புதன், நவம்பர் 23, 2022

இன்றைய சிந்தனைகள்

 வணக்கம்.

இன்றைய சிந்தனைகள்.


  மனிதன் நலமாக வாழ வருமானம் தேவை.

  மானம் தேவை என்ற காலம் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்கு இருந்த காலம் போய் வருமானம் என்ற குறிக்கோள் நிம்மதி தருகிறது என்ற எண்ணம் தவறானதா? சரியானதா?

 பணம் படைத்தவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனரா?

 அப்படி இருந்தால்    பரிகார ஸ்தலங்களில் கூட்டம் அதிகம்.

கருத்தரிப்பு மையங்களில் கூட்டம் அதிகம்.

ஆஸ்ரமங்களில் கூட்டம் அதிகம்.

 அங்கு அமைதி தேடி தீக்ஷை பெற பல ஆயிரம்.

முன்வரிசையில் அமர்ந்து ஆஸ்ரம ஆச்சாரியார் ஆசி பெற இரண்டு லட்சம்.

 பரிகார யாக ஹோம் அன்னதானம் பல லட்சம்.

 அங்கு புலம்பும் பெரும் தனவந்தர்கள்.

 புண்ணியம் தேடி  தானம் அளிப்பவர்கள். நோய் தீர பரிகாரம்.

மகப்பேறு பரிகாரம்.

 பணம் உள்ள இடத்தில் நோயாளிகள்.

மன நோயாளிகள்.

மன வேதனைப் படுவோர்.

 இன்றைய சூழலில் பலரிடம் பணம் உள்ளது. ஆனால் மன நிம்மதி?

ஆழ்நிலை தியானம் பயிற்சி.

 மனவளக்கலை.

 என்று ஓடும் கூட்டம் அதிகம்.

சிந்திப்பீர் பணம் ஆலய உண்டியலில்.

  அன்னதானத்தின்.

அறவழிக்கூடங்களில்.

அநாதை ஆஸ்ரமங்களில்.

 பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள். நிம்மதியான மணவாழ்க்கை உள்ளதா?

வருமானம் உள்ளது.

 நிம்மதி!

 தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையில் மகிழ்ச்சி.

 பணம் படைத்தோருக்கா?

பக்தர்களுக்கா?

 ஏழைகளுக்காக?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் 

அமைதியான மனநிலை உள்ளவர்கள் எத்தனை பேர்.

 அங்கு தான் ஆண்டவனின் சூக்ஷ்ம தண்டனைகள்.

ஆலயங்கள் ஆஸ்ரமங்களின் சோதிடர்களின் அருள்வாக்கு சொல்பவர்களின் செல்வாக்கு அதிகமாகிறது.

 இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் பக்தி.

சரணாகதி அடைந்து நீயே கதி என்ன அபிராமி பட்டர் பிரகலாதன் .

துளசிதாசர் அருணகிரி நாதர் போன்ற காமுகர்கள் மனமாற்றம்.

 இறைவனின் லீலைகள் யார் அறிவார்கள்.

அழியும் உலகில் பக்தி தர்மம் தான் அமைதி தரும்.

 அமைதி தேடி மது சாலை மாதுசாலை

நிரந்தரமல்ல.

 தியானம் தான் உயர்ந்த நிலை.

இதை உணரும் போது தான் முதுமை.

பட்டறிவு.  அதுதான் அனுபவ ஞானம்.

இது உலகியல் சாரம்.

 இன்றைய இறை சிந்தனைகள்.

சே. அனந்தகிருஷ்ணன்.சென்னை.

தியானம்

 வணக்கம்.

இன்றைய சிந்தனைகள்.


  மனிதன் நலமாக வாழ வருமானம் தேவை.

  மானம் தேவை என்ற காலம் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்கு இருந்த காலம் போய் வருமானம் என்ற குறிக்கோள் நிம்மதி தருகிறது என்ற எண்ணம் தவறானதா? சரியானதா?

 பணம் படைத்தவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனரா?

 அப்படி இருந்தால்    பரிகார ஸ்தலங்களில் கூட்டம் அதிகம்.

கருத்தரிப்பு மையங்களில் கூட்டம் அதிகம்.

ஆஸ்ரமங்களில் கூட்டம் அதிகம்.

 அங்கு அமைதி தேடி தீக்ஷை பெற பல ஆயிரம்.

முன்வரிசையில் அமர்ந்து ஆஸ்ரம ஆச்சாரியார் ஆசி பெற இரண்டு லட்சம்.

 பரிகார யாக ஹோம் அன்னதானம் பல லட்சம்.

 அங்கு புலம்பும் பெரும் தனவந்தர்கள்.

 புண்ணியம் தேடி  தானம் அளிப்பவர்கள். நோய் தீர பரிகாரம்.

மகப்பேறு பரிகாரம்.

 பணம் உள்ள இடத்தில் நோயாளிகள்.

மன நோயாளிகள்.

மன வேதனைப் படுவோர்.

 இன்றைய சூழலில் பலரிடம் பணம் உள்ளது. ஆனால் மன நிம்மதி?

ஆழ்நிலை தியானம் பயிற்சி.

 மனவளக்கலை.

 என்று ஓடும் கூட்டம் அதிகம்.

சிந்திப்பீர் பணம் ஆலய உண்டியலில்.

  அன்னதானத்தின்.

அறவழிக்கூடங்களில்.

அநாதை ஆஸ்ரமங்களில்.

 பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள். நிம்மதியான மணவாழ்க்கை உள்ளதா?

வருமானம் உள்ளது.

 நிம்மதி!

 தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையில் மகிழ்ச்சி.

 பணம் படைத்தோருக்கா?

பக்தர்களுக்கா?

 ஏழைகளுக்காக?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் 

அமைதியான மனநிலை உள்ளவர்கள் எத்தனை பேர்.

 அங்கு தான் ஆண்டவனின் சூக்ஷ்ம தண்டனைகள்.

ஆலயங்கள் ஆஸ்ரமங்களின் சோதிடர்களின் அருள்வாக்கு சொல்பவர்களின் செல்வாக்கு அதிகமாகிறது.

 இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் பக்தி.

சரணாகதி அடைந்து நீயே கதி என்ன அபிராமி பட்டர் பிரகலாதன் .

துளசிதாசர் அருணகிரி நாதர் போன்ற காமுகர்கள் மனமாற்றம்.

 இறைவனின் லீலைகள் யார் அறிவார்கள்.

அழியும் உலகில் பக்தி தர்மம் தான் அமைதி தரும்.

 அமைதி தேடி மது சாலை மாதுசாலை

நிரந்தரமல்ல.

 தியானம் தான் உயர்ந்த நிலை.

இதை உணரும் போது தான் முதுமை.

பட்டறிவு.  அதுதான் அனுபவ ஞானம்.

இது உலகியல் சாரம்.

 இன்றைய இறை சிந்தனைகள்.

சே. அனந்தகிருஷ்ணன்.சென்னை.

திங்கள், நவம்பர் 21, 2022

வாழ்வதரிது

 வாழ்வதரிது.

இறைவன் அருளில் ஒளிர்வதரிது.


அறிவியல் அதிசயம் 

அதைவிட ஆண்டவன் 

படைக்கும் 

இயற்கை அதிசயங்கள்.


இயற்கை இன்பங்கள் 

தென்றல் காற்று.

கடற்கரை காற்று.

வெயிலின் கொடுமை.

நிழல் தரும் மரங்கள்.

கடல் கரையில் இனிய நீர் ஊற்று.

இனம் மொழி சாதி மதம் ஏழை பணக்காரன் 

வேறுபாடின்றி கிடைக்கும் 

இயற்கை  இன்பங்கள்.

இல்லற சுகம் தூக்கம்

 இளமை முதுமை மரணம்.

அறிவியல் சுகங்கள் 

அனைவருக்கும் கிட்டாது.

 மழை அனைவருக்கும்.

காற்று அனைவருக்கும்.

 பூமி அனைவருக்கும்.

ஆகாயம் அனைவருக்கும்.

நெருப்பு அனைவருக்கும்.

இயற்கை சீற்றங்கள் அனைவருக்கும்.

பசி தாகம் காமம் குரோதம் 

ஆசை அனைவருக்கும்.

இவைகளை அனுபவிக்கும் 

அனைத்து ஜீவராசிகள்

  மரம் செடி கொடிகள்.

ஆனால் அறிவியல் சுகங்கள்

விண்வெளிப்பயணம்.

அதில் முதல்வகுப்பு.

ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள்.

ஐந்து நட்சத்திர விடுதி சுகங்கள்

உயர் பதவிகள் அதிகாரங்கள்

உடல் வலிமை பலகீனங்கள் 

அனைத்தும் கிடைக்க 

வினைப்பயன்

ஆண்டவன் அருள்.

அமானுஷ்ய சக்தி.

நம்பித்தான் ஆகவேண்டும்.


இன்றைய எண்ணங்கள்.

ஞாயிறு, நவம்பர் 20, 2022

இயற்கையின் அதிசயங்கள்

 S. Anandakrishnan।

சே.அனந்தகிருஷ்ணன்.

தலைப்பு ---இயற்கையின் அதிசயம்.


முன்னுரை --உலகில் இயற்கையின் அதிசயம் மனிதனின் கற்பனைக்கு ஆதாரங்கள்.

ஒவ்வொரு நிகழ்விலும் ஆலம் விதையின் பெரும் மரம். தென்னை மர இளநீர் தண்ணீர்.

உப்புக்கடல்  கரையில்  குடிநீர் ஊற்று.

பாலைவனத்தில் சோலை வனம்.

வடதுருவ தென்துருவப் பனியில் வாழும் பனிமனிதன். பனிக்கரடி. அதிசயங்கள் .

பொருளடக்கம்

   இயற்கை அதிசயங்களில் ஒன்று வண்ண மலர்கள்.  அதில் வீசும் மணம். மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்.  முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும்  அதிசயம்.

 விலங்குகளில் பெரிய யானையின் சைவ உணவு.

 புலி சிங்கம்  போன்ற வலிமை மிக்க அசைவ மிருகங்கள். மான்,முயல் போன்ற சாதுவான மிருகங்கள். 

 தேள் பாம்பு நட்டுவாக்காலி போன்ற விடப்பூச்சிகள்.

தேனீயின்‍ சுவைமிக்கத் தேன். 

  பறவைகளின் நிறங்கள் ஓசைகள் கூடுகள்.  தூக்கணாங்

குருவியின் கூடுகள்.

  கரையான் புற்று. அதில் வாழும் பாம்புகள். எறும்புப் புற்று. அதில் சேமித்து வைக்கும் உணவுப் பொருட்கள். 

கொசுக்கள் கூட்டம்.

அந்த சிறிய கொசுவிற்குப் பயப்படும் ஆறறிவு பெற்ற மனிதர்கள்.

  வயிற்றில் வளரும் நாடாப் புழுக்கள். 

 வாயில் போடும் மணம் மிக்க உணவு அதிக நாற்றமாக வெளி வருதல். 

 இரத்த ஓட்டம்

 இரத்த வகைகள்.

கண்ணுக்குத் தெரியாத விந்து மூலம் கரு உருவாகி கண் காது மூக்கு மூளை அறிவுள்ள அறிவற்ற மனிதர்கள்.

 பிறவிக்கு ருது பிறவி அங்ககீனர் கள்    இளம்பிள்ளை வாதம்  முதுமை இளமை மரணம் ஒவ்வொன்றும் இயற்கையின் விந்தையே.

 பிஞ்சில் துவர்ப்பு காயில் புளிப்பு பழத்தின்   இனிப்பு.

பழத்திலும் புளிப்பு.

 ஊறும் நத்தைகள் அது சுமந்து வரும் பாதுகாப்புக் கூடு. 

பறக்கும் பறவை.

 மிக உயரமாக பறக்கும் கருடன்.கழுகு.

 நீர்வாழ்வன. நீரிலும் நிலத்திலும் வாழ்வன.


உறுதி வாய்ந்த தேக்கு மரம். தொட்டால் முறியும் முருங்கை. 

  

    பூச்சிகளைத் தின்னும் செடிகள்.

மண் வகைகள்.

 மண்வளத்திற்கேற்ப  மரம் செடி கொடிகள்.

     குளிர் காற்று புயல் சூறாவளிஆழிப் பேரலை  நில நடுக்கம்.இப்படி  இயற்கையின் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவை.

 முடிவுரை  :- இயற்கையின் சூரிய சந்திர விண்மீன்கள் ஒளியும்   அதிசயம். மினுக்கட்டான் பூச்சியின் ஒளி.

 குளிர் நீர் வெந்நீர் ஊற்றுகள்   என்று  இயற்கையின் அதிசயங்கள்   அமானுஷ்யமானவை.