ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஆங்கிலப் புத்தாண்டு பிரார்த்தனை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிரார்த்தனை.

அன்பும் ,ஆற்றலும் பெருகவே,
அநியாயங்கள் அகலவே,
அதிகாரிகள்,பொதுமக்கள்,
அரசியல் வாதிகள்,
பேராசையின்றி கடமை செய்யவே,
ஊழால்-லஞ்சம் ஒழியவே 
பேரருளாளன் ஆண்டவன் 
அருள் பொழிய ,
அனைவரையும் 
நல்ல நேராளனாக மாற்ற 
நல்லவர்கள் நோய்-நொடி இன்றி 
சகல செல்வங்களும் பெற்று 
தீயவர்கள் நல்லவராகி ,
அன்பும் பாசமும்,நேசமும்,
தேசப்பற்றும் உள்ளத்தில் 
கொண்டு வாழ கிருபைகாட்ட 
கணேசனிடம் பிராத்தனை.
அவன் தம்பி ஆறுமுகனிடமும்.
அவர்கள் தந்தை சர்வேஸ்வரநிடமும்,
விஷ்ணு விடமும் 
அல்லாவிடமும்,
ஏசுவிடமும் 
ஜகம் முழுவதற்கும் கிருபை காட்ட 
பிரார்த்தனை.
புத்தாண்டு பிரார்த்தனை.
ஆங்கிலப் புத்தாண்டு 
பிரார்த்தனை.

சனி, டிசம்பர் 29, 2012

சரியான தண்டனை.

பாலியல் பலாத்காரம்
தில்லியில் படு அமர்க்களம்.
தமிழகத்தில் செய்திதாள்களில்
வராத நாளில்லை.
அதுவும் சிசுக்கள்
மனிதர்களா?மிருகங்களா?
நாய் ஜென்மங்களா?
ஈடுபடுவோர் மட்டுமல்ல,
இக் காமக் கொடூரர்களைக்
காக்க  வக்காலத்து வாங்குவோரும்,
அந்த கொடியோர்களை ஆதரிப்போரும்
தண்டனை பெறவேண்டும்.
இக்கொடூர செயல் எந்த உருவத்திலும்
காக்கக் கூடாது.
குற்றவாளிகளை ஆதரிப்போருக்கும்
தண்டனைகள் கடும் தண்டனைகள்
தரப்படவேண்டும்.
பாலியல் கொடுமை,
மரணத்திற்கு மரண தண்டனையே
சரியான தண்டனை.

இனிதே கொண்டாடி, இந்தியப் பண்பு காப்பீர்.

ஆங்கிலப் புத்தாண்டு ,
 ஆடம்பரமாகக் கொண்டாடுவோம்.
ஆங்கிலம் இல்லையேல்
இல்லையே  வேலை.
வேலை இல்லையேல்
வேதனைதானே.
வைத்தியம் ஆங்கிலம்,
கல்வி ஆங்கில வழி
ஆனால்
காலம் தவறாமை,
கடமை தவறாமை,
கண்ணியமான பார்வை,
பொன் ஆசை இல்லாமை
நேர்மை போன்றவை
பின்பற்றப்படாமல் ,
அங்கு வெறுப்பதை
ஒதுக்குவதை  இங்கு  ஏற்பது ஏனோ?
ஆங்கிலம் அனைத்தும்
தந்தாலும்
நள்ளிரவுக் கும்மாளம்
நமக்கு ஏற்றதா?
எத்தனை எத்தனை இழிசெயல்கள்.
கேக் உணபதற்கா? உடலில் பூசவா?
உடலில் பூசும் கேக்கை
உதவும் கரங்களுக்கு ஈயலாமே?
நடுநிசியில் போதை,ஆட்டம்,
நம் நாட்டு சீதோஷ்ணத்திற்குப்
பொருத்தமா?
இறுக்கமான ஆடைகள்
சில தோல்நோய்கள் அரிப்பு,படைக்குக்
காரணம்.
வெப்பமுள்ள நாட்டில்
வேனைக்கட்டிவருமே/
வியர் வைக்கிருமிகள்
பெருகுமே.
ஆங்கிலத்தைக் கொண்டாடுங்கள்.
நம் பண்பாடு விட்டு
பட்டுப் போகாதீர்கள்.
உணவு நம் முன்னோர்வழி
தான் சிறந்தவழி.
வேக  உணவு,
வேகமாக ஆரோக்கியக்கேடு.
பட்டம் பெற்றோரே!
நள்ளிரவு உணவாக விடுதி
வீண் ரகளை
ஆங்கிலப் புத்தாண்டு
துயர சம்பவம் இன்றி
கொண்டாடுங்கள்.
இங்கிலீஷ் இளைஞர்களுக்கு
ஆங்கிலப்புத்தாண்டு.
இனிதே கொண்டாடி,
இந்தியப் பண்பு  காப்பீர்.







வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஆண்டவனை வேண்டி , அ றம் செய்வோரைக் காக்கும் கலியுகம். அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு  2013 ,
ஆனந்த  மிக்க ஆண்டாக ,
இனிய சுகங்கள் தரும்,
மன நிறைவுதரும் ஆண்டாக.
மகிழ்ச்சிதரும்  ஆண்டாக,
மங்களம் தரும் ஆண்டாக,
சத்தியவான்களும்,
நேர்மையாளர்களும்
நியாயவாதிகளும்
தலை நிமிர்ந்து பயமின்றி செல்லும்
ஆண்டாக ஆரம்பித்து,
ஆண்டாண்டுகள்   தொடர,
ஆண்டவனை   வேண்டி ,
அ றம் செய்வோரைக்
காக்கும் கலியுகம். அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியாழன், டிசம்பர் 27, 2012

கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை; இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.


செய்திகளும்  மக்களும்

தில்லி கலவரத்தில் காவலர் மரணம்.
உசிலம்பட்டி  காவல்துறை ஆய்வாளர் மரணம்.
கற்பழிப்புகள்;4வயது சிறுமி பலாத்காரம்.

தில்லி காவலர் மரணம் குறித்து
காவல்துறை அறிக்கை ,பொதுமக்கள் கூற்று,
எது உண்மை ?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால்தான்
உண்மை அறிய முடியும்.
மக்களுக்குப் பாதுகாப்புத்தரும்
அரசியல்வாதிகள்,பணம் படைத்தோர்,பணத்திற்கு மயங்கும்
அதிகாரிகள்,இரத்த பந்தத்தால்
இந்தவித குற்றங்களை ஆதரிப்போர்,கம்சன்,
இராமாயண ,மஹா பாரத காலத்தில் இருந்து
நடக்கும் அவலம்.
மாற்றான் மனைவியின்மீது ஆசை கடத்தல்,
இன்றா நேற்றா,
இராவணன்,இந்திரன் ,கம்சன் ,திரௌபதி துகில் உரித்தல்,
அதிகாரபலம்,சூதாட்டம்,வரலாறு காட்டும் உண்மைகள்.
அவரவர்கள் பாதுகாப்பு அவரவர்கள் சக்தியால்,
அறிவுத் திறனால்.
மக்களுக்கு எச்சரிக்கை தேவை.
தங்களைத்தாங்களே பாதுகாக்கும் ஆற்றல்,
ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,
ஊழலை ஆதரிக்கும் பொதுமக்கள்,
தன்னலம் இதுவே இன்றைய சூழல்.
ஒரு தெய்வீக சக்தி,மனித  சக்திக்கு அப்பாற்பட்ட
சக்தி ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
கிடைத்து,சட்டத்தை,புலனடக்கத்தை,
நீதி,சத்தியம்,தர்மம்,நேர்மை மதிக்கும் பண்பு ,
பெற  இறைவணக்கம்  ஒன்றே வழி .
திரைப்படம்,சுயநல எழுத்தாளர்கள் ,
வணிக நோக்க விளம்பரதாரர்கள்
அரசியல் தலைவர்கள் ,
காமத்துடன் கலந்த காதலுக்கு
முக்கியத்துவம் அளிப்பதால்வரும்
கொடூரங்கள்;
துர்க்கை! நீ நேர்மையாளர்களுக்கு ஆற்றல் கொடு;
ஆணவ அநியாயங்களை ஒழிக்க அவதாரமெடு;
இன்றைய என் பிரார்த்தனை இதுவே.
ஆலயங்களும் வணிக நோக்கம்;
அரசியலும் வணிக நோக்கம்;
கல்வியும் மனித வனிகநோக்கம்;
கலவியிலும்  மனிதநூகாம்;
காளி  தேவியே!
கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை;
இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.

செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

ஏசுநாதர்  பிறந்த நாள்.
எளிமை,சேவை,அன்பு, மனிதப்பண்பு,
 பாபங்கள்   தான் ஏற்று ,
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க,
ரத்தம் சிந்திய மகான்.

இந்நன்னாளில்  நல்லதே செய்து,
செய்த பாபங்கள் உணர்ந்து
 உயர்ந்த சிந்தனைகளுடன் ,
உண்மை,நேர்மை ,சத்தியம் ,அன்பு ,சேவை,
பரோபகாரம் என்ற உயர் குணங்களுடன் ,
உலகில் வாழ்ந்து இறை தூதர் துணையுடன்
உயர்ந்த மனிதனாக வாழ , உள்ளநிறைவு,மகிழ்வுடன்
வாழ ,
கிறிஸ்மஸ் தின 
வாழ்த்துக்கள்.

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஜாதி ஒழிந்தது. ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.

"காந்தி என்ற பெயரில் என்ன  இருக்கிறது"---என்றதொரு கட்டுரை.


"காந்தி "  என்ற  பெயரில் ஜாதி இருக்கிறது.பனியா ,வைஷ்ய  என்பதுதான் பொருள்.

நம்த தலைவர்களை  அன்னாஜி ,நேஹ்ருஜி,காமரஜ்ஜீ  என்பதுபோல்

மோகன் ஜீ  என்று அழைத்திருக்கலாம்.இப்பொழுது அனைவரும் காந்தி  சேர்ப்பதால்  ஜாதி ஒழிந்துவிட்டது. ஆனால் ,காந்தி என்றால் இந்திரா,ராஜீவ்,சோனியா  என்றே பலர் நினைக்கின்றனர். படித்தோருக்குத் தெரிந்து  இப்பொழுதுதான்  அனைவரும் துணிந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

நான் முதலில் இதை வெளியிட்ட பொழுது பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஹரிஜன்  என்ற  சொல் கபீரின்  தோஹையில்  உள்ளது.

கபீர்  சொல்கிறார்=="நாடும்,சொத்தும்,பெயரும்,புகழும் இறைவன் அளிப்பவை.

இறைவனை அளிப்பவன் பக்தன் ,அதற்கு அவர் எழுதிய சொல் "ஹரிஜன்".

எளிய மொழியில் ஆழ்ந்த கருத்தை வெளி யிட்டால் அது படிக்காதவன் ,கிராமீயப்பாடல்.
அது அனைவருக்கும் புரியும்  மொழி. அனைவராலும் ஒதுக்கப்படுவது

அதனால் தான் நாம் அடிமையானோம் .

இன்றும் பலர் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் மொழியிலேயே

புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சோனியா காந்தி ஊழல் என்றால் காந்தியின் வாரிசின் ஊழல் என்று
நினைப்போரும் உண்டு.
தேசீய கீதம்   வங்க  மொழி என்பது தெரியாதவர்களும் உண்டு.

    காந்தி  என்பதற்கு முக்கியத்துவம் அளித்து  ஜாதிப்பெயர்   பொதுப் பெயராகியது.

ஜாதி ஒழிந்தது.

ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.




. இதுதான் உலகம்.

நமது முன்னோர்கள்  வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து   மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி  செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற  என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும்  இளமையை உணர்ந்தேன். ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன  தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.

நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.

தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி  ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது.  பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.

வியாழன், டிசம்பர் 20, 2012

குஜராத் தேர்தல்

குஜராத்  தேர்தல் 

மோதியின்   வெற்றி அவரின் தனிப்பட்ட சாதனையின்  வெற்றி. அதன் சான்றுதான் 
ஹிமாச்சல் பிரதேச  தோல்வி.

மக்கள்  சாதனைகளைப்ப்பார்க்கிறார்கள் ,சாதி-மதம் 
பார்ப்பதில்லை.இருப்பினும் ஊழல் என்று போற்றப்படும்  காங்கிரஸுக்கு  ஓட்டுகளும் ,வெற்றியும்   மக்களின் மோகம் சற்றே குறைந்தாலும் சற்றே மீண்டும் காங்கிரசுக்கு  ஆதரவு  உள்ளது. மக்கள் ஊழல்களை ஆதரிப்பதுபோல்  உள்ளது. படுதோல்வி ஏற்பட்டாலே விழிப்புணர்வு என்ற நிலை மாறி 
சற்றே  அதற்கு உயிர்காற்று கிடைத்துள்ளது. 
மக்கள்  மீண்டும்  தங்கள் சக்தியை 2014 தேர்தலில் காட்ட  வேண்டும்.ஒரு முறை ஊழலுக்கு மரண  அடி கொடுக்கத் தயங்காத  நாட்டுப்பற்று வரவேண்டும். சர்வசக்தியான ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.

புதன், டிசம்பர் 19, 2012

மன சாட்சி இல்லா போராட்டம்.


நாட்டில்  ராமரையும் இறைபடங்களையும் செருப்பால் அடித்தபோது மௌனம்.

இறைவன் உருவம் பதித்த உடைக்கு எதிர்ப்பு. 

எத்தனையோ புடவைகள் இறைவனின் படத்துடன் வந்துள்ளன.

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடலாமா என்ற பாட்டிற்கு எதிர்ப்பு இல்லை.

குஷ்பு விஷயப்போராட்டங்கள்   வீண்.மன சாட்சி இல்லா போராட்டம்.

இறவன் படம் நாமம் போட்ட துண்டுகள் அணிகிறோம்.
ஐயப்பன்  பெயர் எழுதிய துண்டுகள்.
கோயிலில் சாமி படம் போட்ட திரை. 

அதில் துடைக்கும்  ஈரக்   கைகள்.
சாமி அல்லது அம்மன் திரை அழுக்குத்திரையாக.

வீண் போராட்டங்கள் விடுத்து ஆக்கப்பணிகள் செய்தால் 
மதங்கள்  வளரும்.

ஏழைகள் வேதனைப் படமாட்டார்

மனிதர்கள்  மனம் ஆழ்கடல் போன்றது.

அதில் யதார்த்த வாதிகள் படும் துன்பம் 


அவர்களுக்குக் கிடைப்பது அவமரியாதை 

மட்டுமல்ல,வெறுத்து ஒதுக்கும்  மனிதர்கள்.

சுயநலம்  வேண்டியபொழுது மட்டும் பயன்படுத்தல்,உடனே அந்த யதார்த்தவாதியை 

அவமரியாதை என்ற சிகரத்தில் ஏற்றல் ,
அலக்ஷியம்  செய்தல்,உண்மையாக இருந்தால் 
மிஞ்சுவது    அவமானமே.

உண்மை யாக இருப்பதால் நான் அவமானப்படுகிறேன்.
வெற்றிவாய்ப்பு தோல்வியாக மாறுகிறது.
கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிட்டாமல் போகிறது.
உற்றார்  உறவினர்கள்,நண்பர்களால் ஒதுக்கப் படுகிறேன்.
ஒருவர் செய்யும் தவறுகள் சுயநலம் உள்ளோரால் 
கபட தாரிகளால் மறைக்கப்படுகின்றன.
தவறே செய்யாத யதார்த்தவாதியை   பெரும் கூட்டமே  சேர்ந்து ஒழி க்கப்பாடு  படுகிறது.

அரசியல்,ஆன்மிகம் இரண்டுமே ஏழைகளை ஒழிக்கும்   சாமார்த்தியமான தலைமைகளக் கொண்டவை.
கோடிக்கணக்கில் சேரும் பணம்  இரண்டுதுறையைச்  சேர்ந்தவர்களையும்
 பேராசைக்காரர்களாக்குகிறது .

அவர்கள் பணத்தைப் பதுக்கி  நாட்டுநலம் என்பதில் 

அக்கறை காட்டுவதில்லை.

கோடிக்கணக்கில்  பணம் புதைத்து கிடக்கிறது.
அதை நாட்டு நலத்திட்டத்தில்  பயன் படுத்தினால் 

ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்ற பாடல் 

மெய்யாகும்.



திங்கள், டிசம்பர் 17, 2012

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும்

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும் 

    குஜராத் தேர்தல் மாநில அளவில் நடந்தாலும்   பாரத நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயம்  செய்யும் தேர்தல்.
இதில்  நாட்டு  மக்கள் சுயநலத்தை மறந்து ஓட்டுப் போட  வேண்டும்
,.ஜாதி,மதம்,இனம் என்று மக்கள் மனதில் விஷ விதைகள் தூவும் அரசியல் தலைவர்கள் ,சுயநல அரசியல் வாதிகள் 
ஒழிக்கப்படவேண்டும்.
கருப்புப்பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வெளிநாட்டு முதலீட்டிற்கு  கை ஊட்டுப்பெறும்  சோனியா காங்கிரெஸ்  முற்றிலும் 
ஒதுக்கப்படவேண்டும். பல ஊழல் புகார்கள் மேல் எவ்வித உறுதியான நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அரசியல் 
கட்சிகளும் ,ஊழலுக்குத் துணை  போகும் மாநிலக்கட்சிகளும் மாறி மாறி கூட்டணிவைத்து நாட்டின் பொருளாதாரம் ஏழைகளுக்குப்  பயன்படாமல் 
பணமுள்ளவர்களே கல்வி பெறமுடியும் என்ற அரசியல் ஒழி க்கும் சக்தி  மக்களிடம் தான் உள்ளது. இந்திய மக்களின் விழிப்புணர்வு  எப்படிப்பட்டது 
என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். பாரத நாட்டைக் காக்கும் ஒரு தெய்வீக சக்தி மக்கள் மனதில் நேர்மை உணர்வைத்  தரவேண்டும்.

சனி, டிசம்பர் 15, 2012

வளரும் பாரதம். ஆண்டவன் காக்கும் பாரதம்.

பாரத நாட்டில் ஊழல் ,ஊழல் என்றாலும் ,
மக்களும்,மந்திரிகளும் ஊழலுக்கு ஆதரவு என்றாலும்,

நாட்டின் முன்னேற்றம் ,அயல்நாட்டினரை அசரவைக்கிறது.

நாடு என்பதற்கு வள்ளுவன் காட்டிய இலக்கணம்,
மற்றவர்களை நாடக்கூடாது என்பதே.

ஆனால் ,நம் நாட்டின் கல்விமுறை ,
ஆங்கிலேயர் வந்தபின் தான்
அனைவருக்கும் கல்வி என்ற நிலை.
சமவாய்ப்பு,சம அந்தஸ்து என்றாலும்,
அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும்,

புதிய தலைமுறையினர் சிந்தனைக்கும்,
பழைய தலைமுறையினர் சிந்தனைக்கும்
மலை-மடு வுக்கு உள்ள வேறுபாடு.

மதங்களால் மனிதனை  பிரிக்கும்
சுயநல ஆட்சியாளர்கள்,
ஜாதிவெறி தூண்டும் குறுகிய மனநிலையாளர்கள்,
சுய நலத்திற்காக   நாட்டைக்காட்டிக்கொடுக்கும்
நயவஞ்சகர்கள்,நா நயம் தவறுவோர்,
தன்  சகோதரனையே அழித்து  நாட்டின் ஆட்சி பிடித்தோர்,
பங்காளிப் பகைகள்,
மாமன்-மச்சான்  வெறுப்புகள்,
இரக் கமில்லா  ஒரு கூட்டம்,
தன்  மொழி தன் இனம் தன பண்பாடு
தன் கலைகள் அழிந்தாலும்
தன தனம் காக்கும் கூட்டம்,
ஆலயங்களின் ஆஸ்திகள்,
ஆஷ்ரமங்களின் ஆஸ்திகள்,
ஆண்டிகளின் கோலங்கள்,
தியாக உணர்வு,
சுய  நலமில்லா கூட்டம்,
  இதற்கு நடுவில் நாட்டின் முன்னேற்றம்,
அதுதான் இது ஆன்மீக பூமி.
அதிகாரம் இருந்தாலும்,
ஆஸ்தி இருந்தாலும்
இங்கேயே நரகவேதனை
மனவேதனை,
கலியுக தண்டனை.
பாரத பூமி, பழம்  பெரும் பூமி,
இந்நினைவு அகற்றாதீர்கள்,
என்ற பாரதியின் கூற்று.
ஆன்மீகத்தால் வளரும் பாரதம்.
ஆண்டவன் காக்கும் பாரதம்.




வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.

மனிதமனம்

மனிதன்  தன்  கடந்த  காலங்களை  மறந்து

உறவை விரும்பினாலும் சில உறவினர்களின்

பேச்சுக்கள் உறவை துண்டிப்பதாகவே அமையும்.

மலரும் நினைவுகளும்  சுகமளித்தாலும்.

கசப்பான அனுபவங்கள்

ஆழ்மனதில் இருந்து நீங்கி சாதரணமான  நிலைக்கும்

சஹஜ நிலைக்கும் வருவது

கடினம்.
இந்நிலையில் தான்  பட்டினத்தார்
அனைத்தையும் வெறுத்து
ஒட்டைஅப்பம்  வீட்டை சுடும் என்றார்.

இந்த விரக்தியில் தான் சித்தர்கள் நிலை.

சித்தர்த்தருக்கு  சமுதாயத்துன்பங்கள் துறவு நிலைக்குத் தள்ளியது.

மன்னர் பர்த்துஹரிக்கு ராஜசுகம் கசந்தது.

அருணகிரிக்கு நாரிசுகம் ரோகத்தை அளித்து  பக்தனாக மாற்றியது.

சிலர் பிறவியிலேயே தெய்வாம்சம் அடைகின்றனர்.

அசோகர் கொடுங்கோலனாக இருந்து

புத்தமதத்தைத் தழுவிய பின்

மக்கள் போற்றும்  பேரரசர்.

பலர் திருந்துகின்றனர். சிலர் இறுதிவரை அவப்பெயர் .

அவன் ஹரிச்சந்திரன்.அவன் விபீஷணன்.

இவன் கர்ணன். அவன் மைதாஸ் டச்.
பேராசை. இவன் இராவணன்.

இவன் ப்ருடஸ் .(துரோஹி)

எட்டப்பன் பரம்பரை.
செயல் எப்படி மனிதனை உயர்த்திதாழ்த்துகிறது .

காந்தியைத் தாத்தா என்கிறோம்.
நேருவை மாமா என்கிறோம்.
ஹிந்தியில் "சாச்சா "என்கின்றனர்.
காமராஜரை கர்மவீரர் என்கிறோம்.
படேல் இரும்புமனிதர்.
வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.












--
Regards,
Anandakr

வியாழன், டிசம்பர் 13, 2012

ஆற்றலும் "நான்" என்ற பார்வையில் அழிவையும் தரும்.


இன்றியமையாத  ஒன்று 
இறைவழிபாடு  என்று 
அகிலம் கூறினாலும் ,
அறிவியல் அறிஞர்கள்  கூறினாலும்,
சிலருக்கு சில சமயம் 
உலக  நடப்பினைக் கண்டு '
உலகநாதன் மேல் வெறுப்பு 
ஏற்படுவது உண்டு.
நாம் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்துள்ளோம்.

நாம் துவக்கும் செயல் தோல்வி கண்டால் 

அச்செயலை மாற்றி விடுவோம்.
அதே செயல் அடுத்தவர்களுக்கு 
வெற்றிக் கனி தருவது கண்டு,
மீண்டும் அதே செயலில் 
ஈடுபடுவோர் உண்டு.
மீண்டும் தோல்வி என்றால் 
விதி என்ற ஓர் கருத்து எழுவது உண்டு.

அதை அதிர்ஷ்டம் என்போரும் உண்டு.
 'அத்ருஷ்ட ' என்றால் பார்க்காத என்ற பொருள்.
பார்வைக்குப் புலப்படாத ஒரு சக்தி 
நமக்கு தரும் ஆற்றல் /தோல்வி 
அதுவே  ஆன்மீக சக்தி.
அமானுஷ்ய சக்தி.
அதுவே இறைவன்.
இறைவனுக்கு முன்
 மதங்கள் 
கிடையாது.
மனிதனின் வினை தான் முக்கியம்.
மனிதனுக்குத்   தீய நோக்கம் ஏன்  வருகிறது 
என்ற வினா  எழுவது உண்டு.

முள், மலர், அம்ருதம் விஷம் 
இதில் நல்லதை ஏற்று அல்லதை 
விடும்  அறிவு/ஞானம் 
மனிதனுக்கு உண்டு.
பூபாரம்  குறைக்கவேண்டும்.
அதற்கு பாவ எண்ணங்கள் .
புண்ணியவான் மரணம் 
பாவி மரணம் 
அனைத்தையும் சிந்தித்தால் 
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆற்றல் 
அண்மையில் தெளிவுறும் தென்படும்.
அளவுக்கு மீறி கொடுத்த அறிவும்  
அளவுக்கு மீறி கிடைக்கும் செல்வமும் 
அகங்காரம் அளித்து 
நல்லதைச் செய்தாலும் 
தீமையே அதிகம் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் நஞ்சாகும்.
அப்பொழுது ஆண்டவன்  ஆற்றலும்   "நான்"
என்ற பார்வையில் அழிவையும் தரும்.






செவ்வாய், டிசம்பர் 11, 2012

சராசரி இந்தியன் நான்.

நான் பாரதநாட்டில் பிறந்தவன்.

எனக்கு என் நாடு மிகவும் அன்பானது.

இருந்தாலும்  வெளிநாட்டு   மோகம் அதிகம் .

பாரத நாட்டை சிந்துவை  ஹிந்துவாக மாற்றி மாறி
ஹிந்துஸ்தான்  இந்தியா  என்பதை

 மன நிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்.

பாரதம் என்று சொல்பவன் அறிவிலி.

மதுரை  என்ற பெயரை மஜுரா  என்று மாற்றினால்,
 அதை ஏற்றால்  படித்தவன்.
மதுரை  என்பவன் மடையன் என்பதில்
எனக்கு ஒரு ஆனந்தம் .
தூத் துக்குடியை  டுடுகொரின் என்று
வெளிநாட்டான் சொல்வதை ஏற்றுச் சொல்வதில்
ஆக எனக்கு ஏற்படும்  கர்வம்  ,
மீண்டும் தூத்துக்குடி என்றால் கேவலம்.

தூய தமிழ் பேசினால் அவன் பட்டம் பெற்றும்

தூற்றலுக்கு  உரியவன் .

ஆங்கிலம்  கலந்தோ  ,ஆங்கில நடை தமிழ்  பேசினால்

போற்றற்கு  உரியவன்.

தாய்மொழி வழி  கற்றால் தரம்  கேட்டவன்.

எவ்வேலைக்கும்  ஏற்புடையவன் அல்ல.

நீதிநூல்கள் ,நல்வழி,திருக்குறள் ,அறியாமல்

இருந்தால்  வுய ர்ந்தவன்.

நம் நாட்டுக்கலைகள்  ரசிக்கா  உள்ளம்

 உயர்ந்த உள்ளம்.

நம்   மொழி  மறந்தாலே ,

வருமானத்திற்கும் ,வயிற்றுப்பிழைப்புக்கும்

வருங்காலத்திற்கும்  கனவுகள் நிறைவேறும்

என்ற  பரந்த  மனப்பான்மை கொண்டவன்.

நம்நாட்டுத் தொழில்கள் ஏழைகளை  வாழ  வைக்கும்

என்பதால்  அதை எள்ளி நகையாடி ஒதுக்குவதில்

எள்ளளவும்  பிசாகாதவன்.

முதலீடு வெளிநாட்டவர் என்றால் வரும்  அடிமைத் தளையில்

பேரானந்தம்  காண்பவன்.

ஆள்பவர்கள் ஆனந்தமாக வெளிநாட்டு வங்கியில்

பணம் சேர்த்தாலும் , பொதுமக்களின் நன்மைக்கு

பயன்படா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும்

கறுப்புப் பணம்  சேர்த்தாலும் ,
ஆயிரமாயிரம் பொதுமக்கள் செல்லும் சாலைகள்
குண்டும் குழியுமாக இருந்தாலும்
கவலை இல்லாமல் ,
 பணமும் இலவசமும் கொடுத்தால்
ஆள்பவரின்  தரம் பார்க்காமல் வாக்களிப்பவன்.

காவல்துறையினர்  ஏளனம் செய்யும்  ரசிப்பவன் .

போக்கிரி கதாநாயகனாகி,காவல் அதிகாரிகளின்
கருங்காலித்தனத்தைக்   கண்டு  அவர்களை
அடிக்கும்  காட்சிகள்   நாட்டிற்கு
நல்லதல்ல என்ற  உணர்வில்லா  திரைப்படங்கள்.

 விளைவு   தென் மாவட்டங்களில் காவலர்களைக்

கொல்லும்  துணிவு.

காதல்  என்று கூறி சீரழியும் இளைஞர்கள்.

கண்ணீர் சிந்தும் பெற்றோர்கள்.

விலைவாசி ஏற்றங்கள்.
 ஏழை   களின் வேதனை,
கல்வி வணிகமயமாதல் எதையும்
கண்காணாமல் நடமாடும்  ஜடம்.
லஞ்சம் ஊழல் வளர  உதவும் கரம் கொடுக்கும்
 உத்தமன்.
நான் இந்தியன் ,பாரதவாசி.
திரு அனந்தபுரம் ற்றிவென்றம் என்றால்
எவ்வளவு ஆனந்தம்; வெளிநாட்டு மோகம் .

இந்தியக்கலைகள் ,இசைக்கருவிகள் ,உடைகள்
 வெறுக்கும் சராசரி இந்தியன் நான்.














வெள்ளி, டிசம்பர் 07, 2012


 நாட்டில்  நல்லோர்கள் பல வழிகளில் மக்களுக்கு 

நல்ல  எண்ணங்களை ஏற்படுத்துகின்றனர்.

பொள்ளாச்சியில் கே.கவின் ,நேசினி  என்ற இருவர் சேர்ந்து   மோகன்குமார்   நினை வாக   வெளி  இட்டுள்ள துண்டு  பிரசுரம் .

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும்  பொருள்  வேண்டும்.

இன்றைய  லட்சியம் .  நாளைய மாற்றம்.

இன்றைய அலட்சியம் ,நாளைய ஏமாற்றம் .


  1. ஏசி ---2500 திறன் வாட்ஸ் = யூனிட்  24 நிமிடம் 
  2. தண்ணீர்  ஹீட்டர். 1500  1 யூனிட் 30 நிமிடம்.
  3. மின் அடுப்பு.---1000---60 நிமிடம் 1யூனிட்.
  4.  வேக்குவம் கிளீநேர்  750   1 மணி 18 நிமிடம் யூனிட்.
  5. மிக்சி -450   ஒரு யூனிட் 2 மணி 6 நிமிடம்.
அயர்ன் பாக்ஸ் -450  2 மணி 6 நிமிடம்.

வாசிங்  மெசின் ---325 வாட்ஸ் ஒரு unit 3 மணி 2 நிமிடம்.

      நேரமறிந்து  பயன்  படுத்துவீர் .

மின்சார சிக்கனம் தேவை இக்கணம்.
  

வியாழன், டிசம்பர் 06, 2012

குரு  ஞானக் கண்ணைத்  திறப்பவர் .

உபாத்யாயர்  பாடத்தை மட்டும் கற்பிப்பார்.

ஆசார்யன் மாணவனை மனிதனாக உயர்த்துபவர்.

பாடம்  முதல் நிலை .

பண்பு  அடுத்த நிலை.

ஆன்ம விளக்கம்  கடைசி  நிலை.


 

புதன், டிசம்பர் 05, 2012

மன நிறைவுடன் ,மன மகிழ்ச்சியுடன் வையகத்தில் வாழலாம்.

மனிதனின்  துன்பங்கள்  குறைகிறதா ?
மனிதனே துன்பங்களைக் குறைக்க ,
துன்பங்களை அதிகரித்துக்கொள்கிறானா ?

துன்பங்களிலும்  இயற்கைத்துன்பங்கள் உண்டு.
செயற்கைத்  துன்பங்களும்  உண்டு.

இயற்கையால்  ஏற்படும்  பொருளாதாரத் துன்பம் ஒன்று.

அது புரியாத புதிர். அதற்கு முன் ஜன்ம -பாவ -புண்ணியங்கள்.

பிறவியில் ஏற்படும் பிணிகள்.அகால  மரணம்.

எதிர்பாரா விபத்துக்கள்.அங்கஹீனப்பட்டு சித்திரவதை அனுபவித்தல்.

எல்லோருக்கும் ஏற்படும் மரணத் துயர் சம்பவங்கள்.

வெற்றி -தோல்விகள்.
எக்குற்றமும் செய்யாமல் பழி -பாவம் தண்டனைக்கு ஆளாதல்.
காரணம் இல்லா , பயம் ,சஞ்சலம்,பிரமை.மறதி
பல துன்பங்கள் மனிதனுக்கு தன்னை அறியாமலேயே ஏற்படுகின்றன.
இந்த அறியாமல் ஏற்படும் துன்பங்கள் இப்பிறவியில்  நல்லது செய்ய.

மனிதனுக்கு சுய பச்சாதாபம்,இறைவணக்கம் போன்றவற்றால்

திருந்தி வாழ்வதால்  துன்பங்கள் குறையும்.அல்லது நிவர்த்தியாகும்.

பகவானின் பாதங்களில்  முழுமையாக சரணாகதி அடையவேண்டும்.
அப்படித்தான்  மார்க்கண்டேயன்  நித்தியத்துவம் பெற்றான்.
அபிராம பட்டர் மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார்.
கொடிய ரத்னாகர்  வால்மிகிமுனிவர் ஆனார்.
இந்த  சுய மாற்றம் பக்தி பலரை மகான் ஆக்கி உள்ளது.


செயற்கைத்துன்பங்கள் ஏற்படுவதற்கு மனிதனே காரணமாகின்றான்.

ஆணவம்,ஆசை,பேராசை,பொறாமை,கோபம், பிறரைக் கெடுத்து வாழ  நினைத்தல் , ஹிம்சை,   வீண்  பிடிவாதம் ,கஞ்சத்தனம்,பொன்னாசை ,பொருளாசை,பெண்ணாசை  என  பல மகான்கள் வழி  காட்டி உள்ளனர்.

புறப்பற்று  அகப்பற்று தவிர்த்து ,ஆண்டவன்மேல் பற்று தியானம் தான்
அமைதிக்கு  வழி  என்றும்  மஹான்கள்  அனுபவம் மூலம் உணர்த்தி யுள்ளனர்.

கற்றது,படித்தது,அறிந்தது,தெரிந்தது ,புரிந்தது  ஆகியவைகளை பின்பற்றி னாலே  மனிதன்  மன நிறைவுடன் ,மன  மகிழ்ச்சியுடன்  வையகத்தில்  வாழலாம்.






 

செவ்வாய், டிசம்பர் 04, 2012

ஆலய வழிபாட்டில் நேர்மை,சத்தியம் ,வரிசை இருந்தால்


ஆலயம் தொழுவது  சாலவும் நன்று.

ஆன்மீகம்  தழைக்கவும் ,ஆஸ்தி  தேவையே.

ஆலயங்கள்  ஆடம்பரமிருந்தால் ,

அலைபாயும் பக்தர்கள்.

 வைரக் கீரீடம் ,அலங்கரித்த  ஆண்டவன் ,

அந்த  ஆண்டவன் முகத்தில் ஒரு புன்னகை,

அந்த முகத்தில் பேசும் நயனங்கள் ,

அந்த ஒரு கண  தரிசனம் ,

அப்பொழுது பெரும் ஒரு பிரம்மானந்தம்,

அருள் பெற்ற அநுபூதி,

பெற்ற  தன்னம்பிக்கை,

அவனின்றி  எதுவும் இயலா  என்ற,

மன உறுதி  ,செயலாற்றத் தூண்டும் ,

ஒரு  உத்வேகம்,
பலவித   அலங்காரங்களால்  காணும் ஆசை,
சந்தனக் காப்பு ,அதன் அழகு ,
புஷ்பாலங்காரம்  அதன்  புனிதம்,
அஷ்டோத்திரம்,சஹஷ்ராநாமம்
அதன்  மந்திர ஓசை ,
வேத மந்திரம் தரும் பரமானந்தம்,
மன  சாந்தி ,சத்விசாரங்கள் ,
சதசாரங்கள்,
ஒருமுறை  தரிஷன முன்னேற்றம்,
ஆலயங்களுக்கும் ஆஸ்தி தேவை.
ஆலயப் பிரசாதங்கள் ,
அதன் தெய்வீக  மணம் ,ருசி ,
ஆஹா. ஆலயங்களுக்கும் ஆஸ்திகள் தேவை.
பிரசாத ஸ்டால்கள் ,வணிகநோக்கம் .
தவிர்க்கப்பட வேண்டும்.

பழனி  என்றால்  பக்தர்கள் அனைவருக்கும்
பஞ்சாமிருதம் ,தேன்  தினைமாவு வழங்க
வேண்டும்; அதில் நேர்மை வேண்டும்;
திருப்பதியில்  ஒரு சின்ன லண்டு
அனைவருக்கும்  கிடைக்கும்,
அந்நிலை பழனியில் வர தனி
புரவலர்கள் வரவேண்டும்.
அதில் போய் பிரட்டு நடக்காமல்
ஆண்டவன் காக்க வேண்டும்.
ஆஸ்திகள் தரும் புரவலர்கள்
தான் கொடுத்த நன்கொடை நற்பயனாக
இருந்தால் அள்ளிக்கொடுப்பார்

ஆனால்  பிரசாதம் கிள்ளிக்  கொடுக்கக் கூடாது.
நேர்மை  ,சத்தியம்,தர்ம சிந்தனை ,நியாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பக்தர்கள் பிரசாதம் பெற  ஒழுக்கம்,கட்டுப்பாடு,வரிசையில் செல்லுதல்.
ஆண்டவன் அருள்  பெற வழி  என்ற கோட்பாடை உணர்ந்து
செயல் படவேண்டும்.
ஆலய அநியாயங்கள் சனாதன தர்மம்
தழைக்க  உதவாது.
அதையும் மீறி அலைபாயும் கூட்டம்
அதுதான்  ஆலய மகிமை.
தரிசனம் செய்யும் வரை பக்தர்கள் புலம்பல்.
மூலவர் தரிசனம் இரண்டு நொடி;
மீண்டும் வர  சங்கல்பம்.
எத்தனையோ  பேர் வெறுத்து
செல்லவேண்டாம் என்ற சங்கல்பம்  
தவிர்த்து ஆண்டாண்டு தோறும் இடைவிடா
புனிதப் பயணம்.
புனித ஆலயங்களில்  ஒரு காந்தக் கவர்ச்சி.
அந்த உள்ளுணர்வு இருந்தாலும்,
அனைவருக்கும் கிட்டுவதில்லை
அந்த பாக்கியம்.
சிலரை சில சூழல் கள்  இழுத்துச் செல்கின்றன.
ஆலய தரிசன மகிமை ,
அனுபவ  உண்மை.
அதனால் தானே கூட்டம் அதிகம்.
இன்னும் ஹிந்துக்களில் ,கட்டுப்பாடு ஒழுக்கம்,
ஆலய வழிபாட்டில் நேர்மை,
சத்தியம் ,வரிசை  இருந்தால்
வையகத்தில் இதற்கோர்  இணையில்லை .







 

திங்கள், டிசம்பர் 03, 2012

இவர்களில் இருந்து தப்பிக்கவே பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம்மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி உண்டு


 கண்ட  காட்சிகள்,
கண்ட கண்ட எண்ணங்கள் ,
எண்ணங்களில் மோதல்கள்,
ஏற்றத்தாழ்வுகள்,ஆசைகள் -பேராசைகள்,

பொறாமைகள்,ஆணவம் ,காமம்.
தீய சேர்க்கைகள்,தீய எண்ணங்கள்,

இவைகளில் இருந்து விடுபடா  ஒரு மாயை,

மனிதனை  மகிழ்ச்சி அற்றவனாக,

மனநிறைவற்றதாக  மாற்றுகிறது .

இந்த உலகத்தில் தேவைகள் அதிகம்.
அறிவியல் முன்னேற்றம்  பொருளாதார சிக்கல் .

தேவைகளும் ஆசைகளும் விருப்பங்களும் 
செயலாக்கமும் தேவைதான்.

ஆனால் அவை சுயநலமாக மாறும் போது  
நாட்டிற்கு ,வீட்டிற்கு,சமுதாயத்திற்கு 
மிகவும் ஊறு  விளைவிக்கிறது .

கொலை,கொள்ளை ,மாது,மது மயக்கங்கள் 

அமைதி தருவதாக ஒரு மாயத் தோற்றம் .

துன்பக்கடலில் தள்ளிவிடுகிறது.

அமைதியற்ற,ஒற்றுமையற்ற,அன்பற்ற ,வாய்மையற்ற ,அஹிம்சையற்ற சமுதாயம்.

இந்நிநிலை தன்  வரம்பை மீறும் பொழுது ,
ஒரு யு க புருஷன் 
சங்கரராக,புத்தராக,மகாவீரனாக,குருநானக்காக 
முஹம்மது நபியாக ,ரமண மகரிஷியாக,
ராமக்ரிஷ்ணராக அவதரித்து ,
பல சீடர்கள் மூலம் 
மாயை அகற்றி  அமைதிக்கு ,அன்புக்கு ,வாய்மைக்கு, மனித நேயத்திற்கு,
தான -தர்மத்திற்கு ,தியாகத்திற்கு ,பற்றற்ற நிலைக்கு 
 
பக்தி மார்க்கத்தைக் காட்டுகின்றனர்.
அவர்கள் மறைவிற்குப்பின்  மீண்டும் போலிகள் 
மூலம் மதங்கள் சுயநல வாதிகள் மூலம் 
போலி  பக்தர்கள்  மாசுபடுகின்றன.

மக்களுக்கு மதங்கள் விஷயத்தில் விழுப்புணர்வு தேவை.
சுய நல மதவாதிகள் மனிதர்களை பிளவு 
படுத்தி ,வேற்றுமைப் படுத்தி 
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க 

பக்தி நாடகம் ஆடுகின்றனர் .

இவர்களில் இருந்து தப்பிக்கவே 
பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம் .

நாஸ்தி என்றால் அழிவு.
மூட பக்திக்கு அழிவு.
தூய பக்திக்கு ஒரு சிந்தனை.

மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு 
தெய்வீக சக்தி உண்டு என்பதை 

எந்த அறிவியல் வாதியும்  பகுத்தறிவு வாதியும் 
மறுத்ததில்லை.
மறுத்தாலும் இறுதிக்காலத்தில் 

 இறைவன் இருப்பதை உணர்த்திச் சென்றுள்ளனர் .




சனி, டிசம்பர் 01, 2012


மனிதன்  'மனம் ' பற்றி சிந்திக்கிறான்.

மனிதனுக்கு  அலை பாயும் மனம்.

மற்றவர்களுக்கு  மன நிலை  சரி இல்லை  என்றால்

அவர்களின்  மனதின் கவலைகளைப்போக்கும்  மனிதன்,

தனக்கு   வரும் கவலைகளை  மறக்க  முடியாமல்  

தவிக்கிறான்.தள்ளாடுகிறான்.

தனக்கு  வந்த துன்பம் தானே தன்  நண்பனுக்கும் வந்தது.

நாம்  அவனுக்கு ஆறுதல் கூறினோமே,

நம்மை நாம் ஏன்  தேற்றிக்கொள்ள முடியவில்லை.

அதற்கான  மனப்பக்குவம் ஏன்  இல்லை?

தலை வலியும்  காய்ச்சலும்  தனக்கு  வந்தால் தானே தெரியும்.

ஆனால்  மன தைரியம்  எப்படி  வரும்?

அரசகுமாரர்   சித்தார்த்தர்  அரண்மனையில்  எல்லாவித

 வசதிகளுடன் வளர்ந்தாலும் ,அவர் தந்தை  அவர் துறவறம்

மேற்கொள்ளக்கூடாது  என மிக  எச்சரிக்கை   நடவடிக்கை எடுத்தாலும்

சித்தார்த்தருக்கு   திருமணம் செய்து  வைத்தாலும்

அவர் புத்தர்  ஆவதை  தடுக்கமுடியவில்லை.

சமுதாயத்திற்கு  நல்லது செய்ய அவரை ஆண்டவன் அனுப்பியதால் ,

மற்றவர்கள்  படும் வேதனைக்காக தன் மெய் வருத்தி ,மனம் வருந்தி

தவம் செய்து   அன்பு அஹிம்சை  என்ற மனநிலை  ஏற்பட்டது.

பலநாட்டு    மக்களுக்கு  வழி  காட்டியது.

மன நிலை   என்பது  அலைபாயும் நிலை.

மனம் ,சொல்,செயல்  மூன்றையும் ஒரு நிலைப்படுத்துதல்  
என்பது    எல்லோராலும் முடியாது.

அதற்கு  பலரின் வாழ்க்கைவரலாற்றைப்  படிக்கவேண்டும் .

முடிவு     இறைவழிபாடும் தியானமும் தான்.




































































வெள்ளி, நவம்பர் 30, 2012

எங்கே?எங்கே?எங்கே?


அன்பும்  அறிவும் ஆற்றலும் 
நேசமும் பாசமும் தானமும் 
 தர்மமும் தியாகமும் பற்றற்ற
 தன்மையும் பணிவும்,பொறுமையும் 
சாந்தமும் சஹிப்புத்தன்மையும் 
பரோபகாரமும் தன்னலமற்ற 
எளிய வாழ்க்கை முறையும் ,
ஆடம்பரமற்ற தன்மையும்,
ஆத்மதிருப்தியும் அஹிம்சையும்,
விருப்பமும் வெறுப்பும் அற்றநிலை ,
ஆசை -பேராசையற்ற நிலை,
இன்னா -இனியவை யில்  நடு நிலை 
 ஆன்மீக மார்க்கம்.

ஆனால்   இன்று 
ஆன்மீகத்தில்  ஆடம்பரம் ,
ஆஸ்திகள் இல்லை என்றால் 
ஆஷ்ரமங்களில் இடம் இல்லை.
தங்கமும் வைரமும் வைடூரியமும் ,
கோடிக்கணக்கில் பணமும் 
பதுக்குமிடங்கலாகவும் இருக்கின்றன .
 பத்துக்கும் செல்வங்களால்   யாது 
பயன்.
ஆயிரக்கால் மண்டபங்களும் ,அழகுசிற்ப மண்டபங்களும் 
கடைகளால் மறைக்கப்பட்டு 
வணிக ஸ்தலங்களாக மாறும் நிலை.
லௌகீகமா அலௌகீகமா என்றால்,
லௌகீகமே  பிரதானம்.
 வழிபாடு ஐந்து நிமிடம் ,
கடைத்தெருவில் ஐந்துமணிநேரம் .
கடவுளின்  கருணை கிட்டுமா?
உள்ளத்தில் சஞ்சலம் தீருமா?
உடல்  ஆரோக்கியம் பெறுமா?
உள்ளம் அமைதி பெறுமா?
வாழும்  கலை மறந்து,
பொருளாசை வளர்க்கும் மையமாக 
மாறும் வணிகஸ்தலங்கள் 
 ஆலயங்கள்  என்றால் 
ஓம் ஓம் ஓம் 
சாந்தி !சாந்தி!சாந்தி !
எங்கே?எங்கே?எங்கே?




பிரேம மார்க்க பக்தி./காரணம் அவைகளுக்கு ஜாதி தெரியாது.


 பாப்பா  பாட்டு பாடிய  பாரதியாலும் ,

ஜாதி  இரண்டொழிய வேறில்லை  என்ற

ஔவையாராலும்  ஜாதி ஒழியவில்லை.

ஜாதிக்கட்சிகள், ஜாதீய உணர்வுகள் ,

மத  உணர்வுகள்,மத வெறிகள்,

மதம் ஜாதி என்ற பெயரால்

படுகொலைகள்   இன்னும் ஓயவில்லை.

 இராமாயண காலத்தில் ஜாதிவெறி

இருந்ததால்  தான்  ராமன் -குகன்  நட்பு

போற்றப்படுகிறது .

அறிவு,பண்பு , அடக்கம் உள்ள விதுரன்

சற்றே  ஒதுக்கிவைக்கப்பட்டான்.

கர்ணன்  வளர்ப்புப் பெற்றோர்களின் ஜாதிகாரணமாக
ஏளனத்திற்கு  ஆளானான் .
 அனைத்து மொழி  இலக்கியங்களில்,
  காதலுக்கு  முக்கியத்துவ,ம் .

அன்னம், மேகம்,காற்று புறா,

என அனைத்தும் காதலுக்கு தூது.

 காரணம்  அவைகளுக்கு  ஜாதி தெரியாது.

 ஞானம் பெற்ற  மனிதன் தன்   சுய  நலத்திற்காக
மனிதனை  மதம்,மொழி என்ற பெயரால்
வேறு    படுத்தினான்.
 ஆனால் இவைகளையும் கடந்து

காதல் வெற்றிநடை போடுகிறது .
அதனால்  காதல் படங்கள் வெற்றிபெறுகின்றன.

கபீர்

लाली   मेरे लाल की  जित  देखो , तित लाल;
लाली देखन  मैं गयी गयी  मैं भी  हो गयी लाल।

என்கிறார்.

காதலனைத்  தேடிச்சென்றேன் ;
எங்கு    எ தை ப்    பார்த்தாலும்

அவனையே  பார்த்தேன்.

அவனைப்பார்த்த  போது  நானும் அவனாக மாறிவிட்டேன்.

இதைத்தான்  காதலின் முற்றிய நிலை,

இது சங்கரரின் அத்வைத பக்தி.

பக்தி காதலுடன் இணைத்து விளக்குவதுதான்

பிரேம மார்க்க பக்தி.

அங்கு மீராவையும் பார்க்கலாம்.
ஆண்டாளையும் பார்க்கலாம்.
ஆண்டவன் முன் பிரேமையும் பக்தியும்
ஒன்றாவதால்  ஜாதி -மதம் பார்க்கப் படுவதில்லை.
காதலுக்கும் கண்ணில்லை ;பக்திக்கும் கண்ணிலை
அங்கு பேரானந்தத்திற்கும் ,முக்திக்கும் வழி  உண்டு .
அதுதான் பக்திப் பரவசம்.



















அன்னம் ,மேகம் .காற்று






துரியோதனன் 

வியாழன், நவம்பர் 29, 2012

உருவ அருவ இறை சக்தி உணர்வீர்கள்.சனாதன தர்மம் "ஹிந்து '



சனாதன  தர்மம்  "ஹிந்து ' என்ற வெளிநாட்டார்   இட்ட  பெயரால் வளர்கிறது .

இந்த ஹிந்து என்ற பெயர் சிந்து நதியின் மாற்றமே என்று அறியாமலேயே

சனாதன தரம்   வாதிகள் தங்களை  ஒரு ஹிந்து என்று சொல்லிக்கொள்வதில்

எத்தனை  பெருமை கொள்கிறார்கள். இது தான்  இந்துக்களின் பெருந்தன்மை.

இந்து   என்றால் திருடன் என்று மாநில  முதல்வர் கூறினாலும் பெரும் போராட்டங்கள்  நடக்கவில்லை.

பகுத்தறிவுவாதிகள்  தன எதிர்ப்பை இறைவனின் படங்களை செருப்பால்  அடித்து  ஊர்வலமாக  சென்றதையும்,கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சிலைகள் வைத்தாலும், இன்று ஆலயங்கள் வளர்கின்றன.அந்த ஊர்வலத்தை  ரசித்தவர்கள்  ஹோமங்கள் ,பூஜைகள் ,ஆலய தரிசனங்கள்,பரிகாரங்கள் செய்வதையும்   நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

உலகில் மிகவும் கேவலப்படுத்தப்பட்ட,பரிகசிக்கப்பட்ட,தைரியமாக  யாருக்கும்  அஞ்சாமல் எள்ளி நகையாடும்  மதம் ஹிந்து மதம்.

ஆனால்  பக்தர்களாலும்,ஆட்சியாளர்களாலும் ,மஹரிஷிகளாலும்  வளர்கின்ற மதம் ஹிந்து மதம்.

சற்று  ஒரு இரண்டு நிமிடங்கள்  ஓம் கணேசாய நமஹ/ஓம் முருகா /ஓம் நமசிவாய,/ஹரே ராம் /ஹரே கிருஷ்ண/சாய் ராம்  என்று   தங்களுக்கு பிடித்த
நாமத்தை ஜபம் செய்யுங்கள்.பத்துநாட்களில் நீங்கள் ஒரு ஆத்ம திருப்தி ,சந்தோசம்,மன ஷாந்தி அடைவீர்கள்.நீங்கள் எந்த ஆஷ்ராமங்களுக்கும் ,ஆலயங்களுக்கும்,பிராயச்சித்தம் என்ற பெயரில்
ஏமாற்றும் போலிகளையும் தேடிச்செல்லவேண்டாம் .

ஒரு இறை   சக்தி ,ஈஸ்வரானுபூதி உணர்வீர்கள்.இதைதான் ஹீரா குகையில்
முஹம்மது நபிகள் செய்தார்.சனாதன தர்மம் ஏகாந்த ஜப-தபத்தால் வளர்ந்தது.
ஹிந்து மதம் ஒவ்வொருவரின் ஆத்மானுபாவத்தால்  உன்னத நிலை அடைகிறது.

அதனால் தான்   இங்கு கடவுள் பெயர்கள் அதாவது இறை நாமங்கள்.உருவங்கள்  அதிகம்.

நமக்கு இன்னல் நேரும்போது ஒருவர் உதவினால் நாம் என்ன சொல்கிறோம் .

கடவுள் மாதிரி  உதவி செய்தார் என்கிறோம் .சிலர் அந்த உதவி செய்தவரின் பெயரை   கடவுளின் நாமமாக சபிக்கிறார்கள்.உதவி செய்தவர் பெயர் கணேசனாக இருக்கலாம் ,முருகனாக இருக்கலாம் துர்காவாக இருக்கலாம்.
அப்பொழுது அத்தனை உபாசகர்கள்,அத்தனை  நாமங்களில் கடவுள்கள்.
தேவி உபாசகர்,முருகதாஸ்,கண்ணதாஸ்,தாசானுதாசர்கள்  ஹனுமத் தாசர் ராமதாசர் .சிவ பக்தர்கள்.

 நாட்டுக்கு  நன்மை செய்தவரின் பெயரால் அண்ணா  நாமம் வாழ்க என்கிறோம்.
அவ்வாறே வீட்டுக்கும் நாட்டிற்கும் தனிப்பட்ட மனிதர்களுக்கும்
மனநிறைவு,மகிழ்ச்சி ,முன்னேற்றம் தர  இறைநாம ஜபம்  கலியுகத்தில்
அவசியம் ,

பணம்   சம்பாதிக்க  நேரம் அதிகம் சிலவாகும்  யுகம்  கலி யுகம்.
மணிக்கணக்கில்  உட்கார்ந்து ஜப்=தபமோ ,சந்தியா வந்தனமோ சொல்ல முடியாது

அதற்குத்தான் கலியுகத்தில் நாம  ஜபம் முக்கியம் ,பிரதானம்

அரசியல் வாதிகள் தன தலைவரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
கட்சி மாறும் சூழ்நிலையில் புதிய கட்சித் தலைவருக்கு
நாம ஜபம் செய்கின்றனர்
முதல்வரின் காலில் விழுகின்றனர்

அது லௌகீகம் .இவ்வுலக இன்பம் பின்னர் ஊழல் விசாரணை.மன அமைதி இல்லை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் முன் ஜாமீன் வழக்கறிஞர் பாதுகாப்பு.
நீதிமன்ற அலைக்கழிப்பு.

ஆனால் இறை நாம ஜெபத்தால்  இறுதிவரை மன அமைதி.நாம ஜபம் செய்யுங்கள்.மன சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.நேர்மையாக சத்தியத்தைக்  கடைபிடியுங்கள் .தான -தர்மங்கள் செய்யுங்கள்.
45 நாட்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் நாம ஜபம் போதும் .அஹம் பிரம்மாஸ்மி 
என்ற ஷங்கரரின்   அத்வைத்துவம்.வைஷ்ணவர்களின் துவைத்துவம்,
உருவ அருவ  இறை சக்தி  உணர்வீர்கள்.





நாம






 

புதன், நவம்பர் 28, 2012

பணம் குணத்தைக் கெடுக்கும்

அவசியமானவைகளும்  வணிக  நோக்கமும் 


       மனிதர்   நிம்மதியாக வாழ  நல்லொழுக்கம் அவசியம்.
மனிதர்கள் ஆத்ம  திருப்தியுடன் வாழ ஆன்மிகம் அவசியம்.

மனிதர்கள் நிமிர்ந்து வாழ கல்வி அவசியம்.

மனிதர்கள் ஆரோக்யமாக வாழ மருத்துவம் அவசியம்.

மனிதர்கள் பயமின்றிவாழ காவல் துறை அவசியம்.

குடும்பங்கள் குதுகூலமாக வாழ குடும்ப அமைதி அவசியம்.

இன்றைய  சூழலில்  மேற்கண்ட நான்குமே வணிக நோக்கமாக மாறிவிட்டன.

நல்லொழுக்கங்களை எதிர்கால சந்ததிகள்,
கல்விநிலையங்கள்,சமுதாயம்,பொழுதுபோக்கும் நாடகம்,திரைப்படம் ,
தொலைக்காட்சிகள் மூலம் பெறுகிறான்,

இவைகள் அனைத்தும் தன்னம்பிக்கை தருவதாகவும் ,ஏற்றதாழ்வுகள் போக்குவதாகவும் சமத்துவம் ,சகோதரத்துவம் உண்டாக்குவதாகவும்  அமையவேண்டும் .
அமைதிக்காக  திரைப்படங்கள் சென்றால்,முதல் காட்சியே கொலை,கொள்ளை ,கற்பழிப்பு,கள்ளக்கடத்தல், காவல்துறை அனைத்துமே

நேர்மையைவிட  பணமே பிரதானம்  என்ற போக்கு.

ஆலயங்கள் செல்ல முடியாமல் சிறு நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு

உள்ளே சென்றால் உள்ளம் அமைதி அடைவதற்குப் பதிலாக எத்தனை எத்தனை ஏற்ற தாழ்வுகள்.ஜாதிய,பொருளாதாரம்,வடமொழி ,தமிழ் மொழி வழிபாடு .திருநீறு வழங்குவதில் காட்டும் பாகுபாடு


கல்வி  வாணிகம் படு ஜோர்.அரசாங்கம் தன்  பள்ளிகளை வளர்க்கிறேன் என்று சொல்கிறது .ஆனால் மூடப்பட்ட  பள்ளிகள் அதிகம்.  அதற்கான காரணங்கள் மன சாட்சியுடன் வெளியே சொல்லமுடியாது.பள்ளி நேரங்களில்
பள்ளி வகுப்பறைகளில்   மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் ஆசிர்யர்களும் சேர்ந்து இருப்பார்கள்.

மருத்துவம் அனைவரும் அறிந்ததே

தியாகம்,சேவை மனப்பான்மை  எங்கும் இல்லை .நாடு என்னவாகும்

  இளம்பிஞ்சுகள்  காதலைப்பற்றி பேசுகின்றன.கல்லூரி எதற்கு?எட்டுவயது

சிறுமியின் பதில் காதலிக்க.

பணம்  குணத்தைக் கெடுக்கும்


பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.

கலப்புத்திருமணங்களும்  பெற்றோர்களின்  பர்தவிப்பும்


      ஜாதிகள்   பார்க்கக்கூடாது ,தாராள மனம் வேண்டும் .

குழந்தைகள்  பெற்றால் வளர்ப்பது பெற்றோர் கடன்.

தங்கள்  தேவைகள்,  ஆசைகள்  அனைத்தையும் விட்டு

வளர்க்கும்  பெற் றோர்களுக்கு ,

இன்றைய  குழந்தைகள்  ஆங்கிலம் படித்தபின்

முதலில் பேசுவது வரைவது எல்லாமே இதயபடம்,  ஒரு அம்பு ,

ஐ லவ் யு   தான்.


கலப்பு   மணத்தை   ஆதரிக்கும் அரசாங்கம்,முற்போக்கு வாதிகள் ,

பகுத்தறிவு வாதிகள் அனைவரும் மேடைப்பேச்சு பேசும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான்  உள்ளனர். அனைவரும் ஜாதிவாரி மக்கள் துகைக் கணக்கை  ஆதரிக்கின்றனர்.

 கலப்புத்திருமணம்  செய்த பின்  பிறந்த குழந்தையின் ஜாதி  இப்பொழுது

பெரிய  பிரச்சனை .அதிலும் அம்மா  ஜாதியா,அப்பா ஜாதியா.

காதல் திருமணம்  ஜோடி  பிரிந்தால் அந்தக்குழந்தை அப்பாவின் பாட்டியால்
வளர்ப்பதில்  எவ்வளவு சிக்கல் .

எனக்குத்தெரிந்த ஒரு பெண் காதலனைப் பிரிந்து    அப்பா    வீட்டிற்கு  குழந்தையுடன்  வந்து  பட்ட பாடு தற்கொலையில் முடிந்தது.

இன்று  குழந்தைப் பருவத்தில்    இருந்தே  காதல் என்பதும்,அப்பாவை மதிக்கக் கூடாது  என்பதும்,யாரும் தேவை இல்லை  எப்படியும் பிழைக்கலாம்  ஒரு
தவறான  மனோபாவம் என்ற   தொற்று நோய் வளர்ந்து   பலரை  நிம்மதி இழக்கச்  செய்கிறது.  பலரை கொலை  காரர்களாக்குகிறது. பலர் வாழ  வேண்டிய  வயதில் பரலோகம் அனுப்புகிறது.

இன்று  குட்டி -  சுட்டி விளம்பரம் விளம்பரம்.ஒரு 7-8 வயது  சிறுமியிடம் ஒரு வினா ---காலேஜ்    சென்று  என்ன செய்வாங்க?
 விடை --காதலிப்பார்கள் .
விடை கேட்டு  சிரிப்பு.

 குஷ்பு  பேசியதற்கு  நீதி மன்றம் மன்றம்..போராட்டம் .

  நம் தமிழர் பண்பாடு இப்பொழுது மௌனம்.

பெற்றோர்கள் ஒரு எந்திரம் .குழந்தை  பெற்று வளர்ப்பது.

இந்நிலை   உருவாக்கும்  பெரிய திரை ,சின்னத்திரை  அவர்கள் தனிப்பட்ட

வாழ்க்கை  நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது .

 அவர்களும் நீதிமன்றம் செல்கிறார்கள்.

எதிர்கால இளைஞர்கள், நிம்மதி இன்றி இருக்கும் சமுதாய  சூழல் உருவாகும்.

பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.




 

ஆசிரியராக விரும்பாததற்கும் யார் காரணம்?

பெற்றோர்கள்  தங்கள் குழந்தை களுக்கு  அன்பு என்ற பெயரில் அதிகம்  சலுகை அளிப்பதால் ,
இன்றைய காலங்களில்  அவர்கள்  அதே அன்பை  வெளியிலும் எதிர்பார்க்கின்றனர்.என் மாணவன் 
ஒருவன்  என்னிடம் என் பெற்றோர்கள் என்னிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதோ,அடிப்பதோ,
திட்டுவதோ கிடையாது .எந்தவித அறிவுரையும் கூறமாட்டார்கள்.நீ தானாகவே தெரிந்து கொள் என்பார்கள் 
அதையே   நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்பான்.அவனுக்கு எல்லாவிதத்திலும் பெற்றோர்கள் சலுகை.
படிக்கவில்லை என்றால்  நாங்களே கவலைப்படுவதில்லை.நீங்கள்  ஏன்  அவனை கஷ்டப்படுத்துகிறீர்கள்.
அவன்  உட்கார்ந்தே பல தலை முறைக்கும் சாப்பிடலாம்.என்பர்.ஆசிரியர்களும் நமக்கு ஏன் சார் வம்பு என்று 
விட்டுவிடுவார்கள். இதில் பாதிக்கப்படுவது சில ஏழை மாணவர்கள் .அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் 
தேர்ச்சிவிகிதம் .  மேலும்  இதே பெற்றோர்கள்  தனியார் பள்ளிகளில் நேரடியாக ஆசிரியர்களை  சந்திக்கவோ / தரக் 
குறைவாக  பேசவோ முடியாது.ஆனால் ,அங்கு ஆசிரியர்கள் பயந்தே இருக்கவேண்டும்.விடுப்பு எடுக்க முடியாது.
ஆசிரியர்கள்,மருத்துவர்கள் காவல்துறையினர் மூவரும்  தன்னல  மில்லா  உழைப்பு தியாகம் செய்யவேண்டும்.அதற்கேற்ற 
மதிப்பும் ,மரியாதையும் ,பொருளாதார வசதியும் தரப்படுகின்றதா என்றால் அது  கிடையாது .50,000 ஊதியம் பெறும் 
பள்ளி ஆசிரியர்களால் தேர்ச்சி விகிதம் காட்டமுடியா நிலை.நிரந்தரமற்ற குறைந்த ஊதியம் பெரும் ஆசிரியர்கள் தேர்ச்சிவிகிதம் காட்டுகிறார்கள்.சில  கல்லூரிகளில்
துறைத்தலைவர்கள் (H.O.D) மாதம் 10,000/-ஊதியம்.
கல்வித்துறை  ஆசிரியர்கள் தரம் குறைவதற்கும், தரம் மிக்கவர்கள் ஆசிரியராக விரும்பாததற்கும்  யார் காரணம்?

செவ்வாய், நவம்பர் 27, 2012


 இன்று   திருநாள் .   ஒளி  பெருகட்டும் .


முக்கண்ணன்   மைந்தன் ,முருகன் 

கந்தன் , கடம்பன் , கார்த்திகேயன் ,


கருணை  மழை   பொழிய ,

அவன்    பாதம்  பணிவோம்.


 வாழ்வில் ஒளிபெற  வாழ்த்துக்கள் .


 

    

ஞாயிறு, நவம்பர் 25, 2012

வாழ்க ஜனநாயகம்.



அமெரிக்காவில் ஆறுமாதம்,
ஆனந்தமாய்,
கழித்த  பின் இன்று 
இந்தியப் பயணம்.
தாய் நாட்டுப் பற்று,
தாயகம் காணும் 
மகிழ்ச்சி.
செய்தி படித்தேன்.
சென்னையைத் தவிர,
மற்ற நகரங்களில் 
18  மணிநேரம் மின் வெட்டு.
பாவம் என் வயதான அம்மா.
மக்கள் நலம் காக்கும் 
இந்திய நாட்டில்,
 அரசுகள் மாறுவதால்,
திட்டங்களில் மாற்றம்.
ஒருவர் புகைவண்டி மேலே செல்லவேண்டும் என்றால்,
ஒருவர் பூமிக்குள் செல்லவேண்டும் என்பார்.
அவர் பதவி போய் இவர் பதவி வந்தால்,
திட்டங்கள் தூள்-தூள்.
நட்டங்கள் மக்கள் வரிப்பணம்.
அவர்களுக்கென்ன அயல் நாட்டு சேமிப்பு.
வாழ்க ஜனநாயகம்.
ஆறுமுகக்  கடவுள்,
ஆனை முகன் தம்பி,
அறுபடை வீட்டு நாயகன்,
அவன் பதம்  பணிவோம் யாம்.
அவனியில் நம் இச்சைகள் 
அவனருளால் 
விருப்பங்களாகி,
செயலுருப்பெற்று,
உள்ள நிறையுடன்,
ஊக்கம்  பெற்று,
உள்ளம் மகிழ்ந்து ,
நோய்நொடி இன்றி,
நீண்ட காலம்,
இனிதே வாழலாம்.

ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

ஹிந்து புராணங்களின் சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளன.
மோகினி அவதாரம் பற்றிய சர்ச்சை.
இறைவன் பற்றிய வரலாற்றை ,
விவாதம் செய்வது பாவம் என்றோருவாதம்.
ஆனால் ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

அது ஒரு பூமி.
அதில் சவத்தையும்  புதைக்கலாம்.
சாக்கடையையும் ஓடவிடலாம்.
புனித கங்கையும் ஓடவிடலாம்.
குழியும் தோண்டலாம்.
சுரங்கங்கள் தோண்டலாம்.
தங்கமும் வெட்டி எடுக்கலாம்.
நிலக்கரி எடுக்கலாம்.
வைரமும் எடுக்கலாம்.
எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.
புதையலும் எடுக்கலாம் .
புண்ணியர்களையும் புதைக்கலாம்.
பாவிகளையும் புதைக்கலாம்.
அறிவு,பதவி,அறிவியல் மேதைகள்,
நாஸ்திகர்கள்,ஆஸ்திகர்கள் 
அனைவரும் சங்கமிக்கும் இடம் பூமி.
ஆகையால் இந்துமதம் கர்ம பூமி,
கர்மத்துக்கேற்ற வாழ்க்கையை கொடுக்கும் பூமி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஆகையால் இது வினைக்கேற்ற பலன் தரும் 
சனாதன தர்மம் என்ற சகிக்கும் பூமி.
அருவுருவமும் ஆனாய் போற்றி 
அகிலத்திற்கே ஒரு ஆதர்ஷ பூமி.

சனி, நவம்பர் 24, 2012

எண்ணிய எண்ணங்கள் யாவும்,எளிதில் நிறைவேறுமே.

முருகனுக்கு மூத்தோன்,
காட்சிக்கு  எளியோன்.
கணங்களின் நாயகன்,
கணபதி என்றும் என்னைக் காக்க.

வேழமுகத்தோன் ,
வேலனின் மூத்தோன்,
வேண்டும் வரம் அருளும்,
கணபதியைத் தொழுவோம் .

கஜவதனன், பஞ்சக்கரமுடையோன்,
பக்தர்களைக் காப்போன்,
பட்டிவீரன் பட்டி வாசன்,
கற்பக விநாயகன்,அவன்பாதம் பணிவோம்.

மோதகப் பிரியனவன்,
சித்தி விநாயகன்,
பவானி  புத்திரன்,
பவ துக்க ஹரன்,
சிவ புத்திரனவன்  முன்
தோப்புக்கரணமிட்டால்,
தோல்வி பயம் நீங்கி,
தொல்லுலகில்
தொல்லைகள் அகன்று,

சாந்தியுடன்,சக்தியுடன்,
சகல இச்சைகளும்  நிறைவேறும்,
ஞானம் பெற்று,
கிரியா ஊகம் பெற்று,
நானிலத்தில் நலமுடன்
வாழ லாமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.
ஆலயங்கள் சாத்தினாலும்,
அரசமரத்தடியில்  அமர்ந்து,
அருகம்புல் அர்ச்சனை ஏற்று,
அல்லல் அகற்றும் ஆறுமுகன்
அண்ணன் அவன்.,பாதம் தொழுதால்,
பாவங்கள் விலகும் ஐயா.

சர்வ சித்தி விநாயகன்,
சங்கடஹர விநாயகன்,
விக்னங்களை  நீக்கும்,
விக்ன வினாயகனவன்.
அவன் பாதம்  வணங்க ,
அல்லல் போகுமே;
ஆனந்தம் பொங்குமே.
இன்னல்  நீங்குமே .
மனதில் இன்பம் பொங்குமே.
எண்ணிய எண்ணங்கள் யாவும்,
எளிதில் நிறைவேறுமே.









,

வெள்ளி, நவம்பர் 23, 2012

கல்வி அறிவு பெருகினாலும் போலிகளிடம் ஏமாந்தாலும். உண்மை புரிவதில்லை.

  அதிகாலை நேரம்,

ஆண்டவனைத்  தொழும்  நேரம்.

இன்றைய நாட்களில் , பொருள் 

ஈட்டும்  தொழில் நுட்பப் பணியில்,

கடமையைச் செய் .
கடவுள் கருணை உண்டு 
என்ற  கீதை உபதேசம்.
ஏற்புடையதாயிற்று.

ஹிந்தியில் நான் படித்த தோஹை,

வீரர்கள் செயலில் இறங்குவர்.
கோழைகள்   வீண் பெருமை பேசுவர்.
வீரர்கள் களத்தில்  குதிப்பர் .
கோழைகள்  தற்பெருமை பேசுவர்.
காலம் மாறுகிறது.
கருத்துக்கள் மாறுகின்றன.
ஒரு கிணறுவெட்ட பழைய முறை 
உதவாது.
நெசவு நெய்ய கைத்தறி ,
காலத்திற்கேற்ற நூற்பாலை.
அகல் விளக்கு ,
இன்று மின் விளக்கு.
கட்டை வண்டி 
இன்று ஜெட் விமானம்.
கதை பேச நேரமில்லா உழைப்பு.
நான் சிறுவனாக இருந்த போது .
ஒருவர் உழைப்பு;
பலர் அமர்ந்து உண்பர்.
வெட்டிப்பேச்சு ;
திண்ணைப்பேச்சு;
வீண் வம்பு;
அரசியல் கூட்டம்;
அலை மோதும்.
இன்று மோதியின் 
ஒருமேடைப் பேச்சு .
நான்கு ஊர்களில் .
பொதுமேடைப் பேச்சு.
தொலைக்காட்சியில்  வீட்டில் இருந்தே,
நேரடி ஒளி பரப்பு.
அறிவியல் விந்தைகள்.
அன்றாட வாழ்வில்.
பல மொழிகள் அறிவு பாமரனுக்கும் தேவை.
பொருட் செல்வம் இருந்தால் ,
தன் இனம் வளரும்.
தன் மொழி வளரும்.
வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் சேவை,
ஆர்வம்  தோழி நுட்ப வசதியால் தானே?
மடி கணினி இலவசம்.-ஆனால் 
மின்சாரம் இல்லை.
தொலை பேசி வசதி இல்லை.
வலை அலை வசதி இல்லை.
பயன் படுத்த முடியவில்லை.
அலைகற்றை ஊழல் அலை ஓயவில்லை.
வீண்பேச்சுக்கள் தான்.
பொருளாதாரம் இருந்தால்,
தமிழ் மொழி வளரும்.
திரைகடலோடியும்  திரவியம் தேட,
தமிழ்,தமிழ் என்ற வீண் பேச்சுப் பேசி,
காலத்திற்கேற்ப கல்வி  இன்றி ,
கல்வித்துறையில் நேர்மையின்றி,
காசேதான் கல்வி,
இல்லாருக்கு இல்லை என்ற நிலை இன்று.
அரசுப்பள்ளி தரம் உயர,
என்னதான் செய்தாலும்.
பெற்றோர்கள் பொருளீட்ட அலையும் பொது,
நல்  ஒழுக்க சூழல் சமுதாயத்தில்,
ஊடகங்களில்,
திரைப்படங்களில் .
ஆடைகளில் கவர்ச்சிகள்  கண்ணைப்பறிக்கும் போது ,
ஊழல்,கொலை,கொள்ளை,லஞ்சம் என்பதே
 பேச்சாக 
இருக்கும்  போது ,
ஒழுங்கீனங்கள்  தானே மிஞ்சும்.
ஆன்மிகம் அமைதி தந்தது.
ஆனால் அதில் ஆஸ்தி தேடுவோர் அதிகமானதால்,
பொருளின்றி அருள் இல்லை 
என்ற நிலை.

எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன்,
அவன் அருள் பெற உள்ளார்ந்த பிரார்த்தனை,
உள்ள இடத்திலேயே போதும்.
உண்மை சொன்னால் ஊர் நகைக்கும்.
ஊர்க்கோடியில் ஒரு சாமியார்,அவரோ போலி,
அவருக்கு பல கோடி சொத்து.
இதுவா இறைவன் அருள் பெறும் இடம்.
பணம் இருந்தாலே பத்தும் செய்யும்.
அங்கு எங்கே தர்மம் தலைக்கும்.
காலம் மாறினாலும்,
கல்வி அறிவு பெருகினாலும் 
போலிகளிடம் ஏமாந்தாலும்.
உண்மை புரிவதில்லை.

மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?

      தமிழகம்  சேர,சோழ,பாண்டிய நாடு என்ற மூன்று பிரிவுகளாகவும்,குறுநில மன்னர்கள்,கடையேழு வள்ளல்கள் 
பாரி ,ஓரி ,அதியமான் என்று என்றுமே ஒன்று பட்ட வரலாறு காணப்படவில்லை.அப்படிப்பட்ட நிலையிலும் அனைவருக்கும் கல்வி என்ற நிலை இருந்ததா?என்ற நிலை தெரியவில்லை.அதிவீரராம பாண்டியர் "பிச்சை புகினும் 
கற்கை  நன்றே என்றாலும், வெந்தனலால்  அழியாது கல்வி என்றாலும்,ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றாலும்
இன்றும் ஜாதி அரசியல் தான். என்றுமே அனைவரும் அறிவாளிகளாக நாட்டு பக்தியுடன் பல மொழி,அறிவு பெற்று 
ஒற்றுமை  உடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்த தில்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கே ,கடவுள் இல்லை,பார்ப்பான் ஒழிக, தமிழன் வாழ்க என்று தமிழர்களை கிணற்றுத் தவளைகளாக ,பாரத நாட்டின் அறிவே தெரிந்து கொள்ள முடியாமல் தமிழ் தமிழ் என்று இன்று ஒய்  திஸ் கொலைவரி  என்றும்,பட்டி தொட்டி எல்லாம் மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?
ஹிந்தி கூடாது என்றவர்கள் பொதுமக்களைப் படிக்கவிடாமல்,மத்திய அமைச்சர்களானால்  பெரும்பான்மையானவர்கள் அறிந்த மொழியை மறுத்து  தமிழில் தமிழ்நாட்டிலேயே முடிய இல்லை. தமிழ் வழிப்பள்ளிகள்  ஏழைகள், வழி  இல்லாதோர்  சரணடையும் பள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.
ஏதாவது அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள்,படித்தோர் யாரும் தமிழ் வழி  பள்ளிகளை விரும்ப இல்லை. ஹிந்தி ஒழிந்ததா? தமிழ் வழி படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் அலுத்து புலம்பும் நிலை.
கடவுள் இல்லை என்று ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கியவர்கள் திருக்கடைஊர்,காளகஸ்தி சென்று பூஜை செய்யும் நிலை. அம்மாவிற்கு நன்கு ஹிந்தி தெரியும்.
பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றாலும் ,
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு  என்ற பாடலும் இக்பால் எழுதிய சாரே ஜகான் சே அச்சா என்ற வரியும் ஒன்றே.
பல நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் வர வேண்டும் என்றால் பல மொழி அறிவு வேண்டும்.
கம்பருக்கு வட  மொழி  அறிவு  இல்லை என்றால் கம்ப ராமாயணம் தமிழுக்கு கிடைத்திருக்குமா?நீதிபதி இஸ்மாயில் ,கம்பர்கலகம் எத்தனைபேருக்கு இதய நூலாக இருக்கிறது.
ஐம்பெருங் காவியங்கள் பெயர் வடமொழியா?தமிழா? ஆதி  பகவன் என்பது வடமொழி.
இன்று எப்படி தமிழ் ஆங்கிலம் இன்றி பேசமுடியா நிலையோ அன்று அப்படித்தான் வடமொழி. இன்று ஆங்கிலம் கலந்தால் பெருமை. ஆனால் அகில பாரத்தையும் இணைக்கும் தேசத்தந்தை காந்தி ஏற்படுத்திய  பொதுமொழியால்  தமிழுக்கு ஆபத்தா? இன்று கலையுலகம் ஹிந்தி மொழி விரும்புகிறது. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் ஹிந்தி தேவை என்ற பொருள் பட பேசயுள்ளார்.
பாரதி ராஜா ,வை.கோ. திராவிடன்,தமிழன் பற்றிய சர்ச்சை. தில்லியிலும் தமிழர்கள் அதிகம். பாம்பேயிலும் அதிகம். தென்னக மூன்று மாவட்டங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு இல்லை.தமிழகம் மட்டும்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் திராவிடர் என்ற பெயரில் இத்தனை கட்சிகள். இத்தனை தலைவர்கள்.
வேற்றுமைகள். வட இந்தியாவில்  மைதிலி,போஜ்புரி,மார்வாடி,அவதி,உர்து, சத்தீஸ் கடி ஆயிரக்கணக்கான மொழிகள்.
ஹிந்தி என்பது டில்லி,ஆஜ்மீர்,ஆக்ரா என்ற இடங்களில் இரண்டரை லக்ஷம் பேசும் கடி போலி.
மொழிகள் என்பது ஜீவாதாரம் கொடுப்பதால் வளர்வன. இன்று எத்தனை பேர் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்,தமிழ்  இலக்கியங்களும் ,வடமொழியும் அறிந்துள்ளனர்.
பார்ப்பனர்கள் 3%  ஆதிக்கமா? என்று பேசுபவர்களுக்கு ஆங்கிலம் படித்து வடமொழி அறியவில்லை என்பதுதான் சத்தியம். காரணம்  வாழ்க்கைக்கு வேண்டிய தொழில் ஆங்கிலம் தருகிறது.இன்று வடமொழி ஒரு தெய்வ மொழி.
எப்படி நம்முன்னோர்கள் இறந்தால் தெய்வ மாகிவிட்டார் என்கிறோமோ?அப்படி.
 இனிமேல் தெய்வம், பார்ப்பான்,ஹிந்தி என்ற பெயரில் அரசியல் சுயநல வாதிகள் பிழைப்பு நடத்த முடியாது.

புதன், நவம்பர் 21, 2012

! பாரதம்!

வாழ்க பாரதம்!


மனிதன்  பேராசை உள்ளவன்.அனைத்து உயிரினங்களும் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு   திருப்தி  அடைகின்றன.ஆனால், மனிதன் பல தலைமுறையினர்களுக்காக  சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறான்.அதன் பலனாக ஆஸ்தி சேர்ப்பதற்காக அவன் முயற்சிக்கிறான். ஆட்சி செய்பவர்கள் முதலில் தன்  பாதுகாப்புக்காகவும்,நாட்டின் பாதுகாப்புக்காகவும் தன கரூவூலங்களை நிரப்பிவைத்தனர்.மக்களும் அரசனை தன் பிரதிநிதியாகக்
கருதினர்.நாட்டின் நலத்தைப் பெரிதாக மன்னர்கள் கருதிய காலம்.ஆனால்  அவர்கள்,மக்கள் நலத்திற்காக  கல்வி என்ற அழியா செல்வத்தை அனைவருக்கும் தர முன்வரவில்லை. அதன்,பலனாக
நாடு துண்டு  களானது.  இந்த மன்னர்கள் நாட்டை விட  தன் ஆணவம், வீரம்,காதல், தன குறிகிய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்ற வலையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தனர்.
எதிரிநாட்டு செல்வங்களைக் கொள்ளை அடித்து  தன்  அரண்மனை கரூலத்தில்  சேர்த்து வைத்தனர்.
அந்தப்புரங்களை அழகு படுத்தி ராணிகளுடன் ஆனந்தமாக இருந்தனர்.கல்வி அற்ற மக்களும் அரசன் கைதட்டினால் சேவகம் செய்ய உயிரை விட தயாராக இருந்தனர்.
        பல  மொழி,இயற்கை,உணவுப்பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னியாகுமரி  வரை  வேறுபாடு  இருந்தாலும்  ஒரு தெய்வ ஷக்தி  நாட்டை ஒற்றுமை படுத்தி வந்தது.
சிவன்,விஷ்ணு ,சூரியன்,சந்திரன் என்ற தெய்வங்களை விட ,உருவ,அருவ வெளிப்பாடும் நடந்துவந்துள்ளன. இறைவனைப்போற்றும் நூல்கள்   வட மொழி,தென் மொழிகளில் இயற்றப்பட்டாலும்,குஹன் சபரி,விதுரன் ,நந்தனார்,கண்ணப்பர் கதைகள் கூறப்பட்டாலும் சமுதாயத்தில் மிகப்பெரிய வேறுபாடு.

      இந்த சனாதன தர்மம் வளந்த பாரத தேசம்  வெளிநாட்டினர் புகுந்ததால் சிந்து நதி மூலம் வந்து
ஹிந்து அல்லது ஹிந்துஸ்தானம் ,ஹிந்து தர்மம் என்று மாறியது. சுயநலத்தால் இருந்த மன்னர்களும்,
மதவாதிகளும் மக்களை மடையர்களாக்கி தங்களுக்குள் இருந்த பகையால் வெளிநாட்டினர் ஆட்சி
அமைக்க காரணமாக இருந்தனர்.விருந்தாளிகள் தெய்வம் என்றனர்.  अथिति देवो भव्
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால் ஆண்டவனுக்கு மற்ற மொழி  வழிபாடு புரியாத.? என்ன.
சர்வ ஷக்தி உள்ள ஆண்டவன் பல சோதனைகளைக் கடத்து வந்த மக்களுக்கு சர்வ சிக்ஷா அபியான்
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வரை வழிகாட்டி உள்ளார்.
பல இளைஞர்கள் ஜாதி,மத,இனம் வேறுபாடு மறந்து காதல் திருமணம் செய்யும் அளவிற்கு பகுத்தறிவு ப பெற்றுள்ளனர்.
மக்கள்  தன்  நாட்டின் வரலாறு அறிந்து சிந்தித்து பரந்த மனப்பான்மை உடன் சயநலம் மறந்து
பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் தேசனலனுக்கும் வேறுபாடுகள் மறந்து  நாட்டைப் பாதுகாக்கும்
உயர்ந்த எண்ணங்கள் தர இறைவனைப் ந்ப்ரார்த்திப்போம்.
வாழ்க பாரதம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!வந்தே மாதரம்!

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -11.

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -10

அம்மாவிற்கு  உடல் நிலை சரி இல்லாத போதும்  ,ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். எனக்கும் தம்பிக்கும்  19. ஆண்டுகள் வித்தியாசம்.மிக செல்லமாக வளரவேண்டியவன்.
அம்மா  பள்ளிகள் நடத்தினாலும் பையனை கவனிக்க முடியவில்லை. அவனையும்  பட்டதாரி  ஆக்கினார். அம்மாவிற்கு நான் தான் வேலைக்கு போய் விட்டேன். என் தம்பியாவது பள்ளியை நிர்வஹிக்கவேண்டும் என்று.ஆனால் எனக்கு அவன் வேலைக்கு செல்ல வேண்டும்  என்று. அவனும் வேலைக்கு சென்றான்.நானும் என் பள்ளியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
ஆனால் அம்மாவின் விருப்பமோ அல்லது ஆண்டவனின் விருப்பமோ தெரியவில்லை,எங்கெங்கோ வேலைக்குச் சென்று இறுதியில் பழனிக்கே வந்து பள்ளியை நிர்வாகம் செய்கிறான். அவன் மனைவியும் பள்ளியில் கவனம் செலுத்துகிறாள்.வருமானம் குறைவு என்றாலும்,இருவருமே சிக்கனமாக,பள்ளியை நடத்திவருகின்றனர். எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை இருந்து பள்ளியை நடத்த அருளவேண்டும்.பல சோதனைகள்.பொருளாதார வசதி இல்லை.அம்மாவிற்கு இன்றும் அந்த பள்ளியின் நினைவலைகள் தான்.பள்ளிவளர வேண்டும் என்பதே.எல்லாம் அவனருளால்  தான் நடக்க வேண்டும்.

இறைவனின் சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான் புரியும்.

மரணம்  மற்றவர்களின் மரணம் .ஆறுதல் .மரணம் நிச்சயம். நம் தந்தையின் மரணம் நமேக்கே நாம் தேற்றிக் கொள்வது.
என் அப்பா சொல்வார்.உலகம் மிகவும் ஆபத்தானது. மிகவும்  ஜாக்கிரதை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரங்கள் பல தானாகவே வளர்கிறது. அதில் முள்ளும் இருக்கின்றன. நிமிர்ந்தும் ,வளைந்தும் உள்ளன.முடத்தேங்குகளும் உள்ளன. விஷமும் உள்ளது.அது பருவகாலங்களுக்கேற்ப இலைகளை உதிர்த்து துளிர்கிறது. அப்படியே குடும்ப விருக்ஷம். இன்ru சொன்னதுபோல் இருந்தாலும் 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் போன்ற தளிர்கள் பேரன் பேத்தி,நான். இறைவனின் அதிசயம்.அறிviயல் சற்றே பணிவது இதற்குத்தான். இல்லை எனில்...உலகம்......ஆஹா!
அஹங்காரர்களின் அசுர ஆட்சிகள் அழியாமல் தான் இருக்கும்.நான் எனக்கு நானே செய்துகொண்ட ஆறுதல். ஆறு பருவகாலங்கள் போல் தான் வாழ்க்கை.மனிதவாழ்க்கையும் அப்படித்தான். நாம் அழுவது சிரிப்பது புரிந்து தெரிந்தே செய்யும் அறிவற்ற ஆனால் அறிவுள்ள செயல்.இறைவனின் அபூர்வ உணர்வுகள். தான் ஆடவிட்டாலும் தன்  சதை ஆடும்.என் அப்பா பழனியில் ப்ராnaaவஸ்தை. 
அன்று என் பையன் பத்தாவது பாஸ் சேதி. 
என் அடிவயிற்றில் ஒருகலக்கம். 
ஐயோ என்று கதறவேண்டும் என்ற துடிப்பு.சென்னையில் .
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விஷயத்தை சொல்லாமல் பழனி செல் என்றார். புரிந்துவிட்டது.இதுதான் ரத்தபந்தம்.
இறைவனின்  சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான்  புரியும்.மற்றவர்களுக்குக் கூறும் ஆறுதலை நினைத்து  naam aaruthal adaiya vendiyathuthaan.

செவ்வாய், நவம்பர் 20, 2012

அம்மாவின் நினைவலைகள்-10





அம்மாவின் நினைவலைகள்-9

அம்மாவிற்கு சோதனை நேரங்களில் ஆண்டவன் கொடுக்கும் தைரியமும்,மனித உருவில் உதவ வருபவர்களும்
என்னை மிக ஆச்சரியப் பட வைக்கும். ஒருமுறை அம்மாவை மிரட்ட பின் வீட்டுக்காரரின் மகன் ஒரு அடியாளை
அனுப்பி உள்ளான்.அம்மா அவனை எந்த ஊர் என்று கேட்டு,அந்த ஊர் மாணவர்கள் பற்றி கூறியதும் அவன்
அம்மா காலில் விழுந்து வணங்கி உங்கள் மாணவன் என் சித்தப்பா என்று சொல்லி,யார் பணம் கொடுத்து அம்மாவை மிரட்ட அனுப்பினானோ
அவனையே மிரட்டி விட்டுச் சென்றுள்ளான்.
அம்மாவின் வாழ்க்கையில் பல தெய்வீக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
சோக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
அனைத்திலும் அவர் நீந்தி கரை ஏறினாலும் அப்பாவின் மரணமும்,மாப்பிள்ளையின் மரணமும் தாங்க முடியா வேதனை. என்னால்
இந்த இரு வேதனைகளும் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன.மரணம் ஏற்படும் பொழுது மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது சுலபம்.
ஆனால் அந்தப் பெருந்துன்பம் ந செயலற்றதாக்கிவிடும்.ஆனால்,என் தங்கைக்கு எங்கிருந்தோவந்த தைரியம்,துணிச்சல்,தன வேதனையை மறைத்து,எல்லாம் அவரவர்கள் தலை எழுத்து,இதை நினைத்து வருந்துவதால் என்ன பயன் !என்று தைரியம் சொல்லுவாள்.
மரணம் அதுவும் அகால மரணம் ...இந்த நரக வேதனை மனித வாழ்வில் ஏன் ? அப்படிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டாலும் மனிதன் போட்டி,பொறாமை,பேராசை அகந்தை,என்ற தீய குணங்கள் தோன்றுவது ஏன் ? இதுதான் அறிவுள்ள அறிவியல் உலகை சற்றே ச்தம்பிக்கச்செய்கிறது.
தொடரும்.

திங்கள், நவம்பர் 19, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-9


அம்மாவின் நினைவு அலைகள்-9

பழனியில் அம்மா மூன்று இடங்களில் பள்ளி நடத்தினார்.இதில் திடீரென்று காஞ்சிப்பெரியவரின் ஜனகல்யாண்  பெயரைச்சொல்லி சுப்ரமணியன் என்பவர் தலையிட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். இதனால்சண்முகபுரம் கிளை மூடப்பட்டது. இது குறித்து  காஞ்சி மடம்  பெரியவருக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் இல்லை. ஜனகல்யாண்  பெயரில் பல ஏமாற்றங்கள் நடந்துள்ளது.
இப்படி பல சோதனைகள்.பலர் அம்மாவிடம் நேரடியாக பள்ளியை ஏற்று நடத்த கோரிக்கைவைத்தனர்.
அவர் தன்  போக்கில்  மன தைரியத்தால் குறைந்த கட்டணத்தில் பள்ளிகளை நடத்திவந்தார்.ஆசிரிகைகளும் குறைந்த ஊதியத்தில் திறம்பட உழைத்தனர். நான் அரசு உதவி பெரும் பள்ளியில்  வேலை கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டேன். என் பெரி யமாமாவிற்கு ஏழு  குழந்தைகள்.
மூத்த மகள் கோமதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.அத்தைக்கு சிறிதும் இஷ்டமில்லை.அம்மா எனக்குத்தெரிந்து அண்ணன் வீட்டிற்கு சென்று எவ்வித உதவியும் பெற்றதில்லை.அவரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. அண்ணனின் கஷ்டத்திற்கு அம்மா உதவி செய்துள்ளார். என் மனைவி கோமதி அமைதி;பொறுமை திறமை அன்பு அடக்கம் உழைப்பு மரியாதை குணக்குன்று என்று சொல்லலாம்.திருமணம் ஆன பின்  இரண்டு குழந்தை பெற்ற பின் தான் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.அம்மாவிற்கு ஒரு பயம். மகன் பிரிந்து தனியாக சென்ருவிடுவானோ என்று. என் மாமாவிற்கு திருமணமான பின் மாமா என் பாட்டிக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அதற்கு அத்தை ஒரு காரணம் என்று பாட்டி சொன்னதால் சொல்லிக்கொண்டே இருந்ததால் அடிக்கடி எனக்கும் அம்மாவிற்கும் சண்டை வரும்.எனது பேச்சு,நடைமுறை அனைத்தும் மாறிவிட்டத சண்டை போடுவார். ஒருநாள் கூட என் மனைவி என் தாயாரிடம் கோபமாக பேசியோ சண்டபோட்டதோ கிடையாது.எனக்குத்தான் கோபம் வரும். இருப்பினும் வேலை கிடைத்து 10 ஆண்டுகள் காலாண்டு,அரையாண்டு,முழுஆண்டு விடுமுறை என சென்னையில் இருந்து பழனி சென்று வருவோம்.ஊதியம் தவிர வேறு வருமானம் கிடையாது. சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.என் மனைவியும் இது பற்றி பேசியதும் இல்லை. 525 ரூபாய் ஊதியம். வீட்டுவாடகை 100/-எப்படி சமாளித்தாளோ ?நான் M.A;B.Ed;MEd; படித்து முடிக்கும் வரை எதிலும் ஈடுபடவில்லை.வேலை;படிப்பு; தேர்வு;B.Ed; சார்ட்,படம்,கற்பிக்கும் உபகரணங்கள் எல்லாம் மனைவியே.எல்லாம் முடிந்து முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்  பணியில் சேர்ந்தேன்.நான்கு ஆண்டுகள் கழிந்தன. நிம்மதி என்ற நிலையில்
நடைபாதையில் சென்ற என் மீது புது கார் வாங்கியர் மோதினார்.படுத்த படுக்கை.55 நாட்கள்.
இதற்கு மேலும் நடந்த சோதனைகள். தங்கையின் திருமணம். அம்மா பட்ட மனவேதனை. அப்பாவின் மரணம். மாப்பிளையின் மரணம் என்பவை பெரும் கதைகள்.
தொடரும்.

சனி, நவம்பர் 17, 2012

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மா பல துன்பங்களை எதிர்த்துப் போராடி ஒரு அமைதிநிலை எட்ட இறைவன் விடுவதே இல்லை.எங்கள் பெரிய வீடு மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.என் தாத்தா முன் பகுதி எங்களுக்கு என்று கூறி இருந்தார்.எங்களுக்கோ,என் பெரியப்பாவிற்கோ  வீடு பாகப்பிரிவினை செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் அத்தை நெம்மேனியில்  இருக்கும் பூர்வீக வீட்டைத் தன பெயரில் மாற்ற இந்த பழனி வீடு  மூன்று  பாகமாகப்  பிரிக்கப்பட்டது. என் தாத்தாவின் ஆஸ்தி அந்த ஒரு வீடுதான்.இன்னும் அதிகமாக சொத்து இருந்திருந்தால் என்ன ஆகுமோ தெரியாது.அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய யுத்தம்.கடைசியில் திருவுளச்சீட்டு போட்டு சமாதானமாக வீடு பிரிக்கப்பட்டுவிட்டது.பெரிய கூடம்.நடுவில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு எவ்வித கெட்ட  பழக்கம் 
இல்லை என்றாலும் சாமியார் ஜோதிடம் நம்பிக்கை அதிகம். பல ஆண்டுகள் அவர் குடும்பத்துடன் எங்கோ சென்றுவிட்டார். தாத்தாவின் மரணத்திற்குக் கூட அவர் வரவில்லை.அவருக்கு ஒரு ஜோதிடர்.எங்கள் பெரியப்பா மகாதேவா அய்யர் அரசியல் வாதி.ம.போ.சிவஞானம் ஆரம்பித்த தமிழரசுக்கழகத்தில்  அடிப்படை உறுப்பினர். தமிழரசுக் கழக வேட்பாளராக நின்று நகரமன்ற உறுப்பினர் ஆனவர். சம்பாதிக்கத் தெரியாதவர்.அவருக்கு பச்சை என்ற நண்பர். அவர் ஒரு தலால்.அவர் எப்படியோ அவரை மடக்கி வீடு விற்பதற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு ஜோதிடர் வந்து வீட்டை விற்கவில்லை என்றால் பெரும் கஷ்டம் வரும் என்று கூறி வீடு விற்கத்  தயாரானார். இருவருமே கெட்டிக்காரர்கள்.என் அப்பா சேது என்றாலே சாது.அனால், அவர்  வீடு விற்கும் விஷயத்தில் மட்டும் தன அண்ணன்கள் சொல்வதை கேட்கவில்லை.வீட்டு வரைபடம் "ட " வடிவம்.இதில் எங்கள் பாகம் நடுவில்.மூன்றடி நடை பாதை.அதை வாங்கிய கணேசன் செட்டியாருக்கும் எங்களுக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.இந்த சண்டையில் எங்களுக்கு உள்ளூர் பெரியவர்கள் ஆதரவு அதிகம். எங்களுக்காக எங்கள் எதிர்வீட்டில் இருக்கும்   துரை,கந்தசாமி போன்றோர் அடிதடியில் இறங்கி காவல் நிலையம் செல்வோம். இது அம்மாவிற்கு நிம்மதியில்லை.அப்பாவிற்கும்.அந்தவீட்டில்தான் மழலையர்,பள்ளி ஹிந்தி வகுப்புகள்.
அவரின் பலவித எதிர்ப்புகள் நடுவில் இரண்டுமே நன்றாக நடந்தது.நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜ சண்முகம்,தங்கராஜ்,நகர்மன்றத்தலைவர் கோவிந்தராஜ்,தலைவர் காணியாளர் கே.சின்னப்பன்,p.s.கே.லக்ஷ்மிபதிராஜ் ,லக்ஷ்மணன் செட்டியார்.எம்.கே.எம். அப்துல் காதர்,. போன்ற அனைவரும் எங்களுக்கு பேராதரவு வழங்கினர். செட்டியாரிடம் வீடு கை மாறியது, அவர்முதலில் வீட்டிற்குப் பின்னல் வீடு கட்டினர்.அதை ஒரு  பாலசமுத்திரம் அய்யங்கார் வாங்கினார்.அனைவருக்குமே நாங்கள் வீட்டை விற்றுவிடுவோம் என்ற எண்ணமே.நாங்கள் விற்கவில்லை என்றதும் அவர் ஒரு தாசில் தா ருக்கு விற்றார். சில நாட்கள் மிக நட்பாயிருந்தவர்  வீடு விற்கமாட்டோம் என்பதை அறிந்ததும் முதலில் தன செல்வாக்கைப்பயன்படுத்தி பள்ளி நடத்த விடாமல் ஒரு நீதிமன்ற இடைக்கல் உத்திரவு போல் தன மேலதிகாரியிடம் வாங்கினார். பள்ளி கோடை விடுமுறைக்குப்பின் திறக்க ஐந்து நாட்களே. அம்மாவிடம் பணம் இல்லை. எப்படியோ சமாளித்து ச,வெங்கடாசலம் வழக்கறிஞர் மூலம் இடைக்காலத்தடையை வுயர் நீதிமன்றம் மூலம் நீக்கி பள்ளி ஆரம்பித்தார். இந்த மனோ திடம் பொருளாதார வசதியின்றி எப்படி?இது ஒரு தெய்வ பலம்.அனைவரின் ஆதரவு. எதிரிகள் பணபலம் மிக்கவர்கள்.என் தாத்த ஆசீர்வாதம் உள்ளூர்  பெரியவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை.எல்லாம் இறைவன் அருள்.
அங்கு எங்கள் காவல் தெய்வம் கருப்பணசாமி இருந்து காப்பதாக எங்களுக்கு பல அனுபவம்.அதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர்,எதிர் வீட்டு சுயமடத்தில் இருந்த பெரியவர்கள் நேரில் 
கண்டதாகவும் கூறுவார். எதோ ஒரு ஆற்றல் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பது உண்மை.
தொடரும்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-7

அம்மாவின் நினைவு அலைகள்-7
1968ஆம்  ஆண்டு பள்ளி திறந்ததும்,அம்மா இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். நானும் நடத்த ஆரம்பித்தேன்.அதற்கு சபா மூலம் மாதம் 120 ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கினர். அதுவும் ஓராண்டிற்கு ஒரு முறை வரும்.நாற்பது மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று  என்ற விகிதத்தில் வசூலித்துத் தரவேண்டும்.சபாவுக்கு வருமானாம். ஹிந்தி போராட்டத்தால் சபாவின்  மாணவர்கள் குறைந்த நேரத்தில் நாங்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.அப்பொழுது சபாவில் பணியாற்றிய செயலர், அமைப்பாளர்கள் பிரசாரகர்களை சந்தித்து  உற்சாகப் படுத்தினர். செயலாளர்   தி.பி.வீரராகவன் ஜீ ,அமைப்பாளர்கள் ஈ.தங்கப்பன் ஜீ ,சுமதீந்திரா ஜீ ,எம்.சுப்ரமணியன் ஜி, வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி, போன்றோர் சபாவை காப்பதற்குப் போராடினர். எங்கள் வீட்டிற்கும் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி வித்தியாலயத்தை மூடவேண்டும் என்று ஊர்வலமாக வந்தனர்.நான் மூடிவிடுகிறேன், இங்கு விரும்பி வருபவர்களுக்கே கற்பிக்கிறேன். எனக்கு மாத வருவாய் வேண்டும் என்றேன். மாணவர்கள் சென்று விட்டனர். அன்று மாலையே சில கல்லூரி மாணவர்கள் ஹிந்தி பயில வந்தனர்.
அன்றைய சபா செயலர்கள்,அமைப்பாளர்கள் அனைவரும் எங்கள் சேவையைப் பாராட்டினார். ஆனால் அங்கும்  தேர்தல். ஜாதி,போராட்டம். ஜே,எஸ்,ராமதாஸ் செயலராக வந்ததும் என் தாயாரின் முழு நேர வித்யாலயம் பகுதி நேரமாக மாற்றப்பட்டது. நேர்மையான பிரசாரகர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.சென்ற ஆடு வயதான ப்ரசாகர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினர். அதற்கு என் அம்மாவிடமே  ரூபாய் 600/-கட்டணம் வாங்கி உள்ளனர். அம்மா வயதானதால் , ஆடோவில் தான் செல்லவேண்டும் .இரண்டாயிரம் செலவு. அங்கு பாராட்டி எதுவும் பேசவில்லை. பிரசாரகர்கள்  ஊக்குவிக்கப் படவில்லை. ஆனால் ,ஹிந்தி பிரசாரம் மட்டும் நடந்துவருகிறது. பலர் சபாவை எதிர்பார்ர்க்காமல் ஹிந்தி பிரசாரம் செய்கின்றனர்.ஏனென்றால் பொதுமக்கள் விரும்பி படிக்கின்றனர். நிரந்தரமான பிரசாரகர்கள் இன்றியே ,மாநில அரசின் உதவியும் இன்றி லக்ஷக்கணக்கில் மாணவர்கள் ஹிந்தி படிப்பது மகாத்மா காந்தி அடிகளின் தீர்க்க தரிசனம் தான். அவர் சென்னையில் 1918இல் சபாவை ஆரம்பித்தார்.
தொடரும்.