திங்கள், மார்ச் 25, 2013

jeya/sun/vijay t.v. shows

பாரதம்

இன்று  மக்கள்/அரட்டை  அரங்கத்திலும் சரி, நீ யா நானா? இரண்டிலுமே பாரதத்தின் 

ஊழல்,உணவு முறை இரண்டுமே இளைஞர்களை வெறு படையச்செய்கிறது.

எண்ணெய்  கலப்படம்,அதிரசம்.பஜ்ஜி பிழிந்தால் எண்ணெய்  வழியும். கொழுப்பு அதிகமாகும். ஊழல் .அதில் ஒரு +2 மாணவியின் பேச்சு மக்கள் அரங்கத்தில்  அனைவரையும் கவர்ந்தது. வில்லன்,நாயகன். நாயகன் ராமனின் நற் குணங்கள் .ராவணனின் நற்குணங்கள். ராமனின் பலகீனங்கள்.இவை இருந்தால் தானே நாயகன் உயர்த்தப்படுவான். அப்பொழுது வில்லன் ராவணனின்  வேத ஞானம்,சிவ  பக்தி ,வீரம்,போன்ற உயர் குணங்களையும் அதிகம் சுட்டிக்காட்டவேண்டும் .தடைகளை மீறி முன்னேறவேண்டும் என்ற பேச்சு பாராட்டும் படியாக இருந்தது.அரட்டை அரங்கம்  தொழில் நுட்பக்கல்லூரி பொறியியல் படிப்பின் உயர் கட்டணம்,ஊழல் பற்றி அமைந்தது. கலப்பட உணவு,தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் குறைந்த ஊதியம்,.

  திரு .t.raajendar  அவர்கள் வெல்லம்  சாப்பிடாதே என்ற ஒரு கதை நபிகள் நாயகம்  கூறியதாகக் கூறினார். அது ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறியதாக
நான் படித்த நினைவு.

ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் பரமஹம்சரை சந்தித்து தன் மகன் அதிகம்
வெல்லம்  சாப்பிடுவதாகவும் சாப்பிடவேண்டாம் என்ற உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற
அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும்
 அந்த சிறுவனிடம் வெல்லம்  சாப்பிடாதே  என்று உபதேசம் செய்தாராம் சீடர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம்  சாப்பிட்டுவந்தேன்..நான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும்.