திங்கள், ஆகஸ்ட் 27, 2012

கணநாயகா !!! ஞானம் கொடு!

கடவுள் - Vinayakar - God - Ganesh - Ganapati - Pillaiyar - பிள்ளையார் - விநாயகர் - கணபதி

பார்க்கப் பார்க்கப்
பரவசம் அடையச்செய்யும்,
கணநாதனின் ,
கருணை உருவம்.
கைகளில் 
கருணை,
படைத்தவனின்,
கடும் உழைப்பு.
அழகு 
உருவம்.
ஓம் என்ற பிரணவ
எழுத்து.
அழகுத்தொந்தி,
அழகுத்தந்தம்,
இந்த அழகு 
பொம்மை,
குரங்குகையில் 
கொடுத்த 
பூமாலையாக,
அங்கம் அங்கமாக ,
கடலலைகளால்,
பிய்க்கப்படுவது ,
ஆழ்ந்த பக்தியின் ,
ஆன்மீக வழிபாடு.
இதில் பல்லாயிரம் 
காந்தி பட காகிதங்கள்.
ஏழைகள்  சிரிப்பில் 
இறைவன் காணும்
 அரசின்பாதுகாப்பு.
இது பக்தியா?
அழகு இறைவன் 
ஆகாரத்தை,(உருவத்தை)
அவமானப்படுத்தும்,
அநியாயமன்றோ?
சிவகாமிமகனை  ,
கந்தனின் 
மூத்தோனை ,
சிவகுமாரனை ,
சினாபின்னமாக்கும்,

இந்த,
ஆன்மீக வாதிகளின்,
அடிமதில்,
இந்த அறிவற்ற 
பக்திமுறை மாற்ற 
முப்பெரும் தெய்வங்களை,
முப்பெரும் சக்திகளை,
முக்தி தரும் கிராமதேவதைகளை,
நீலியை,காளியை,கருப்பணனை,

மன்றாடி வேண்டுகிறேன்.
கரை ஒதுங்கும்,
உன் முண்டம் ,
கரம்,கை,
தொந்தி,
ஞானம்பெற்ற 
சனாதன 
தர்மத்துக்கே ஒரு 
நீங்காக் கரை யன்றோ?

சனாதன தர்மம் தழைக்கத் 
தடையன்ரோ?
கண்ணீர் மல்க .
காலடி தொழுகின்றேன்.
உவர்மண் நிறைந்த 
வண்ணான்,
சிவனாக காட்சியளித்த 
பக்தர் பிறந்த 
நாட்டில்,
அழகுச்சிலை,
அலங்கோலப் படுவது,
அகிலத்தில்,
அவமானமன்றோ /?
மேல்நாட்டில்,
உள்ளாடையில் ,
உன் உருவம்பதித்து  ,
அணிவது 
மதத்திற்கு,
அவமானமென்று அலறிய ,
ஹிந்துக்கள்,
சாக்கடையும்,
மலமும்,
மூத்திரமும் 
சங்கமாகும் 
கடலில் 
கரைப்பது 
படு பாதகச் 
செயலன்றோ?
கணநாயகா !!!
ஞானம் கொடு!
இந்த இழி   

செயலை,
தடுத்துவிடு.


















உ பிள்ளையார் சுழி ,


உ 
பிள்ளையார் சுழி ,
போட்டு ,
துவங்கும் 
தொழில் ,

வளரும் 
வாழையடி 
வாழையாக 
தளிர்க்கும் .
கண்ட இடங்களில் 
ஆலமரத்தடியில்,
நதிக்கரையில்,
இருக்கும் 
எளிய 
பக்தர்களை 
தன் ,
கருணையால்,
அருள்பார்வையால்,
அருள்பாலிக்கும்,
அம்பிகை புதல்வன்,
சிவனின் 
மூத்த குமாரன்,
முத்தமிழ் 
ஞானம் பெற ,
மூதாட்டி ,
அவ்வை 
வணங்கிய 
துங்கக்கரிமுகன்,
அவனை 
பக்தர்கள்,
கிரிக்கட் விநாயகனாக,
லேப்டாப் விநாயகனாக,
புட்பால் விநாயகனாக,
கலியுகத்தில் 
தோன்றினாலும்,
சர்வ சக்தி விநாயகர்,
வினைதீர்க்கும் 
விநாயகர்,
வித்யா விநாயகர் ,
பல நாமங்களில் 
பாரதம் 
எழுதிய 
பாத விநாயகனை,
பலரூப்ங்களில் 
பிரார்த்திக்கும்,
அன்பர்கள்,
அந்த அழகு 
ஆராதனை,
பிம்பங்களை,
வங்கக்கடலில்,
அலங்கோலம் 
செய்யும் 
அவலம்,
ஆறறிவு,
படைத்த,
மனிதன் 
சரிஎன்று 
செய்வதால்  தான் 
பகுத்தறிவாளர்,
பெரியாரின் 
நாத்திகவாதம் 
நலம் 
என்றே 
ஞானம்பெற்றவருக்கு 
தோன்றுமே.