செவ்வாய், அக்டோபர் 09, 2012

செய்யுங்கள் பிரார்த்தனை.எது எதற்கோ பிரார்த்தனை,வேள்வி நடத்தும் மக்கள், இதற்கு ஒரு வேள்வி நடத்தவில்லையா?

இறைவன்  ஒருவன் இருக்கிறானா,
தினம் ஒரு செய்தி,
அமைச்சர்கள் செய்யும் ஊழல்,
அமைச்சரின் தொந்தரவால்,
விமானப்பணிப்பெண் 
தற்கொலை.
மந்திரி மகள் ஊழல்.
மருமகள் ஊழல்.
மகன் ஊழல்.
தோழி ஊழல்.
இந்தியா ஒரு ஆன்மீக நாடு.
ஆனால் 
கோயில்,மடாலயங்கள்,ஆஸ்ர மங்கள் 
அனைத்திலும் ஊழல்.
பள்ளியில் ஊழல்.
கல்லூரியில் ஊழல்.
ஐ.ஐ.டி .யில் படித்து  பட்டம்பெறுவான் /வாள் 
என்ற   ஆசையுடன் காத்திருக்கும் 
பெற்றோர்களுக்கு 
அவர்கள் தற்கொலை செய்தி.
கூலி ப்படைவைத்து கொலைகள்.
குழுசேர்ந்து கற்பழிப்பு 
கருப்புப்பணம் .
கடத்தல்.
காவல் அதிகாரிகள்  கையூட்டு வாங்கி 
காலில் விழும் வீடியோ  காட்சிகள்.
ஒரு வாலிபனிடம் பைக் திருட கட்டாயப்படுத்தும் 
வீடியோ காட்சிகள்,
இரக்கமில்லாமல் அடிக்கும் காட்சிகள்.
இறைவன் உள்ளானா ?
மக்கள் பொறுமை உடன் உள்ளனரா?
எது எதற்கோ பிரார்த்தனை,வேள்வி நடத்தும் மக்கள்,
இதற்கு ஒரு வேள்வி நடத்தவில்லையா?
இல்லை என்றால்,
இனிமேல் இதற்காக வேள்வி நடத்துங்கள்.
நாட்டுப்பற்றுள்ளவர்களே !!
நாடு முன்னேற ஊழல்கள் ஒழியவேண்டும்.
மழைக்குப்  பிரார்த்தனை.
சினிமா  நடிகர்கள்  பிழைக்க பிரார்த்தனை.
இப்பொழுது  நாடு அராஜகம்  நோக்கி செல்கிறது.
நாட்டிற்காக   உயிர்த் தியாகம் செய்தோர்   பலர்.
அவர்கள் தியாகத்தில்  சுதந்திரம்
என்ற மாளிகை  கட்டப்பட்டுள்ளது.
இன்று அதிகாரத்திலுள்ளவர்கள்
பதவிக்காக  நாட்டை  வெளிநாட்டினர்
லாபத்துக்காக  பயன்படுத்துகின்றனர்.
தங்கள்    லாபத்துக்காக.
நம் நாட்டுத் திறமைகள்.
கலைஞர்கள்
அழிந்து வருகின்றனர்.
நம் நாட்டு  கலைப்பொருட்கள்
வெளிநாட்டில்   மதிக்கப்படுகின்றன.
இனிமேல்  பலசரக்கு நிர்வாகம் கூட
 அன்னியர்கள்  கையில்.
நாட்டார் கடை என்று ஓடும் நாம்
வால்   பிடித்து  வால்  மார்ட் ஓடும்
. நிலைக்கு வருவோம்.

போதும்;போதும்;



இவ்வளவு ஊழல் ஒழிய 
நடத்துங்கள் 
பிரார்த்தனை.
வேள்வி.
ஊழல்கள்   ஒழிந்து  ஊழல்வாதிகள் தண்டனை பெற்றால் 
உள்ளான் இறைவன்.
செய்யுங்கள்  பிரார்த்தனை.
வரும் தேர்தலில் நேர்மை ஆளர்கள் 
ஆட்சிக்கு வரட்டும்.
பிறப்பு இறப்பு உறுதி.
ஆறிலும் சாவு.நூறிலும் சாவு.
செய்யுங்கள் பிரார்த்தனை.
இறைவன் உள்ளான் என்பதை 
ஆஸ் தீகர்களே !!!
நிரூபியுங்கள்.







யார் குற்றம் ?

யார் குற்றம் ?

வழியில் செல்லும்போது.
தள்ளுவண்டி வியாபாரியிடம் ,
இரண்டு டசன்  வாழைப்பழம்
எடுத்துச்சென்ற போக்குவர த்துக்காவலர்.
 வியாபாரியிடம் கேட்டேன் .பதில்
ஐயா,
நான் என்ன   செய்ய ?
இங்கு நின்று  வியாபாரம் செய்ய,
அங்கு போக்குவரத்து அதிகம்.
என் பொழப்பு அப்படி.
அன்று வரும் வாடிக்கையாளர் ஏமாந்தால்
விலை அதிகம்.
 இது  யார் குற்றம்?

கனரக்வாஹனம்.
தடுத்து நிறுத்தியதும்,
காவலருக்கு  ஓட்டுனர் காணிக்கை.
பலர் முன்னிலையில்.
உடனே இது தவறு என்பது போய்
எனக்கு காவலர் வேலை கிடைக்கவில்லையே?
என்று வருத்தப்படுவோர் அதிகம்.

போக்குவரத்து அலுவலகம்,
மின்வாரியம்.
மாநகராட்சி அலுவலகம்,
பத்திரப்பதிவு அலுவலகம்
என எங்குமே லஞ்சம் .
நாடறிந்த உண்மை.
அனைவருக்கும் மகிழ்ச்சி
அலையவைக்காமல்
காரியம் நடக்கிறதே
பல முறை ஆட்டோ சிலவு மிச்சமாகிறதே.
இது எல்லாம் யார் குற்றம்?
67 ஆண்டுகள்  விடுதலை அடைந்து
அனைத்து  அலுவலகங்களிலும்
மக்கள் மனம் விரும்புவது
கொடுத்தால் காரியம் ஆனால்
சரி.
அதனால்  இது அங்கீகரிக்கப்பட்ட
குற்ற நியாயங்கள்.
இந்நிலைதீருமா?
எப்படியோ காரியம் ஆனால் சரி என்று
மக்கள் கருதும் போது .
இது பொதுவான குற்றம் .
ஆகையால் நியாயம் தானே?