வெள்ளி, ஜூன் 07, 2013



அன்புக்கு ,ஆற்றலுக்கு,இன்பத்திற்கு ,ஈகைக்கு ,எங்கும் ஏற்றத்திற்கு ,

ஐயம் இல்லா ஒப்பில்லா ,ஓங்கும் புகழுக்கு ,

கடும் முயற்சிக்கு  இறைவனின்  கடைக்கண் பார்வை ,

க்ருபா கடாக்ஷம் ,பூர்வஜன்ம இந்த ஜன்ம நல்வினைப்பயனே

மூலகாரணமாகும்..

இவ்வுலகில்  தோன்றிய எத்தனை பேர் தங்கள் விரும்பிய வாழ்க்கையை அடைந்துள்ளனர்.?
 எத்தனை பேர் தங்கள் குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளனர்.?

எத்தனை பேருக்கு தங்கள்  விரும்பாமலேயே  பதவியும் புகழும் கிடைக்கிறது?

புகழைத் தேடி அலைந்தாலும் கிடைக்காதவர்கள் எத்தனை பேர்?

இந்த சூக்ஷமத்தை அறியும்  ஞானிகள்  எங்கே ?


இறைவன் எங்கே?

இறைவன்  எங்கே?

ஒவ்வொருவருக்கும் 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட

 ஒன்று 

இவ்வுலகை ஆட்டிப்படைப்பதை 

உணர்ந்தே ஆகவேண்டிய நிலை ஏற்படுகிறது.

மனிதன் தனக்கு இருக்கும் தனித்திறமையால் 

வெற்றி அடைந்து  கொண்டே இருந்தால் 

தனக்கு நிகர் தானே என்று  செருக்கடைகிறான்.

அந்நிலையில்  ஆண்டவனை  மறந்துவிடுகிறான்.

அப்படிப்பட்ட நிலை இப்புவியில் 

எவருக்கேனும் இருந்துள்ளதா?

 இல்லையே?

இந்த இறைவன் எங்கே?

அவனைக்காண முடியாது.

நமக்கு இன்னல் நேரும் போது

நமக்கு அறிமுகமாகாத ஒருவர் 

உதவி செய்வார்.

அவருக்கும் நமக்கும் 

எவ்வித சம்பந்தமும் இருக்காது.

நாம் அவரிடம் 

தெய்வம்போல் எங்களுக்கு

 உதவி செய்துள்ளீர்கள் என்போம்.

சிலரை எனக்கு அவர்தான் தெய்வம் என்போம்.
நமக்கு எத்தனையோ 
அறிமுகம் ஆனவர்கள் இருந்தாலும் 

முன்பின் தெரியாதவர்கள் 
எதிர்பாராத இடத்தில் செய்யும் உதவி 

அங்குதான் இறைவன் நமக்கு உதவி யுள்ளார்.


 அதைத்தான்  கடவுள் மனித உருவத்தால்  வந்துள்ளார் 

என்கிறோம்.

நாம் குழப்பத்தில் இருக்கும்போது 

முன்பின் தெரியாதவர்கள் நம் 

குழப்பத்தைத் தீர்க்கும் படி நம் காதில் 
விழும்படி பேசிக்கொண்டு செலவர்.

அது நம் குழப்பம் தீர