சனி, செப்டம்பர் 30, 2023

இறைவணக்கம்

 இறைவணக்கம்.

 நாம் எல்லோரும் பகவான் மீது முழு நம்பிக்கை வைத்து இறைவனை வழிபடுகிறோமா?

என்று சற்றே சிந்தியுங்கள்.

 நமது எண்ணங்கள் சிதறுகின்றன.

சிதறிய எண்ணங்கள்

பத்து திக்குகளிலும் பறக்கின்றன.

மீண்டும் பத்து திக்குகளின் நிகழ்வுகள்

நம்மை எரிச்சல் அடையச் செய்கின்றன.விளைவுகள்?

ஆணவம்.

பேராசை

கோபதாபங்கள்

எரிச்சல்கள்.

கவலைகளால்

ஏற்படும் மன உழைச்சல்கள்

அழுத்தங்கள்

நட்பு, பகை

அனைத்துக்கும் உலகியல் ஆசைகள்

தான் மூலம்.

இறைவனை நாம் முற்றிலும் சார்ந்து இருப்பது அவன்தான் என சரணாகதி அடைவது 

சிலமகான்களால் தான் முடிகிறது.

 நமது மனம் லௌகீக ஆசைகளில் கட்டுண்டு இருப்பதால்

ஆத்மா பரமாத்மா என்ற அத்வைதம்

அவனின்றி அணுவும் அசையாது என்ற நிலை வருவதில்லை.

வந்தால் மனிதனுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்.   மனநிம்மதி அமைதி மனநிறைவு ஏற்படும்

கவலையில்லாமல்

அவன்தான் என்ற நிலை மகிழ்ச்சி எல்லை . …

 இறைவணக்கம்.

 பக்தி பக்தி இன்பம் பக்திசுகம் பக்தியில் ஐக்கியம்.பக்திக்காக தியாகம் ‌

ஆனால் இந்த பக்தர்களின் பெருங்கூட்டம்

இவர்களை ஏமாற்றும் 

இடைத்தரகர்கள்.

ஆலயம் சுற்றி ஏமாற்றும் கடைகள்.

நொண்டிபோல் நடிக்கும் கூட்டம்.

அநாதை போல் நடிக்கும் கூட்டம்.

கர்ப்பக்ரஹ மூலவர் தரிசனம் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள்.

வெளியே கடைகள் பல குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக.

ஆலய அழகு மண்டபங்கள் அங்காடிகளிலாக.

விலைப்பட்டியல்  கிடையாது.

பிரசாத ஸ்டால்களில்

கூகுள் பேகிடையாது.

அதில் பக்தர்கள் பலர்

ஏமாற்றுபவர்கள் கடவுளால் தண்டிக்கப்

படுவார்கள் என்று

ஏமாந்து செல்லும்  காட்சி.

பொட்டு சந்தனம் பட்டை நாமம் போட்டு அருள் வந்தது போல் நடிக்கும் கூட்டம்.

பக்தர்கள் அவர்கள் கேட்கும் துகை கொடுத்து மகிழ்ச்சி.

லஞ்சம் கொடுத்து குறுக்கு வழி தரிசனம்.

ஆலயத்தில் பல ஏமாற்றுபவர்கள்.

அது அவர்களுக்கு தண்டனை என ஏமாறும் கூட்டம்.

 ஹிந்து பக்தர்கள் போல் வேறு யாரும் இல்லை உலகில்.

ஏமாறுவதையும் பக்தி பரவசம் என்ற உணர்வு ஹிந்து பக்தர்களுக்கு மட்டுமே.

இறைவணக்கம்

 இறைவணக்கம்.

प्रार्थना।

பகவான்/இறைவன்/ஆண்டவன்/கடவுள்.

இதை சொல்லும் போதே வேறுபாடுகள்.

இவை எப்படி வருகின்றன.

வந்தன.

வந்து கொண்டிருக்கின்றன

என்பது நுண்ணிய  கருப்பொருள்.

பகவானே!

எங்களை ரக்ஷிக்கவேண்டும்.

இறைவன் தொழுதால் இல்லை என்று சொல்லமாட்டான்.

கடவுள் அவரது குழந்தைகளை இரட்சிப்பார்.

இந்த மூன்றும்

ஒரே விதமான

பிரார்த்தனை தான்.

இதில் எப்படி

சம்பிரதாய பேதங்கள்.

நமது பழக்கவழக்க

சமுதாய நெறிகள்.

இருப்பினும் மதக்கலவரங்கள் வேறு.

இந்த பிரார்த்தனை ஒரே குறிக்கோள் தான்.

இதுதான் சனாதன தர்மம்.

இறைவனின் சூக்ஷூமம்.

இவை மனிதர்களால்

ஏற்படுத்தப்பட்டது அன்று.

சாதம்,சோறு

என்ற வேறுபாடு பற்றி ஒரு விவாதம்.

ஆனால் தமிழகத்தில்

உணவகங்களில்

நகர்ப்புறங்களில்

படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள்

சாதம்,சோறு என்ற பதங்களை/சொற்களை பயன்படுத்துவது இல்லை.

ரைஸ் தான்.

ஒயிட் ரைஸ்

லெமன் ரைஸ்

கர்ட் ரைஸ்.

இதைப்பற்றி ஒருவரும் விவாதிப்பதற்கு

தமிழர்கள் இல்லை.

திராவிடம் இல்லை.

சற்றே சிந்தியுங்கள்.

ஆங்கிலம் கௌரவம் தந்து படித்தவன் என்ற மரியாதை தருகிறது.

வடமொழி/தமிழ்

இரண்டும் ஒன்று பண்புள்ள தன்மையும்

மற்றொன்று தாழ்வு மனப்பான்மையால்

கலகத்தை ஏற்படுத்தும்

விதமாக பேசுகிறது.

ஷ்யாம் என்ற பொழுதும் அதை தமிழில் கருப்பா என்ற போதும்  கருப்பா  தமிழர்களால் திராவிட தமிழர்களை விரும்புவதில்லை.

உதய சூரியன் என்பதை

எழும் பரிதி என்று கூறுவதில்லை.

ஆனால் தமிழ்பற்றுள்ள

பரிதிமாற்கலைஞர்(சூரியநாராயண் சாஸ்திரி)

மறைமலையடிகள் வேதநாராயண சாஸ்திரி என்பதை பாராட்டுகிறோம்.

இதைத்தான் சனாதன தர்மம்

வலியுறுத்தி  தன்னை 

மதங்களுக்கு போலிகளுக்கு

அப்பாற்பட்டது 

என்பதற்கு பிரமாணமாகத் திகழ்கிறது.அதாவது சான்றாக விளங்குகிறது.

சே. அனந்த கிருஷ்