காரணம்.
வெப்பமுள்ள நாட்டில்
வேனைக்கட்டிவருமே/
வியர் வைக்கிருமிகள்
பெருகுமே.
ஆங்கிலத்தைக் கொண்டாடுங்கள்.
நம் பண்பாடு விட்டு
பட்டுப் போகாதீர்கள்.
உணவு நம் முன்னோர்வழி
தான் சிறந்தவழி.
வேக  உணவு,
வேகமாக ஆரோக்கியக்கேடு.
பட்டம் பெற்றோரே!
நள்ளிரவு உணவாக விடுதி
வீண் ரகளை
ஆங்கிலப் புத்தாண்டு
துயர சம்பவம் இன்றி
கொண்டாடுங்கள்.
இங்கிலீஷ் இளைஞர்களுக்கு
ஆங்கிலப்புத்தாண்டு.
இனிதே கொண்டாடி,
இந்தியப் பண்பு  காப்பீர்.