திங்கள், ஜனவரி 14, 2013

தைப்பொங்கல் இவ்வாண்டு,

தைப்பொங்கல் இவ்வாண்டு,
பேராசியர்கள்  வீட்டிலும்
பொங்கவில்லை;
நடிகர்களுக்கும் சேவைவரி
துக்கம்;
விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லா,
விளைச்சல் இல்லா வேதனை;
கொடுத்த கவரில் 100 ரூபாய் இல்லை  வெத்துக் கவர்
சிலருக்கு.

நாட்டின் பெரும் கவலை இரண்டு வீரர்களின் 

தலை போனது. பாகிஸ்தானியர்களின் 

இரக்கமற்ற செயல்;

ஊழல்,பலாத்காரம் ,எதுதான் இல்லை;

மயிலையில் தீப்பிடித்த விசாலாக்ஷி நகர்;

போதுமா  வேதனை;

வரும் ஆண்டுகளில் வருத்தம் இல்லா பொங்கல்,
வறட்சி இல்லா பொங்கல்,
தண்ணீர்  காவேரி பிரச்சனையை தீர்ந்த பொங்கல்,

அகில பாரதத்திலும் நேர்மை யுள்ள ஆனந்த பொங்கல்,
அடுத்த ஆண்டில் மன நிறைவுப் பொங்கல்,
அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரும் பொங்கல் 
வர முயற்ச்சிப்போம்;இறைவனை வேண்டுவோம்.