வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

இந்நிலை மாற மக்கள் சிந்திக்கவேண்டும்.

மனிதர்கள்  எப்பொழுதும்   உடனடி பலனைத்தான்  எதிர்பார்க்கிறார்கள்.

உடனடி பலன்  உதவி கிடைத்தபின்  திருப்தி அடைவதில்லை.

உடனடியாக அடுத்த பலனுக்காக ஈடுபடுகிறார்கள்.

பலன் மேல் பலன்  ,ஆஸ்திக்குமேல் ஆஸ்தி ,பதவிக்கு மேல் பதவி.

மனநிறைவு என்பது ஏற்படுவதில்லை.

   பாரத நாடு  அனைத்துவளங்களும்  

பெற்ற நாடு. இங்கு படை எடுத்து வந்த அந்நிய நாட்டினர் அதிகம்.

நாட்டின் ஞானத்தை அறிந்து ஞானம் பெற வந்தவர்கள் அதிகம்.

கோரி முஹம்மது  கொள்ளை அடித்தது அதிகம்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி ,வாணிகம் 

பின்னர் சுதந்திரம்.

இப்பொழுதும் வெளிநாட்டினர் ஆதிக்கம் அதிகம்.

நம்மொழி மறந்து ஆங்கிலமே மேலோங்கிவரும் நிலை.

இந்த நிலையிலும் நம்நாட்டுவளம் குறையவில்லை.

நாடு கடன் பட்டாலும் நம்நாட்டுக் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில்.

பல கோடிக்கணக்கான ரூபாய்கள் 
கிலோ கணக்கான தங்கம்,வெள்ளி ,வைரம்  ஆலயங்களில் ,ஆஷ்ராமங்களில்.

நாட்டில் மனிதவளம் , இளைஞர்கள் ,
திறன் அதிகம்.

நாட்டின் முன்னேற்றம் ,

இருப்பினும்  இன்றைய செய்திகள் 

பிரதமரை திருடன் என்கிறது.

பிரதமரோ நாட்டின்  தாழ்  நிலைக்கு 
உள்நாட்டு காரணங்களும் உள்ளன என்கிறார்.

அதைக் களையும் பொறுப்புள்ள பிரதமர்  கைப்பாவையாக மௌனியாக செயல் படுவது  நாட்டின் துரதிர்ஷ்டம்.

ஊழல் அமைச்சர்களை/அரசியல் வாதிகளை  பாதுகாப்பதும் 

துரதிர்ஷ்டம்.

நேர்மையான அதிகாரிகளின் மன நோகச் செய்வதும்  நாட்டு முன்னேற்றத்திற்குத் தடை.

இந்நிலை மாற  மக்கள்  சிந்திக்கவேண்டும்.