வெள்ளி, நவம்பர் 30, 2012

எங்கே?எங்கே?எங்கே?


அன்பும்  அறிவும் ஆற்றலும் 
நேசமும் பாசமும் தானமும் 
 தர்மமும் தியாகமும் பற்றற்ற
 தன்மையும் பணிவும்,பொறுமையும் 
சாந்தமும் சஹிப்புத்தன்மையும் 
பரோபகாரமும் தன்னலமற்ற 
எளிய வாழ்க்கை முறையும் ,
ஆடம்பரமற்ற தன்மையும்,
ஆத்மதிருப்தியும் அஹிம்சையும்,
விருப்பமும் வெறுப்பும் அற்றநிலை ,
ஆசை -பேராசையற்ற நிலை,
இன்னா -இனியவை யில்  நடு நிலை 
 ஆன்மீக மார்க்கம்.

ஆனால்   இன்று 
ஆன்மீகத்தில்  ஆடம்பரம் ,
ஆஸ்திகள் இல்லை என்றால் 
ஆஷ்ரமங்களில் இடம் இல்லை.
தங்கமும் வைரமும் வைடூரியமும் ,
கோடிக்கணக்கில் பணமும் 
பதுக்குமிடங்கலாகவும் இருக்கின்றன .
 பத்துக்கும் செல்வங்களால்   யாது 
பயன்.
ஆயிரக்கால் மண்டபங்களும் ,அழகுசிற்ப மண்டபங்களும் 
கடைகளால் மறைக்கப்பட்டு 
வணிக ஸ்தலங்களாக மாறும் நிலை.
லௌகீகமா அலௌகீகமா என்றால்,
லௌகீகமே  பிரதானம்.
 வழிபாடு ஐந்து நிமிடம் ,
கடைத்தெருவில் ஐந்துமணிநேரம் .
கடவுளின்  கருணை கிட்டுமா?
உள்ளத்தில் சஞ்சலம் தீருமா?
உடல்  ஆரோக்கியம் பெறுமா?
உள்ளம் அமைதி பெறுமா?
வாழும்  கலை மறந்து,
பொருளாசை வளர்க்கும் மையமாக 
மாறும் வணிகஸ்தலங்கள் 
 ஆலயங்கள்  என்றால் 
ஓம் ஓம் ஓம் 
சாந்தி !சாந்தி!சாந்தி !
எங்கே?எங்கே?எங்கே?




பிரேம மார்க்க பக்தி./காரணம் அவைகளுக்கு ஜாதி தெரியாது.


 பாப்பா  பாட்டு பாடிய  பாரதியாலும் ,

ஜாதி  இரண்டொழிய வேறில்லை  என்ற

ஔவையாராலும்  ஜாதி ஒழியவில்லை.

ஜாதிக்கட்சிகள், ஜாதீய உணர்வுகள் ,

மத  உணர்வுகள்,மத வெறிகள்,

மதம் ஜாதி என்ற பெயரால்

படுகொலைகள்   இன்னும் ஓயவில்லை.

 இராமாயண காலத்தில் ஜாதிவெறி

இருந்ததால்  தான்  ராமன் -குகன்  நட்பு

போற்றப்படுகிறது .

அறிவு,பண்பு , அடக்கம் உள்ள விதுரன்

சற்றே  ஒதுக்கிவைக்கப்பட்டான்.

கர்ணன்  வளர்ப்புப் பெற்றோர்களின் ஜாதிகாரணமாக
ஏளனத்திற்கு  ஆளானான் .
 அனைத்து மொழி  இலக்கியங்களில்,
  காதலுக்கு  முக்கியத்துவ,ம் .

அன்னம், மேகம்,காற்று புறா,

என அனைத்தும் காதலுக்கு தூது.

 காரணம்  அவைகளுக்கு  ஜாதி தெரியாது.

 ஞானம் பெற்ற  மனிதன் தன்   சுய  நலத்திற்காக
மனிதனை  மதம்,மொழி என்ற பெயரால்
வேறு    படுத்தினான்.
 ஆனால் இவைகளையும் கடந்து

காதல் வெற்றிநடை போடுகிறது .
அதனால்  காதல் படங்கள் வெற்றிபெறுகின்றன.

கபீர்

लाली   मेरे लाल की  जित  देखो , तित लाल;
लाली देखन  मैं गयी गयी  मैं भी  हो गयी लाल।

என்கிறார்.

காதலனைத்  தேடிச்சென்றேன் ;
எங்கு    எ தை ப்    பார்த்தாலும்

அவனையே  பார்த்தேன்.

அவனைப்பார்த்த  போது  நானும் அவனாக மாறிவிட்டேன்.

இதைத்தான்  காதலின் முற்றிய நிலை,

இது சங்கரரின் அத்வைத பக்தி.

பக்தி காதலுடன் இணைத்து விளக்குவதுதான்

பிரேம மார்க்க பக்தி.

அங்கு மீராவையும் பார்க்கலாம்.
ஆண்டாளையும் பார்க்கலாம்.
ஆண்டவன் முன் பிரேமையும் பக்தியும்
ஒன்றாவதால்  ஜாதி -மதம் பார்க்கப் படுவதில்லை.
காதலுக்கும் கண்ணில்லை ;பக்திக்கும் கண்ணிலை
அங்கு பேரானந்தத்திற்கும் ,முக்திக்கும் வழி  உண்டு .
அதுதான் பக்திப் பரவசம்.



















அன்னம் ,மேகம் .காற்று






துரியோதனன் 

வியாழன், நவம்பர் 29, 2012

உருவ அருவ இறை சக்தி உணர்வீர்கள்.சனாதன தர்மம் "ஹிந்து '



சனாதன  தர்மம்  "ஹிந்து ' என்ற வெளிநாட்டார்   இட்ட  பெயரால் வளர்கிறது .

இந்த ஹிந்து என்ற பெயர் சிந்து நதியின் மாற்றமே என்று அறியாமலேயே

சனாதன தரம்   வாதிகள் தங்களை  ஒரு ஹிந்து என்று சொல்லிக்கொள்வதில்

எத்தனை  பெருமை கொள்கிறார்கள். இது தான்  இந்துக்களின் பெருந்தன்மை.

இந்து   என்றால் திருடன் என்று மாநில  முதல்வர் கூறினாலும் பெரும் போராட்டங்கள்  நடக்கவில்லை.

பகுத்தறிவுவாதிகள்  தன எதிர்ப்பை இறைவனின் படங்களை செருப்பால்  அடித்து  ஊர்வலமாக  சென்றதையும்,கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சிலைகள் வைத்தாலும், இன்று ஆலயங்கள் வளர்கின்றன.அந்த ஊர்வலத்தை  ரசித்தவர்கள்  ஹோமங்கள் ,பூஜைகள் ,ஆலய தரிசனங்கள்,பரிகாரங்கள் செய்வதையும்   நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

உலகில் மிகவும் கேவலப்படுத்தப்பட்ட,பரிகசிக்கப்பட்ட,தைரியமாக  யாருக்கும்  அஞ்சாமல் எள்ளி நகையாடும்  மதம் ஹிந்து மதம்.

ஆனால்  பக்தர்களாலும்,ஆட்சியாளர்களாலும் ,மஹரிஷிகளாலும்  வளர்கின்ற மதம் ஹிந்து மதம்.

சற்று  ஒரு இரண்டு நிமிடங்கள்  ஓம் கணேசாய நமஹ/ஓம் முருகா /ஓம் நமசிவாய,/ஹரே ராம் /ஹரே கிருஷ்ண/சாய் ராம்  என்று   தங்களுக்கு பிடித்த
நாமத்தை ஜபம் செய்யுங்கள்.பத்துநாட்களில் நீங்கள் ஒரு ஆத்ம திருப்தி ,சந்தோசம்,மன ஷாந்தி அடைவீர்கள்.நீங்கள் எந்த ஆஷ்ராமங்களுக்கும் ,ஆலயங்களுக்கும்,பிராயச்சித்தம் என்ற பெயரில்
ஏமாற்றும் போலிகளையும் தேடிச்செல்லவேண்டாம் .

ஒரு இறை   சக்தி ,ஈஸ்வரானுபூதி உணர்வீர்கள்.இதைதான் ஹீரா குகையில்
முஹம்மது நபிகள் செய்தார்.சனாதன தர்மம் ஏகாந்த ஜப-தபத்தால் வளர்ந்தது.
ஹிந்து மதம் ஒவ்வொருவரின் ஆத்மானுபாவத்தால்  உன்னத நிலை அடைகிறது.

அதனால் தான்   இங்கு கடவுள் பெயர்கள் அதாவது இறை நாமங்கள்.உருவங்கள்  அதிகம்.

நமக்கு இன்னல் நேரும்போது ஒருவர் உதவினால் நாம் என்ன சொல்கிறோம் .

கடவுள் மாதிரி  உதவி செய்தார் என்கிறோம் .சிலர் அந்த உதவி செய்தவரின் பெயரை   கடவுளின் நாமமாக சபிக்கிறார்கள்.உதவி செய்தவர் பெயர் கணேசனாக இருக்கலாம் ,முருகனாக இருக்கலாம் துர்காவாக இருக்கலாம்.
அப்பொழுது அத்தனை உபாசகர்கள்,அத்தனை  நாமங்களில் கடவுள்கள்.
தேவி உபாசகர்,முருகதாஸ்,கண்ணதாஸ்,தாசானுதாசர்கள்  ஹனுமத் தாசர் ராமதாசர் .சிவ பக்தர்கள்.

 நாட்டுக்கு  நன்மை செய்தவரின் பெயரால் அண்ணா  நாமம் வாழ்க என்கிறோம்.
அவ்வாறே வீட்டுக்கும் நாட்டிற்கும் தனிப்பட்ட மனிதர்களுக்கும்
மனநிறைவு,மகிழ்ச்சி ,முன்னேற்றம் தர  இறைநாம ஜபம்  கலியுகத்தில்
அவசியம் ,

பணம்   சம்பாதிக்க  நேரம் அதிகம் சிலவாகும்  யுகம்  கலி யுகம்.
மணிக்கணக்கில்  உட்கார்ந்து ஜப்=தபமோ ,சந்தியா வந்தனமோ சொல்ல முடியாது

அதற்குத்தான் கலியுகத்தில் நாம  ஜபம் முக்கியம் ,பிரதானம்

அரசியல் வாதிகள் தன தலைவரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
கட்சி மாறும் சூழ்நிலையில் புதிய கட்சித் தலைவருக்கு
நாம ஜபம் செய்கின்றனர்
முதல்வரின் காலில் விழுகின்றனர்

அது லௌகீகம் .இவ்வுலக இன்பம் பின்னர் ஊழல் விசாரணை.மன அமைதி இல்லை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் முன் ஜாமீன் வழக்கறிஞர் பாதுகாப்பு.
நீதிமன்ற அலைக்கழிப்பு.

ஆனால் இறை நாம ஜெபத்தால்  இறுதிவரை மன அமைதி.நாம ஜபம் செய்யுங்கள்.மன சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.நேர்மையாக சத்தியத்தைக்  கடைபிடியுங்கள் .தான -தர்மங்கள் செய்யுங்கள்.
45 நாட்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் நாம ஜபம் போதும் .அஹம் பிரம்மாஸ்மி 
என்ற ஷங்கரரின்   அத்வைத்துவம்.வைஷ்ணவர்களின் துவைத்துவம்,
உருவ அருவ  இறை சக்தி  உணர்வீர்கள்.





நாம






 

புதன், நவம்பர் 28, 2012

பணம் குணத்தைக் கெடுக்கும்

அவசியமானவைகளும்  வணிக  நோக்கமும் 


       மனிதர்   நிம்மதியாக வாழ  நல்லொழுக்கம் அவசியம்.
மனிதர்கள் ஆத்ம  திருப்தியுடன் வாழ ஆன்மிகம் அவசியம்.

மனிதர்கள் நிமிர்ந்து வாழ கல்வி அவசியம்.

மனிதர்கள் ஆரோக்யமாக வாழ மருத்துவம் அவசியம்.

மனிதர்கள் பயமின்றிவாழ காவல் துறை அவசியம்.

குடும்பங்கள் குதுகூலமாக வாழ குடும்ப அமைதி அவசியம்.

இன்றைய  சூழலில்  மேற்கண்ட நான்குமே வணிக நோக்கமாக மாறிவிட்டன.

நல்லொழுக்கங்களை எதிர்கால சந்ததிகள்,
கல்விநிலையங்கள்,சமுதாயம்,பொழுதுபோக்கும் நாடகம்,திரைப்படம் ,
தொலைக்காட்சிகள் மூலம் பெறுகிறான்,

இவைகள் அனைத்தும் தன்னம்பிக்கை தருவதாகவும் ,ஏற்றதாழ்வுகள் போக்குவதாகவும் சமத்துவம் ,சகோதரத்துவம் உண்டாக்குவதாகவும்  அமையவேண்டும் .
அமைதிக்காக  திரைப்படங்கள் சென்றால்,முதல் காட்சியே கொலை,கொள்ளை ,கற்பழிப்பு,கள்ளக்கடத்தல், காவல்துறை அனைத்துமே

நேர்மையைவிட  பணமே பிரதானம்  என்ற போக்கு.

ஆலயங்கள் செல்ல முடியாமல் சிறு நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு

உள்ளே சென்றால் உள்ளம் அமைதி அடைவதற்குப் பதிலாக எத்தனை எத்தனை ஏற்ற தாழ்வுகள்.ஜாதிய,பொருளாதாரம்,வடமொழி ,தமிழ் மொழி வழிபாடு .திருநீறு வழங்குவதில் காட்டும் பாகுபாடு


கல்வி  வாணிகம் படு ஜோர்.அரசாங்கம் தன்  பள்ளிகளை வளர்க்கிறேன் என்று சொல்கிறது .ஆனால் மூடப்பட்ட  பள்ளிகள் அதிகம்.  அதற்கான காரணங்கள் மன சாட்சியுடன் வெளியே சொல்லமுடியாது.பள்ளி நேரங்களில்
பள்ளி வகுப்பறைகளில்   மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் ஆசிர்யர்களும் சேர்ந்து இருப்பார்கள்.

மருத்துவம் அனைவரும் அறிந்ததே

தியாகம்,சேவை மனப்பான்மை  எங்கும் இல்லை .நாடு என்னவாகும்

  இளம்பிஞ்சுகள்  காதலைப்பற்றி பேசுகின்றன.கல்லூரி எதற்கு?எட்டுவயது

சிறுமியின் பதில் காதலிக்க.

பணம்  குணத்தைக் கெடுக்கும்


பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.

கலப்புத்திருமணங்களும்  பெற்றோர்களின்  பர்தவிப்பும்


      ஜாதிகள்   பார்க்கக்கூடாது ,தாராள மனம் வேண்டும் .

குழந்தைகள்  பெற்றால் வளர்ப்பது பெற்றோர் கடன்.

தங்கள்  தேவைகள்,  ஆசைகள்  அனைத்தையும் விட்டு

வளர்க்கும்  பெற் றோர்களுக்கு ,

இன்றைய  குழந்தைகள்  ஆங்கிலம் படித்தபின்

முதலில் பேசுவது வரைவது எல்லாமே இதயபடம்,  ஒரு அம்பு ,

ஐ லவ் யு   தான்.


கலப்பு   மணத்தை   ஆதரிக்கும் அரசாங்கம்,முற்போக்கு வாதிகள் ,

பகுத்தறிவு வாதிகள் அனைவரும் மேடைப்பேச்சு பேசும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான்  உள்ளனர். அனைவரும் ஜாதிவாரி மக்கள் துகைக் கணக்கை  ஆதரிக்கின்றனர்.

 கலப்புத்திருமணம்  செய்த பின்  பிறந்த குழந்தையின் ஜாதி  இப்பொழுது

பெரிய  பிரச்சனை .அதிலும் அம்மா  ஜாதியா,அப்பா ஜாதியா.

காதல் திருமணம்  ஜோடி  பிரிந்தால் அந்தக்குழந்தை அப்பாவின் பாட்டியால்
வளர்ப்பதில்  எவ்வளவு சிக்கல் .

எனக்குத்தெரிந்த ஒரு பெண் காதலனைப் பிரிந்து    அப்பா    வீட்டிற்கு  குழந்தையுடன்  வந்து  பட்ட பாடு தற்கொலையில் முடிந்தது.

இன்று  குழந்தைப் பருவத்தில்    இருந்தே  காதல் என்பதும்,அப்பாவை மதிக்கக் கூடாது  என்பதும்,யாரும் தேவை இல்லை  எப்படியும் பிழைக்கலாம்  ஒரு
தவறான  மனோபாவம் என்ற   தொற்று நோய் வளர்ந்து   பலரை  நிம்மதி இழக்கச்  செய்கிறது.  பலரை கொலை  காரர்களாக்குகிறது. பலர் வாழ  வேண்டிய  வயதில் பரலோகம் அனுப்புகிறது.

இன்று  குட்டி -  சுட்டி விளம்பரம் விளம்பரம்.ஒரு 7-8 வயது  சிறுமியிடம் ஒரு வினா ---காலேஜ்    சென்று  என்ன செய்வாங்க?
 விடை --காதலிப்பார்கள் .
விடை கேட்டு  சிரிப்பு.

 குஷ்பு  பேசியதற்கு  நீதி மன்றம் மன்றம்..போராட்டம் .

  நம் தமிழர் பண்பாடு இப்பொழுது மௌனம்.

பெற்றோர்கள் ஒரு எந்திரம் .குழந்தை  பெற்று வளர்ப்பது.

இந்நிலை   உருவாக்கும்  பெரிய திரை ,சின்னத்திரை  அவர்கள் தனிப்பட்ட

வாழ்க்கை  நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது .

 அவர்களும் நீதிமன்றம் செல்கிறார்கள்.

எதிர்கால இளைஞர்கள், நிம்மதி இன்றி இருக்கும் சமுதாய  சூழல் உருவாகும்.

பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.




 

ஆசிரியராக விரும்பாததற்கும் யார் காரணம்?

பெற்றோர்கள்  தங்கள் குழந்தை களுக்கு  அன்பு என்ற பெயரில் அதிகம்  சலுகை அளிப்பதால் ,
இன்றைய காலங்களில்  அவர்கள்  அதே அன்பை  வெளியிலும் எதிர்பார்க்கின்றனர்.என் மாணவன் 
ஒருவன்  என்னிடம் என் பெற்றோர்கள் என்னிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதோ,அடிப்பதோ,
திட்டுவதோ கிடையாது .எந்தவித அறிவுரையும் கூறமாட்டார்கள்.நீ தானாகவே தெரிந்து கொள் என்பார்கள் 
அதையே   நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்பான்.அவனுக்கு எல்லாவிதத்திலும் பெற்றோர்கள் சலுகை.
படிக்கவில்லை என்றால்  நாங்களே கவலைப்படுவதில்லை.நீங்கள்  ஏன்  அவனை கஷ்டப்படுத்துகிறீர்கள்.
அவன்  உட்கார்ந்தே பல தலை முறைக்கும் சாப்பிடலாம்.என்பர்.ஆசிரியர்களும் நமக்கு ஏன் சார் வம்பு என்று 
விட்டுவிடுவார்கள். இதில் பாதிக்கப்படுவது சில ஏழை மாணவர்கள் .அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் 
தேர்ச்சிவிகிதம் .  மேலும்  இதே பெற்றோர்கள்  தனியார் பள்ளிகளில் நேரடியாக ஆசிரியர்களை  சந்திக்கவோ / தரக் 
குறைவாக  பேசவோ முடியாது.ஆனால் ,அங்கு ஆசிரியர்கள் பயந்தே இருக்கவேண்டும்.விடுப்பு எடுக்க முடியாது.
ஆசிரியர்கள்,மருத்துவர்கள் காவல்துறையினர் மூவரும்  தன்னல  மில்லா  உழைப்பு தியாகம் செய்யவேண்டும்.அதற்கேற்ற 
மதிப்பும் ,மரியாதையும் ,பொருளாதார வசதியும் தரப்படுகின்றதா என்றால் அது  கிடையாது .50,000 ஊதியம் பெறும் 
பள்ளி ஆசிரியர்களால் தேர்ச்சி விகிதம் காட்டமுடியா நிலை.நிரந்தரமற்ற குறைந்த ஊதியம் பெரும் ஆசிரியர்கள் தேர்ச்சிவிகிதம் காட்டுகிறார்கள்.சில  கல்லூரிகளில்
துறைத்தலைவர்கள் (H.O.D) மாதம் 10,000/-ஊதியம்.
கல்வித்துறை  ஆசிரியர்கள் தரம் குறைவதற்கும், தரம் மிக்கவர்கள் ஆசிரியராக விரும்பாததற்கும்  யார் காரணம்?

செவ்வாய், நவம்பர் 27, 2012


 இன்று   திருநாள் .   ஒளி  பெருகட்டும் .


முக்கண்ணன்   மைந்தன் ,முருகன் 

கந்தன் , கடம்பன் , கார்த்திகேயன் ,


கருணை  மழை   பொழிய ,

அவன்    பாதம்  பணிவோம்.


 வாழ்வில் ஒளிபெற  வாழ்த்துக்கள் .


 

    

ஞாயிறு, நவம்பர் 25, 2012

வாழ்க ஜனநாயகம்.



அமெரிக்காவில் ஆறுமாதம்,
ஆனந்தமாய்,
கழித்த  பின் இன்று 
இந்தியப் பயணம்.
தாய் நாட்டுப் பற்று,
தாயகம் காணும் 
மகிழ்ச்சி.
செய்தி படித்தேன்.
சென்னையைத் தவிர,
மற்ற நகரங்களில் 
18  மணிநேரம் மின் வெட்டு.
பாவம் என் வயதான அம்மா.
மக்கள் நலம் காக்கும் 
இந்திய நாட்டில்,
 அரசுகள் மாறுவதால்,
திட்டங்களில் மாற்றம்.
ஒருவர் புகைவண்டி மேலே செல்லவேண்டும் என்றால்,
ஒருவர் பூமிக்குள் செல்லவேண்டும் என்பார்.
அவர் பதவி போய் இவர் பதவி வந்தால்,
திட்டங்கள் தூள்-தூள்.
நட்டங்கள் மக்கள் வரிப்பணம்.
அவர்களுக்கென்ன அயல் நாட்டு சேமிப்பு.
வாழ்க ஜனநாயகம்.
ஆறுமுகக்  கடவுள்,
ஆனை முகன் தம்பி,
அறுபடை வீட்டு நாயகன்,
அவன் பதம்  பணிவோம் யாம்.
அவனியில் நம் இச்சைகள் 
அவனருளால் 
விருப்பங்களாகி,
செயலுருப்பெற்று,
உள்ள நிறையுடன்,
ஊக்கம்  பெற்று,
உள்ளம் மகிழ்ந்து ,
நோய்நொடி இன்றி,
நீண்ட காலம்,
இனிதே வாழலாம்.

ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

ஹிந்து புராணங்களின் சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளன.
மோகினி அவதாரம் பற்றிய சர்ச்சை.
இறைவன் பற்றிய வரலாற்றை ,
விவாதம் செய்வது பாவம் என்றோருவாதம்.
ஆனால் ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

அது ஒரு பூமி.
அதில் சவத்தையும்  புதைக்கலாம்.
சாக்கடையையும் ஓடவிடலாம்.
புனித கங்கையும் ஓடவிடலாம்.
குழியும் தோண்டலாம்.
சுரங்கங்கள் தோண்டலாம்.
தங்கமும் வெட்டி எடுக்கலாம்.
நிலக்கரி எடுக்கலாம்.
வைரமும் எடுக்கலாம்.
எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.
புதையலும் எடுக்கலாம் .
புண்ணியர்களையும் புதைக்கலாம்.
பாவிகளையும் புதைக்கலாம்.
அறிவு,பதவி,அறிவியல் மேதைகள்,
நாஸ்திகர்கள்,ஆஸ்திகர்கள் 
அனைவரும் சங்கமிக்கும் இடம் பூமி.
ஆகையால் இந்துமதம் கர்ம பூமி,
கர்மத்துக்கேற்ற வாழ்க்கையை கொடுக்கும் பூமி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஆகையால் இது வினைக்கேற்ற பலன் தரும் 
சனாதன தர்மம் என்ற சகிக்கும் பூமி.
அருவுருவமும் ஆனாய் போற்றி 
அகிலத்திற்கே ஒரு ஆதர்ஷ பூமி.

சனி, நவம்பர் 24, 2012

எண்ணிய எண்ணங்கள் யாவும்,எளிதில் நிறைவேறுமே.

முருகனுக்கு மூத்தோன்,
காட்சிக்கு  எளியோன்.
கணங்களின் நாயகன்,
கணபதி என்றும் என்னைக் காக்க.

வேழமுகத்தோன் ,
வேலனின் மூத்தோன்,
வேண்டும் வரம் அருளும்,
கணபதியைத் தொழுவோம் .

கஜவதனன், பஞ்சக்கரமுடையோன்,
பக்தர்களைக் காப்போன்,
பட்டிவீரன் பட்டி வாசன்,
கற்பக விநாயகன்,அவன்பாதம் பணிவோம்.

மோதகப் பிரியனவன்,
சித்தி விநாயகன்,
பவானி  புத்திரன்,
பவ துக்க ஹரன்,
சிவ புத்திரனவன்  முன்
தோப்புக்கரணமிட்டால்,
தோல்வி பயம் நீங்கி,
தொல்லுலகில்
தொல்லைகள் அகன்று,

சாந்தியுடன்,சக்தியுடன்,
சகல இச்சைகளும்  நிறைவேறும்,
ஞானம் பெற்று,
கிரியா ஊகம் பெற்று,
நானிலத்தில் நலமுடன்
வாழ லாமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.
ஆலயங்கள் சாத்தினாலும்,
அரசமரத்தடியில்  அமர்ந்து,
அருகம்புல் அர்ச்சனை ஏற்று,
அல்லல் அகற்றும் ஆறுமுகன்
அண்ணன் அவன்.,பாதம் தொழுதால்,
பாவங்கள் விலகும் ஐயா.

சர்வ சித்தி விநாயகன்,
சங்கடஹர விநாயகன்,
விக்னங்களை  நீக்கும்,
விக்ன வினாயகனவன்.
அவன் பாதம்  வணங்க ,
அல்லல் போகுமே;
ஆனந்தம் பொங்குமே.
இன்னல்  நீங்குமே .
மனதில் இன்பம் பொங்குமே.
எண்ணிய எண்ணங்கள் யாவும்,
எளிதில் நிறைவேறுமே.









,

வெள்ளி, நவம்பர் 23, 2012

கல்வி அறிவு பெருகினாலும் போலிகளிடம் ஏமாந்தாலும். உண்மை புரிவதில்லை.

  அதிகாலை நேரம்,

ஆண்டவனைத்  தொழும்  நேரம்.

இன்றைய நாட்களில் , பொருள் 

ஈட்டும்  தொழில் நுட்பப் பணியில்,

கடமையைச் செய் .
கடவுள் கருணை உண்டு 
என்ற  கீதை உபதேசம்.
ஏற்புடையதாயிற்று.

ஹிந்தியில் நான் படித்த தோஹை,

வீரர்கள் செயலில் இறங்குவர்.
கோழைகள்   வீண் பெருமை பேசுவர்.
வீரர்கள் களத்தில்  குதிப்பர் .
கோழைகள்  தற்பெருமை பேசுவர்.
காலம் மாறுகிறது.
கருத்துக்கள் மாறுகின்றன.
ஒரு கிணறுவெட்ட பழைய முறை 
உதவாது.
நெசவு நெய்ய கைத்தறி ,
காலத்திற்கேற்ற நூற்பாலை.
அகல் விளக்கு ,
இன்று மின் விளக்கு.
கட்டை வண்டி 
இன்று ஜெட் விமானம்.
கதை பேச நேரமில்லா உழைப்பு.
நான் சிறுவனாக இருந்த போது .
ஒருவர் உழைப்பு;
பலர் அமர்ந்து உண்பர்.
வெட்டிப்பேச்சு ;
திண்ணைப்பேச்சு;
வீண் வம்பு;
அரசியல் கூட்டம்;
அலை மோதும்.
இன்று மோதியின் 
ஒருமேடைப் பேச்சு .
நான்கு ஊர்களில் .
பொதுமேடைப் பேச்சு.
தொலைக்காட்சியில்  வீட்டில் இருந்தே,
நேரடி ஒளி பரப்பு.
அறிவியல் விந்தைகள்.
அன்றாட வாழ்வில்.
பல மொழிகள் அறிவு பாமரனுக்கும் தேவை.
பொருட் செல்வம் இருந்தால் ,
தன் இனம் வளரும்.
தன் மொழி வளரும்.
வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் சேவை,
ஆர்வம்  தோழி நுட்ப வசதியால் தானே?
மடி கணினி இலவசம்.-ஆனால் 
மின்சாரம் இல்லை.
தொலை பேசி வசதி இல்லை.
வலை அலை வசதி இல்லை.
பயன் படுத்த முடியவில்லை.
அலைகற்றை ஊழல் அலை ஓயவில்லை.
வீண்பேச்சுக்கள் தான்.
பொருளாதாரம் இருந்தால்,
தமிழ் மொழி வளரும்.
திரைகடலோடியும்  திரவியம் தேட,
தமிழ்,தமிழ் என்ற வீண் பேச்சுப் பேசி,
காலத்திற்கேற்ப கல்வி  இன்றி ,
கல்வித்துறையில் நேர்மையின்றி,
காசேதான் கல்வி,
இல்லாருக்கு இல்லை என்ற நிலை இன்று.
அரசுப்பள்ளி தரம் உயர,
என்னதான் செய்தாலும்.
பெற்றோர்கள் பொருளீட்ட அலையும் பொது,
நல்  ஒழுக்க சூழல் சமுதாயத்தில்,
ஊடகங்களில்,
திரைப்படங்களில் .
ஆடைகளில் கவர்ச்சிகள்  கண்ணைப்பறிக்கும் போது ,
ஊழல்,கொலை,கொள்ளை,லஞ்சம் என்பதே
 பேச்சாக 
இருக்கும்  போது ,
ஒழுங்கீனங்கள்  தானே மிஞ்சும்.
ஆன்மிகம் அமைதி தந்தது.
ஆனால் அதில் ஆஸ்தி தேடுவோர் அதிகமானதால்,
பொருளின்றி அருள் இல்லை 
என்ற நிலை.

எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன்,
அவன் அருள் பெற உள்ளார்ந்த பிரார்த்தனை,
உள்ள இடத்திலேயே போதும்.
உண்மை சொன்னால் ஊர் நகைக்கும்.
ஊர்க்கோடியில் ஒரு சாமியார்,அவரோ போலி,
அவருக்கு பல கோடி சொத்து.
இதுவா இறைவன் அருள் பெறும் இடம்.
பணம் இருந்தாலே பத்தும் செய்யும்.
அங்கு எங்கே தர்மம் தலைக்கும்.
காலம் மாறினாலும்,
கல்வி அறிவு பெருகினாலும் 
போலிகளிடம் ஏமாந்தாலும்.
உண்மை புரிவதில்லை.

மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?

      தமிழகம்  சேர,சோழ,பாண்டிய நாடு என்ற மூன்று பிரிவுகளாகவும்,குறுநில மன்னர்கள்,கடையேழு வள்ளல்கள் 
பாரி ,ஓரி ,அதியமான் என்று என்றுமே ஒன்று பட்ட வரலாறு காணப்படவில்லை.அப்படிப்பட்ட நிலையிலும் அனைவருக்கும் கல்வி என்ற நிலை இருந்ததா?என்ற நிலை தெரியவில்லை.அதிவீரராம பாண்டியர் "பிச்சை புகினும் 
கற்கை  நன்றே என்றாலும், வெந்தனலால்  அழியாது கல்வி என்றாலும்,ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றாலும்
இன்றும் ஜாதி அரசியல் தான். என்றுமே அனைவரும் அறிவாளிகளாக நாட்டு பக்தியுடன் பல மொழி,அறிவு பெற்று 
ஒற்றுமை  உடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்த தில்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கே ,கடவுள் இல்லை,பார்ப்பான் ஒழிக, தமிழன் வாழ்க என்று தமிழர்களை கிணற்றுத் தவளைகளாக ,பாரத நாட்டின் அறிவே தெரிந்து கொள்ள முடியாமல் தமிழ் தமிழ் என்று இன்று ஒய்  திஸ் கொலைவரி  என்றும்,பட்டி தொட்டி எல்லாம் மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?
ஹிந்தி கூடாது என்றவர்கள் பொதுமக்களைப் படிக்கவிடாமல்,மத்திய அமைச்சர்களானால்  பெரும்பான்மையானவர்கள் அறிந்த மொழியை மறுத்து  தமிழில் தமிழ்நாட்டிலேயே முடிய இல்லை. தமிழ் வழிப்பள்ளிகள்  ஏழைகள், வழி  இல்லாதோர்  சரணடையும் பள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.
ஏதாவது அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள்,படித்தோர் யாரும் தமிழ் வழி  பள்ளிகளை விரும்ப இல்லை. ஹிந்தி ஒழிந்ததா? தமிழ் வழி படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் அலுத்து புலம்பும் நிலை.
கடவுள் இல்லை என்று ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கியவர்கள் திருக்கடைஊர்,காளகஸ்தி சென்று பூஜை செய்யும் நிலை. அம்மாவிற்கு நன்கு ஹிந்தி தெரியும்.
பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றாலும் ,
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு  என்ற பாடலும் இக்பால் எழுதிய சாரே ஜகான் சே அச்சா என்ற வரியும் ஒன்றே.
பல நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் வர வேண்டும் என்றால் பல மொழி அறிவு வேண்டும்.
கம்பருக்கு வட  மொழி  அறிவு  இல்லை என்றால் கம்ப ராமாயணம் தமிழுக்கு கிடைத்திருக்குமா?நீதிபதி இஸ்மாயில் ,கம்பர்கலகம் எத்தனைபேருக்கு இதய நூலாக இருக்கிறது.
ஐம்பெருங் காவியங்கள் பெயர் வடமொழியா?தமிழா? ஆதி  பகவன் என்பது வடமொழி.
இன்று எப்படி தமிழ் ஆங்கிலம் இன்றி பேசமுடியா நிலையோ அன்று அப்படித்தான் வடமொழி. இன்று ஆங்கிலம் கலந்தால் பெருமை. ஆனால் அகில பாரத்தையும் இணைக்கும் தேசத்தந்தை காந்தி ஏற்படுத்திய  பொதுமொழியால்  தமிழுக்கு ஆபத்தா? இன்று கலையுலகம் ஹிந்தி மொழி விரும்புகிறது. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் ஹிந்தி தேவை என்ற பொருள் பட பேசயுள்ளார்.
பாரதி ராஜா ,வை.கோ. திராவிடன்,தமிழன் பற்றிய சர்ச்சை. தில்லியிலும் தமிழர்கள் அதிகம். பாம்பேயிலும் அதிகம். தென்னக மூன்று மாவட்டங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு இல்லை.தமிழகம் மட்டும்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் திராவிடர் என்ற பெயரில் இத்தனை கட்சிகள். இத்தனை தலைவர்கள்.
வேற்றுமைகள். வட இந்தியாவில்  மைதிலி,போஜ்புரி,மார்வாடி,அவதி,உர்து, சத்தீஸ் கடி ஆயிரக்கணக்கான மொழிகள்.
ஹிந்தி என்பது டில்லி,ஆஜ்மீர்,ஆக்ரா என்ற இடங்களில் இரண்டரை லக்ஷம் பேசும் கடி போலி.
மொழிகள் என்பது ஜீவாதாரம் கொடுப்பதால் வளர்வன. இன்று எத்தனை பேர் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்,தமிழ்  இலக்கியங்களும் ,வடமொழியும் அறிந்துள்ளனர்.
பார்ப்பனர்கள் 3%  ஆதிக்கமா? என்று பேசுபவர்களுக்கு ஆங்கிலம் படித்து வடமொழி அறியவில்லை என்பதுதான் சத்தியம். காரணம்  வாழ்க்கைக்கு வேண்டிய தொழில் ஆங்கிலம் தருகிறது.இன்று வடமொழி ஒரு தெய்வ மொழி.
எப்படி நம்முன்னோர்கள் இறந்தால் தெய்வ மாகிவிட்டார் என்கிறோமோ?அப்படி.
 இனிமேல் தெய்வம், பார்ப்பான்,ஹிந்தி என்ற பெயரில் அரசியல் சுயநல வாதிகள் பிழைப்பு நடத்த முடியாது.

புதன், நவம்பர் 21, 2012

! பாரதம்!

வாழ்க பாரதம்!


மனிதன்  பேராசை உள்ளவன்.அனைத்து உயிரினங்களும் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு   திருப்தி  அடைகின்றன.ஆனால், மனிதன் பல தலைமுறையினர்களுக்காக  சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறான்.அதன் பலனாக ஆஸ்தி சேர்ப்பதற்காக அவன் முயற்சிக்கிறான். ஆட்சி செய்பவர்கள் முதலில் தன்  பாதுகாப்புக்காகவும்,நாட்டின் பாதுகாப்புக்காகவும் தன கரூவூலங்களை நிரப்பிவைத்தனர்.மக்களும் அரசனை தன் பிரதிநிதியாகக்
கருதினர்.நாட்டின் நலத்தைப் பெரிதாக மன்னர்கள் கருதிய காலம்.ஆனால்  அவர்கள்,மக்கள் நலத்திற்காக  கல்வி என்ற அழியா செல்வத்தை அனைவருக்கும் தர முன்வரவில்லை. அதன்,பலனாக
நாடு துண்டு  களானது.  இந்த மன்னர்கள் நாட்டை விட  தன் ஆணவம், வீரம்,காதல், தன குறிகிய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்ற வலையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தனர்.
எதிரிநாட்டு செல்வங்களைக் கொள்ளை அடித்து  தன்  அரண்மனை கரூலத்தில்  சேர்த்து வைத்தனர்.
அந்தப்புரங்களை அழகு படுத்தி ராணிகளுடன் ஆனந்தமாக இருந்தனர்.கல்வி அற்ற மக்களும் அரசன் கைதட்டினால் சேவகம் செய்ய உயிரை விட தயாராக இருந்தனர்.
        பல  மொழி,இயற்கை,உணவுப்பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னியாகுமரி  வரை  வேறுபாடு  இருந்தாலும்  ஒரு தெய்வ ஷக்தி  நாட்டை ஒற்றுமை படுத்தி வந்தது.
சிவன்,விஷ்ணு ,சூரியன்,சந்திரன் என்ற தெய்வங்களை விட ,உருவ,அருவ வெளிப்பாடும் நடந்துவந்துள்ளன. இறைவனைப்போற்றும் நூல்கள்   வட மொழி,தென் மொழிகளில் இயற்றப்பட்டாலும்,குஹன் சபரி,விதுரன் ,நந்தனார்,கண்ணப்பர் கதைகள் கூறப்பட்டாலும் சமுதாயத்தில் மிகப்பெரிய வேறுபாடு.

      இந்த சனாதன தர்மம் வளந்த பாரத தேசம்  வெளிநாட்டினர் புகுந்ததால் சிந்து நதி மூலம் வந்து
ஹிந்து அல்லது ஹிந்துஸ்தானம் ,ஹிந்து தர்மம் என்று மாறியது. சுயநலத்தால் இருந்த மன்னர்களும்,
மதவாதிகளும் மக்களை மடையர்களாக்கி தங்களுக்குள் இருந்த பகையால் வெளிநாட்டினர் ஆட்சி
அமைக்க காரணமாக இருந்தனர்.விருந்தாளிகள் தெய்வம் என்றனர்.  अथिति देवो भव्
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால் ஆண்டவனுக்கு மற்ற மொழி  வழிபாடு புரியாத.? என்ன.
சர்வ ஷக்தி உள்ள ஆண்டவன் பல சோதனைகளைக் கடத்து வந்த மக்களுக்கு சர்வ சிக்ஷா அபியான்
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வரை வழிகாட்டி உள்ளார்.
பல இளைஞர்கள் ஜாதி,மத,இனம் வேறுபாடு மறந்து காதல் திருமணம் செய்யும் அளவிற்கு பகுத்தறிவு ப பெற்றுள்ளனர்.
மக்கள்  தன்  நாட்டின் வரலாறு அறிந்து சிந்தித்து பரந்த மனப்பான்மை உடன் சயநலம் மறந்து
பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் தேசனலனுக்கும் வேறுபாடுகள் மறந்து  நாட்டைப் பாதுகாக்கும்
உயர்ந்த எண்ணங்கள் தர இறைவனைப் ந்ப்ரார்த்திப்போம்.
வாழ்க பாரதம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!வந்தே மாதரம்!

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -11.

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -10

அம்மாவிற்கு  உடல் நிலை சரி இல்லாத போதும்  ,ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். எனக்கும் தம்பிக்கும்  19. ஆண்டுகள் வித்தியாசம்.மிக செல்லமாக வளரவேண்டியவன்.
அம்மா  பள்ளிகள் நடத்தினாலும் பையனை கவனிக்க முடியவில்லை. அவனையும்  பட்டதாரி  ஆக்கினார். அம்மாவிற்கு நான் தான் வேலைக்கு போய் விட்டேன். என் தம்பியாவது பள்ளியை நிர்வஹிக்கவேண்டும் என்று.ஆனால் எனக்கு அவன் வேலைக்கு செல்ல வேண்டும்  என்று. அவனும் வேலைக்கு சென்றான்.நானும் என் பள்ளியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
ஆனால் அம்மாவின் விருப்பமோ அல்லது ஆண்டவனின் விருப்பமோ தெரியவில்லை,எங்கெங்கோ வேலைக்குச் சென்று இறுதியில் பழனிக்கே வந்து பள்ளியை நிர்வாகம் செய்கிறான். அவன் மனைவியும் பள்ளியில் கவனம் செலுத்துகிறாள்.வருமானம் குறைவு என்றாலும்,இருவருமே சிக்கனமாக,பள்ளியை நடத்திவருகின்றனர். எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை இருந்து பள்ளியை நடத்த அருளவேண்டும்.பல சோதனைகள்.பொருளாதார வசதி இல்லை.அம்மாவிற்கு இன்றும் அந்த பள்ளியின் நினைவலைகள் தான்.பள்ளிவளர வேண்டும் என்பதே.எல்லாம் அவனருளால்  தான் நடக்க வேண்டும்.

இறைவனின் சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான் புரியும்.

மரணம்  மற்றவர்களின் மரணம் .ஆறுதல் .மரணம் நிச்சயம். நம் தந்தையின் மரணம் நமேக்கே நாம் தேற்றிக் கொள்வது.
என் அப்பா சொல்வார்.உலகம் மிகவும் ஆபத்தானது. மிகவும்  ஜாக்கிரதை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரங்கள் பல தானாகவே வளர்கிறது. அதில் முள்ளும் இருக்கின்றன. நிமிர்ந்தும் ,வளைந்தும் உள்ளன.முடத்தேங்குகளும் உள்ளன. விஷமும் உள்ளது.அது பருவகாலங்களுக்கேற்ப இலைகளை உதிர்த்து துளிர்கிறது. அப்படியே குடும்ப விருக்ஷம். இன்ru சொன்னதுபோல் இருந்தாலும் 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் போன்ற தளிர்கள் பேரன் பேத்தி,நான். இறைவனின் அதிசயம்.அறிviயல் சற்றே பணிவது இதற்குத்தான். இல்லை எனில்...உலகம்......ஆஹா!
அஹங்காரர்களின் அசுர ஆட்சிகள் அழியாமல் தான் இருக்கும்.நான் எனக்கு நானே செய்துகொண்ட ஆறுதல். ஆறு பருவகாலங்கள் போல் தான் வாழ்க்கை.மனிதவாழ்க்கையும் அப்படித்தான். நாம் அழுவது சிரிப்பது புரிந்து தெரிந்தே செய்யும் அறிவற்ற ஆனால் அறிவுள்ள செயல்.இறைவனின் அபூர்வ உணர்வுகள். தான் ஆடவிட்டாலும் தன்  சதை ஆடும்.என் அப்பா பழனியில் ப்ராnaaவஸ்தை. 
அன்று என் பையன் பத்தாவது பாஸ் சேதி. 
என் அடிவயிற்றில் ஒருகலக்கம். 
ஐயோ என்று கதறவேண்டும் என்ற துடிப்பு.சென்னையில் .
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விஷயத்தை சொல்லாமல் பழனி செல் என்றார். புரிந்துவிட்டது.இதுதான் ரத்தபந்தம்.
இறைவனின்  சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான்  புரியும்.மற்றவர்களுக்குக் கூறும் ஆறுதலை நினைத்து  naam aaruthal adaiya vendiyathuthaan.

செவ்வாய், நவம்பர் 20, 2012

அம்மாவின் நினைவலைகள்-10





அம்மாவின் நினைவலைகள்-9

அம்மாவிற்கு சோதனை நேரங்களில் ஆண்டவன் கொடுக்கும் தைரியமும்,மனித உருவில் உதவ வருபவர்களும்
என்னை மிக ஆச்சரியப் பட வைக்கும். ஒருமுறை அம்மாவை மிரட்ட பின் வீட்டுக்காரரின் மகன் ஒரு அடியாளை
அனுப்பி உள்ளான்.அம்மா அவனை எந்த ஊர் என்று கேட்டு,அந்த ஊர் மாணவர்கள் பற்றி கூறியதும் அவன்
அம்மா காலில் விழுந்து வணங்கி உங்கள் மாணவன் என் சித்தப்பா என்று சொல்லி,யார் பணம் கொடுத்து அம்மாவை மிரட்ட அனுப்பினானோ
அவனையே மிரட்டி விட்டுச் சென்றுள்ளான்.
அம்மாவின் வாழ்க்கையில் பல தெய்வீக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
சோக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
அனைத்திலும் அவர் நீந்தி கரை ஏறினாலும் அப்பாவின் மரணமும்,மாப்பிள்ளையின் மரணமும் தாங்க முடியா வேதனை. என்னால்
இந்த இரு வேதனைகளும் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன.மரணம் ஏற்படும் பொழுது மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது சுலபம்.
ஆனால் அந்தப் பெருந்துன்பம் ந செயலற்றதாக்கிவிடும்.ஆனால்,என் தங்கைக்கு எங்கிருந்தோவந்த தைரியம்,துணிச்சல்,தன வேதனையை மறைத்து,எல்லாம் அவரவர்கள் தலை எழுத்து,இதை நினைத்து வருந்துவதால் என்ன பயன் !என்று தைரியம் சொல்லுவாள்.
மரணம் அதுவும் அகால மரணம் ...இந்த நரக வேதனை மனித வாழ்வில் ஏன் ? அப்படிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டாலும் மனிதன் போட்டி,பொறாமை,பேராசை அகந்தை,என்ற தீய குணங்கள் தோன்றுவது ஏன் ? இதுதான் அறிவுள்ள அறிவியல் உலகை சற்றே ச்தம்பிக்கச்செய்கிறது.
தொடரும்.

திங்கள், நவம்பர் 19, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-9


அம்மாவின் நினைவு அலைகள்-9

பழனியில் அம்மா மூன்று இடங்களில் பள்ளி நடத்தினார்.இதில் திடீரென்று காஞ்சிப்பெரியவரின் ஜனகல்யாண்  பெயரைச்சொல்லி சுப்ரமணியன் என்பவர் தலையிட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். இதனால்சண்முகபுரம் கிளை மூடப்பட்டது. இது குறித்து  காஞ்சி மடம்  பெரியவருக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் இல்லை. ஜனகல்யாண்  பெயரில் பல ஏமாற்றங்கள் நடந்துள்ளது.
இப்படி பல சோதனைகள்.பலர் அம்மாவிடம் நேரடியாக பள்ளியை ஏற்று நடத்த கோரிக்கைவைத்தனர்.
அவர் தன்  போக்கில்  மன தைரியத்தால் குறைந்த கட்டணத்தில் பள்ளிகளை நடத்திவந்தார்.ஆசிரிகைகளும் குறைந்த ஊதியத்தில் திறம்பட உழைத்தனர். நான் அரசு உதவி பெரும் பள்ளியில்  வேலை கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டேன். என் பெரி யமாமாவிற்கு ஏழு  குழந்தைகள்.
மூத்த மகள் கோமதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.அத்தைக்கு சிறிதும் இஷ்டமில்லை.அம்மா எனக்குத்தெரிந்து அண்ணன் வீட்டிற்கு சென்று எவ்வித உதவியும் பெற்றதில்லை.அவரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. அண்ணனின் கஷ்டத்திற்கு அம்மா உதவி செய்துள்ளார். என் மனைவி கோமதி அமைதி;பொறுமை திறமை அன்பு அடக்கம் உழைப்பு மரியாதை குணக்குன்று என்று சொல்லலாம்.திருமணம் ஆன பின்  இரண்டு குழந்தை பெற்ற பின் தான் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.அம்மாவிற்கு ஒரு பயம். மகன் பிரிந்து தனியாக சென்ருவிடுவானோ என்று. என் மாமாவிற்கு திருமணமான பின் மாமா என் பாட்டிக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அதற்கு அத்தை ஒரு காரணம் என்று பாட்டி சொன்னதால் சொல்லிக்கொண்டே இருந்ததால் அடிக்கடி எனக்கும் அம்மாவிற்கும் சண்டை வரும்.எனது பேச்சு,நடைமுறை அனைத்தும் மாறிவிட்டத சண்டை போடுவார். ஒருநாள் கூட என் மனைவி என் தாயாரிடம் கோபமாக பேசியோ சண்டபோட்டதோ கிடையாது.எனக்குத்தான் கோபம் வரும். இருப்பினும் வேலை கிடைத்து 10 ஆண்டுகள் காலாண்டு,அரையாண்டு,முழுஆண்டு விடுமுறை என சென்னையில் இருந்து பழனி சென்று வருவோம்.ஊதியம் தவிர வேறு வருமானம் கிடையாது. சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.என் மனைவியும் இது பற்றி பேசியதும் இல்லை. 525 ரூபாய் ஊதியம். வீட்டுவாடகை 100/-எப்படி சமாளித்தாளோ ?நான் M.A;B.Ed;MEd; படித்து முடிக்கும் வரை எதிலும் ஈடுபடவில்லை.வேலை;படிப்பு; தேர்வு;B.Ed; சார்ட்,படம்,கற்பிக்கும் உபகரணங்கள் எல்லாம் மனைவியே.எல்லாம் முடிந்து முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்  பணியில் சேர்ந்தேன்.நான்கு ஆண்டுகள் கழிந்தன. நிம்மதி என்ற நிலையில்
நடைபாதையில் சென்ற என் மீது புது கார் வாங்கியர் மோதினார்.படுத்த படுக்கை.55 நாட்கள்.
இதற்கு மேலும் நடந்த சோதனைகள். தங்கையின் திருமணம். அம்மா பட்ட மனவேதனை. அப்பாவின் மரணம். மாப்பிளையின் மரணம் என்பவை பெரும் கதைகள்.
தொடரும்.

சனி, நவம்பர் 17, 2012

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மா பல துன்பங்களை எதிர்த்துப் போராடி ஒரு அமைதிநிலை எட்ட இறைவன் விடுவதே இல்லை.எங்கள் பெரிய வீடு மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.என் தாத்தா முன் பகுதி எங்களுக்கு என்று கூறி இருந்தார்.எங்களுக்கோ,என் பெரியப்பாவிற்கோ  வீடு பாகப்பிரிவினை செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் அத்தை நெம்மேனியில்  இருக்கும் பூர்வீக வீட்டைத் தன பெயரில் மாற்ற இந்த பழனி வீடு  மூன்று  பாகமாகப்  பிரிக்கப்பட்டது. என் தாத்தாவின் ஆஸ்தி அந்த ஒரு வீடுதான்.இன்னும் அதிகமாக சொத்து இருந்திருந்தால் என்ன ஆகுமோ தெரியாது.அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய யுத்தம்.கடைசியில் திருவுளச்சீட்டு போட்டு சமாதானமாக வீடு பிரிக்கப்பட்டுவிட்டது.பெரிய கூடம்.நடுவில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு எவ்வித கெட்ட  பழக்கம் 
இல்லை என்றாலும் சாமியார் ஜோதிடம் நம்பிக்கை அதிகம். பல ஆண்டுகள் அவர் குடும்பத்துடன் எங்கோ சென்றுவிட்டார். தாத்தாவின் மரணத்திற்குக் கூட அவர் வரவில்லை.அவருக்கு ஒரு ஜோதிடர்.எங்கள் பெரியப்பா மகாதேவா அய்யர் அரசியல் வாதி.ம.போ.சிவஞானம் ஆரம்பித்த தமிழரசுக்கழகத்தில்  அடிப்படை உறுப்பினர். தமிழரசுக் கழக வேட்பாளராக நின்று நகரமன்ற உறுப்பினர் ஆனவர். சம்பாதிக்கத் தெரியாதவர்.அவருக்கு பச்சை என்ற நண்பர். அவர் ஒரு தலால்.அவர் எப்படியோ அவரை மடக்கி வீடு விற்பதற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு ஜோதிடர் வந்து வீட்டை விற்கவில்லை என்றால் பெரும் கஷ்டம் வரும் என்று கூறி வீடு விற்கத்  தயாரானார். இருவருமே கெட்டிக்காரர்கள்.என் அப்பா சேது என்றாலே சாது.அனால், அவர்  வீடு விற்கும் விஷயத்தில் மட்டும் தன அண்ணன்கள் சொல்வதை கேட்கவில்லை.வீட்டு வரைபடம் "ட " வடிவம்.இதில் எங்கள் பாகம் நடுவில்.மூன்றடி நடை பாதை.அதை வாங்கிய கணேசன் செட்டியாருக்கும் எங்களுக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.இந்த சண்டையில் எங்களுக்கு உள்ளூர் பெரியவர்கள் ஆதரவு அதிகம். எங்களுக்காக எங்கள் எதிர்வீட்டில் இருக்கும்   துரை,கந்தசாமி போன்றோர் அடிதடியில் இறங்கி காவல் நிலையம் செல்வோம். இது அம்மாவிற்கு நிம்மதியில்லை.அப்பாவிற்கும்.அந்தவீட்டில்தான் மழலையர்,பள்ளி ஹிந்தி வகுப்புகள்.
அவரின் பலவித எதிர்ப்புகள் நடுவில் இரண்டுமே நன்றாக நடந்தது.நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜ சண்முகம்,தங்கராஜ்,நகர்மன்றத்தலைவர் கோவிந்தராஜ்,தலைவர் காணியாளர் கே.சின்னப்பன்,p.s.கே.லக்ஷ்மிபதிராஜ் ,லக்ஷ்மணன் செட்டியார்.எம்.கே.எம். அப்துல் காதர்,. போன்ற அனைவரும் எங்களுக்கு பேராதரவு வழங்கினர். செட்டியாரிடம் வீடு கை மாறியது, அவர்முதலில் வீட்டிற்குப் பின்னல் வீடு கட்டினர்.அதை ஒரு  பாலசமுத்திரம் அய்யங்கார் வாங்கினார்.அனைவருக்குமே நாங்கள் வீட்டை விற்றுவிடுவோம் என்ற எண்ணமே.நாங்கள் விற்கவில்லை என்றதும் அவர் ஒரு தாசில் தா ருக்கு விற்றார். சில நாட்கள் மிக நட்பாயிருந்தவர்  வீடு விற்கமாட்டோம் என்பதை அறிந்ததும் முதலில் தன செல்வாக்கைப்பயன்படுத்தி பள்ளி நடத்த விடாமல் ஒரு நீதிமன்ற இடைக்கல் உத்திரவு போல் தன மேலதிகாரியிடம் வாங்கினார். பள்ளி கோடை விடுமுறைக்குப்பின் திறக்க ஐந்து நாட்களே. அம்மாவிடம் பணம் இல்லை. எப்படியோ சமாளித்து ச,வெங்கடாசலம் வழக்கறிஞர் மூலம் இடைக்காலத்தடையை வுயர் நீதிமன்றம் மூலம் நீக்கி பள்ளி ஆரம்பித்தார். இந்த மனோ திடம் பொருளாதார வசதியின்றி எப்படி?இது ஒரு தெய்வ பலம்.அனைவரின் ஆதரவு. எதிரிகள் பணபலம் மிக்கவர்கள்.என் தாத்த ஆசீர்வாதம் உள்ளூர்  பெரியவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை.எல்லாம் இறைவன் அருள்.
அங்கு எங்கள் காவல் தெய்வம் கருப்பணசாமி இருந்து காப்பதாக எங்களுக்கு பல அனுபவம்.அதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர்,எதிர் வீட்டு சுயமடத்தில் இருந்த பெரியவர்கள் நேரில் 
கண்டதாகவும் கூறுவார். எதோ ஒரு ஆற்றல் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பது உண்மை.
தொடரும்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-7

அம்மாவின் நினைவு அலைகள்-7
1968ஆம்  ஆண்டு பள்ளி திறந்ததும்,அம்மா இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். நானும் நடத்த ஆரம்பித்தேன்.அதற்கு சபா மூலம் மாதம் 120 ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கினர். அதுவும் ஓராண்டிற்கு ஒரு முறை வரும்.நாற்பது மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று  என்ற விகிதத்தில் வசூலித்துத் தரவேண்டும்.சபாவுக்கு வருமானாம். ஹிந்தி போராட்டத்தால் சபாவின்  மாணவர்கள் குறைந்த நேரத்தில் நாங்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.அப்பொழுது சபாவில் பணியாற்றிய செயலர், அமைப்பாளர்கள் பிரசாரகர்களை சந்தித்து  உற்சாகப் படுத்தினர். செயலாளர்   தி.பி.வீரராகவன் ஜீ ,அமைப்பாளர்கள் ஈ.தங்கப்பன் ஜீ ,சுமதீந்திரா ஜீ ,எம்.சுப்ரமணியன் ஜி, வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி, போன்றோர் சபாவை காப்பதற்குப் போராடினர். எங்கள் வீட்டிற்கும் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி வித்தியாலயத்தை மூடவேண்டும் என்று ஊர்வலமாக வந்தனர்.நான் மூடிவிடுகிறேன், இங்கு விரும்பி வருபவர்களுக்கே கற்பிக்கிறேன். எனக்கு மாத வருவாய் வேண்டும் என்றேன். மாணவர்கள் சென்று விட்டனர். அன்று மாலையே சில கல்லூரி மாணவர்கள் ஹிந்தி பயில வந்தனர்.
அன்றைய சபா செயலர்கள்,அமைப்பாளர்கள் அனைவரும் எங்கள் சேவையைப் பாராட்டினார். ஆனால் அங்கும்  தேர்தல். ஜாதி,போராட்டம். ஜே,எஸ்,ராமதாஸ் செயலராக வந்ததும் என் தாயாரின் முழு நேர வித்யாலயம் பகுதி நேரமாக மாற்றப்பட்டது. நேர்மையான பிரசாரகர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.சென்ற ஆடு வயதான ப்ரசாகர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினர். அதற்கு என் அம்மாவிடமே  ரூபாய் 600/-கட்டணம் வாங்கி உள்ளனர். அம்மா வயதானதால் , ஆடோவில் தான் செல்லவேண்டும் .இரண்டாயிரம் செலவு. அங்கு பாராட்டி எதுவும் பேசவில்லை. பிரசாரகர்கள்  ஊக்குவிக்கப் படவில்லை. ஆனால் ,ஹிந்தி பிரசாரம் மட்டும் நடந்துவருகிறது. பலர் சபாவை எதிர்பார்ர்க்காமல் ஹிந்தி பிரசாரம் செய்கின்றனர்.ஏனென்றால் பொதுமக்கள் விரும்பி படிக்கின்றனர். நிரந்தரமான பிரசாரகர்கள் இன்றியே ,மாநில அரசின் உதவியும் இன்றி லக்ஷக்கணக்கில் மாணவர்கள் ஹிந்தி படிப்பது மகாத்மா காந்தி அடிகளின் தீர்க்க தரிசனம் தான். அவர் சென்னையில் 1918இல் சபாவை ஆரம்பித்தார்.
தொடரும்.

இளைஞர்கள் வலைத்தளம், இந்தியாவின் எதிர்காலம்


 





தர்மத்தால் செல்வம் குறையாது
?????????? 26,2012,
09:09  IST
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். 
* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். 
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும். கஞ்சத்தனம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.
* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். 
* தர்மம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை. தர்மம் செய்கின்றபோது வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும்.
* துர்பாக்கியமுள்ளவனிடமிருந்து இரக்க சிந்தனை அகற்றப்படுகின்றது.
- நபிகள் நாயகம்


 இடுகைகள்  பல ,
கணினி  பிறப்பிக்கிறது
வலைத்தளங்கள் மூலமாக.
இளைஞர்கள்  வலைத்தளம்,
இந்தியாவின்  எதிர்காலம் 
ஒளிமயமானது  என்பதற்கே 
ஒரு ஒளிச்சுடராக விளங்குகிறது.
அதில் வெளிநாட்டு வேதனைகள் ,
சஹிக்கும்  நாங்கள்,
மத வேற்றுமை மறக்கிறோம்.
மொழி வேற்றுமை  மறக்கிறோம்.
அழகுதேவதைகள் கண் முன் தோன்றினாலும்.
எண்களின் பார்வை,அவர்களின் மேல் 
படுவதில்லை. புலன் அடக்கம் கற்றுக்கொள்கிறோம் .
புலால் உண்பதில் சில சமயம் ஜாதி வேறுபாடு மறக்கிறோம்.
தம்பி,தங்கைகளுக்காக,அம்மாவிற்காக ,உற்றார் உறவினர்களுக்காக,
சிக்கனைத்தை  கடைபிடிக்கிறோம்.
தாய்நாட்டில்  இல்லா வேதனை இருந்தாலும் 
நாங்கள் இருக்குமிடத்தில்,
வையகம் வாழ்கிறது.
ஜாதி வேற்றுமைகள் இல்லை.
மொழி வேற்றுமைகள் இல்லை.
மத வேற்றுமைகள் இல்லை.
வசுதைவ குடும்பகம் என்ற நம் ஆன்றோர் 
கூற்று இங்கு மெய்யாகிறது,
இது ஒரு வெளிநாட்டு இளைஞரின் கவிதை.(surukkam)
வெளிநாட்டுப்பிரிவில் அவர் காணும் சுகம்.
பாரதநாடு பலம் பெரும் நாடாக  
இளையர்கள் கனவில் ஏற்படும் தடைகள் 
மத-இன-ஜாதிக் கலவரங்கள்.
மீண்டும் மீண்டும் ஒளிக்க  வேண்டிய 
அவ்வையின் பாடல்:
இட்டார் பெரியார் ;இடாதார் இழி குலத்தோர்.
பாரதியின் பாடல் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா.
ஆனால் இன்று ஜாதி என்ற பெயரில்.
3% விகித முள்ள ஜாதியைமட்டும் 
மிகக் கீழ்த்தரமாக தாக்கும் கூட்டம்.
இது பொறாமையா?இயலாமையா?
அந்தப்  பிரிவு இல்லை என்றால் 
சுபகாரியங்கள் யாரும் நடத்த 
ஒரு அச்சம்.
திதி கொடுக்க அந்த இனம் வேண்டும்.
புதிய தொழில் துவங்க 
கணபதி ஹோமம் வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற யாகங்கள் வேண்டும்.
ஹோமங்கள் வேண்டும்.
உண்மைகளை உதைக்க உதைக்க ,
ஆலயங்களில் கூட்டம் .
முன்னேற்றச் சிந்தனைகள் 
முன்னேறச் செய்யும்.
பாரதம் பார் புகழ  
இன வேற்றுமை ஒழிய வேண்டும்.
ஆனால்,
அரசியல்வாதிகள் 
தங்கள் சுய நலத்திற்கே 
ஜாதி வெறி, சமயவெறி தூண்டும் போக்கு.
இதே சத்திய வாக்கு.

வியாழன், நவம்பர் 15, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6


என் அம்மாவின் நினைவு அலைகள் --பகுதி 6
என்  அம்மாவிற்கு  இரண்டு அண்ணன்கள். பெரியவர்  தன்  அம்மா  தன்  தம்பிக்கு  அதிக சலுகைகள் தருவதையும் ,  தன்  உழைப்பிற்கேற்ற  அன்பும் மரியாதையும் கொடுக்கவில்லை  என ஊரைவிட்டு சென்றுவிட்டார். என் தாத்தாவின் வருமானத்தில் குடும்பம் நன்றாகவே நடந்துள்ளது.  என் அம்மாவிற்கு ஒரு தம்பி. ஒரு தங்கை.தம்பி வேலைக்கு வந்ததுமே ,குடும்பப்பொறுப்பு 
முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். தன்  தங்கைக்கு  திருமணம் செய்வது,என் அம்மாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பது,அம்மாவிற்காக சிலவு செய்வது ,உதவுவது எல்லாமே அவர் தான்.
அப்பொழுதுதான் என் தங்கை பிறந்தாள் .எனக்குப்பின் பிறந்த குழந்தைகள் இறந்ததால் ,என் தங்கைக்கு  வேம்பு என்று பெயர்வைத்தனர்.அப்பொழுது மாமா மதுரையில் பனி ஆற்றினார். ஒருநாள் தங்கை அழுததால் அவளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார் அம்மா. அப்பொழுது அங்கு சுப்ரமனியபுரத்தில்  பாலா குருகுலம் என்ற மழலையர் பள்ளி நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் மூலம் விவரம் அறிந்து பழனியில் ஒரு பள்ளி துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 1968இல் பழனியில் shree பாலமுருகன் மழலையர் பள்ளி துவக்கப்பட்டது.
பழனி ஆர் .எம்.கே. சித்த வைத்தியசாலை சிவ  சுப்ரமணியம் ஓம்,தலைமையில்  பள்ளி துவக்கப்பட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரியை நியமிக்கப்பட்டார்.ரூபாய் நுழைவுக் கட்டணம் இரண்டு. மாதக்கட்டணம் ரூபாய் 5/- மூன்றாண்டுகள் வரை வருமானம் கிடையாது. அந்த வறுமையான நிலையிலும் அம்மாவின் கடின உழைப்பு  பள்ளி  வளர காரணமாக இருந்தது. ஊர்ப் பெரியவர்களின் ஆதரவும் இருந்தது.  
தொடரும்.

அம்மாவின் நினைவலைகள்--பகுதி--5.


அம்மாவைத் தனிக்குடித்தனம் அல்லது வீட்டிற்கு செல்லவிடாமல் செய்த தாத்தா ,ஒரு தெய்வீக மனிதர்.அவர் தான் மரணம் அடையும் நாளை அறிந்து வைத்திருந்தார்.மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு அம்மாவை அழைத்து தாத்தா ,கோமதி,! சென்றதைக் கருதாதே, நான் நாளை மறுநாள்  இறந்துவிடுவேன்.எனக்கு சாப்பிட பழங்கள் வாங்கிவா.பள்ளிக்கு லீவு போடு. நான் இறந்த பின் இந்த வீடு துண்டுதுண்டாகி விடும். பல கஷ்டங்கள் வந்தாலும் நீ வீட்டை விற்கமுடியாது. நான் உனக்கு  பக்க பலமாக இருப்பேன்.தெய்வம் துணை இருக்கும்.இந்த ஆசிர்வாதம் செய்ததும்,அவர் சொன்ன படி அவர் இறந்துவிட்டார். அந்த ஆசிகளின் பலன் அந்த வீடு  பல துண்டுகளானாலும்   அம்மா வீட்டைக் காப்பாற்றிவிட்டார்.

           இது தான் ஒரு தெய்வீக சம்பவம்.
1965-67இரண்டு  ஆண்டுகள் அம்மா படுத்த  படுக்கையானார்.அப்பொழுது தலைவர் கே.சின்னப்பன்,அவர்கள் பரிந்துரைப்படி,அம்மா வேலைபார்த்த சொக்கலிங்கக் கவுண்டர்  நினைவு  உயர் நிலைப்பள்ளி,கொரிக்கடவு ,எனக்கு ஹிந்தி ஆசிரியர் பணி கிடைத்தது.ஆனால்,இருமொழிக்கொள்கை ப காரணமாக,பயிற்சி பெறாத ஹிந்தி ஆசிரியர்கள்  பணி இழக்க நேர்ந்தது. அந்நிலையில், எனக்கு அம்மா மிகவும் தைரியமாக இருந்தார். அப்பாவும் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.அம்மாவின் உடல் நிலை. தேர்ச்சி அடைந்தது.  அச்சமயம்,தக்ஷின் பாரத ஹிந்தி பிரசார் சபா  புதிய ஹிந்தி வகுப்புகள் ஆரம்பிக்கும் திட்டம் கொண்டுவந்தது. அம்மாவும்  ஹிந்தி வகுப்புகள்  ஆரம்பிக்க ஊக்குவித்தார்.
தொடரும்.

புதன், நவம்பர் 14, 2012

என் அம்மாவின் நினைவு அலைகள்.பகுதி--4

1956 இல்  அம்மாவிற்கு சிங்கம்புணரி   உயர் நிலைப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் பணி  கிடைத்தது.
பின்னர்  கொம்புக்காரநேந்தல் உயர்நிலைப்பள்ளியில் .அதெல்லாம் மிகவும் கஷ்டமான சூழல்.  இதற்கிடையில் கர்ப்பம் வேறு.இன்றைய காலம் போல் வசதியில்லை.ஆண்டுக்கு ஒரு குழந்தை.அதை சரிவர கவனிக்க முடியாத சூழல். இரக்கமற்ற உதவாத உறவினர்கள்.ஓராண்டு ஆசிரியர் பயிற்சி அனுப்பக் கூட விரும்பாத தெரியாதவர்கள்.பின்னர் பழனிக்கே திரும்பி வந்து அருகில் உள்ள நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி,கோரிக்கடவு  பள்ளிகளில் பணியாற்றினார்.எனக்குப்பின் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் அகாலமரணம்.மனவேதனை,புகுந்த வீட்டுக்கொடுமை.அம்மாவிற்கு ஆதரவு என் மாமா நாகராஜன்,பாட்டி,தாத்தா,மற்றொரு மாமா சுப்பிரமணியன்,அப்பா. ஆனால் அம்மா படுத்த படுக்கையாக நோயிருக்கும்போது அப்பா  தான் முழு கவனிப்பு. என் மாமா,பாட்டி அடிக்கடிவந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.

ஆஹா!  என் அப்பாவின் அப்பா தாத்தா பற்றி கூற மறந்துவிட்டேனே! அவர் ஒரு தெய்வீக மனிதர். அவர்  எனக்குத்  தெரிந்து தனியாகவே வீட்டின் ஒரு ஓரத்தில் சமைத்து சாப்பிடுவார்.அந்த பெரிய வீட்டில் மூன்று தனிக்குடித்தனங்கள் .பெரியப்பா,சின்ன பெரியப்பா,என் அப்பா. ஆனால்,எங்கள் தாத்தா பார் வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது.அவரிடம் தான் நான்,பெரியப்பா குழந்தைகள் வாங்கி சாப்பிடுவார். எங்கள் வீட்டுப் பூட்டை உடைத்து தாரளமாக  பலசரக்கு சாமான்கள் திருடுபோகும்.அம்மா பணி முடிந்து திரும்பியதும் வீடு போர்க்களமாகி விடும்.ஆனால் தனியாக வேறு வீட்டிற்குப் போக விடமாட்டார்.ஒரு முறை  வீட்டை காலி செய்யும் பொழுது போககக்கூடாது என்று
வண்டி சக்கரத்தில் படுத்துக் கொண்டார்.

தொடரும்.

என் அம்மாவின் நினைவு அலைகள்--பகுதி-3

அப்பா பற்றி அம்மா புகழ்ந்து பேசுவார். அவர் அப்பா பற்றி,

அவர் கடினமாக உழைக்கிறார். 
அவர் வருமானம் தானம் ,தர்மம்,அண்ணா குடும்பத்திற்கு செல்கிறது என்பார். 
இது சம்பந்தமாக சிலசமயம் சண்டை வாக்குவாதம் நடக்கும்.
இருந்தாலும் அப்பா என்றால் அம்மாவிற்கு உயிர்.

என் அப்பா  தன்  மரணத்தை புரிந்துகொண்டு  சொன்னார்,
டேய் ,அனந்து  போன வாரம் 
,நான்  வேலை  செய்யும்  இடத்தில் விடிய,விடிய இனிப்புகள் செய்தேன்.
அதனால் தான் கண் கெட்டுவிட்டது .
வேலை செய்து பணம் கேட்டேன்.
அவர்கள் உன் அண்ணன் வாங்கிச்சென்று விட்டார் என்றனர் .
என் மனது மிகவும் கெட்டுவிட்டது  என்றார்.
தன் தங்கையையும் வெறுப்பாக பேசினார்.
மனிதர்கள் தங்கள் தம்பி இடமும் இவ்வளவு இரக்கமற்று நடந்துகொள்வார்கள் 
என்பதை என் அப்பா தன் எழுபத்தைந்தாவது வயதில் புரிந்து கொண்டார்.
அவர் எல்லோருக்கும் உதவி உள்ளார்.
 தன்  குடும்பத்தை விட  அதிகமாக என்பது 
அப்பாவின் மரணத்திற்குப்பின் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கூறினார்கள் .
அதுதான் செத்தால் தெரியும் என்று சொன்னார்களோ என்னவோ,அவர் இறந்த பின் அவர் இழப்பு மிகவும் பேரிழப்பாக இருந்தது.அம்மா மிகவும் உடைந்து போனார். ஆனால் எதோ ஒரு சக்தி அவருக்கு ஒரு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது .

என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.


என் அம்மாவின் நினைவலைகள் ---பகுதி 2.

திருமணம்  அவசரமாக முடிந்துவிட்டதே,
என்ன,அம்மா நினைத்தீர்கள் - என்றேன்,
எல்லாம் விதிப்படியே என்றார்.
சமாதானம் வேறு,
ஜாதகம்,பொருத்தம் பார்த்த கல்யாணங்களும் ,
தலை எழுத்து சரி இல்லை என்றால்,
நிம்மதி இல்லையே  என்று.
அம்மா,கர்நாடக சங்கீதம்  பயின்றுள்ளார்.
ஹார்மோனியம் வாசிப்பார்.
புகுந்த வீட்டில் இதற்கெல்லாம்  தடை.
பெரிய குடும்பம்.
அம்மாவிற்கு பின்னர்தான் விவரம்   தெரிந்துள்ளது.
வசதிகள் அதிகம். பாட்டி வழி  சொத்து.
எவ்வித உழைப்பும் இன்றி அழித்து  வந்துள்ளனர்.
சீட்டு விளையாட்டு. விளையாட வருபவர்களுக்கும் சேர்த்து  போண்டா,பஜ்ஜி ,காபி ,
வருமானம் இல்லை.ஆஸ்திகள் கரைந்து கொண்டேவந்தது.
உறவினர்கள் கூட்டமும்.
இறுதியில் மிஞ்சியது வீடு மட்டும்.
அம்மாவிற்கு தாய் வீட்டு சீதனத்தில் மிச்சம் இருந்தது,
சங்கீத ஞானமும் ,சம்ஸ்கிருத  அறிவும்.
அம்மாவின் நிலை அறிந்த  பழனி கிளை லக்ஷ்மி விலாஸ் வங்கி மேலாளர் வக்கீல் 
ராமச்சந்திர ஐயர்  மனைவி  ஆலோசனை பேரில்,
தெரிந்த சமஸ்கிருத எழுத்தறிவைக்  கொண்டு,
ஹிந்தி வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளார்.
மாதம் நாலணா,எட்டணா  கட்டணம்  தான்.
குடுபத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு,
பலவித அபவாதங்களுக்கு இடையில் ஹிந்தி  தேர்வுகளும்  எழுதிஉள்ளார்.
நான் அம்மாவிற்கு இரண்டாவது பிள்ளை.
எனக்கு மூன்று வயது. அப்பொழுது,
என் தாத்தா,பாட்டி,பெரியப்பா நாத்தனார் அப்பா அனைவரின் எதிர்ப்புமிக்க 
சம்மதத்துடன்  பள்ளியில் சென்று படித்துள்ளார். 
மடி ஆசாரம்  வேறு, அவ்வகையில் ஓர்ப்படி,நாத்தனார் கொடுமை.
புத்தகம் பைண்டிங் செய்த துணி ஆசாரத்திற்கு பங்கம் என்று,
பழனி பெண்கள் பள்ளி ஆசிரியை கார்த்திகாயினி அம்மாவிற்கு முழு ஆதரவு.
ஒருநாள் நான் அம்மாவுடன் பள்ளிக்குச்சென்றதும் ,
அக்கால சூழலின் எக்காள -ஏளனத்தால்  பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி.
இதையெல்லாம் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வார்.
ஒருநாள் அப்பா கை எழுத்துப்போடவே தெரியாது என அறிந்து 
கை எழுத்துப்போட சொல்லிக்கொடுத்துள்ளார்.
அவர் எது செய்தாலும் வீட்டு வேலைகள்  செய்து முடித்த பின்னர் தான்.
அம்மா இரவு 12க்கு மேல் தான் அப்பாவை சந்திக்க முடியுமாம் .
காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்கவேண்டும்.
இந்தக்காலத்தில் நடக்குமா? வழக்கு நடக்கும்.
அவர்களுக்கு அம்மாவை படிக்க அனுமதித்ததே பெரிய  மிகப்பெரிய ஹிமாலய சலுகை.
எல்லோரும் சொல்வார்களாம் ,எங்கள் அனுமதியே ,உனக்கு வெகுமதி.
இல்லையென்றால் உன்னால் படித்திருக்க முடியாது.
இந்த ஒரு சங்கட நிலையிலும் அவர் சிரித்தே சமாளித்து ,
தன்  சோகக்கதையை, நகைச்சுவையாகவே கூறுவார்.
அப்பா ரொம்ம நல்லவர்தான். அவரை அப்படி வளர்த்துவிட்டனர்.
சேதுராமனை,ஆரம்பத்தில் சோதுராமன் என்று எழுதுவாராம்.
எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு பிரியர்கள் என்பார் சிரித்துக்கொண்டே.
அம்மாவின் நினைவு அலைகள் தொடரும்.

என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.


என் அம்மாவின் நினைவலைகள்--பகுதி-1.

என் அம்மா 
உழைப்பு,
ஊதியம்  இல்லா உழைப்பு.
13 வயதில் திருமணம்.
அம்மா சொல்வது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும்,
அவர் ஆழ்மனம் எப்படிப்பட்டது;
அவருக்கு எப்படி பொறுமை;
அவரது திறமை எப்படி புகுந்தவீட்டில்,
தூசி துருபிடித்தது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவரது திருமணம் நிச்சயிக்கப்படவில்லை.
பெற்றோர்கள் கலந்து பேசவில்லை. 
அது காதல் திருமணமும் அல்ல.
ஆச்சரியமாக உள்ளதா?
அதுதான் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ?
என் கொள்ளுப்பாட்டி பழனி சென்றுள்ளார்.
அங்கு சொந்தக்காரர்வீட்டிற்கு சென்றுள்ளார்.
என் அத்தைக்கு திருமணம்.
என் பாட்டி பேத்தியைப்பற்றி கூற,
என் தாத்தா என் பெண் கல்யாணத்துடன் திருமணம் செய்யலாம்.
பெண்ணை அழைத்துவாருங்கள் என்றாராம்.
பெண் பார்க்கும் சம்பிரதாயம் இல்லை.
பெற்றோர்களும் சந்திக்கவில்லை.
நேரடியாக திருமணமண்டபம்.
பழனியிலிருந்து என் கொள்ளுப்பாட்டி காமுப்பாட்டி என்றால்
 வத்தலக்குண்டில் எல்லோருக்கும் தெரியும். நடந்தே சென்றுள்ளார்.
அவசரக்கல்யாணம்.

திருமண அழைப்பிதல் அடிக்கவில்லை. 
உற்றார்-உறவினர்களுக்கு தகவல்மட்டும்.
அப்பொழுது தொலை பேசி,கைபேசி,கணினினி, எதுவும் கிடையாதே,
போக்குவரத்து  சாதனங்களும் இல்லை. 

 நேரடியாக அனைவரும்  திருமணமண்டபம் சென்றுள்ளனர்.
அங்கு இரு    மணமேடை . இரண்டிலும் மாப்பிள்ளைகள்.
அவசர அவசரமாக அலங்கரித்து,
மண  மேடைக்கு பெண்ணை அனுப்பினால்.
என் அம்மா, எதுவும் புரியாமல்,
நாத்தனார் மாப்பிள்ளை அருகில் உட்கார,
என் மாமா பார்த்த பெண் வேறு,அமர்ந்த பெண் வேறு,என,
கோபமாக எழுந்திருக்க,
அதற்குள் சமாதானம் செய்து ,
எங்கம்மாவை,தரதர என இழுத்து ,,என் அப்பா அருகில் 
உட்காரவைத்துள்ளனர். இதற்குள் என் தாய் மாமாவிற்கு ஒரு தவிப்பு.
கோத்திரம் கூட கேட்கவில்லையே என.
அதை எங்கம்மா தமாசாகக் கூறுவார்--
கோத்திரம் ஒன்றே இருந்தால், "ஓடிவா"- என்று மாமா கூறினாராம்.
அம்மா கௌண்டிண்யம்.
நாங்க கௌசிகம்.
மாமா ,"கௌ" என்றதும் எழுந்தாராம்.
அம்மா  தயாராக .
ஓட்டப்பந்தய வீராங்கனைபோல் தயாரானாராம்.
"ண்டிண்யம்  "என்றதும்,மாமா அமர,அம்மாவும் அமர்ந்தாராம்.
அம்மா கருப்பு.அப்பா சிவப்பு.
இதுவேறு பிரச்சனை.
அப்படி இப்படி திருமணம் முடிந்தது
 பின்னர் தான் வயது வித்தியாசம்,ஜாதகம் 
எல்லாம் பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட 15-16 வயது வித்தியாசம்.
ஏக நக்ஷத்திரம்.
திருமணம் ஒருவியப்பாக முடிந்தது,
அம்மா தன வேதனைகளை மறந்தோ,மறைத்தோ,
தமாஷாக தன் திருமணம் நடந்ததைக் கூறுவார்.
அவர் மன தைரியம், அந்த 12-13 வயது. அவர் பட்ட பாடு.
தொடரும்.





திங்கள், நவம்பர் 12, 2012

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இந்தியா முழுவதும் ,
கொண்டாடும் 
இனிய திருவிழா.

நகாசுரனை  வதம் செய்த நன்னாள்.

கிருஷ்ணன்  அசுரனை அழிக்க  ,

சக்தியின்  துணை தேவை ,

என  சத்யபாமா உறுதுணையுடன் 

அசுர சக்தியை சம்காரம் செய்த நாள்.

தீமை இருள் அகல,
நல்   ஒளி  பெருக,
அலைமகள் அருள் பெற,
ஆனந்தமாக  கொண்டாடும் 
ஆனந்தத் திருநாள்.

இந்நன்னாளில் 
வாணிகம் வளர்கிறது.
ஒளி ,ஒலி  கலந்த திருநாளாகிறது.

மகிழ்ச்சி பொங்குகிறது.
மன நிறைவு பெறுகிறது.

இந்த இனிய நாளில்,
அனைவரின் 
ஆற்றல்பெருக,
ஆயுள் ஆரோக்கியம் ஆனந்தம் பெருக,
அலைமகள்,கலைமகள் ,மலைமகள்,
மூவரும் துணை நிற்க,
அனைவருக்கும் 
வாழ்த்துக்கள்.

பிரார்த்தனைகள்.









ஞாயிறு, நவம்பர் 11, 2012

நீ புலம்பிக்கிட்டே இரு. நான் போறேன்.


ஆமா!ஒய்வு பெற்ற பின் 
என்ன  செய்றீங்க?
தேடுகிறேன் !தேடுகிறேன்!

என்ன தேடுறீங்களா?

ஆமாங்க.தேடுகிறேன்.

அதில்லேங்க! பொழுது எப்படி போகுது?

அதுதான் தேடுறேனே ?
பொழுது போறதா!
பத்தலேன்னே.நேரம் .

அப்படி என்னேனே,
  நேரம் பத்தாமே!

அறிந்தததே தேடுறே,
புரிந்ததே  தேடுறே 
தெரிந்ததே  தேடுறே 
தெரியாததா தேடுறே .
பொருளைத் தேடுறே 
பொருள்விளக்கம் தேடுறே.
அறிவியல் தேடுறே;
பழைய தமிழ் இலக்கியம் தேடுறேன்.
புதிய தகவல் 
தெரிஞ்சுக்க  தேடுறே 
செய்திதித்தாள  தேடுறே.

என்னப்பா  புரியலே.

என் மனச் சுமை  கொட்ட  தேடுறேன்.

புரியலப்பா!

ஒய்வு பெற்றதும் தப்பா தெரியுது,

ஒண்ணுமே தெரியாம வயசாயிடுச்சுன்னு;
பேரனுக்குத் தெரியறது எனக்குத் தெரியலே;
உலகம்பெருசு.
நம்மநாடு வளம்பெருசு.
முன்னேற்றம் பெருசு.
ஊழல் பெருசு .
பலது தெரிஞ்சாலும்.
என்ன  தேடினாலும் 
ஒன்னு புரியல, 
ஊழல் ந ல்லதா ;கேட்டதா;
மக்கள் விரும்புராங்களா/
விரும்பலையா?
ஊழல்ல தோத்தவங்க ஜெயிக்கிறாங்க.
ஜெயிச்சவங்க தோக்குறாங்க.
பதவியிலரேந்து விலக்குறாங்க.
பிறகு பதவி தர்றாங்க .
தனிக்கட்சி ஆரம்பிக்கிறாங்க .
கூட்டணி சேர்றாங்க.

ஐயோ! ஆள விடப்பா !
எனக்கு என் ஜோலி இருக்கு.
எம்.எல்.ஏ  பாக்கணும்;
எதோ கவனிச்சு  ஒரு லைசென்சுவாங்கி 
பிசினஸ் டேவேலோப்பு பண்ணலாம்.
நீ என்னமோ தேடு. வேலை இல்லே.
பென்சன் வருது.
ஆமா.ஒன்னு கேக்கிறேன்.
வீட்டுலே ஒக்காந்து என்ன தேடுறே.?
எங்கே தேடுறே.
கூகிள்லே தேடுறேன். யாகூலே தேடுறே.பேஸ் புக்கள தேடுறேன்.

கம்புட்டரா.
எங்கவீட்ல இருக்கு. 
பையன் நேட்டுவரல நெட்டுவரல நு 
சொல்லிக்கிட்டு இருக்கா.
அதுதான் , என்ன. விலையில்லா  மடிகணினி.
ஆ,  சும்மா போட்டுவச்சுருக்கான் .
 கரண்டு  வேணுமே. கரண்டு.
நெட்டு வேலைசெய்ரப்ப சார்ஜ்  போகுதாம்.
சார்ஜ்  பண்ணின நெட்டு வேலை செய்யலையாம்.
பையன்புலம்பிக்கிட்டுருக்கான்.
அதுக்குவேறே  மாசம் ஆயிரம்கேக் குரான்.

பொழப் பில்லே .
இந்த விலைவாசி வேறே.


அடே !நானும் அதுதான் செய்றேன்.
இப்படியே பொழுது போகுது.

நீ புலம்பிக்கிட்டே இரு.
நான் போறேன்.









குறுக்குவழியில் குறுகிய வட்டம்.

நகைச்சுவை  ,

நகை என்றாலே ,

பொன்னகை;

அதனாலேதான் வரும் 

புன்னகை;

விலை  உயர்ந்த சுவை;

விவேகம்  கலந்தால் 

வேதனை தீர்த்து,


சிந்தனை உணர்த்தும் சுவை;

அது மனக்கவலை தீர்க்கும் 

மாமருந்து;

நகை  பொன்னால் செய்யவேண்டும்;

(கவரிங் நகை)
 முலாம்  பூசப்பட்ட  நகை'

காமடி பீசு.

புஷ்வானம்;

பொன்மொழி நகைச்சுவை 

ஆத்திரம் அதிகரித்தாலும் 

அடங்கிவிடும்.

அதுவே  விலை  உயர்ந்த நகைச்சுவை;

பாரதியாரைப் பார்த்து  அதி சினப்பயல் 
என்றதற்கு 
அவர் சொன்ன பதில் 
கோபத்திலும் 
அடங்கிய அடக்கமான வெளிப்பாடு;

காந்தி மதி  நாதனைப்பார் ,  அதி சின்னப்பயல்.
 இதிலே காந்தி  ஒளி ,
மதி  நிலவு,அறிவு,
நாதன் தலைவன்;
பாரதி  பார்+அதி 
பார் =உலகம் 
அதி- மிகை 

இந்த மொழி தமிழ்மொழி 

எத்தனையோ   நகை.

ஆனால் இன்று 
take it policy aaka,
why this  கொலைவெறியாக,
முலாம்பூசப்பட்ட நகையாக.
ஏனென்றால் 
அலைமகள் சேர அலையும் கூட்டம்.
தமிழில்  கலப்படம்.

குறுக்குவழியில்   குறுகிய வட்டம்.

வடமொழி கூடா  என்ற கூட்டம்,
அதை கை கொட்டி சிரிக்கிறது;

வெளிநாட்டு  மோகத்தில் ,
குளிர்காய்கிறது;
அலைமகளின் ஆட்டம் 
தமிழை கலப்படமாக்கி,
நகைச்சுவை தருகிறது.