ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;



Tuesday, January 8, 2013


ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

 அன்பும்,பண்பும் ,உயரிய நோக்கம்

கொண்ட  புதுமை இளம் பெண்களே!!!

செய்தித்தாள்களில் வரும் செய்திகள்,

கற்பழிப்புக்கு பெண்களின் ஆடைகள்,அவர்களின் சம்மதமே காரணம்

என்று    சாமியார் ஆசாராம் பாபு கூறியுள்ளார்.

நடுராத்திரியில் பெண்கள் நடமாட்டம் கூடாது
 என்று ஜனாதிபதி மகன்  கூறி உள்ளார்.

திரௌபதி துகில் உரிய  திரௌபதியே  காரணம்.

அவள் சிரித்து துரியோதனின்  கோபத்தைத்  தூண்டியவர்.

அதனால் பெண்களின் அவமானம்  பெண்களால் ஏற்படுவதே.

ஆசாரம் இப்படி கூறியதற்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் அனைவரும் நாய்கள்.

ஆஷ்ரமங்கள் வளர்வதே அமைதி தேடிச்செல்லும் பெண்களால்.

அதனால் அவர்கள் பெண்கள் சில சுலோகத்திற்கும்,ஆஷிர்வாதத்திற்கும்
மயங்குபவர்கள் என்ற எண்ணம்.

அதனால் தான் பெண்கள் தெய்வங்களாக,காளி ,மூளி ,மாரி ,
என்று பயங்கர ஆயுதங்களுடன் ,வெட்டுண்ட தலை கையில் ஏந்தி
முண்டத்தில் மீது நின்று அதி பயங்கரமாக காட்சி அளிக்கின்றனர்.

இன்று பெரும் நகரங்களில் இளம் பெண்கள் பணிபுரிந்து  வீடு திரும்பும் நேரம்  உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் காளி ,மூலி ,நீலி  யாக மாறி தற்காத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்குமா?சீரழிந்த பின் சட்டநடவடிக்கை.

அரசியல் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம்

செய்தால் நீதிமன்றம் தண்டனை வழங்க வாய்ப்பில்லை.அவர்கள் பதவி நீக்கம் செய்ய முடியாது.

   இராமாயண மகாபாரத காலத்தில் இருந்தே இதே நிலை.

  இப்பொழுது ஒரு புதிய கூட்டம்;உயர் சாதிப்பெண்களை  விரட்டி விரட்டி
காதலித்து களங்கப்படுத்தி சீரழிப்பது என பா.மு.க. தலைவர் கூறி உள்ளார்.

ஜாக்கிரதை! பெண்களே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்;

சுத்தம் சுகம் தர, தனி பிரசார தன்னார்வர்கள் தேவை.

பொங்கல் பண்டிகை போகி அன்று ,
டயர் ரப்பர் கொளுத்தும் பழக்கம்,
எப்படி வந்ததோ தெரியவில்லை.
ஒரு பெரியார் பத்தாது ,
மூடப்பழக்கம் போக்கி ,
பகுத்தறிவு வளர்க்க;
பொங்கல் தமிழரின் ,பழம் விழா,
டயர் இல்லா காலம்  அது.
காற்று மாசுபடுவதால்,
பலருக்கு காற்று ஒவ்வாமை.
மாசுக் காற்று கரியுடன்  கலந்து.
யோசித்து உண்மை நிலை புரிந்து,
எரிப்பதை போக மும்பை அன்று விட்டுவிட 
கடும் முயற்சி எடுத்தாலும்,
இன்று காலை ஜன்னல் திறக்க முடியவில்லை.
பெருங்குடி,இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன்.
வெற்றிலை ,பாக்கு எச்சில் காவிநிறம் 
இதற்கு அரசு என்ன செய்யும் ,
காவல்  துறை என்ன செய்யும்.
பொதுமக்கள் உணரும் காலம் 
என்றுவரும்.
இதைவிட பூனா ,மும்பை ,அதிகம்.
மக்களாக திருந்தாவிட்டால்,
மாசு குறையாது.
சுத்தம் சுகம் தர,
தனி பிரசார தன்னார்வர்கள் தேவை.

ஒன்றே வழி;பெண்ணினம் காக்க





விவேகானந்தர்  ஞானக்  குழந்தை,
அவர் இளைஞர்களுக்கு அறிவுரை அளித்தார்.

பாரதியார் பாப்பாவிற்கு.

ஆனால் அரசின் வாரிசுகளுக்கு ;
ஆணவம் பிடித்தோருக்கு 
அதர்ம  வெறி பிடித்தொருக்கு,
அதிரடி தண்டனை,
உடனடி  தண்டனை தேவை.

பெண்களைபோற்றும்  நாட்டில் ,
பெண்ணடிமை தான் என்றுமே;


ராவணன் சீதையை சிறை வைத்தான்;

அனைத்தும் தெரிந்த ராமன் 

அவளை கானகம்  அனுப்பினான்.

தேவேந்திரன்  செய்த தவறு,
அகலியை   கல்லானாள் .

துகில் உரித்தான் துச்சாதனன்;

அறம்  தக்க தருணத்திற்காக 

அமைதி காத்தது;

அப்பரம்பரை  இன்றும் 
தருணிகளை தரக்குறைவாக பார்க்கிறது.



அமைதி காக்க  இது என்ன வேடிக்கையா?
சல்லிக்கட்டா?  சர்க்கசா?
ராமன் உத்தமபுருஷன்.
சீதையை  கானகம் அனுப்பி 
பெண்ணினத்திற்கு ஒரு தரக்குறைவை 
ஏற்படுத்தினான்.


அன்று கண்ணன் உடனடி காயடித்திருந்தால்,
பெண்ணினம் உயர்ந்திருக்கும்.
தர்மன் பணயப் பொருளாக்கியது.

அதர்மம் போகப் பொருளாக்கு கிறது.
அதிகார வர்க்கம் துணைபோகிறது.
பெண்கள்  ஆடை அரைகுறை;
புத்தி பேதலிக்கும் இளைஞர்கள்.
இதில் தவறு யாரது;
பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி;

வீடு திறந்துள்ளது என்றால் கொள்ளையர் 
புகுவது குற்றம் என்றால்,
ஆடை குறைந்த பெண்களைக் கெடுப்பது 
குற்றமில்லையா?
மனிதன்!புலன் அடக்கம் தேவை?
நாயா?நடுத்தெருவில்......ச்சே!
நாயைவிட கேவலம்;
மிருக ஜன்மம் நான் என்றான் வாலி;
அடுத்தவன் மனைவியை  தனதாக்கி;
அவன் குரங்கினம்;
மனிதனை மனிதனாக்குவதே,
மனதை அடக்குவதும்,காமத்தை அடக்குவதுமே.


புரட்சி எண்ணங்கள் தேவை;புதிய பார்வை தேவை;
புரட்டு எண்ணங்களும் ஊழலும் குறைய,
புவியினில் ஒரு பிரளயம் தேவை,.

உடனடி தண்டனை கடும் தண்டனை 
ஒன்றே  வழி;பெண்ணினம் காக்க.