புதன், செப்டம்பர் 05, 2012

குரு வணக்கம்




எழுத்து அறிவித்தவன்  
இறைவன் ஆவான்.
தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் 
கண் அளிப்பவர்.
கற்கவில்லை 
என்றால் 
கண்ணிருந்தும் 
பயன் இல்லை.
நம்நாட்டில் 
இறைவழிபாட்டை விட 
கு ரு பூஜைக்கு 
மகத்துவம் அதிகம்.
புனித கபீர் 
குருமஹிமை 
பற்றி 
சொல்லும் போது 

இறைவனும் குருவும் 
முன்னால் வந்தால் 
குருவின் காலில் 
விழுந்து வணங்குவேன் 
ஏனெனில் 
இறைவன் கண்ணெதிரே 
தோன்றக்காரணமே 
குருவின் வழிகாட்டல் தான்.
அந்த குரு 
ஆசிரியராக 
மாறி 
ராத கிருஷ்ணன் 
அவர்கள் 
நம் பாரத நாட்டின் 
ஜனாதிபதி 
பிறந்தநாளில் 
ஆசிரியர் தினமாக 
கொண்டாடும் 
இந்நநாளில் 
ஆசிரி யர்களுக்கு 
வணக்கம்.
எனது 
முதல் ஆசிரியை 
அன்னை.
பிறகு 
மாமா.
முத்தனேந்தல் 
தொடக்கப்பள்ளி 
ஆசிரியை பிலோறேன்சே.
பழனி 
மாநகராட்சி 
பள்ளி ஆசிரியர்கள் 
எஸ்.ஆர்.சுப்ரமணியம் 
அப்துல்ரகுமான் 
ப.சு.நடராஜன் 
சிவலிங்கம் 
வரதராஜன் 
அங்குசாமி 
கோபாலக்ருஷ்ணன் 
பரமசிவம் 
ஹிந்தி ப்ரசார  சபை 
ஆசிரியர் பயிற்சிப்பள்ளி முதல்வர் 
ராமச்சந்திர ஷா 
மீனாக்ஷிஜி 
சுமதீந்திராஜி 
தங்கப்பன் ஜி 
அனைவரும்தெய்வங்கள்.

அனைவருக்கும் 
குரு வணக்கம்.