வியாழன், ஜூலை 19, 2012

EDUCATIONAL STRUGGLE WHY?




தனியார்  பள்ளியில் பின் தங்கிய, குறிப்பாக பொருளாதாரத்தில்  பின் தங்கிய

25% மாணவர்களை  தனியார்  பள்ளியில் சேர்க்கவேண்டும்  என்ற அரசு

 உத்தரவு  மிகவும் சிந்திக்க வேண்டிய  ஒன்று.
 பெங்களூர்  ஆக்ஸ் போர்டு  பள்ளியில்  25% மாணவர்களை அவமானப்படுத்துவதாக  செய்தி.
  25% மாணவர்களை ஏன்  தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும்? அரசுப்பள்ளிகள்  இயங்குகிறதா  இல்லையா?

தனியார் பள்ளி மாணவர் கள்   சிலர் கொண்டுவரும்  அழிப்பான்  ரூபாய் 50.

 அவர்கள்  வந்திறங்குவது    பல  லட்சங்கள்  மதிப்புள்ள மகிழுந்து.

  அவர்கள் எழுதும் குறிப்பேடு அரசாங்க வெளியிடும் குறிப்பேடு போல்
 இ ரண்டு-மூன்று  மடங்கு விலை உள்ளது.
போன்றே காலணி ;சீருடை;உணவி கொண்டுவரும் லஞ்ச்  பாக்ஸ். 
  இது மாணவர்கள் நிலை.

ஆசிரியர்கள் ஊதியம்.பள்ளி பராமரிப்பு,குடிதண்ணீர்,கழிப்பிடம் போன்ற

வசதிகளுக்கு சிலவு ,ஆண்டுதோறும் பள்ளியை புதுப்பித்தல் ,பேருந்து

வசதிகள்,ஒவ்வொரு வகுப்பறைக்கும் மின்வ்சதிகள்,தலைமை ஆசிரியரின்

குளிர் சாதன அறைகள்,ஆசிரியர்கள் அமர வசதியான

இருக்கைகள்,ஓய்வறைகள்,பெற்றோர்- மாணவர்கள் தங்கள் பள்ளியில்

அதிகம் சேரவேண்டும் என்ற  தளரா உழைப்பு; இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் 

என்ற ஒரு அரசு ஆணை மட்டும் தான்.பொருளாதார மானியம் என்பது ஒரு

 பைசா கிடையாது.

ஆனால் கடு பிடிகள் அதிகம்.  தர்ம  சிந்தனைகள் உள்ளவர்கள் தான் பள்ளிகள்

 நடத்தவேண்டும் என்றால் சராசரி சிலவுகள் கணக்கிட்டால்  கண்ணீர்தான் 

வரும்.


200  மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு குறைந்த பக்ஷம் ரூபாய் 5000/;ஊதியம் என்றால்  மாதம் ரூ.40,000/;
 ஆயா,துப்புரவுத்  தொழிலாளி தண்ணீர் எடுத்துவைப்பவர், பள்ளிகூட்டுவோர் மின்கட்டணம்,தொலைபேசிக்கட்டணம், முதலுதவி மராமத்து என்றவகையில் ரூ.15,000/
;நிர்வாகத்தினரின் அன்றாட மன உளைச்சல்  மாணவர்கள் பாதுகாப்பிற்கு மதிப்பிட முடியாது.

பள்ளிகள் துவங்கியதே வருமானத்திற்கு என்று  மனசாட்சி

உள்ளவர்களுக்குத்  தெரியும்.

  சில க ல்லூரி குறிப்பாக தனியார் பொறியியல்  கல்லூரி பேராசிரியர் 

ஊதியமே மாதம் 10,000/மட்டுமே
.அதைப்பற்றி யாருக்குக் கவலை .அவர் ஏன்   இப்பணிக்கு வரவேண்டும்.(இக்கல்லூ ரிகள் யார் நடத்துகின்றனர் என்பது உலகறிந்த ரகசியம்) சரி. 

ஒரு தொடக்கப்பள்ளி நடத்த  குறைந்த பட்ச சிலவு  மாதம் 60000/;
வருடம் 60,000 x 12 =  7,20,000/-

தர்மம் செய்பவர்கள் யார்.?

அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகள் ;கல்லூரிகள் 

 ;ஏழைகள் தன பிழைப்புக்காக   நடத்தும் பள்ளிகள் 

,அனைத்தும் மூடிவிட்டு அரசே பள்ளிகள் நடத்த முடியுமா?
 அனைத்துத் தரப்பு மக்களும் இதை  ஏற்பார்களா?

குளிர் சாதனா வண்டியில் பயணம் செல்வோர்,

 கட்டைவண்டியில் செல்வோர் என்ற பொருளாதார நிலை நம் நாட்டில்.

தனியார் பள்ளிகளால் அரசுக்கு பல கோடி சிலவுகள் மிச்சம்.

 கல்வி என்பது அரசர் ஆண்ட காலத்தில் இருந்து இன்று வரை 

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது

.ஒரு மகிழ்ச்சியான கசப்பான உண்மை

.  
அபதுல் கலாம் அரசுப்பள்ளியில் படித்தவர்.

  கமலஹாசனும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்.

   அரட்டை அரங்கம்  புகழ்  விசு அவர்களும் அரசு உதவி பெரும் பள்ளியில்

 படித்தவர்தான்.

   அறிவு,திறன் என்பது பற்றி திரு கமல் மற்றும் விசு அவர்களுக்குத்தெரியும்
.
  நான் படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் எவ்வளவு  ஒழுக்கமாக 

இருந்தனர் என்பதற்கு தேர்வு மையமே மாற்றப்பட்ட வரலறு உண்டு.

கல்வி சம்பந்த மான,  கட்டணம் சம்பந்தமான போராட்டம் தேவையா?

 விந்தையான  அரசியல்  என்றே தோன்றுகிறது.
  

தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் 

தொண்டாற்றுகின்றனர்  என்பதுதான்  உண்மை.




செவ்வாய், ஜூலை 17, 2012

goverment school facilities

பொது  மக்களே!
அறுபத்தேழு ஆண்டுகள் ஆகியும் இலவசக்கல்விக்காக

 போராட்டம் நடக்கிறது.

சென்னையில் போராட்டம்;சேலத்தில் போராட்டம்  என.

இலவச   அ ரசாங்க உயர்நிலைப்பள்ளிகள் ,ஆரம்பப்பள்ளிகள்  அரசாங்கம்
 
முற்றிலும்  மூடிவி ட்டதா?இல்லையே.

திருவல்லிக்கேணியில்  இந்து மேல்  நிலைப்பள்ளி,கெல்லட்,என்.கே.டி

 ' மாநகராட்சி , அரசுப்பள்ளிகள்,வெஸ்லி .மோனஹன்,சில்ரன்  கார்டன்

 ,சாந்தோம்,கோபால்ட்  என்று  இத்தனை அரசு உதவி பெறும்  பள்ளிகள்

இருந்தும் ,

பல மெட்ரி குலேசன்  பள்ளிகள்  இயங்கக்  காரணம்  பொதுமக்கள்

விரும்புவதால்  தான்.

அரசின் சலுகைகள்:
  1. இலவச  பாடநூல்கள்
  2. இலவச  பேருந்து  வசதி
  3. தாழ்த்தப்பட்ட பின்தங்கிய பிரிவினருக்கு  உதவித்தொகை
  4. விதவை,முன்னால் ராணுவ வீரர்கள்,துப்புரவுத்தொளிலாளர்
  5.  கு ;ழந்தைகள்  அனைவருக்கும் உதவித்தொகை,
  6. விபத்தில்  உயிர் இழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள்.
  7. மதிய உணவு    தி ட்டம்.
  8. மாற்றுத் திறனாளி  குழந்தைகளுக்கு  சலுகைகள்
  9. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிப்பணம்
இன்னும் பல  நல திட்டங்கள்.
இலவச  குறிப்பேடுகள்,காலணி ,சீருடை,மிதிவண்டி,மடிகணினி,

இருப்பினும்  தனியார்  பள்ளிகள்  காந்தக்  கவர்ச்சி.

விடுதலை ஆகி  67 ஆண்டுகள்.கல்விக்குப்போராட்டம்.தேவையா?
அரசு  மருத்துவ மனை/தனியார்

அரசு  தொலை பேசி/தனியார்.

 விரும் புவோர்    செல்ல   வசதிகள்.

போராட்டம் தேவையா?அமைதியான  நடவடிக்கை

மக்கள்  தங்கள்  குழந்தை  களை   சே ர்ப்பதிலா?

அல்லது  அனைத்தும் அரசாங்கத்தால் ஈடு  செய்ய முடியுமா?

அரசுப்பேருந்துகள்  இருந்தும் ஆட்டோ ரிக்ஷாக்கள்,கால் டாக்சிகள் ,

தனியார் பேருந்துகள்.

எதையும் தடுக்க எதிர்க்க  ஆதரிக்க  மககளாட்சியில்  உரிமை உண்டு.

அவை நியாயமானதாக இருக்கவேண்டும்.

ஞாயிறு, ஜூலை 15, 2012

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?


எல்லாமே நன்மை  யாருக்கு ?

மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள்,பொது சொத்தை அளிக்காமலிருத்தல்,

சட்ட விதிகளை மீறாதிருத்தல்,

 கல்விக்கூடங்களை  மதித்தல் ,

ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல்,

ஆட்சி செய்பவர்களை மதித்தல்,

காவல் துறையைப் போற்றுதல் ,

பொது இடங்களை அசுத்தா மாக்காமல்  இருத்தல்,

வாக்களித்தலில் பெறுவதில் நேர்மை காட்டுதல்,

இவை  நமது  நாட்டில்  இல்லை  என்று கூறமுடியாது.

காரணம்  தர்ம தேவதையின்  தண்டனைகள் அதிகம்.

அதே நேரத்தில்  அவைகளை

 உணரா ,உணர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் தவிப்போர் பட்டியல் அதிகம்
.
அந்த பட்டியல்   கலியுக  தர்மம்   என்ற  மூட நம்பிக்கையில்

  நீண்டு கொண்டே செல்கிறது.

அதர்ம  வழியில் செல்வதே தர்ம  வழியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம்  ஒரு விண்ணப்பம் பெற்று அதற்கு அனுமதி பெற மக்களை

அலைய வைக்கிறது.அதனால் மக்கள் நேரடியாக தங்கள் அலுவல்களை

விட்டுவிட்டு அலைவதால் நேரம்,பணம்  அனைத்தும் விரைய மாகிறது.

வேலை முடிவதில்லை.

அதற்கென  சில முகவர்களை அணுகினால் உடன்  பணி முடிந்து  விடுகிறது.

ஆட்டோவிற்கு  கொடுக்கும் பணம் முகவருக்கு.

இதில் பணம் இல்லாமல் நேர்மையாளர்களுக்கும் நியாயம்

கிடைக்கிறது.
அவனின் ஆயுள் காலம் முடியும் பொழுது அல்லது  ஆயுள் முடிந்த பின்.

இது அவன்  "அவன் தலை எழுத்து" என்ற மூட நம்பிக்கையால்

 மறைக்கப்படுகிறது.

நிர்வாகம் சரியில்லை என்று யாரும் கூறுவதில்லை.

சட்டம் ஓர் இருட்டறை என்ற அறிஞர்  அண்ணாவின் கூற்று மெய்யாகிறது.

அனால் அவர்  நாமம் கூறி மக்களுக்கு நாமம் போடும்  ஆட்சி

தொடர்கிறது.
ஏழைகள் எப்பொழுதும் போல் வெயிலில் நியாயவிலைக்கடைகளின்

 முன் நிற்பது  ஏழைகளின் தலை எழுத்து.

அந்த  நியாயவிலைக்கடைகள் பரிதாமமான இடத்தில்.

ரசீது போடுபவருக்கு வசதியாக அமர இடம் இருக்காது.

மூட்டைகள் இடிக்கும்.பக்கத்தில் திராசு.

.அங்கு நிறுத்துப்போடும் ஊழியர்  நிமிர்ந்து நிற்க இடம் இருக்காது.

அங்கு ஒரு சிறிய  ரவுடிகளின் சாம்ராஜ்யம்.

இது அனைவருக்கும் தெரிந்த ராஜ்ஜியம்.

அங்கு கூட்டம் சேரும் வரை பில்  போடமாட்டார்கள்.

கூட்டம் சேர்ந்த பின் தான் நிறுத்துப்போடுவார்கள்.

அது அவர்களுக்கு வசதி. பொதுமக்களுக்கு அவதி.

எல்லாம்  பொதுமக்கள்  தலைவிதி.

 இந்த நம்பிக்கை உள்ளவரை

அநீதி இழைப்போருக்கு நல்லதுதான்.

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?



வெள்ளி, ஜூலை 13, 2012

யார் குற்றம்?


யார்  குற்றம்?

அதிகமான  அரசுப்பள்ளிகளில்   கழிப்பிட  வசதிகள்  கிடையாது.

கழிப்பிட கட்டடங்கள் இருந்தாலும்  சுத்தமாக இருக்காது.

சுத்தமாக தண்ணீர் வசதி இருக்காது.

நீர்வசதிகள் இருந்தாலும்  மாணவர்கள் சிலரின் ஒழுங்கீனத்தால்

குழாய்கள் உடைக்கப்பட்டிருக்கும்.

தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கும்.

மாணவர்களுக்கு  முதலில் ஒழுக்கங்கள்  கற்பிக்கப்பட வேண்டும்.

ஆண்டுத் தேர்வின் இறுதிநாளன்று,பள்ளியின் பொது சொத்துக்களை பாழ் 

படுத்துவதில்  மாணவர்களுக்கு வரும்  ஆனந்தம்,ஆசிரியர்கள் படும் அல்லல் ,

இதைப்பயன் படுத்தி குளிர் காயும்  ஆசிரியர்கள் ,ஊழியர்கள்.

சிலர் மாணவர்களின்  இந்த செயல்களை வேடிக்கை பார்க்கும் காட்சிகள்.

மீண்டும் மராமத்து வவுச்சர்கள்  எழுதுவதில் காட்டும் தாராளம்.

இக்காட்சிகள்  பள்ளிகளில் மட்டுமல்ல;
 பொதுக்கழிப்பிடங்கள்,பொது குடி தண்ணீர்  வசதிகள் செய்யப்பட  இடங்கள்,ஆலயங்கள்  அனைத்து இடங்களிலும் காணப்படும்  அவலங்கள்.


ஆயுள்  காப்பீட்டு 14 மாடி கட்டட  மாடிப்படி  ஓரங்களில் வெற்றிலை பாக்கு

மென்று துப்பி ய எச்சல் . அதுவும்  மிகவும் படித்து பலரைக் கவர்ந்து  பிரிமியம்

பெற்று வரும்  முகவர்கள் என்ற அறிவு ஜீவிகள் செய்வது.

இதெல்லாம் யார்  குற்றம் .

அடிப்படைதவறுகள்  எங்கு ஏற்படுகின்றன.

 விடுதலை அடைந்து  பல

ஆண்டுகளுக்குப்பின்னும்  பொதுச்சொத்து

நம் சொத்து .அதை சேதப்படுத்தக் கூடாது  என்ற விழிப்புணர்வு வராததற்குக்

காரணம்  முறையான கல்வி இல்லை என்பதாலா?

அரசியலா? இயற்கை யான பண்பா/?!!

பூனா ,முபாய் சென்றால்  ஒரு காலடி எடுத்துவைத்து நடந்தால் எவ்வளவு

கவனமாக இருந்தாலும் பாண்-பராக் எச்சியை மிதிக்காமல் நடக்க முடியாது.

ஆலயங்களில்  குறிப்பாக திருவண்ணாமலை,பழனி போன்ற பெரும்  திரளாக

பக்தர்கள்  வரும் இடங்களில் கழிப்பிடம் என்பது  மிகவும் மோசமாக

  இருக்கும்.காரணம் போதிய கழிப்பிடங்கள் இல்லை
.
;இருக்கும்கழி ப்பிடங்களையும் பக்தர்களோ சுய நல வாதிகளோ

  சேதப்படுத்தி  இருப்பார்கள் .இக்கோவில்களுக்கு  கோடிக்கணக்கான

வருமானம் .

மதுரை,சென்னை  போன்ற நகரங்களில் போராட்டம் என்றால்

 அரசு பேருந்துகளை சேதப்படுத்துவதுதான்  முதலில்  நடக்கும்.

இந்த பேருந்துகளைத் தாக்குவது அரசியல் கொடிகள் வைத்துள்ள

கும்பல்களும் அதை பயன்படுத்தி  கொள்ளை அடிக்கும் சமுதாய

விரோதிகளும் தான்.அவர்கள்  மேல்  கடும்  நடவடிக்கை எடுத்தால் மீண்டும்

இச்செயல்கள்  நடக்காது.ஆனால் அதில் அரசியல் புகுவதால் ,

ஒரே  குற்றங்கள்  மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன  என்பதில் சற்றும்

ஐயமில்லை.

மக்கள் மனதில் மன  மாற்றம் தேவை.

பொதுச்சொத்துக்களை ,பொது இடங்களை சேதப்படுத்த மா ட்டோ ம் என்று.

மி ன் சார பல்புகள்  ஒரு  குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அடிக்கடி உடையும்.

ஒரு முறை இச்செயல் அடைந்ததும் கண்காணித்து கடும் தண்டனை

 அ ளித்தால்  அந்த இடத்திலேயே மீண்டும்   நடக்காது.

அந்த இடங்களில் அமோகமாக  பல சட்ட விரோத செயல்கள் நடக்கும்.

ஒரு ரவுடியோ திருடனோ பல முறை சிறை செல்ல ஆசைப்படும்   அளவுக்கு

  நமது நாட்டின் தண்டனைகள் உள்ளது வருந்தத் தக்கது.

 ஒரு ரவுடி ஒரு வழக்கறிஞரையோ/காவல் துறையினரையோ   அறைந்து

  விட்டு  நான் உள்ளே சென்று விட்டு ஓரிரு மாதங்களில் திரும்பி வ ந்து

விடுவேன். சட்டம்  உன்னை எப்படி பாதுகாக்கும் /என்னை  என்ன  செய்து
 வி டும்.??
என்கின்ற அளவிற்கு  தண்டனைகள் மலிவாகி விட்டன.
பொருள் சேர்ந்தால் குற்றங்கள் பொருளற்றதாகி விடும்.

பொறுக்கிகள் காவலதிகாரிகளை அடித்து

நாயகனாவது தான்  இன்றைய திரைப்பட  கதைகள்.



ஆசிரியர்களும் தண்டனைகளும்



ஆசிரியர்களும்  தண்டனைகளும்

      தண்டனைகள்  என்பது மாணவர்களுக்குத்  தேவையா ?இல்லையா?

 என்ற  வினா  எழும் பொழுது  மாணவர்கள்  தங்கள் தவறுகளை  உணரும்

அளவிற்கு தண்டனை  கொடுத்தால்

 அந்த ஆசிரியர்களுக்கு  மதிப்பு  அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஆசிரியரின்  கோபமும் தண்டனையும்  மூர்க்கத்தனமாக  இருக்கும்

பொழுது  அந்த  ஆசிரியரின்  மதிப்பு  குறைகிறது.

எனது ஆசிரிய பணிக்கால  அனுபவத்தில்  மாணவர்கள்  தவறு செய்வது,

மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது,

வகுப்பில் இரைச்சலிடுவது  அனைத்திற்குமே  ஆசிரியர்களின்

 நடத்தை  தான்  காரணமாகிறது.

சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வகுப்பில் அமைதி ,ஒழுங்கு

கட்டுப்பாடு  இருக்கத்தான் செய்கிறது.

ஆசிரியர்கள் சிலர் தவறான சொற்களை வகுப்பில் பயன்படுத்தும் பொழுது

மிகவும்  சிக்கல் ஏற்படுகிறது.

சில மாணவர்களும்  வகுப்பறையில்  ஆசிரியரை  அவமதிப்பதில்

ஆனந்தமடைகின்றனர்

 பயிற்சி  ஏடுகள்  அறிவியல் பாடத்தில்  எழுதி
 ,
அந்த   தேர்விற்கு  முன்  பெறுவது  என்பது

அரசு,மாநகராட்சி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மிகவும்  கடினம்.

தனியார்  பள்ளிகளில்  பெற்றோர்கள் காட்டும் அக்கறை

 இப்பள்ளிகளில்  காட்டுவதில்லை.

  தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தாமதமாக வருவதில்லை.

அரசு  சார்ந்த பள்ளிகளில் மாணவர்கள் தாமதமாகவே வருகின்றனர்.

ஒரு  பெற்றோரின் கூற்று எனக்கு வியப்பளித்தது.

என் இரண்டாவது பையனை பள்ளியில் விட்டு விட்டு வந்ததால்

என் மூத்த பையன் தாமதமாகிவிட்டது.

அந்த பள்ளி கேட்  மூடப்பட்டுவிடும்.

இங்கே அப்படி இல்லையே.நான் படிக்கும் போதே

 தாமத மாகத்தானே வந்தேன்.

தனியார் பள்ளிகளின்  சட்ட திட்டங்களுக்கு

  ஒழுக்கம் என்று கட்டுப்படும் பெற்றோர்கள்
,
அரசுப்பள்ளி என்றாலே  அலட்சியம் தான் காட்டுகின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும்.


(தொடரும்)

புதன், ஜூலை 11, 2012

கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2




ஆசிரியர்கள்  நிலை பற்றி கூறிய பின் ,

ஆசிரியர்கள் செயல்பாடுகள் குறித்தும்

விளக்க வேண்டி உள்ளது.

ஆசிரியர்கள்  பாடம் நடத்தும்  போது

 பாடத் திட்டத்தில்  மட்டுமே  கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

இன்றைய மாணவர்களுக்கு பல விஷயங்கள்

தெரிந்துள்ளன.அவன் கவனம் முழுவதும் வகுப்பறையில் இருக்க வேண்டும்.

அவனுக்கு வீட்டிலும் பல பிரச்சனைகள்  உள்ளன.

சில மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றால் ,

அவன் பெற்றோர்கள் வரும் வரை வீட்டு  வாயிலிலேயே  காத்திருக்க

வேண்டிஉள்ளது.சில நேரங்களில்  பெற்றோர்கள் தாமதமாக

வருகின்றனர்.

மாணவர்களின்  தனிப்பட்ட இவ்வாறான பிரச்சனைகளையும் ஆசிரியர்கள்

கவனிக்கவேண்டும்.


 ஒரு முதலாம் வகுப்பு மாணவன் குறிப்பேட்டிற்கு அட்டை போடவில்லை

என்று  ஆசிரியை  மிகவும் கேவலப்படுத்தியதுடன் ,ஒரு அட்டையில் indicipline

boy  என்று எழுதி அன்று முழுவதும் அவன் நெற்றியில்  கட்டி வைத்து

அவமான  படுத்தி உள்ளார்.
அந்த 5-6 வயது குழந்தை மனம் எவ்வளவு புண் படும் என்று நினைக்கவில்லை.

சிலர் ஒரு மாணவன் செய்யும் தவறுக்கு  அந்த வகுப்பறையில் உள்ள

அனைத்து மாணவர்களுக்கும் தண்டனை அளிக்கின்றனர்.

ஆங்கில வழி  பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் அக்கறை தமிழ் வழி

பயிலும் மாணவர்களுக்கு அளிப்பதில்லை.காரணம் அதிகமான பெற்றோர்கள்

படிக்காதவர்கள்  மட்டும் அல்ல ;வறியவர்களும் கூட.

சமுதாயமும் அவர்களை மதிப்பதில்லை.எனக்குத் தெரிந்த தமிழ் வழியில்

எம்.காம்; படித்தவருக்கு வேலைக்கு  நேர்காணல் செல்லும்  பொழுது

அவமானம் தான் ஏற்பட்டது.

தாய்மொழியில்  பேசினாலே அவன் அவமானப்பட  வேண்டிய நிலை.

படத்தலைப்பு  தமிழில் வைத்தால் ,வரி விலக்கு .ஆனால்,பாடல்கள்

ஆங்கிலத்தில்  இருக்கலாம்.

இந்நிலை உள்ளவரை கல்வித்தரம் ,ஏற்றத் தாழ்வுகள்,

கட்டணங்கள் எப்படி  மாறும்.

விடுதலை அடைந்த பின்  நாட்டின் நிலை.ஆங்கிலமின்றி வேலை கிடையாது.

கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2
(தொடரும்)

ஆசிரியர்களும் தண்டனைகளும்-pakuthi-1

ஆசிரியர்களும்  தண்டனைகளும்.

     சமீபகாலமாக  ஆசிரியர்கள்  அளிக்கும் தண்டனைகள்  குறித்து சேதிகள்

வந்த வண்ணம்  உள்ளன.


ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு  நல்வழிகாட்டிகளாக  இருந்த காலம்  போய்

,அவர்கள் அரசாங்க ஊதியம் பெரும் தொழிலாளிகளாக  மாற்றிய  பெருமை

 ஆங்கில அரசாங்கத்தையே  சாரும்.அதற்குக்  காரணம்  நமது நாட்டின் 

குருகுலக்கல்வி  முறை.

பக்த பிரகலாதன் கல்வி  பயின்றபோது  குரு  அரசருக்கு பயந்து  கல்வி

போதித்தார். இன்று  ஆசிரியர்கள்  கல்வி அதிகாரிகள்,தனியார் பள்ளி

நிர்வாகிகள்,பள்ளி  முதல்வர்கள்,பயிலும்  மாணவர்கள்,பெரும் ஊதியங்கள்,

தனிவகுப்பு  கட்டண ங்களுக்கு வரும்  பெற்றோர்கள்,இளம் பிராயத்திலேயே

மன வளர்ச்சி ,அறிவுத்திறன் பெற்ற மாணவர்கள்  என அனைவருக்கும்

பயந்தே  கற்பிக்கவேண்டிய  சூழல்.

இவர்களைத்  தவிர  திரைப்படங்கள்,சின்னத்திரைகள்  அனைத்திலும்

ஆசிரியர்கள்  என்றாலே  கேலியும் கிண்டலும் தான்.

இதில் வியக்கத்தக்க  சிந்திக்கத்தக்கது  என்னவென்றால்

 எதிர்கால  நாட்டின் சிற்பிகளை  உருவாக்கும்  கல்வித்துறை,

நாட்டின் சட்ட ஒழுங்கை  நிர்வகிக்கும்  காவல்துறை,

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அரசியல் அமைச்சர்கள்

 அனைவரையுமே  கேலியும் கிண்டலும் அவமானப்படுத்துவதும் தான்.

ஒருநாட்டின் முதல்வராக கலைஞராக  இருந்தவர் எடுத்த கதையாகிய

பாலைவன ரோஜாக்கள்  கதையின் முடிவு  நீதி நியாயங்கள்  குழி தோண்டி

புதைக்கப்படும்  என்பதுதான்.

 இந்த பரிதாப   கேலி கிண்டலுக்கு  ஆளான மூன்று துறைகளுமே

 அதாவது  அரசியல்,கல்வி ,காவல் மூன்றுமே இன்று  ஊழலின் 

சாம்ராஜ்யமாக  இருப்பதுதான்.
(தொடரும்)

ஞாயிறு, ஜூலை 08, 2012

WHY ?WHY/?FEE STRUGGLE?


               தனியார்  பள்ளி  கட்டணப்  போராட்டம்  ஏன் ?


 அனைவரும்  இரண்டாம் வகுப்பில்  இருக்கையில் அமர்ந்து போக முடியுமா??
  1. எல்லோரும் தேநீர்  கடை பெஞ்சியில் அமர்ந்து தேநீர் அருந்த முடியுமா??

  2. அனைவரும்  குளிர் சாதன்முள்ள வீட்டில் குடி இருக்க முடியுமா///?

  3. எல்லோரும்  தள்ளுவண்டி இட்லிக்கடையில்  இட்லி சாப்பிட முடியுமா??

  4. எல்லோரும் நகரப்பேருந்தில் பயணிக்க முடியுமா//?

  5. எல்லோரும் தரை டிக்கட் வாங்கி சினிமா பார்க்க முடியுமா??

  6. எல்லோரும் காரில் செல்ல முடியுமா?

  7. எல்லோரும் பேன்ட் -- ஷர்ட் -ஷூ போட்டு தங்கள்தங்கள் வேலைக்கு செல்ல முடியுமா ?

  8. கோயிலில் எல்லோரும் வரிசையில் நின்று இறைவனை
  9.  தரிசிப்பார்களா??

  10. எல்லோரும் தாஸ்--மார்க் கடையில் சரக்கு வாங்கி அருந்துவார்களா//

  11. எல்லோரும் மாநகராட்சி  மைதானத்தில்  விளையாடுவார்களா??

  12. குளிர்சாதன படுக்கைவசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்தவர்கள் 

  13. சாதாரண  கட்டண அரசுப்பேருந்தில் பயணம் செய்வார்களா ?

  14. நீலகிரி போன்ற பேரங்காடிகளில் பொருள் வாங்குபவர்கள் சின்ன 

  15. நாட்டார் கடையில் தெருவில் நின்று பொருள்கள் வாங்குவார்களா??

  16. தனியார்  மருத்துவமனை  செல்பவர்கள் அரசு மருத்துவமனை 

  17. செல்வார்களா??
  18. குறிப்பேடு காகிதத்  தரத்திற்கு ஏற்றவாறு 

  19. விற்கப்படுகிறது..எல்லோராலும் தரம் உயர்ந்த விலை உயர்ந்த 

  20. குறிப்பேடு வாங்க முடியுமா??

  21. எழுத்து பொருட்கள் 125 ரூபாய் பந்துமுனைப் பேனா பயன்படுத்துபவர்கள்
           ஐந்து ரூபாய் பேனா பயன் படுத்துவார்களா ?

16.வசதிக்குத்தகுந்த வாழ்க்கை ,என்பது போல் வசதியாக படிப்பவர்களுக்கு

கட்டணம் அதிக மாகத்தான் இருக்கும்..

அரசாங்கத்திற்கு  தனியார் பள்ளிகளால்  கோடிக்கணக்கான  பணம்

மீதப்படுகிறது..

அரசாங்கம் பள்ளிகள் நடத்துகிறது .

அனைவருக்கும் அனைத்தும் இலவசம்..

அங்கு அனைவரும் சென்றால் தனியார் பள்ளிகள் எப்படி இயங்கும்???..
?

இது  நடைமுறை சாத்தியமா//?


இந்த போராட்டங்கள் தேவைதானா?

?அமைதியாக அனைவரும் அரசு,,மாநகர,,பஞ்சாயத்துப் பள்ளிகளில் 

சேர்த்தால் பிரச்சினை தீரும்..

எத்தனை அரசியல்வாதிகள் ,தலைவர்கள் 1980க்குப்பின் அரசாங்க பள்ளிகளில்
 
சேர்த்துள்ளனர்.. ஒரு மாவட்ட ஆட்சியாளர் பஞ்சாயத்து பள்ளியில் சேர்த்தது

பெரும்  தலைப்புச் செய்தி .

  .மனிதன் நாயைக்கடித்தல் செய்தி.. ஆகையால்  செய்தியாக  வெளிவந்தது.
.
செய்தி என்பது அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதே செய்தி..

 பின்னர் ஏன்  போராட்டம்..


ஒவ்வொரு  பள்ளியும்  தங்கள்  தரம் காக்க கட்டுப்பாட்டு  விதிகளை 

அமைக்கிறது..அவை    கொத்தடிமை  என நினைப்பவர்கள்  வேறு 

பள்ளிகளுக்கு   சுதந்திரமாக  இருக்க செல்லலாமே//.

சில   தவறுகள் சுட்டிக்காட்டலாம்..மாற்றுச்  சான்றிதழ்  கோரினால் அதற்கு

அதிக கட்டணம்  கேட்பது  கண்டிக்கத்தக்கது..




குறிப்பு::-முன்னால்   இறுக்கமான பெயருள்ள  ஓய்வுபெற்ற கல்வி இயக்குன கூற்று..தினமலர் நாளிதழ் வெளியிட்டது.. அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதைவிட
குழந்தைகளை கல்லில்  கட்டி கிணற்றில் போடலாம்.

வெள்ளி, ஜூலை 06, 2012

education struggle??!!!கல்வி நிறுவனங்கள் கட்டணம் குறித்துப் போராட்டம் தேவையா??/?!!!!

!!!கல்வி நிறுவனங்கள் கட்டணம் குறித்துப்   போராட்டம் தேவையா??/?!!!!


  1. தனியார்  பள்ளிகள் ,அரசுப்பள்ளிகள் ,கட்டணங்கள் குறித்துப் போராட்டங்கள் தேவையா?
  2. சிற்றூர்,,பேரூர்களில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பது ஏன் /?
  3. பல அரசுப்பள்ளிகள்,,அரசு உதவி பெரும் பள்ளிகள் மூடப்படுவதன் காரணங்கள் என்ன என்ன..?/
  4. ஒவ்வொரு ஆண்டும் அரசும்,,எதிர்க்கட்சிகளும் இதைப்பற்றி பேசுவது,,குழு அமைப்பது,,போராடுவது,,தனியார் பள்ளி பெற்றோர்கள் போராடுவது....நடை முறை எப்பொழுதும் போல்..இது பல ஆண்டுகளாக நடைபெறும் கேலிக்கூத்து..
  5. அரசாங்க தேர்வு முடிவுகள்..மறு கூட்டல்..தவறுகள்..ஆசிரியர் மீது நடவடிக்கை..
  6. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் என்றும் ,தேர்வுத்தாள் மதிப்பீட்டில்,,அவர்கள் பொறுப்பு குறைவு..அவர்கள் நிரந்திரப்  பணியாளர்கள் அல்ல..
பொதுமக்கள்  தனியார் பள்ளிகளை விரும்புவதன் காரணம் என்ன..?

அரசுப்பள்ளிகள் ஏழை--எளிய மாணவர்களுக்கு..

மெட்ரிக் பள்ளிகள் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு..

சி..பி..எஸ் சி..பள்ளிகள் உயர்வருவாய் மற்றும் வசதி உள்ளவர்களுக்கு..


பண வசதி இல்லாமல் கடன் வாங்கி தன்  குழந்தைகளுக்கு தக்க கல்வி தர முயற்சிப்பவர்கள் நிலை தான் மிகவும் பரிதாவத்திற்கு உரியது..

வீட்டுவாசலில் பள்ளிவகனத்தில் செல்லும் குழந்தைகள்,,
குறைந்த எண்ணிக்கை மாணவர்கள் .பத்து மாண வர்களுக்கு  ஒரு வகுப்பறை,
ஒரு ஆசிரியர் என்ற ஐ..சீ..ஐ..சி..ஐ..பள்ளிகள்..
குளிர்சாதன வசதியுள்ள வகுப்பறைகள்,,
,,கணினிவசதிகள்,,

நிழல் மட்டுமே படும் பள்ளிகள்..

மேற்கண்ட  பிரிவுகளைப் பற்றித் தெரிந்தால் இந்த  கட்டண ப்போராட்டம் வீண் என்பதும்
அரசாங்கம் ,ஆளும் கட்சியினர்  ,எதிர்க்கட்சியினர் ,சுயநல போராட்டக் குழுக்கள்
என பொதுமக்களை ஏமாற்றும்
கோஷங்கள்..முழக்கங்கள்..
அரசுப் பள்ளியை அனைத்துப்பிரிவினரும் ஆதரிக்கும்  நிலை
ஏற்பட்டால் ஒழிய இது வெறும் ஏமாற்று நாடகமே..
அது  இந்தியா போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட,,
பணமுள்ளவர்களுக்கே வாக்குகள் என்ற நாட்டில்
நடை முறைக்கு ஒவ்வாது என்பதே வெளிச்சம்..

புதன், ஜூலை 04, 2012

6.Why the Hindus voice differs? Why there is no one voice Part-6




  "எல்லோருக்கும்  நல்ல  அறிவைத் தர வேண்டும்"  என்ற  ரகுபதி  ராகவ

ராஜாராம்   என்று பஜனைப்பாடல் பாடி மறைந்த தேசத்தந்தை  மற்றும் தேச

 விடுதலைக்காக போராடிய பல புகழ் பெற்ற தலைவர்கள், விடுதலை என்ற

 சிகரத்தில் கொடி ஏற்றி பறக்கவிட்டு, அதன் அடிக்கற்களாய் அடையாளம்

தெரியாமல் இருக்கும் தொண்டர்கள் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையுமா

 துன்புறுமா?

நமது நாட்டில் படையெடுத்து  வராதவர்  கிடையாது.

மங்கோலியர்,கிரேக்கர்கள்,,பிரான்ஸ்,,டச்சு ,ஆங்கிலேயர்கள்,,முகலாயர்கள்..

இவர்களுக்கு  உள்ளே வர உதவியவர்கள் யார்//?

சந்திர குப்தர்  காலத்தில் இந்திய கிரேக்க திருமண உறவு ஏற்பட்டது.

பின்னர் அரசியலில் பல நாட்டு ரத்த பந்தங்கள் அறிந்தும் அறியாமலும்


ஏற்பட்டு மனித உறவு  இன ,மொழி,,நாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதை

இன்றுவரை( ராஜீவ்ஜி ) உறுதி படுத்தி உள்ளோம்..


விடுதலை அடைந்து 65 ஆண்டுகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை
 என்றாலும்  பல ஊழல்கள், தடைகள், சுயநலமிகள், சுவிஸ் வங்கி

கருப்புப்பணம், பத்திரப் பதிவு அலுவலகங்களில்,போக்குவரத்து 

காவல்துறையினர் சிலரின், நீதித்துறையில், கல்வித்துறையில், 

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள் 

 இறைவனின் மீதே ஐயப்பட வைக்கும் நிகழ்ச்சிகள்.

 இதற்கிடையில் நாடு முன்னேறிக்கொண்டு தான் உள்ளது..

நாட்டைத்துண்டாட நினைக்கும் கும்பல்,

 தீவீரவாதம், தேர்தல் என்பது பணசாம்ராஜ்யங்களுக்கு ,

ஊழல்களுக்கு கிடைக்கும் வெற்றி யாகவே கருதப்படுதல்,

 கை ஊட்டு கொடுத்தல், பெறுதல் பாவம் என்ற நிலை மாறி

அவை நியாயப்படுத்தப்பட்டு அவை இருந்தால்தான் வாழ்க்கை

என்ற நிலைமாறிய  நியாயம்..

 நீதித்துறையில் ஏழைகளுக்கு உடனடி தண்டனைதான்..

ஒருவர் இடத்தில் மிக தைரியமாக ஆக்கிரப்பு செய்து வீடு கட்டலாம்.

.சிவில் வழக்கு. இழுத்துக்கொண்டே செல்லும். தீர்ப்பு வராது.

ஏழையின் இடத்தை, கோவில்  இடத்தை, பொது இடத்தை,ஆக்கிரமிக்கலாம்..

போக்குவரத்துக்காக  சாலை அகலப்படுத்த முடியாது.  அரசியல் வாதிகள்,

பணமுதலாளிகள்  செல்வாக்கு இருந்தால், அதிகாரிகள் உடன் இருந்தால் போதும்.


ஒரேகுரல் எப்படி ஒலிக்கும்..

   1.அண்ணா வாழ்க. நாமம் வாழ்க.. நான் தி..மு..க..அண்ணாவின் கொள்கை , அண்ணாவின் ஆட்சி --எனது குறிக்கோள்..


   2.அண்ணா  நாமம் வாழ்க..புரட்சித்தலைவர் வாழ்க;;அண்ணாவின்
ஆட்சி ,அண்ணாவின் கொள்கை  எங்கள் கொள்கை..அ ..தி..மு..க.

    3.அண்ணா   எனது உயிர்..அண்ணா வின் கொள்கை என் மூச்சு..ம..தி..மு..க..

     4.அண்ணா  அண்ணா..அண்ணா பெயரில் ஆட்சி மலரும்..--.தே..-தி..மு..க.

 நாமம் அண்ணா.

பாட்டாளிகள் மு..க..பாட்டாளிகளுக்காக;;வன்னிய சமுதாயத்திற்காக .வாழ்க
அண்ணா..வாழ்க  திராவிட கட்சிகள்..வாழ்க கலைஞர்..வாழ்க அம்மா..வீழ்க திராவிடக்கட்சிகள்.....வாழ்க தேசீய கட்சிகள்..புரியலை ....

தேசீய கட்சிகளிலும் இதே நிலை..

ஒரே மதம்..பல சம்பிரதாயங்கள் .தன்  தன்  மரியாதை,,புகழ் ப்ரதானமாக்கும்
செயல்கள்..

ஒரே  தலைவர்..
 
பல  தலைவர்கள்..

எப்படி ஒலிக்கும்  ஒரே குரல்...........மதத்திலும்  இல்லை..தேசீய மொழி
கொள்கையும்  இல்லை.
அரசியலி லும் இல்லை.
.சைவம்--அசைவம் என்ற உணவிலும் இல்லை..
 ஒரே குரல்  எப்படி  ஹிந்து மதத்தில் ஒலிக்கும்..
  எப்படி ஐயா ஒரே குரல் ஒலிக்கும்..

5..Why the Hindus voice differs? Why there is no one voice Part-5

ஹிந்தியில் பக்தி காலத்திற்குப்பின்,   முகலாய- இந்துக்கள் ஒற்றுமைக்குப்பின், ஆனந்தமான  மக்கள்

       


        சிருங்கார ரச,பொழுதுபோக்கில் ஈடுபட்டனர்.

"கண்டதே கோலம் கொண்டதே காட்சி "என்ற நிலையில் சூதாட்டம்,

மது,,மாது என்ற கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.

.நாட்டைப் பற்றிய எண்ணம் குறைந்தது.

கிருஷ்ணனும் ராதையும் இறைவன் நிலையில் இருந்து

இறங்கி  காதல் லீலைக்காக வர்ணிக்கப்பட்டனர்.

..இந்த ரீதி காலத்தின்  முடிவில்  ஆங்கிலேயர்  இங்கு வாணி கத்திற்காக

  வந்து ஆட்சியாளர்களாக மாறினர். இந்தியாவின் தனிதனி நாடுகள் ,சமஸ்

தானங்கள் ஆங்கிலேயர்கள் வேரூன்ற வசதியாக அமைந்தன.

.பல சட்டங்கள்,,போர்கள்,,பிரித்தாளும் சூழ்ச்சி,,வாரிசுரிமை சட்டம்

போன்றவற்றால் நாட்டின் ஆதிக்கம் ஆங்கிலேயர் கைக்கு சென்றது..

இந்நிலையில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர் திருத்த வாதிகள்

 தோன்றினர்.விதவா மறுமணம்,,உடன் கட்டை ஏறுதல்,பாலர் விவாஹம்,,

போன்ற சீர் திருத்தக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

.பெண்கள் கல்வி ,பெண்கள் முன்னேற்றம் ,ஹரிஜன ஆலய ப்ரவேசம்,

பொதுக்கிணற்றில் வேறுபாடின்றி தண்ணீர் எடுத்தல் போன்ற காந்தீயக்

கொள்கைகளை  ஜமன்லால் பஜாஜ்,,ராஜாஜி..ஈ..வே..ராமசாமி நாயக்கர்

போன்றோர் பெருமளவில் ஆதரித்து வெற்றிகண்டனர்..

மகாத்மா ஹிந்து--முஸ்லிம் ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டார்..

ப்ரார்த்தனைப்பாடலில் -हिन्दू -मुस्लिम - सीख- ईसाई ,आपस में है भाई -भाई என்றும் ,

ஈஸ்வர அல்லா தேரே நாம் சப் கோ சன்மதி தே பகவான் என்றும்

ஒற்றுமைக்காகவே தன்  உயிரையும் நீத்தார்..(தொடரும்)) 

செவ்வாய், ஜூலை 03, 2012

4..Why the Hindus voice differs? Why there is no one voice Part-4

ஒரே குரல் 

கபீர் தாசரின்  ஞானமார்க்கம் , ராமநாமத்தைக்கூறினாலும் ,
 அது அருவ வழி பாட்டில் உறுதியாக இருந்தது..


கல்லின் உருவத்தை வழிபட்டால்

 இறைவன் கிடைப்பான் எனில்

 நான் மலையை  வைத்து   வழி  படுவேன்.

.திருகைக்கல்  (மாவு இறைக்கும் இயந்திரம்))
 வழிபட்டால்
 மாவு கிடைக்கும்
.கல்லின் உருவ வழிபாட்டால்
 என்ன கிடைக்கும் ? என்பார்..


நான்கு புஜம் கொண்ட இறைவனை அனைவரும் வழிபடு கின்றனர்.

.சாதுக்களும் சன்யாசிகளும் அந்த நான்கு
 புஜ இறைவனில்
மெய் மறந்து இருக்கும் போது

  கபீராகிய நான் வழிபடும்
  இறைவனின் கரங்கள் எண்ணிக்கையிலடங்கா..என்பார்..

இந்த ஞானமார்க்கம்  பக்தி மார்கமாக  வழிகாட்டும் நேரத்தில்,

 சூபி  சாதுக்களால் இறைவனை அடைய அன்பு மார்க்கம் தோன்றியது..

அதில் இந்துகளின் காதல் வீர தீரங்களின் கதைகள் ,போராட்டங்கள்

வர்ணிக்கப்பட்டு  அவ்வாறே இறைவனின்  மீது காதல் கொண்டு

 இறைவனை வழிபட வேண்டும்

என்றும்
  அன்பே /காதல் வயப்படுவதே இறைவனை அடையும்
 மார்கமாக வலியுறுத்தப்பட்டது..

அருவ வழிபாட்டில் மனிதநேயம் ,மத ஒற்றுமை வலிவுறுத்தப்பட்டது .

கபீர்தாசர் இந்து முஸ்லிம் இரு தர்மங்களின்

 மூட வழக்கங்களை கண்டனம் செய்தார்..

மசூதியில் குரான் அதிக ஓசையுடன் ஓதினால் இறைவன்

செவிடாகிவிடுவான்..

அமைதியாக தொழ வேண்டும் என்கிறார்.

தலையை மொட்டை அடிப்பதால்  இறைவன் அருள் கிட்டும் என்றால்

 முதலில்  செம்மறி ஆடுகளுக்கே கிட்டும்;;

அவை தான் தன ரோமங்களை ஆடை

 அளிப்பதற்காக  அடிக்கடி மழி த்துக்கொள்கிறது .

இந்த பக்தி மார்க்கம் வழி  காட்டும் நேரத்தில்
 இந்துக்களின் உருவவழி பாடு
முக்கியத்துவம் அடைந்தது.
.அதில் கருத்து வேறுபாடு தோன்றியது..

மரியாதை புருஷோத்தமன் ராமனை வழிபடும்  ராம மார்க்கம்..

உலக ரக்ஷகன் என்ற முறையில் பிரபல மடைந்தது..

துளசிதாசரின் ராமசரிதமானஸ்  மக்கள் புரியும் அவதி மொழியில்


எழுதப்பட்டதால்
  மூல  நூலான வால்மீகி  ராமாயணத்தை விட புகழ் பெற்றது.

.ஒவ்வொரு இல்லத்திலும் துளசிராமாயணம் பக்தி சிரத்தையுடன்

படிக்கப்பட்டது.
.அவர் எழுதிய ஹனுமான்  சாலீசா ப்ரத்யக்ஷ பலன் தரும்

உடனடி  இன்னல்  போக்கும் ஜப நூலானது.
.
அந்த பக்திகாலத்தின் மற்றொரு மார்க்கம் கிருஷ்ண பக்தி மார்க்கம்
.
.அதன் கவிஞர்  சூர்தாஸ்  கிருஷ்ணனின் பால லீலைகளின் வர்ணனையால்

கிருஷ்ண பக்தியை பிரபலப் படுத்தினார்..அவர் வ்ரஜ  மொழியில் எழுதிய

சூரசாகர்  மிகவும் பிரபலம் அடைந்தது..இதில் பகவான் கிருஷ்ணர்

லோகரஞ்சகராகவும்,லோகரக்ஷகராகவும் வர்ணிக்கப்பட்டார்.

இருமனைவிகள் கொண்ட கிருஷ்ணனை கோபிகள் அதிகம்

விரும்பினர்.

.இப்பொழுதும் பெண் பார்க்கும்  பொழுது அதிகமான பெண்கள்

பாடுவது  அலைபாயுதே கண்ணா  என்ற பாடலே.

.கோபிகளுடன் கிருஷ்ணன் செய்யும் லீலைகளால்

 ராம பக்தியை விட கிருஷ்ணனை அனைவரும் விரும்பினர்.
.
ராமர்  தன்  மனைவி  சீதையை அக்னி பரீக்ஷை செய்தும்

காட்டிற்கு அனுப்பியதும் , இல்லற வாழ்க்கையில்

 திருமண நிகழ்ச்சியில் " சீதா கல்யாண

 வைபோ கமே"  என்று பாடினாலும்,

 ஆஷிர்வாதம் செய்யும் பொழுது

ராமர் போன்று குழந்தை பிறக்கவேண்டும் என்று கூறப்படுவதில்லை..

கிருஷ்ணா விக்ரகம் போன்று  அழகான குழந்தை என்றே கூறுகின்றனர்..

சக கிழத்தி இருப்பது ஆண்மையின் லக்ஷணமோ?

ராமநாவமியைவிட கிருஷ்ணா ஜெயந்தி  பிரபலம்..
(தொடரும்))




3.Why the Hindus voice differs? Why there is no one voice Part-3

   
       
      இந்துக்கள்   ஒரே குரலில்  இணைவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உள்ளது.
அதில் ஹிந்தி இலக்கிய வீர காப்பியகாலம் பற்றி
 சென்ற தொடரில் எழுதி இருந்தேன்.

அரச குமாரிகளை   அபகரிக்க போரிட்டகாலம் .

அதற்கேற்ற இலக்கியங்கள் அதிக அளவில் தோன்றின.

 நாட்டைப்பற்றி,சமுதாயத்தைப்பற்றி  கவலைப்படாத

மன்னர்கள்,சேனாபதிகள்,போர்வீரர்கள் தன்  வீரத்தை,அரிய

உயிரை  இழந்தனர்.அழகிய பெண்களுக்காக பயன்படுத்தினர்.

காதல் என்பது நாட்டின் நலத்தை மறைத்த காலம்.

மேற்கண்ட சூழலில் முகலாயர்கள் படை எடுப்பால்

 இந்திய மன்னர்கள்  பதவி  இழந்தனர்.

வறுமை நிலை ஏற்பட்டது.அரசர்கள் வீரத்தைப் புகழ்ந்தால்

உணவு கிடைக்க வழியில்லா புலவர்கள் இறைவனை சரணடைந்தனர்.

ஹிந்தி  இலக்கிய வரலாற்றில் பக்தி காலம்  பொற்காலம்  ஆகியது.


ஆனால் ,முகலாயர்கள் வந்ததால் பக்தி  இலக்கியங்கள்  இரு முக்கிய

பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

 பக்தி இலக்கியம் (1) உருவ வழிபாடு,(2)அருவ வழிபாடு

 என இரு பிரிவுகளாக பிரிந்தது.

அதற்கென தனிதனி அணிகள் தோன்றின.

அருவ வழிபாட்டில் இருவேறு கருத்துக்கள் வேற்றுமைகள் உண்டாகின.

அறிவிருந்தால் ஆண்டவனைக் காணலாம் என்ற ஞான மார்க்கம்.
.
அன்பினால் ஆண்டவனைக்காணலாம்  என்ற  அன்பு மார்க்கம்.

இதில் ஞான மார்க்கம் தோற்றுவித்த கபீர் தாசர்  பிறப்பால் அந்தணர்

.வளர்ப்பால் முகலாயர்.

.இவர்  அறிவுக்கு முதலிடம் தந்து,
 ஜாதியைஒதுக்கினார்.

பல நூல்கள் கற்ற ஞானியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவனிடம் ஞானத்தைபற்றி  கேட்டு  தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாதியைப் பற்றி கேட்காதீர்கள்.

ஞானம் என்பது கூறிய வாள்  போன்றது.

ஜாதி அந்த வாளின்  உரைபோன்றது.

 உரை சக்தி வாய்ந்ததா/.வாளா.?
உறை    விட்டுவிடுங்கள்
.ஞானம் தான் பிரதானம் என்றார்.
கபீரை பின்பற்றி  ஞானமார்க்க கவிஞர்கள் தோன்றினர்
.
     "பக்தி"     என்பதில் "" அருவமும் உருவமும் ஆனாய் போற்றி"
  என்ற ஹிந்து மதக்  கோட்பாடும்  ஏற்றுக்கொள்ளப்பட்டதே..






(தொடரும்)

திங்கள், ஜூலை 02, 2012

2.why the Hindus voice differs? Why there is no one voice Part-2




ஒரே குரல் ஒலிக்கவில்லை .ஏன் ?


ஹிந்து தர்மத்தில் ஒரே குரல் ஒலிக்காதது ஏன் ?என்று ஒருவர் கேட்டதில்

இருந்து பல எண்ணங்கள்  /சிந்தனைகள் மனதில் தோன்றிக்கொண்டே

இருக்கின்றன.
கோரி முஹம்மது,கஜினி முஹம்மது  படை எடுப் பின்  போது  ஒற்றுமை

உணர்வு இருந்ததால்  பல முறை கொள்ளை அடிக்கப்பட்டாலும் காசி மாநகரம்
காக்கப்பட்டது.

நமது இலக்கியங்கள் ,வரலாறுகள்  நமது நாட்டின் ஒற்றுமை இன்மையை

காட்டுகின்றன.வரலாறு என்பது இன்றைய சூழலில் நம்மை உயர்த்த

,சிந்தனை நமது வீழ்ச்சியின் காரணங்கள் அறிந்து எழுச்சி பெற உதவும்

 காலக் கண்ணாடி.

ஹிந்தி இலக்கிய வரலாறு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
 இலக்கியங்கள்
சமுதாயத்தின் பிரதிபலிப்பாக  விளக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் பிரிவு  வீர காப்பியங்கள்.

வீரகாப்பியங்கள் தோன்றிய காலத்தில் எவருக்குமே நாட்டை பற்றிய

 அக்கறை கிடையாது.கவிஞர்கள்  அரசனை  சார்ந்து   வாழ்ந்தனர்.

அவர்கள் நோக்கமே "உணவு  அளிப்பவர்களின்  உள்ளம் மகிழ  கவிதை பாடுவதே".

அழகிய அரசகுமாரிகளின் அழகை  வர்ணித்து

 அரசனின் வீரம்,வலிமை,சக்தி ,சாகசம் போன்றவற்றைப்

 புகழ்ந்து ,அவன் மனதில்

வீரத்தையும் ,அரசகுமாரிகளின் மீது  மோகத்தையும்

 அதிகரித்து போரிடத்தூண்டுவதே.

மேலும்  ஒரு சிறப்பு புலவர்களே  புரவலர்களின்  படைத் தளபதியாக இருந்ததே.
அரசனின் எண்ணம் முழுவதையும் ,நோக்கம் முழுவதையும் அரசகுமாரியை அடைவதே.
 போர் என்பது நாட்டின் நலனுக்காக அல்ல;

.நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காக அல்ல;

,அழகிய அரசகுமாரியை கவர்வதே.

இந்த இலக்கியங்களுக்கு இடையில் சில பக்தி இலக்கியங்களும் தோன்றின.

அனால் தற்காலம் போன்றே பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம்

கொடுக்கப்படவில்லை.
(தொடரும் )

1.why the Hindus voice differs? Why there is no one voice Part-1


ஹிந்துக்கள்  ஏன்   ஒரே  குரல்  எழுப்புவதில்லை?

           நேற்று  ஒரு நண்பர் ஒன்று சேர்தல் (Get together function) சந்தித்தல் -(விருந்தோம்பல்  என்பதற்கு ஆங்கிலப்பெயர்) நடந்தது.

அதில் ஒருவர்  எழுப்பிய  வினா என்னை சிந்திக்கவைத்தது.

.தமிழ்நாட்டில் கோயில்,ஹிந்து மடாலயங்களில் மட்டும் ஊழல் நடப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால் மசூதியிலும்,மாதகோவிலிலும் ஊழல்
இல்லையா?அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?


இந்து ஆலயங்கள்,மடாலயங்கள்,ஆதீனங்கள்  சிக்கலாகும் போது ஏன் 
இந்துக்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதில்லை ?
சிக்கலான வினா?

விடை அளித்தால்  கோபம் வரக்கூடாது
.மக்களாட்சியில் தங்கள் கருத்தை தெரிவிக்க  கருத்து சுதந்திரம் வேண்டும்.உண்டு.
நமது நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  யார்?கிறிஸ்தவர்கள் யார்?புத்தர்கள் யார்/?
சமணர்கள் யார்?
அவர்கள்  முன்னோர்கள் சனாதன தர்மத்தைதானே பின்பற்றி இருக்கவேண்டும்.அவர்கள் மதம் மாற காரணம் என்ன?

சுயநலமா?பேராசையா?உயிர் பயமா?அடக்குமுறையா?கட்டாயமா? இருந்தால்  அனைவரும் ஆங்கிலம் கற்பதுபோல் மதம் மாறி இருப்பார்.
இவை   காரணங்கள் அல்ல.

.இவைகளுக்கப்பால்,  ஒரு காராணம் .இந்துக்களால் இந்துக்கள்  அவமானப்படுத்தப்பட்டனர்
.பாரதியாரே அவமானத்திற்கு ஆளானார்.

சுதந்திரப்போராட்ட விநாயகர் ஊர்வலம்
 இன்று கேலிக்கும் பயத்திற்கும் காரணமாகி ,

 பலநாட்கள் உழைப்பு,பணம் முதலியவற்றை  கடலில் கரைத்து ,

இறைவனை  கை கால்  என்று பிய்த்து மிதங்கவைத்து,
 கரையில் ஒதுங்கச்செய்தல் ,
அதன் மேல் மறைவில் நாயும் மனிதனும் மலம்-ஜலம் கழித்தல் '
 எவ்வித  பக்தி?
.இந்த ஊர்வலம் நடத்தும் நாள் !! ஒரு பதட்டமான நாளா?பக்திசிரத்தை யான நாளா?!!!

காவலர் புடை சூழ  உருட்டை கட்டை உடன். எப்பொழுது கலவரம்

வெடிக்குமோ/?குண்டுவேடிக்குமோ  ?
 என்ற அச்சம் வேறு.
அழகு  சிலைகள் சிதைக்கப்படுவது,

  என்  நோக்கில் குரங்கு கையில் கொடுத்த,பூமாலை போல்  அழகு

கலைவண்ணம் மிக்க வினாயகர்களின் சிலைகளை

தூக்குவான் மூலம் கடலில் எறிவது.

அதற்கான   முதலீட்டை ஆக்க பயனுள்ள

பணிகளுக்கு,அரசுப்பள்ளிகளின்  குடிதண்ணீர்,கழிவறை வசதி ஏற்படுத்த

செலவு செய்து சக்திவினாயகர்  திருவிழாவை பக்தர்கள் அழிக்கும்

 நிலைக்கு பயன் படுத்தாமல் ஆக்க பணிக்கு பயன் படுத்தலாம்.

பால கங்காதர திலகர் வெள்ளையனை எதிர்த்துப்போராட,

 மக்களை ஒன்று சேர்க்க விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும்
  என்ற இயக்கம் தொடங்கினார்..
இன்று  அது ஒரு மத உணர்வாக மாற்றப்பட்டு,

 இலட்சக்கணக்கான ரூபாய்கள் கடலில் கரைக்கப்படுகின்றன.

.எனது  கருத்து.

கொந்தளிக்கவேண்டாம்

(தொடரும்)

ORE KURAL OLIKKAVILLAI.en?இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை




இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை.


 ஏன் ?  என்ற வினா


 என் மனதில் பல சிந்தனைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
.
பல ஹிந்து மத சிந்தனையாளர்களையே  குழப்பும் வினா  இது.

சைவம் என்று சொன்னால் அதில் வீர சைவம்.லிங்காயத்து

சம்பிரதாயம்,அகோரர்கள்,நாத் பன் தி ஜோகிகள் .பல மடாலயங்கள்;ஆதீனங்கள்.அவர்களுக்கிடையே போட்டிகள்;பொறாமைகள்.ஒருவர் வளர்ச்சி மற்றவர்கள் தளர்ச்சி.
பின்னர் இன -ஜாதி வேற்றுமைகள்.

வைணவம் என்றால் உயர் நீதிமன்ற யானை நாம வழக்கு  பிரபலம்...வடகலை,தென்கலை.
ஆண்டவன் ஆஸ்ரமம் .
அர்ச்சகர்கள் என்றால் குருக்கள்;வைகாநசர் .இவர்கள் இறைவனுக்கு கைங்கரியம் செய்பவர்கள்.
தனியார் ஆலயங்கள்,அரசின் கீழ் வரும் ஆலயங்கள்,ஜாதிகளின் ஆலயங்கள்,
தன்  சிலையையே வைத்து வழிபடும் ஆலயங்கள்
,தலைவர்களின் மேல் உள்ள பற்றால் ஏற்படுத்தும் ஆலயங்கள்,
ஒருவர் சமாதியின் மேல் காட்டப்படும் சிவாலயங்கள்,கிராமகோயில்கள்,
அதன் பூசாரிகள்,காவல் தெய்வங்கள்,அம்மன் கோயில்கள் அதில் பூசை முறைகள்,அந்தணர்கள்  அர்ச்சகர்கள்.அந்தணரல்லாதவர்கள் கிராமத்து பூசாரிகள்.தெய்வத்தை வழிகாட்டுபவர்கள்  பல்வேறு சங்கங்கள்.

அனைவரும் ஒரே குரலில்  ஒலி  எழுப்ப காலம் கணிந்துவிட்டதா?ஆம்.
நாட்டின் விடுதலைக்குப்பின்  பொருளாதார அடிப்படையில் சோ அவர்களின்
எங்கே பிராமணன் ?? என்ற தொடர் இந்தக்காலத்திய பகுத்தறிவாளர்களின்
அந்தண  வெறுப்பைப் போக்கும்.பரந்த மனப்பான்மையை உண்டாக்கும்.
இப்பொழுது  அக்ரகாரங்கள்  காலியாகி  விட்டன.. அப்படி இருந்தாலும்  வயதானவர்கள்  தான் இருக்கின்றனர்..இளைஞர்கள்  அனைவரும் நகரத்தை நோக்கி அல்லது வெளிநாட்டிற்குப்பயணம் செய்து
விட்டனர் . பல பழைய ஆலயங்களில் வருமானமே இல்லை..பேருக்கு
ஒரு மணிநேரம் திறந்து வைக்கின்றனர்..

புதிய ஆலயங்களுக்கு வரவேற்பு இருப்பது வியப்பில் ஆழ்த்து கிறது..அரசாங்க பள்ளிகள்,அரசு கோயில்கள்  புறக்கணிக்கப்பட்டு  தனியார் கோயில்கள்,தனியார் பள்ளிகள் மக்கள் விரும்பும் வருமானம் வரும் அமைப்புகளாக  மாறிவருகின்றன..



(தொடரும்)