ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

நீதிபதிகள் மனிதாபிமானத்துடன் தீர்ப்புவழங்கவேண்டும்.

 இன்றைய தினமலர் செய்தி--தனியார் பள்ளிகளில் 25%மாணவர்கள் சேர்க்கை ஏழைகளுக்கு வழங்கவேண்டும் என்று.

இதற்கு மறைமுகமான பொருள் அரசுப்பள்ளி தரம் உயராது.இயக்குனர்,இணை ,உதவி இயக்குனர்,மாவட்டக்கல்வி அதிகாரி,உதவி பெரும் பள்ளிகளின் நிர்வாகம் ,அதிகம் ஓய்தியம் பெறும்  ஆசிரியர்கள். பள்ளிகள் மூடும் நிலை. மனசாட்சி நேர்மை இல்லா உத்தரவு.
மறைமுகமாக பள்ளிகள் ஏழைகள் நடத்தக்கூடாது. அரசியல் வாதிகள் நடத்தவேண்டும்.பெரும் முதலாளிகள் நடத்தவேண்டும்.

இறைவன் உள்ளானா?என்ற ஐயம் இந்தமாதிரி சூழலில் ஏற்படுகிறது. சந்தேகம் வருகிறது.நீதிதேவன் மீது.

50 ஆயிரம் நன்கொடை. பள்ளிமுதல்வர்களைப் பார்க்கமுடியாது. பிப்ரவரி மாதாம் விண்ணப்பம் வழங்கி,ஏப்ரல் மாதம் சேர்க்கை முடிவு. பின்னர் பரிந்துரை.

ஏழைகளுக்காக ஏழைகள்  நடத்தும் பள்ளிகள்.குறைந்த கட்டணம். ஆசிரியர்கள்  குறைந்த ஊதியத்தில் கடும் உழைப்பு.

நிர்வாகத்தினர்  வரும் வருமானத்தில் பள்ளியை மேம் படுத்துகின்றனர்.
வருமானம் குறைந்துள்ளவர்களுக்கு  இப்பள்ளிகள் வரப்பிரசாதம்.

பலருக்கு வேலைவாய்ப்பு. தாங்கள் கற்ற கல்வி மற்றவர்களுக்கு உதவட்டும் என்று  என்னும் தொண்டுள்ளம்.
  மக்களை மடையர்களாக்கும் அரசு; அரசுப்  பள்ளிகளில்
ஆசிரியர்கள் வருவார்கள் பாடம் நடக்கும்;தரம் உயர்த்தப்படும் என்ற  உத்திரவாதம் கொடுக்க முடியாத கல்வித்துறை.
எத்தனை பள்ளிகள் மூடும் நிலை. எந்த தனியார் பள்ளி யாவது மூடும் நிலை ஏற்பட்டுள்ளதா?

அரசியல்வாதிகள் பள்ளிகள் திறக்க அங்கீகாரம் என்ற போர்வை; இடவசதி இல்லை; இது மக்களுக்குத் தெரியாதா? இடவசதியுடன் கூடிய அரசு அரசு உதவி பெரும் பள்ளிகளின் சேர்க்கைக்கு முயற்சிக்காமல்  தனியார்களை
கட்டாயப்படுத்துவது கல்வித்துறையின் இயலாமை.

 பள்ளிகள் நடத்தக்கூடாது என்பது நிலம் வேண்டும்.பெரிய வசதிகள் வேண்டும் என்பது. தங்கள் குழந்தைகள் படிப்பு பெற்றோர் நிர்ணயம் செய்வது.பெற்றோர்கள்  தங்கள் குழந்தையின் படிப்புக்காக  படும் துயரம்
மன வேதனைகள் அதிகம்.

இச்சூழலில் திரைப்பட நாயகர்கள் அனைவருமே கதையில் போக்கிரிகள்.படிக்காதவர்கள்;காதலுக்குத் துணை போகிறவர்கள்.சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு  காவல்துறை,அரசாங்கம் பாதுகாப்பில்லை  என்ற கதைகள்.

இந்நிலையில் எத்தனை அரசு உதவிபெற்று பல ஆண்டுகளாக நடத்தப்படும் பள்ளிகள் சென்னையில் அதிகம் விளையாட்டுமைதானம் கிடையாது.

தங்கள் வசதிக்காக ஏழைகள் நடத்தும் பள்ளிகளின் மீது கைவைப்பது அநீதி.

நீதிபதிகள் மனிதாபிமானத்துடன் தீர்ப்புவழங்கவேண்டும்.