வியாழன், ஏப்ரல் 11, 2013

.500 ரூபாய் வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது. இது நாத்திகவாதம். கடவுள் !!!!????

நம்பள்கி   என்பவர் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க நேரடியான சான்று

கூறி உள்ளார்.500 ரூபாய்  வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது. இது நாத்திகவாதம். கடவுள் !!!!????

இதைப்பற்றி கூறும் போது  அதிக கருத்துக்கள் காற்று பற்றிதான் வரும்.
காற்று உணர்கிறோம்; பார்க்க முடியாது.
மின்னோட்டம் சக்தி பெறுகிறோம் பார்க்க முடியாது.

உருவமற்ற இரண்டில் உணரும் காற்று இல்லை என்றால் இறந்துவிடுவோம்;

மின்சாரம் தொட்டால் இறந்துவிடுகிறோம்;

இவை இரண்டும்  உணரக்கூடியவை.

இறைவனையும் நாம் உணரத்தான் முடியும்;

  இறைவன் இல்லை என்ற குழுக்கள் உருவாவதற்குக் காரணம் இறைப்பற்றாளர்களே.

 ஆய கலைகள் 64 என்கின்றனர்;
இதில் ஓவியம் மற்றும் சங்கீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்;சிற்பக்கலையும்  சேர்த்துக்கொள்ளலாம்;

ஒரு பணக்காரர் தன்  மகளுக்கு ஒரு சங்கீத மேதையிடம்  சங்கீதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்; அனால் அவர்கள் வீட்டில் பணிசெய்த
பணிப்பெண்ணிற்கு அழகாக பாட முடிந்தது;ஆனால் அவர் பெண்ணிற்கு பாட்டு வரவில்லை; அவ்வாறே ஓவியம் சிற்பக்கலை இரண்டும் தெய்வீகக்
கலைகள்; ஐந்துவயதில் அழகான ஓவியம் ஆசிரியர்கள் வழிக்காட்டுதல்
இல்லாமல் வரையும் ஆற்றல் பெற்ற குழந்தைகளைப்பார்க்கிறோம்.

நோயாளிகள் கோடிக்கணக்கில் சிலவு செய்தாலும் தீராத நோய்கள்;
எத்தனையோ நோயாளிகளை மருத்துவர்கள் கைவிட்டாலும்  உயிருடன் இருக்கும் அதிசயம்.

இதனால் தான் நாத்திகவாதம் எடுபடவில்லை.
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது;
கடவுளை உணர்பவர்கள் பல கோடி;
கடவுளை காண்பவர்கள் தெய்வப்பிறவிகள் ; இறை தூதர்கள்;
மனிதனை நல்வழி ,நேர்வழி ,அன்பு,பரோபகாரம்,சத்திய மார்கத்தில் அழைத்து செல்பவர்கள்.

ஆனால் சீடர்கள் அவர்கள் மறைவிற்குப்பின் செய்யும் தவறுகள் சுயநலத்தால்
மனிதர்களை பிரித்து சண்டையிட வைத்து சுகம் காண்கிறார்கள்; அரசியல் கட்சிகள் போல்;இவர்களுக்கு தெய்வ பக்தி கிடையாது; அவர்களுக்கு நாட்டு பக்தி கிடையாது;
500 ரூபாய்  வாங்குபவனுக்கு வேலை போய்விடுக்றது;5000 கோடி ஊழல் ஆட்சி செய்கிறது.