திங்கள், ஜூன் 18, 2012

changing sanskkrit name in tamilதமிழ் பெயர்கள் மாற்றம் தேவையா?

தமிழ் பெயர்கள்  மாற்றம் தேவையா?

ஒரு மொழி வளம் பெற தனித்தன்மை தேவை என்ற சூரியநாராயண சாஸ்திரி
பரிதிமாற் கலைஞர் என்ற பெயர்  மாற்றத்தால் புரட்சி செய்தார்.இப்போழுதும்
சிலர் தனிதமிழ்  என்று கூறிவருகின்றனர்.நாட்டில் பல இன்றியமையா பிரச்சனைகள் உள்ளன.ஒரு மொழி எப்படி தன ஆதிக்கத்தை செலுத்து கிறது
என்பது புரியாத புதிர்.
காமராஜர்,பக்த வத்சலம்,கருணாநிதி,,ஜெயலலிதா,சசிகலா ,நடராஜ்,உதயநிதி,ஸ்டாலின்,
அழகிரி,உதயசூரியன்,தயாளு,தயாநிதி,சன் பிச்சர்ஸ் ,என்ற அனைத்தையும்
மாற்ற முடியுமா ?
நாம் பேசும் பொது நடு ரோடு என்றுதான் பேசுகிறோம்.லைட் எரிகிறதா?சுவிட்ச் போட்டியா?பஸ் வந்து விட்டதா?மைக் வேலை செய்கிறதா?
சைக்கிள் பஞ்ச ரா  ?இந்த ஆதிக்கம் ஒழிக்க முடியுமா? 
பல நதிகள் சேர்ந்தால் கடல்.இல்லையேல் நதி.
அ ணை கட்டினால் வறட்சி.

மொழியும் அவ்வாறே.

பூஜை,அர்ச்சனை,தக்ஷினை,பரம்பரை ஆதீனம்,மடாலயம்.,உத்சவம்.
ஈஸ்வரன்,தானம்,தர்மம்,சந்தேஹம்,குரு,சிஷ்யன்,போன்ற வழிபாடு
ஸ்தலங்கலில்  தனித்தமிழ் முடியுமா?

பிரண்டு ,ஸ்கூல்,பெஞ்ச்,போர்டு,டீச்சர்,மாஸ்டர்,புக்,நோட்டு,அசெம்பிளி.
நோட்ஸ் ஆப் லேசன்,பேனா,பென்சில், ரப்பர்,சாக்பீஸ்,டஸ்டர்,
போன்றவற்றை மாற்ற முடியுமா?
தனியார் பள்ளிகளின் ஆங்கில ஆதிக்கம் பட்டி தொட்டியில் எல்லாம் வளரும்
சூழலில்

விருத்தாசலம்  பெயர் மாற்றம் தேவையா?
நவரத்தினம்,நவதானியம்,நவீனம் ,ரக் தபந்தம்,நவக்ரகம் ,நாயகன்,நாயகி,
நவரசம்,ரத்தக்கண்ணீர்,போன்ற சொற்கள்.

ஹோட்டல்,டிபன்,டூர்,டிக்கட்.சார்ஜ் ,போனஸ் என்று  நம் வாழ்வில் கலந்த
சொற்கள்.
இதை நவீன தலைமுறை ஏற்குமா?
ஒருமொழி வளர தனித்தன்மை என்ற எழுச்சி பலன் தருமா/?
பழம் மொழிகள் சமஸ்கிருதம்,கிரீக் ,லத்தீன் போன்றவற்றில்
 தமிழ்
வளந்துவரும் நிலையில் இந்திய மொழிகள் அனைத்துமே
பிழைக்க வழி  இல்லா நிலையில்
தனிதமிழ் படிப்போருக்கு வேலை கிடைக்கா நிலையில்
தனிதமிழ் இயக்கம் என்பது .....பரிதிமாற் கலைஞர் பின்பற்றா நிலை தான்.
கருப்பா ...கருப்பாயீ  என்று அழைத்தால் என்று தமிழன் தலை நிமிர்கிறானோ
அன்று தான் சிறப்புவரும்.
ஷ்யாம்,ஸ்வேதா , ஜெயா,யஷஷ்,விஜய் ,போன்ற  பெயர்கள் மாறுமா?
அவைகள் தான் புதிய  தலை முறை   விரும்பும்  பெயர்கள்.