புதன், செப்டம்பர் 19, 2012

ஊழ் - Fate


ஏரிகள் ,விளை  நிலங்கள்,
விலை போகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக.
மலைகள் தூளாகின்றன.
மலைப்  பிரதேசங்கள் 
குடி இருப்புகளாக மாறுகின்றன.
விளைவாக,
விளைச்சல் குறைகிறது.
மழை குறைகிறது.
குடிநீர்  பஞ்சம் ,
அரிசி விலை ஏற்றம்.
சுற்றப்புற சூழல் 
மாசு படுகிறது.
காசுக்காக 
அரசியல் வாதிகள் 
நில  ஊழல் குற்றச்சாட்டு 
அனைத்துக் கட்சிகள் மேலும்.
ஆனால் 
ஆட்சி மாறும்  போது 
ஆளும் கட்சியினர் மறைக்கப் படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் 
கைது செய்யப்படுகின்றனர்.
சிறுசேரி முதல் ஊட்டி ,கொடைக்கானல் 
என 
கட்சினரின் ஊழல் செய்த்தித்தாளில் 
செய்திகளாக வருகின்றன.
செய்திகள் மறக்கப் படுகின்றன.
ஊழல்கள் தொடர்கின்றன.
இது மக்களுக்கு ஊழ்வினைப் பயனாகின்றன.