திங்கள், பிப்ரவரி 20, 2012

hindi prachaaramum tamilnaadu hindi prachakkukalum

ஹிந்தி பிரச்சாரகர்கள் நிலை.

நான் எனது  பதினேழாம்   வயதில் ஹிந்தி வகுப்புகள் எடுக்க 

ஆரம்பித்தேன்.அச்சமயம் ஹிந்தி போராட்டங்கள் நிறைந்த சூழ்நிலை.

ஹிந்தி பிரசார சபை  ஆட்டம் கண்ட நிலை.அச்சமயமும் சபை யில்

பணியாற்றி மகாத்மா காந்தி அவர்களின் முக்கிய தேசிய நிர்மானப்பணியில்

 தன்னை அர்ப்பணித்த தமிழ்நாடு சபையின் செயலர் த.ப. வீரராகவன்

ஜி,மண்டல அமைப்பாளர்கள்  ஜி.சுப்பிரமணியன் ஜி
,
ஈ.தங்கப்பன் ஜி,
வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி,

ஆர்.கே. நரசிம்ஹன் ஜி ,

திருமதி மீனாக்ஷி ஜி,ஆகியோர் தமிழ் நாட்டின்

பிரசாரகர் களை ஊக்குவித்தனர்.

 அவர்கள்  இளம் பிரசாரகர் களை ஊக்குவித்தது.

இதில்  சுமதீந்திரன் ஜி
குறிப்பிடத்தக்கவர்.மேலும் மதுரை   கல்லூரிக்கு

 அவர் செல்லும் நிலை ஏற்பட்டது.

தொண்டுள்ளம் படைத்த ஊழியர்களை விட தேர்தலில் வென்று

 அவர்கள் உண்மை ஊழியர்களுக்கு தக்க மதிப்பும் மரியாதையும்

தரவில்லை.சபா ஊழியர்கள் உயர்ந்த தியாக உள்ளத்துடன்

பணியாற்றினார்கள் .இன்றும் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் என்பது பிரிவினை ,ஒருதலை பட்சம்,துரோகம் என்பது

 சபைக்கும் பொருந்தும்.

இதில் மிகவும் வேதனைப்படுபவர்கள் பாடு படுபவர்கள்

பிரசாரகர்கள்.அவர்களுக்கு எவ்வித பணிபாது காப்பும்  கிடையாது.

 வயதான காலத்தில் அவர்கள் படும் வேதனை அவர்கள் தியாகம் யாரும்

பாராட்டப்படுவதில்லை.௧௮.௨.௧௨ இல் ஒரு பாராட்டு விழா..அதில் வந்த

வயதான ஹிந்தி ப்ரசாகர்களுக்கு ஒரு சிறிய வெள்ளிவிளக்கு  ஐந்து கிராம்.

பேருந்து கட்டணம் மட்டும்.மொத்தம் ரூபாய் எழுநூறு மட்டும்.

அதுவும்  பாராட்டப்படும்   வயதான  ப்ரசாரகர்களிடமே  பணம்  ரூபாய்

ஐநூறு    பாராட்ட   வசூலித்தது


அவர்கள் செலவு செய்தது   ஆட்டோ கட்டணம், பேருந்து   கட்டணம்  மட்டும்

ஆயிரம்.

இதில் கொடுமையான விஷயம் தேர்தல் என்று கூறி வெற்றி பெரும்

உறுப்பினர்களுக்கு இரு மடங்கு  மொத்தம் நான்கு மடங்கு

போக்குவரத்துக்கட்டணம்.

காந்தி நிறுவனத்தில் மிகவும் மனசாட்சி இல்லாதவர்கள்

.தேர்தலில் மற்ற ஒருவரையும் வெல்ல விடாமல் கொள்ளை

.நெஞ்சு பொறுக்கவில்லை.

.