திங்கள், ஜனவரி 09, 2017

இறைவன்

காலை வணக்கம்.
இறைவன் காட்சிப்
பொருளா?
உணரும் மஹா சக்தியா?
ப்ரம்மானந்தம் என்கின்ற 
நிலையில்
அவர் தன்னை முதலில் பல
வகையிலும் உணரவைக்கிறார்.
கந்தர் அநுபூதி
ஈஷ்வராநுபூதி
இது லௌகீகம்.
அலௌகீகம் என்பது
மெய்மறந்த உயர்நிலை.
தன்னையே மறத்தல்.
ஆண்டவன் வேறா?
நான் வேறா?
ஆத்மா வேறா?
பரமாத்மா வேறா?
மனிதன் அனைவரும்சமமா?
நாம் சொல்லமுடியுமா?
ஒருவரைப் பார்க்கிறோம்.
நமக்கு மிகுந்த மரியாதை
தோன்றும் .
மற்றொருவரை பார்க்கிறோம்
நம்மையும் நம் கட்டுப்பாட்டையும் மீறி
சிரிப்போம் கோபமோ மகிழ்ச்சியோ
அல்லது அவரை விட்டு விலகியோ
அல்லது. சேர்ந்தோ இருக்கத் தோன்றும்.
இந்தவுணர்வுகள் எப்படி தோன்றும் ?
புரியாத புதிர்.
குழந்தைகள் நம் வீட்டிற்கு வரும்
உறவினர்கள் நண்பர்களிடம்
ஒரே மாதிரியான பழகுகின்றன?
பலரிடம் பயம்.அந்த மாமாவை கூப்பிடட்டு மா.?அழுகும் குழந்தை
அழுகை நிறுத்தும்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை
சாப்பிடும்.
சிலரிடம் மட்டுமே அன்பு.

சிலரிடம் அந்தரங்க அன்பு.
சிலரிடம் மட்டுமே அன்பு.
சிலரை பார்த்தாலே எரிச்சல்.
இந்த மனநிலையில் ஒரு விசித்திர நிலை.
நம்மை வெறுத்து துரோகம் செய்பவர்களிடமும் அன்பு.
இரத்த பந்தங்கள்.
இவைகள் அனைத்துமே
உணரும் நாம்
நம்தன்னிலைகளை மறந்து
அமர்ந்து தியானம்.
அதுவே மெய்ஞானம்.
இறைவன் உணர்வு
இறையன்பு.
இது உண்டியல் காசு போட்டு
பாலாபிஷேகம் தங்கத்தேர்
போன்ற கமர்சியல் பக்தி அல்ல.