செவ்வாய், அக்டோபர் 02, 2012

சமயம்பார்த்து தண்டித்து மனதை மாற்றும்.


மகாத்மா காந்தி

உலகம் போற்றும் தலைவர்.

சிக்கனத்தின் சிகரம்.
அரை ஆடை பக்கரி.
பொதுப்பணத்தில்  அரைத்தம்படி
தனக்காக எடுக்காதவர்.
தனது வாரிசுகள் பற்றி
கவலைப்படாதவர்.
 ஒருநாள் அவர் எதையோ
 தேடிக்  கொண்டிருந்தார்.
அது ஒரு பென்சில் துண்டு.
இதைப்போய் ஏன் தேடுகிறீர்கள்
என்பதற்கு அவர் கூறியது
அது ஒரு சிறுவனின் அன்பான அன்பளிப்பு.
யாருக்குவரும் அந்த எளிமை.
இன்றைய காந்தீய வாதிகளுக்கு வருமா?

சிறுவர்களுக்கான  கதைகள்.
ஒருநாள்  பள்ளிக்கு கல்வி அலுவலர் வந்தார்.
அவர் வகுப்பில் ஒரு கதை கூறினார்.
குழந்தைகளே!
நீங்கள் ஒரு அடர்ந்த காட்டிற்குள்
 சென்று கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடன் உங்கள் தாயும் தந்தையும் வருகின்றனர்.
உங்கள் முன் அப்பா செல்கிறார்.
உங்கள் பின்னல் அம்மா. நடுவில் நீங்கள்.
அப்பொழுது பசியுடன் ஒரு சிங்கம்
உங்கள்மூவரையும் நோக்கிவருகிறது.
நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள்?
குழந்தைகள் பதில் சொல்ல வேண்டும்.
அப்பொழுது
காந்தி குழந்தை என்னசொன்னது தெரியுமா?
நான் நேரே சிங்கத்திடம் சென்றுவிடுவேன்.
எனது தாய் தந்தை இருவரும் காப்பாற்றப்படுவார்கள்.

இதுதான்  காந்தீஜீயின்  தியாக எண்ணம்.
அவ்வாறே  ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்காக
உயிநீத்த உத்தமர்.
சுதந்திர இந்தியா ஊழல் மயமாக
உத்தமரை  கொலை  செய்தனர்.
அவரது ஆன்மா அல்பாயுசு தான்.
அது அழுது கொண்டுதான் இருக்கிறது.
அது இந்த அரசியல் கொள்ளையர்களை
சமயம்பார்த்து
தண்டித்து மனதை மாற்றும்.
வாய்மை வெல்லும்.
அதர்மம் ஒழியும்.
அவரது அவதாரம் மீண்டும் எடுக்கும்.
இந்திய இளைஞர்கள்
வெகுண்டு எழுந்தால்
காந்திஜியின் கனவு நினைவாகும்.











அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு அழுது கொண்டுதான் இருக்கும்


தேசத்தந்தை 
உலகின் அனைத்து நாடுகளும் 
போற்றி  வணங்கும் 
உத்தமத் தலைவர்.
சுதந்திரப் போராட்டத்தில் 
அனைத்து மதங்களையும் 
இணைத்து 
மனித சமுதாயத்திற்கு விடுதலை 
என்பதை உணர்த்தியவர்.
ஈஸ்வர் அல்ல தேரே நாம் 
சப்கோ சன்மதி தே பகவான் என்று 
பஜனைப்  பாடல் பாடியவர்.
ஹிந்து ,முஸ்லிம் ,सीख சீக்  ஈசாயீ 
ஆபஸ் மென் ஹைன் பாயி  பாஈ  என்று 
இசைத்தவர்.

காந்தி என்றால் வைஷ்யர் ;பனியா ;செட்டியார்;
இந்த சாதிப்பெயர் பொதுப்பெயராக மாறி 
ஜாதி வேறு பாட்டை ஒழித்தவர் .
இத்தலி மருமகளும் சோனியா காந்தி.(செட்டியார்)
சென்னையில் ஹிந்தி பிரசார் சபையின் 
மையம் அமைத்து 
தமிழகத்து மக்கள் 
ஆளும் அரசு எதிர்த்தாலும் 
இந்தியத் தொடர்புக்கு 
ஹிந்தி மொழி கற்க 
1918இல் அடிக்கல் நாட்டியவர்.
ஹிந்தி தெரியவில்லை என்ற ஆதங்கம் 
இன்று தமிழகம் முழுவதும் மக்கள் 
ஆழ்  மனதில் உதிக்க கார ணமானவர் .
தொழில் கல்வி அவசியம் என்றவர்.
தாய் மொழி கல்வியே தரம் .
சிந்தனை வளர்ப்பது என்றவர்.
உண்மை.நேர்மை,அஹிம்சை ,எளிமை என்று வாழ்ந்தவர்.
ஆனால் 
இன்று ஆண்டவன் பெயரைச் சொல்லி யும் 
உத்தமர் காந்திபெயரை சொல்லியும் 
கருப் பு ப் பணம் வெளிநாட்டில் சேகரித்து,
கோடிக்கணக்கில் கேடிகளை வைத்து 
அரசியல் நடத்தும்  அநியாயத் தலைவர்கள்.
உத்தமர் சமாதியில் வணங்கி 
உத்தமக்கொள்கைகளையும் சமாதி வைக்கின்றனர்.
அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு 
அழுது  கொண்டுதான் இருக்கும்.
இன்று முதல் 
அவரது கொள்கைகளை 
உண்மையாக நடத்த உறுதியுடன் 
இருப்பது தான் அவரது ஆத்மசாந்தி யடைய 
நமது  சிர ந்தாஞ்சலி.

வாழ்க  காந்தீஜி.