திங்கள், டிசம்பர் 19, 2011

SAI RAM




சாய்
ஷீரடி சென்று வந்தேன்,
சாய் சாய் சாய் ,
என்ற
மந்திரம்,
மனித மன அமைதிக்கு,
யந்திரம்.
இன மத ஒற்றுமைக்கு,
பிறருக்கு என,
வாழும் நெறிக்கு,
அன்புக்கு,
அன்பர்களின்
ஆனந்தத்திற்கு,
விரும்பும் வரம்
பெற்று,
வெற்றி நடை
போட,
கூறடா,
சாய் ராம்,
என்ற
மெய் ஞான உணர்வு.
சாய்ராம்,
நாம ஜபம்.
சக்திக்கு,
முக்திக்கு,
பக்திக்கு,
சாய் ராம் !சாய் ராம் !சாய்ராம்,!

இன்னல் களைய,
இன்பம் பெருக..
அமைதி காண,
ஆனந்தம் பெருக.
சாய் ராம்!!!

ஆனந்த தத்துவம்
மாட மாளிகை
கூட கோபுரத்தில்
வாழ்ந்தாலும்.
மடிந்து. மண்ணுக்குள்
புதைந்து போவதே.!!!
*******************
பிறருக்கு உதவு.
தான தர்மங்கள் தான்
அருளும் பொருளும்,
பட்டமும் பதவியும் தரும்.
என் பக்தர்கள்.
எளிய வாழ்க்கை,
அவர்களுக்கு ஏற்றம் தரம்.
சாய் ராம் !!சாய்ராம்
!! என்றே கூறு,
கூற்றுவனும்,
அகாலத்தில்,
வருவானில்லை. .
பிணிகள் ,
பனித்துளிபோல்,
அகலும் காணீர்.
சொல்வாக்கு,
செல்வாக்கு,
அடைவீர்,
பாரும்.
சாய் ராமை,
சார்ந்திருப்போருக்கு,
சங்கடங்கள் வந்தாலும்,
சடுதியில்
விலகும் ,
உணர்வீர்.
சாய்ராம்,
குரு மந்திரம்.
இறை மந்திரம்.
மறை மந்திரம்.

கருத்துகள் இல்லை: