என்னத்தே எழுதுவது,-நான் 
என் எண்ணங்களை எழுதுகிறேன்.
  செய்த   புண்ணியங்களையா-அல்லது 
சேர்த்த பாவங்களையா ?
சொன்ன பொய்களையா ,
சொல்லமுடியாத  உண்மைகளையா?
என்னத்தே எழுதுவது-என் 
எண்ணங்கள் எழுதுகிறேன்.
கொட்ட முடியாததை 
கொட்ட நினைத்தாலும்,
சமுதாய  அச்சத்தால்-சற்றே 
அடங்கியே எழுதுகிறேன்.
அடங்கியே அடக்கியே வாசித்தாலும்,
அட்டகாச  சிரிப்புக்கு 
அமைதியாக எழுதம் எண்ணம்,
அலைஅலையாய் வந்தாலும்,
ஆசிரியர் ,ஆ சிறியரா?
என்ற எண்ணம்  எழா  வண்ணம்,-
 எழுதுகிறேன்.

 நெடுமால் திருமுருகா  ,
நித்தம்-நித்தம்,
இந்த  இழவா ?
ஏடு தொலையாதோ ,
எழுத்தாணி முறியாதோ,
வாத்தியார் சாவாரோ 
வயித்தெரிச்சல் தீராதோ/
என்றே எண்ணம் கொண்ட 
மாணவர் சமுதாயம்  இருந்த 
பள்ளியில் ,பணியேற்ற நாள் முதல்,
ஆசிரியர்கள் விலைபோகும் 
பள்ளியில் பணியாற்றும் சூழலில்,
கற்க ஆர்வமுள்ளோர் அரசு பள்ளிகளை 
விட்டு தனியார் பள்ளி செல்லும்போது,
படும் எரிச்சல் எப்படி எழுதுவதோ/
என்னத்தே எழுதுவது,
எண்ணங்கள் எழுதுகிறேன்.