வெள்ளி, மே 10, 2013

எங்கே நிம்மதி?ரத்தக்கண்ணீர் தான்.

    இன்றைய உலகம் எப்படி உள்ளது?

அமைதி அற்று;
 மகிழ்ச்சி அற்று;
திருப்தி அற்று;
நம்பிக்கை அற்று;
நிம்மதி அற்று;

திருமண  வாழ்வு--

விவாகரத்து வழக்குகள்;

இளம் தம்பதிகள்  இணைந்து வாழாமல் ,

பிரிந்து வாழும்நிலை;

காரணம்?

இன்றைய ஆங்கில மருத்துவம்;

கட்டிப்பிடி  மருத்துவம்;

மன மகிழ்ச்சி,

மனக்கட்டுப்பாடு,

பிரம்மச்சரியம்,

புலனடக்கம்

என்பதற்கு நமது சித்த ,ஆயுர்வேதம்  அளித்த

முக்கியத்துவம் ஆங்கில மருத்துவம் தரவில்லை;

வேலை இல்லா காலத்தில் ஆண்டுக்கு  ஒரு குழந்தை;

இந்த பலாத்காரம்,கற்பழிப்பு, என்பது

மிருக உணர்வுக்கு முதலிடம் அளித்து வாழ்தல்.

இன்று ஆண் -பெண் வேலை;

இங்கு மனக்கட்டுப்பாடு உள்ளது.

பிரம்மச்சரியம் கடை பிடிக்கப்படுகிறது.

பொருளாதாரத்திற்குக்  குறைவில்லை;
ஆனால் ,பொருளா?தாரமா?குழந்தையா?

என்ற வினாக்களில்  பொருளுக்கு முதலிடம்;
விளைவு   பொருள் இருந்தும் பொருளற்ற வாழ்க்கை.

 ஆஸ்திகள் சேருகின்றன;

ஒரு குழந்தைக்கு  ஏக்கம்?

எத்தனை பணக்காரத் தம்பதிகள்

சந்தான பாக்கியத்திற்கு பரிகாரம் தேடிச் செல்கின்றனர்?

குழந்தைச் செல்வம் --நம் முன்னோர் வாக்கு.

அதற்கு வழி இல்லா  வாழ்க்கை;

செல்வத்தின் பலன்?

மனிதனை நல்வழிப்படுத்திச் செல்லும்  ஆன்மீக

அறிவுரைகள்,இறை பக்தி  வெறும் பகட்டுக்கும்

வீண் படடோபத்திற்கும், என மாறி விட்டது.

பக்தி வியாபாரம் பெருகிவிட்டது;

பக்தி என்றால்  அங்கு தூய மனத்திற்கு  முதலிடம்;

ஆண்டவன் அளித்த பதவியை நேர்மையாக,சத்தியமாக ,அச்சமின்றி

பலருக்கும் பயம் படும் விதமாகச் செய்தல்;

ஆனால், இன்று ஆண்டவனால் கொடுக்கப்பட்ட பதவிகள்,

ஊழலுக்கும்,இலஞ்சத்திற்கும்,அநியாயத்திற்கும் துணை போகின்றன;

விளைவு? சொத்துத் தகராறு,
பலதாரம்  புத்திரர்கள் சண்டை;
கள்ளக் காதல் கொலைகள்;
குடி;

மிகக் கேவலம் வருமானத்திற்காக
மதுபானக் கடைகள்;விலைமாதர்களிடம் கையூட்டு பெற்றுவாழும்
வாழ்க்கை;

அது அரசாங்கம் ஏற்று நடத்தினால்?

அராஜகம் தான்;

இந்திரன் கெட்டதும் ,சந்திரன்,ராவணன்  கெட்டதும்  பெண் ஆசையாலே.

மது அரக்கன்; மாது சுகம் மயக்கம்;
இன்றைய உலகம் இதற்கு முதலிடம் அளிக்கிறது.

எங்கே நிம்மதி?ரத்தக்கண்ணீர்  தான்.