திங்கள், செப்டம்பர் 17, 2012

ஓம் கணேசாய நமஹ.


ஓம்  கணேசாய  நமஹ.

சனாதன தர்மத்தில் உருவ வழிபாட்டுக்கு என 

ஒரு மகத்தான இடம்.

புத்தர் சிலை சிதைத்ததற்கே சிந்தை கலங்கினோம்.

ஆனால்,

அடுத்தவாரம் ஆயிரக்கணக்கான 
பூஜிக்கப்பட்ட 
ப்ராணப்   பிரதிஷ்டை செய்யப்பட 
ஆயிரக்கணக்கான 
அழகான கவர்ச்சி 
சிலைகள்.
ஆராதனை செய்யப்பட்ட அழகு 
இறை உருவங்கள்.
ஆராதனைக்குப்பிறகு 
வரம் தர ஆயத்தமான 
ஆர்வமுடன்  இருக்கும் 
வினை தீர்க்கும் விநாயக சிலைகள்.

அடுத்தவாராம் கடல் அலைகளால் 
அலங்கோல மாகும் 
அநாகரீகக் காட்சிகள்.
ஆகையால் தான் 
ஆள்பவர்கள் மனதில் 
சுயநலம்.
ஊழல் .
லஞ்சம்.
ஆசிரியர்கள்.
காவலர்கள் 
அதிகாரிகள்,
அலைபேசி.
தொலைபேசி 
அனைத்திலும் 
அழியும் உலகத்திலும் 
அகலா  மாயை.
காம வாசனைகள்.
கற்பழிப்புகள்.
கொலைகள்.
கொள்ளைகள்.
கொலைவெறிப் பாடல்கள்.
வரம்கொடுக்காமல் வரும் விக்னங்கள்.(தடைகள்)
உருவ வழிபாட்டுக்கு  நேரும் அவமானங்கள்.
விநாயக பக்தர்களே!
சற்றே சிந்தியுங்கள்.
அவரின் அழகு உயிர்பெற்ற (பிராணப் பிரதிஷ்டை)
உருவங்களை 
சிதைக்காதீர்கள்.
அவரை இவ்வாறு அலங்கோலப்படுத்துவது,
அவரிடம் அருள் பெறவா ?
சாபம் பெறவா ?
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.