வியாழன், ஜனவரி 19, 2017

தினம் தினம்

   தினம் தினம் ஆட்டுக்கறி
   விற்கப்படுகிறது.
சேவல் சண்டை , ஜல்லிக்கட்டு
போன்ற பாரம்பரிய பண்பாட்டு
விளையாட்டுக்குத் தடை.
இது முட்டாள் தனமப்பா.
நீதிபதிக்கு என்னாச்சு?
நிதிபதி ஆகிட்டாரா ?
வெளிநாட்டு மோகம்
பாரதீய கலாச்சாரத்தை அழிக்குமா?
பொறுத்தது போதும் பொங்கி எழுந்தாச்சு.
மனசாட்ட்சியுள்ள காவல் அதிகாரிகளாக
செயல்பட்டு அமைதிப்போராட்டம்
வெல்ல வழிவிட்டால் போதும்.
காளை வளர்ப்பது ஒருகலை.
அதை அடக்கி வீரம் வீரமுள்ள
இளைஞர்கள் உருவாக்க வேண்டுமே ?
ஆண்டுக்கு ஒருநாள் காளை விளையாட்டு .
ப்ளுகிராசே ! பீட்டாவே!
தினம் தினம் நீ திங்கும்
மீன்கள், ஆடுகள், ஒட்டகம் ,
கடல் ஜீவராசிகள் ,
பைத்தியக்கார எதிர்ப்பு.
மனசாட்சி இல்லா சட்டமேதைகள்.
நீதியா இது ?
நீதி வாழ  ஜல்லிக்கட்டு
நடத்த தீர்ப்பு வேண்டும்.




  தினம் தினம் பலவித
மாமிசங்கள் உயிர்ப்பலி
ஊர்வன, பறப்பன, நடப்பன ,
முட்டை, முட்டடைபோட்ட கோழி ,
சேவல்,  காடை என பலியிடும்
மனித  இனம் .
ப்ளுக்ராஸ் , பீட்டா  தெரியுமா ?
தெருநாயிக்கு பாதுகாப்பாம்,
அது துரத்தி எத்தனை விபத்துக்குள்
தெரியுமா  இந்த பீட்டாவுக்கு.
எலிக்குன்ஞ்சு அடித்ததற்கு
கல்லூரி அழகுப் பெண்கள்
ப்ளுகிராஸ் சென்றதும்
காவல்துறை விசாரிப்பு,
அந்த எலிகள் எங்கள் வீட்டு
தொலைகாட்சி பெட்டி ,
துணிமணிகள்  , நோட்டுகள்,
நோட்டுப்புத்தகங்கள்
கடித்து குதரவுவது தெரியுமா ?
கொசுவும் ஒரு ஜந்துதானே ?
கரப்பான் பூச்சியும் ஜந்து தானே
ஹிட் விளம்பரம் தடை செய்யுமா?
முட்டாள் ப்ளு கிராஸ்,பீட்டா,
சட்டம் வீணாக விலங்கினங்கள் காக்கிறதாம்.
ஆண்டவன் படைப்பில்
மாமிசம் மட்டுமே சாப்பிடும் மிருகங்கள்,
பூனை வளர்ப்பதே எலித்தொல்லை நீங்க,
அரசர்கள் வேட்டை ஆடுவது
கொடிய மிருகங்கள் வதம் செய்ய.