ஞாயிறு, மார்ச் 31, 2013

"பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?



ரமணர்  தமிழ் நாட்டின் மகான்.திருவண்ணாமலையைத்  தவிர எங்கும் செல்லாமல்  உல்-வெளி நாட்டு சீடர்களைக் கவர்ந்து ஆரதனைக்
குறி யவரானார்.

ஒரு பக்தை :(ரமணரிடம்)  "பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?

                                          வேறு சாதனையும்  வேண்டுமா?

ரமணர்:(மௌனம் )

பக்தை:-தியகாஜாதிகளைப்போன்ற மகான்கள்  சங்கீதத்தைப் பாடி தானே   முக்தி அடைந்தார்கள்.?

பகவான்: தியாகராஜாதிகளைப்  போன்றவர்கள் மகான்கள் பாடிப் பெறவில்லை.  பெற்றதைப் பாடினார்கள்.அதனால்  அந்தச்  சங்கீதம் ஜீவனுள்ளதாக நிலைத்து நிற்கிறது. அதைத்தான்  நாதோபாசனை என்று சொல்லப்படுகிறது.என்று புன்சிரிப்பு .

எவ்வளவு பெரிய உண்மை.எளிய பொருளாழம்  மிக்க பதில்.