வியாழன், ஜனவரி 10, 2013

தண்டனையும் நிச்சயம்.

இயற்கை   மருத்துவம்- practice of nature cure--SRI SWAMI SIVAANANDA

நோயின் மூல காரணம்-

மனிதன் பிறக்கும் போதே அழுவதும் ஒரு துன்பத்தை அனுபவிப்பதால் தான்.
எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனம் தான்.

மனிதனுக்கு மன பயம்,மன அழுத்தம் இரண்டுமே பல நோய்களுக்குக் காரணம்.

மனத்தைத் தூய்மையாக வைக்கவேண்டும் .அனால் மனத்தூய்மை என்பது உலகின் மாயை/நண்பர்கள்/உற்றார் உறவினர்கள்/சூழல்களால்  ஏற்படுகிறது.
அச்சமும் நம் மனத் தூய்மையைக் கெடுக்கின்றன.

மனோவலிமைக்குத்  துணையாக இருப்பவை ஆன்மீகப் பயிற்ச்களே.


நமது சமய நூல்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்று கூறுகின்றன.

கருடபுராணம்  ஒரு குறிப்பிட்ட ஒரு நோயின் குறிப்பிட்ட ஒரு காரணத்தை
கூறுகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு எழுதப்பட்ட  இக்குறிப்புகள்  நீதி நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாமையை  எடுத்துக்காட்டி வலியுறுத்துகின்றன.
இது பிற விப்பயனாக  உண்டாகின்றன.
நாம் இதை சமுதாயத்தைப்  பார்த்து இதிலுள்ள  சத்தியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
பிற உயிரினங்களுக்கு நாம் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் .துன்பப்படும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
அறச்செயல்களை  நாம் உடல் நலத்தோடும்,மன நிறைவோடும்,மகிழ்ச்சி யோடும் செய்யவேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல/தீய செயல்களுக்கேற்ற பரிசும் நிச்சயம்;தண்டனையும் நிச்சயம்.

உடல்நலம் என்பது  இயற்கையுடன் வாழ்வதில் தான்  உள்ளது.
"நீங்கள் விதைத்ததை நீங்களே அறுவடை செய்கின்றீர்கள்."