செவ்வாய், செப்டம்பர் 25, 2012

தர்மத்தின் மூல தத்துவம்.சனாதன தர்மம் -2.



சனாதன தர்மம் 

ஹிந்து  மதத்தில்  இயற்கையின் ஆற்றலுக்கு மதிப்பளித்து 

இயற்கையை வழிபட்டு வந்துள்ளனர்.இன்றும்  ஹிந்து 
மதம்  பற்றுள்ளவர்கள் சூர்ய  நமஸ்காரம் செய்கின்றனர்.
பஞ்ச பூதங்கள் எனப்படும் பூமி,ஆகாயம்,அக்னி ,நீர்,நெருப்பு 
அனைத்துமே  பகவான்களாக போற்றப்படுவது சனாதன தர்மத்தில் தான்.
இறைவனை ஒளி வடிவாக வழி பாடு செய்யப்படுகிறது.
அதற்காக ஹோமம் வளர்க்கப்படுகிறது.
ஹோமப்புகை,அதில்போடும் மூலிகைகளால் 
ஒரு மாசுக்கட்டுப்பாடக பயன் பட்டுள்ளது.
இயற்கையைப் பாதுகாக்க வனங்கள் காக்கப் பட்டன.
ஆலயங்களில் ஸ்தல விருக்ஷங்கள் வளர்க்கப்பட்டன.
நந்தவனங்கள்  வளர்க்கப்பட்டன.
நீர்வளம் சிறக்க ,பெருக்க குளங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால்  இன்று கோயில் குளங்கள் குப்பை கொட்டும்
  இடமாகவும்,அரசியல் கட்சிகளால்  ஆக்கிரமிக்கப்பட்டு 
வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
அறக்கட்டளை  ,தர்ம  கார்யங்களுக்காக  ஒதுக்கப்பட்ட 
நிலங்கள்,வீட்டுமனைகள்  ஏழை எளி   யோருக்குப் பயன் படுத்தப்படுவதில்லை .
அரசியல்  படுகொலைகள் அதிகமாகின்றன.
காதல் கொலைகள் அதிகமாகின்றன.
பொருளாதாரத்தால் செழித்து இருக்கும் 
அரசியல்வாதிகள், அதிகாரிகள்   தனிப்பட்ட வாழ்க்கையில் 
நிம்மதி இருக்காது. பணம் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும்.
அநியாயங்கள் நடை பெறும் .
மனிதமனத்தில்  பணம்,சுயநலம்,குடும்ப வாழ்க்கையில் விவாகரத்துக்கள்,
கண்டதே கோலம்,கொண்டதே காட்சி  பிறர் கணவன் அல்லது 
மனைவி மீது  மோகம் ,இவை எல்லாமே 
இயற்கைக்கு மாறுபட்டு அதர்மம் தலை தூக்குவதால் தான்.
இதுதான் சனாதன தர்மத்தின் மூல தத்துவம்.