புதன், அக்டோபர் 31, 2012

ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.

.

        நான்  ஆசிரியர் பணி  ஆற்றத் தொடங்கியது பதினாறு  வயதில்.எனது குடும்ப சூழல்  அம்மாவின் கடும் உழைப்பு   தேசீய நீரோட்டத்தில் இந்திய தொடர்பு மொழி ஹிந்தி பிரசாரம்.இதில்  வாழ்க்கை நடத்த  வருமானம். என் தாயார் தமிழும் சமஸ்கிருதமும் தெரிந்ததால் லக்ஷ்மிவிலாஸ் வங்கி மேலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் அவர்கள் மனைவியின் தூண்டுதலால் ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.மாதக் கட்டணம் நாலணா,எட்டணா .என் அப்பாவிற்கு  உழைக்கத் தெரியும்.உழைப்பைப் பெறுபவர்கள் ஊதியம் கொடுக்க தயங்குவார்கள்.கொடுத்தாலும் தன் அண்ணன்   குடும்பத்திற்கும்,ஏழை எளியவர்களுக்கும் போய் சேரும்.அதனால்,எனது தாயார் கோமதிஜி  1953இல் இருந்து ஹிந்தி பிரசாரத்தை ஆரம்பித்தார்.நான் பிறந்த பின் பழனி அரசு பெண்கள்  மேல் நிலைப்பள்ளியில்  படித்தார்.
அதனுடன் ஹிந்தி தேர்வுகளும் .
தாயாரின் ஹிந்தி அறிவு எனக்கும் இயற்கையாக வந்தது.
அவருக்கு முதல் அரசு நியமனம் கொம்புக்கார நேண்தல் என்ற கிராமம்.முத்தனேந்தல் என்ற ரயில் நிலையத்தில்  இறங்கி ஐந்து ஆறு மையில்  நடந்து செல்ல வேண்டும்.பேருந்து வசதிகள் கிடையாது.
பின்னர்  சிங்கம்புணரி பள்ளியில் பணி புரிந்தார்.ஹிந்தி ஆசிரியை.அக்கம்பக்கத்தில் ஹிந்தி எதிர்ப்பு. அமைச்சர் மாதவன் அவர் உறவினர்கள் பக்கத்தில்.ஆதரவு.ஹிந்தி அரசுமொழி ஆவதற்குத்தான் அவர்கள் எதிர்ப்பு. ஹிந்தி விரும்பி கற்போருக்கு என்றுமே தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு கிடையாது.அதனால் தான் இன்றும் தமிழக அரசின் எவ்வித உதவியும் இன்றி ஆயிரக்கணக்கில் ஹிந்தியால் பொருளீட்டுவோரும் ,லக்ஷக்கணக்கில் ஹிந்தி படிப்போரும் இன்றும் உண்டு. ஆனால் ஓய்வின்றி ஹிந்தி பிரசாரம் உண்மையாக செய்வோருக்கு வருமானம் இல்லை.
அரசுக்கல்லூரி,பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும்  ஊதியம் அதிகம்.அதுபோல் மத்திய அரசு ஹிந்தி அலுவலர்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் ஊதியம் அதிகம்.
இன்று இந்தி பிரசாரம் பிரசார சபைஇந்தி பிரச்சாரகர்களின்  நலனைவிட,அதாவது லக்ஷக்கணக்கில் மாணவர்களை ஹிந்தி  பயிலவைக்கும்  பிரச்சாரத்தை விட்டு விட்டு,மத்திய அரசுபள்ளிகள், கல்லூரி என்பதில் ஈடுபடுகிறது.முழு நேரத்தில் ஹிந்தி பிரசாரம் செய்தல் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான்.
ஆனால் ப்ரசாரர்களிடமும் ஒற்றுமை இல்லை.
அங்கும் தேர்தல்.வழக்கு.ஊழல். வேலை நிறுத்தம் அனைத்தும்.
எப்படியோ  நான் வளர்ந்தது,ஒரு சமுதாய அந்தஸ்து பெற்றது,உலகப் புகழ் பெற்ற ஹிந்து மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றது  எல்லாம் ஹிந்தியால் தான்.ஆனால் எனக்கு தமிழார்வம் அதிகம்.
தாய் மொழி தெலுங்கு.படித்தது வளர்ந்தது,ரத்தத்தில் கலந்தது தமிழ்.வருமானம் ஹிந்தி.
ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.




மன சாட்சி உள்ள அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:

  வேளச்சேரி சாலை குண்டும் குழியுமாக 
பத்துபேருக்குமேல் 
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 
படுகாயம்.


மக்களுக்காக மக்கள் ஆட்சி.


நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஆனால் ,
சிலர் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கின்றனர்.
அதில் ஏற்படும்  மகிழ்ச்சி ,
கம்பீரமாக  மேடை போட்டு  சொல்லமுடியுமா/?
கோடிக்கணக்கில் பணம்
வரிகட்டா பணம் வெளிநாட்டு வங்கியில்
சேமிக்கப்பட்டுள்ளது என்பதை
அலங்கார  மேடையிட்டு
அகங்கார  தலைவர்கள்
 முழங்க முடியுமா?
மன சாட்சி  உள்ள  அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பொதுமக்களும்  சாக்கடை ஓடும் 
சாலையில் நடக்கின்றனர்.
அந்த சாலை பராமரிக்க பணமில்லை.
 அண்ணா வளைவு கலைஞர் வைத்தது என இடித்து பின்னர் எம்.ஜி.ஆர். திறந்தது என அறிந்து மீண்டும் நிலைநாட்ட கோடி.
சமாதி புதுப்பிக்க  கோடிகள் .
கண்ணகி சிலை இடிக்க ,மீண்டும் வைக்க கோடி .
ஆனால் ,வரி  செலுத்தும்  மக்களுக்கு 
சாலை இல்லை.
குடிதண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
மன்னராட்சியில் தான் ராஜ தர்பார்.
மக்களாட்சியிலுமா  இப்படி/?
மக்களின் வரிப்பணம்
 மக்களின் நன்மைக்கே.
அரண்மனைகட்டவும்,அந்தப்புரம் கட்டவும்  அல்ல.
தலைமைச் செயலகம் மாற்றம்.
துக்ளக் தர்பாரா?
கோட்டூர்புரம்   நூலக மாற்றம்.
எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு,
வரிப்பணம்.
மக்கள் ஏமாளிகள்.
தலைவர்கள் இரக்கமற்றவர்கள்.
மடிப்பாக்கம் சாலைகள் 
பள்ளி செல்லும் குழந்தைகள்  படும் அவஸ்தை.
பாதாசாரிகள் படும் அவஸ்தை.
சுகாதாரக்கேடு.
இதற்கெல்லாம் 
நடவடிக்கை இல்லை.
குப்பை;நாற்றம்;
மகிழ்ச்சியில்லா மக்களின் வரிப்பணம் 
மன சாட்சி இல்லாமல் 
பணப்பெட்டிக்காக.
மரணம் நிச்சயம்.
இயற்கையின் சக்திக்கு 
பயந்து  கிடைத்த பதவியை 
மக்களின் நன்மைக்கு 
பயன் படுத்துங்கள்.

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2012,03:36 IST
சென்னை;மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை புறநகரின், பல பகுதிகளில் மீண்டும் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது "டெங்கு'வாக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம் - புழுதிவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை உள்ளிட்ட, பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை வசதியில்லை. பல இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் சங்கமிக்கிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் அப்பகுதியில், கடந்த மாதம் பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. மடிப்பாக்கம் பகுதியில் இரு குழந்தைகள் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு "டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து குணமடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களில் மீண்டும் அப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் தலைகாட்டியுள்ளது. துரைப்பாக்கம், சூளை மாநகர், முதல் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் மீனா, 5.இச்சிறுமி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கிறாள். இவளுக்கு கடந்த சில நாட்களாக, தொடர் காய்ச்சல் இருந்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறாள். இச்சிறுமிக்கு "டெங்கு' காய்ச்சலாக இருக்கலாம், என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இச்சிறுமி போல பலர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை புறநகர் பகுதிகளில், சுகாதார துறையினர், தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

நீயா -நானா கலைக் கல்லூரி மாணவர்கள் - நடத்துனர்-பேராசிரியர்-பெற்றோர்கள்.

நீயா -நானா  
கலைக் கல்லூரி மாணவர்கள் - நடத்துனர்-பேராசிரியர்-பெற்றோர்கள்.

கல்லூரி  அது கலைக் கல்லூரிகள் ,
அடிதடிக்கென கல்லூரி,
அறிவுக்கு என கல்லூரி,
பணம்படைத்தோருக்கு  ஒரு கல்லூரி,
அடிப்படைவசதிகள் இல்லா  கல்லூரி,
கல்லூரிகளுக்கு ஒரு ரூட் தலை,
சுதந்திர நாட்டில்,
ஒரு கல்லூரி மாணவர்கள் ஏறும் 
பேருந்தில் வேறு கல்லூரி ஏறினால் 
அடிதடி.
வேறு கல்லூரி மாணவர்கள் 
ஒருகல்லூரி மாணவர்கள் 
ஏறும் பேருந்து நிலையத்தில்  நின்றால் 
அடிதடி.
தீண்டாமைவிட இது பெரும்  கொடுமை  
நடுத்தர மக்கள் ,மனக்கவலை மறக்க,
அழகுதேவதைகளைக் கண்டால் 
காளை  வயதில் கலாட்டா.
வயிற்றுப்பசி   மறக்க  கானாப்பாட்டு.
ஒரு கல்லூரிக்கு  ஒருவகை தாளம்.
மாணவர்களிடை  கல்லூரி பேதம்.
சிறப்பு விருந்தினர் 
பிடித்த பாடம் உள்ள கல்லூரி 
பிடித்த கல்லூரி. வேறு வேறு.
பிடித்த கல்லூரியில் அழகுதேவதைகள் 
நடமாட்டம்.
நானூறு மாணவர்கள் நாலாயிரத்தில்.
தொலைந்து போனவர்கள்.
காதல்,ஜாதி,இனம்,கல்லூரியில் வெளி ஆட்கள் 
நுழைதல். இது  பல்லாண்டு நடைமுறை.
அடியாட்கள் நுழைந்து அடித்தல்.
அரசியல் சுயநலத்தின் உச்ச கட்டம்.
சட்டக்கல்லூரியில் 
காவலர் முன்னிலையில் 
மாணவனை தடியால் அடித்த காட்சி,
பேருந்து நிறுத்தம் விட்டு கல்லூரிக்குள் 
பேருந்தை நிறுத்த மிரட்டல்.
அறிமுக அட்டை காட்ட மறுத்தல்,
வழுக்கைத்தலை என்று நடத்துனரை அழைத்தல்,
எல்லாம் மூன்றாண்டுகள் தான்.
இது ஒரு தொடர் கதை.
அடிதடியுமிருக்கும்.
காதல் விளையாட்டுகளும் இருக்கும்.
அப்பொழுதான் எங்களுக்கு மரியாதை ;அங்கீகாரம்;
அடிதடிக்கு காரணம் தெரியாது.அது என் அப்பா காலத்தில்  இருந்து தொடர் கதை.
வருத்தமான விஷயம் 
பெரும்பாலான மாணவர்கள் 
பகுதிநேர பணிக்கு செல்வது.
சாதிப்பிரச்சனை.
67 ஆண்டு சுதந்திர நாட்டில் 
அன்பு,சமாதானம்,சகோதரத்துவம் ,
வளரவில்லை.புலன் அடக்கம் வளரவில்லை.
ஏழை-பணக்கார மாணவர்கள் 
ஏற்றத்தாழ்வுகள்;
ஏ ங்கும்   மாணவர்கள்.
அடிதடி மனப்பான்மை மாற்றா  சமுதாயம்.
அதில் மேலைநாட்டை 
 விட நம்நாட்டில் 4%.தான் கலா ட்டா .
பரவாயில்லை  ஒரு பெண்ணின் கூற்று.
மாணவர்களே!
அன்பாய் இருங்கள்.
அனைத்துக்கல்லூரி  மாணவர்களும் நம் 
சகோதரர்கள் என்று பாவியுங்கள்.
அடிதடி வேண்டாம்.
பெற்றோர்களைப் பற்றி சிந்தியுங்கள்.
நாடாளும் ஆற்றல் உங்களுக்கு.
நூல்நிலையத்தில்  
படியுங்கள்.
காதல் தேவதைகள் காண உலகை விட்டு 
நிஜ உலக நினைவில் 
முன்னேறுங்கள்.
அறிவு உண்டு; ஆற்றல் உண்டு;
அரியர்ஸ் இருந்தால்  ஹீரோ,
என்ற எண்ணத்தை மாற்றுங்கள்.
கல்லூரி ஆசிரியர் சொன்னதுபோல் 

உங்கள்  திறமை ,ஆற்றல் ,
அன்பை வளர்க்கட்டும்;ஆற்றல் 
நாட்டை வீட்டை மேம்படுத்தட்டும்.

திங்கள், அக்டோபர் 29, 2012

மனசாட்சி உண்டா? நாட்டில் உள்ள பிரச்சனைகளும் ஜாதி பெயரால் அரசியலும்.

நாட்டில்  உள்ள  பிரச்சனைகளும் 
ஜாதி  பெயரால் அரசியலும்.

நாட்டில் கிராமங்கள் காலி ஆகின்றன.

விவசாய  விளை  நிலங்கள் விலை போகின்றன.

விளை  நிலங்கள் குடி இருப்புகளாகின்றன.

விவசாயிகள்  நாட்டின்   முதுகு எலும்புகள்.
அவர்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும்.

அவர்களுக்கு எவ்வித வசதிகளும் இல்லை.

சாலை வசதிகள் இல்லை.

குடிநீர் வசதிகள் இல்லை.

மின்சார வசதிகள் இல்லை.

சுகாதார வசதி இல்லை.

மருத்துவ வசதிகள் இல்லை.

கழிப்பறை வசதிகளில்லை.

இந்த வசதிகளைப்பற்றிய சிந்தனைகள் இல்லை.

புறம்போக்கு  நிலங்கள் பட்டா நிலங்களாகின்றன.

பட்டிதொட்டி எல்லாம்  ஆங்கிலமயம்.
தமிழ் வழியில் படித்தால் 
ஏளனப்பார்வை.
திராவிடக்கட்சிகள்  42 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றன.

இதற்கெல்லாம் போராட ஆட்கள் இல்லை.

சினேகா செருப்புப் போட்டு கிரிவலம் வந்தால் போராட்டம்.

ஒரு நடிகையின் பேச்சுக்குப்போராட்டம்.

கொடும்பாவி எரிப்பு.

 சட்ட மன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் 

முதல்வரை சந்தித்தல் போராட்டம்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியை வெறுத்துப்போராட்டம்.

தங்கள் நிலை உயர்த்தப் போராடும் நாள் எது?

ஜாதிகள் இல்லையடி பாப்பா  பாரதி பாடிய பாட்டு.

 உயர் குலம் தாழ்த்தி  சொல்வது பாவம்.

ஆனால் இன்றும் 67ஆண்டுகளுக்குப் பின்னும் 
 ஜாதிவாரி கணக்கெடுப்பு.
ஜாதிகள் வளர்ப்பவர்கள் 
போடும் வெளிவேஷமே ஜாதி ஒழிப்பு.
ஜாதிக்கட்சிகள்.
ஜாதி சங்கங்கள்.
ஒருகுறிப்பிட்ட  உணவுவிடுதிக்கு  மட்டும் பெயர்  எதிர்ப்பு.

மனசாட்சி உண்டா? 








ஞாயிறு, அக்டோபர் 28, 2012

எல்லாம் அவன் செயல்.

உலகம் அழியாது.
ஆனால் , மனிதனுக்கு  ஆறிலும் சாவு;நூறிலும் சாவு

.இது நிச்சயிக்கப்பட்டது.
 மனித இனத்தில்  ஒரு நேர்மை நிலை  நாட்ட இயற்கை ஏற்படுத்திய   தீர்ப்பு.

 இருப்பினும்  நேர்மை மூழ் கடிக்கும்  போது  இயற்கையின் சீற்றம்;

அது  ஜலப் பிரளயமாகவும் இருக்கலாம்.கடும் பஞ்சமாகவும்

இருக்கலாம்;போட்டி பொறாமை பேராசையால் ஏற்படும்

கொலை,கொள்ளை,கற்பழிப்பாகவும் இருக்கலாம். போராகவும் இருக்கலாம்.

விபத்தாகவும் இருக்கலாம்.நோயாகவும் இருக்கலாம்;

தற்கொலையாகவும் இருக்கலாம்.

அதுதான் ராம-ராவண யுத்தம்;

மகாபாரதப் போர்.

.அங்கங்கு குண்டு
வெடிப்புகள்;

ஜாதிக்கலவரம்;இனக்கலவரம்;மதப்போராட்டம்.

 அப்படியும் மனிதன் திருந்தவில்லை என்றால்

புயல்;சுனாமி; குடும்பத்துக்குள் கலவரம்;

இப்பொழுது  இதுதான் நடக்கிறது.

இவை  மனிதனுக்கு ஆண்டவன்  கொடுத்த எச்சரிக்கை.

அறிவாற்றலால்  வாய்மை ,நேர்மை ,தவறும்  போது  அழிவு.

இது நிச்சயம்.

இது இன்று திரைப்படங்கல்மூலம்  தெய்வம் மனித வடிவம் என்பதற்கு சான்று.

காஞ்சனா  -1,2.  பக்திப்படங்கள்;நீதிமன்றம் ,அரசு;காவல் துறை தூங்கும்  போது   கதாநாயகனால் அழிக்கப்படுவது . எல்லாம் அவன் செயல்.
உலக நாயகன்  கமல்---இந்தியன்.

நேரடி நாம ஜபம். பாபங்களில், துன்பங்களில் இருந்து விடுதலை



இறைவன்  இருக்கிறான்.

அங்கும் இங்கும் எங்கும் இருக்கும் இறைவன்.

தூணிலும் இருப்பான் ,துரும்பிலும் இருப்பான் .

இறைவனை உணரா ஜன்மம் 
உலகில் இல்லை; இல்லை ;இல்லவே இல்லை.
உண்மை அறியாதவர்களுக்கு 
நேரடி உதாரணம்.
கவியரசர்  கண்ணதாசன்.
அவரது அர்த்தமுள்ள இந்து மதம்.
கலைஞர்  குடும்பம் காலஹஸ்தி  பூஜை.
முச்சந்தியில் ,நாற்சந்தியில் 
இல்லை ;இல்லை;கடவுளே இல்லை என்று 
எழுதி சிலைகள் வைத்தாலும்,
பழனி கோயிலின் வருமானம்.
பிரார்த்தனை செய்பவர்களுக்கு 
தானம் தர்மம் செய்பவர்களுக்கு 
சத்தியம் பேசுபவர்களுக்கு,
நிம்மதி!நிம்மதி!நிம்மதி!
ஆழ்  மன தியானம் ,
நமது தவறுகள் உணர்ந்து மீண்டும் 
தவறு செய்யா உறுதி பூண்டு 
செய்யும் தியானம் 
அதில் உணரும் தெய்வீகம்.
துன்பங்களிலிருந்து விடுதலை.
ஆனால் 
நாம்நமது கடமைகளை 
உண்மையாக செய்யவேண்டும்.
கடவுள்  எப்படியும்  எவ்வுருவிலும் காப்பார்.

அருணகிரியார்  வாழ்க்கை  ஓர் உதாரணம்;
திருப்புகழ்   பாடிய பக்தர்.
பக்தரானதும் அவரது வாழ்க்கைப் புனிதமடைந்தது.
வால்மீகி  கொலை,கொள்ளையில் ஈடுபட்ட பாதகர்.
பக்தர் ஆனதும் அமர காவியம்.
ஆனால் 
கடவுளிடம் நேரடித் தொடர்பு வேண்டும்.
முகவர்கள் ,குருமார்கள் வேண்டும்.
ஆனால் ,
கலி யுகத்தில் போலிகள் அதிகம்.
லௌகீக ஆசைகள் 
ஆண்டவனின் முகவர்களை 
வழிமாற்றம் செய்யும்.
பக்தர்களின் மனதிலும் 
மாயை,சாத்தான் குடி கொள்ளும்.
பல வகைகளில் ஆண்டவனின் 
மெய் அடியார்கள் உணர்த்தினாலும் 
உணராத மக்களுக்கு 
உணர வைக்க பகுத்தறிவுப் பாசறை 
 தந்தை பெரியார் ஈ.வே.ரா.
கலைஞரின் வசனம் 
நான் கோயில்களை வெறுக்கவில்லை.
போலி சாமியார்கள்,பூசாரிகள் 
இறைவன் பெயரால் அநியாயம் 
செய்யும் கயவர்களை,காமாந்தகர்களை  வெறுக்கிறேன்.
 தெய்வம்  இருக்கிறான்.
ஆலயங்கள் அதிகம்..
நாங்கள் கடவுளை நம்புகிறோம்.
அதற்கு கலி யுகத்தில் 
ஒரு முகவர் வேண்டாம்.
ஒரு முனிவர் சொன்ன 'ராம்"
முருகா,சிவா, என்ற நாம ஜபம்,
இறைத் தூதர் நபி சொன்ன "அல்லா"
பாபங்கள் சுமந்து முக்தி அளிக்கும் "ஏசு"
நேரடி நாம ஜபம் .
பாபங்களில்,துன்பங்களில் 
இருந்து விடுதலை.
ஆழ்  மன தியானம்.
அதுவே சாந்தி.
ஓம்!ஓம்!ஓம்!
சாந்தி;சாந்தி;சாந்தி;






வெள்ளி, அக்டோபர் 26, 2012

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. வையகம் ஒருநாள் உணரும்;உணரும்; வையகம் ஒருநாள் உணரும்;உணரும்;

 திரை  கடல்  ஓடியும் திரவியம் தேடு.

நம் நாட்டு மக்கள்  வணிகம்,வேலைவாய்ப்பு என 
வெளிநாடுகளுக்கு   செல்கின்றனர்.
அப்பொழுது   அவர்கள் செய்யும் தியாகம்,
சிந்தித்து    பலவகையில் 
நாட்டு மக்களும் ,உற்றாரும் ,நண்பர்களும் 
உதவ வேண்டும்.
ஆனால்  நம் நாட்டின் மன நிலை;
வெளிநாட்டுப்பணம்   முடிந்த அளவு  கர .
என்று பிடுங்கும் கூட்டம்.
அந்நிய நாட்டில்  அலுவல் புரியும் .
அந்த இளைஞர்கள்  வந்தால் 
என்னகொண்டுவந்தார்கள் 
என்று  பார்க்கும் கூட்டம்.
செட்டிநாட்டு அழகு கட்டிடங்கள் பார்க்கிறோம்.
ஆனால் 
கோடிக்கணக்கில் சம்பாத்திதவர்கள் 
எத்தனை ஆண்டு குடும்பத்துடன் 
வாழ்ந்தார்கள் பாவம்.
ஆஸ்திகள் சேர்க்க அவர்கள்  செய்த தியாகம் 
நினைப்பவர்கள் யார்.???
மொழி மறந்து ,இனம் மறந்து,உற்றார் 
உறவினர்மறந்து செல்லவில்லை.
செட்டிமகன் ,கெட்டிமகனாக வாழ்ந்து,
செட்டி தமிழ் என்று தமிழ் வளர்த்த பெருமை.
வையகம் உணர்ந்து போற்றும்.

தமிழ் வாழ் இலங்கைத் தமிழர்கள் 
தமிழ் மொழிக்கு ஆற்றும் தொண்டு,
தமிழ் தமிழ் என்று,
ஆட்சியைப் பிடித்தோர்,
இந்தி எதிர்ப்பு என இளைஞர்களை 
பலியாக்கி 
சிற்றூரிலும் ,பேரூரிலும் 
மம்மி,டாடி , ட்வின்கில் ,ட்வின்க்கில்,
என்று பாட வைத்த பெருமை.
தன்  செல்வங்களை மத்திய அமைச்சராக்கி,
ஹிந்தி பேச வைத்த பெருமை.
அவ்வையின்  அறம்  செய விரும்பு 
பேசினால் ஊழல்கள் எடுபடாது 
என்று 
ரெயின் ரெயின் கோ எவே 
என மழலை அமுதம் 
கேட்கவைத்த பெருமை,
ஏ ,பி,சி,டி, என்ற இருபத்தாறு எழுத்தும்,
ஐந்து ஆங்கில " மீனைப்பிடி,தண்ணீரில் விடு"'
போன்ற ஐந்து பாடல் படிக்க 
குறைந்த பக்ஷம் பத்தாயிரம் ரூபாய்.
தப்பித்தவறி தமிழ் பேசும் 
மழலைகளுக்கு 
தர்ம அடி.அல்லது மிரட்டல்.
அரசியல் சட்டம் ஆங்கிலம் வளர்க்க அல்ல.
நாட்டு மொழிகள் வளர்க்க.
அதை மறைத்து 

ஹிந்தி படித்தல் தமிழ் அழித்தல்  என்ற மாயை.

இந்திய நாட்டில்,
தமிழ் நாடு,பாண்டிச்சேரி  பத்து கோடி மக்கள்.
மற்ற மூன்று மாநிலத்தில் 
26 கோடி மக்கள்.
அவர்கள் ஏற்ற மொழித்திட்டம்.
ஆங்கிலமின்றி  அரசு வேலை என்றால் 
எழுத்தர் வேலை கூட கிடையாது.
ஆங்கிலம்  வளர்க்க 
விடுதலை ஆன 67 ஆண்டுகள்,
நாம்பாடு பட்டிருக்கிறோம்.
தமிழாசிரியர் ஒன்றே தமிழ் வாய்ப்பு.
தேவாரம்பாடு என அரசு வழிகாட்டி.
மண்டபங்களும்,சிலைகளும் கட்டிய  கோடிகள் 
ஆங்கில புத்தகங்கள் மொழிபெயர்த்திருந்தால்.
அலுவலக  விண்ணப்பங்கள் தமிழில் அடித்திருந்தால் 
நாட்டு மொழி வளர்ந்திருக்கும்.
மேடைப்பேச்சில் தமில்வலர்த்து ,(தமிழ் வளர்த்து)
ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி 
தமிழ்  வருமானத்திற்கு வழிவகுக்காது,
என்ற சூழல் உருவாக்கி 
அமைதி காணும் அரசியல் தலைவர்கள்,
வையகம் ஒருநாள் உணரும்;உணரும்;




ய்தி »தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்

Advertisement

Advertisement
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2012,23:59 IST
அருமை
பிடிச்சுருக்கு
பரவாயில்லையே
ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக அளவில் இருப்பதால், அதில் இருக்கும் சிக்கல்களை களைய, "அச்சீவ்மென்ட் டெஸ்ட்' என்ற சாதனை கண்டறியும் சோதனை, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தாய்மொழியான தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதுவதிலும், திறன் இருப்பது கண்டறியப்பட்டது. எந்த அளவுக்கு மாணவர்களின் கற்றல் பயன் அவர்களிடம் சேர்ந்து, அதனால் திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறியும் வகையிலும் வினாத்தாள் அமைக்கப்பட்டது. இதைக் "கற்றல் அடைவு தேர்வு' என, அழைக்கின்றனர்.இச் சோதனைகளில், 20 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த, "கற்றல் அடைவு தேர்வு'களை நடத்தி, தமிழை முழுமையாக எழுதவும், படிக்கவும் முடியாத மாணவர்களை கண்டறியும் பணி, முழு வீச்சாக நடந்து வருகிறது.
தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படிக்கும் மற்ற பாடங்களையும், பிழையின்றி படிக்க முடியும் என்பதால், தமிழ் மொழியை முழுமையாக கற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், பள்ளி நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமை களிலும், நவீன முறைகளில் தமிழ் மொழி எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தாரத்தின்  தவறுகள்
சுட்டிக்கேட்டால்,
இல்லத்தில் இன்னல் தான்.

புயல்  அலைகள்  விண்ணைத்தொடும்.


தாரணி ஆளுவோர் ஊழல்  சொல்ல 
தனியான  தைரியம்  வேண்டும்.
salute to them who are courage to express list of corrupted  ministers.