புதன், ஜனவரி 02, 2013

இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.

எளிய  மொழி 

       படித்தவர்கள்  அனைவரும் புரியும் படியான எளிய மொழிநடையைக் கையாள வேண்டும்.
தங்கள் மொழி அறிவை ,மேதாவித்தனத்தை வெளிக்காட்ட கடின சொற்களை பயன் படுத்துவதால் தான் 
தாய் மொழியான தமிழ் கற்க  அல்லது இந்திய மொழிகள் கற்க இன்றைய மாணவர்களின்  ஆர்வம் 
குறைந்து வருகிறது. ஆங்கிலத்தில் வரும் வாக்கியங்கள் ,சொற்கள் மிக நடைமுறையில் உள்ளதாக இருக்கிறது.
ராமாயணம்,மகாபாரதம்  போன்ற காவியங்களை மூலத்தை விட எளிய உரைநடையில் புரிந்து கொள்வோரே அதிகம்.
வால்மீகி ராமயனத்தைவிட  மக்கள் புரிந்து கொள்ளும் துளசிராமாயணம் வட இந்தியாவில் அதிகம் போற்றி படிக்கப்படுகிறது.
திரைப்பட பாடல்கள் மாணவர்கள் மனதில் பதிவது போல் மனப்படப்பகுதியில் உள்ள பாடல் கடினமாக உணரப்படுகிறது.
பாரதியார்,வாலி,கண்ணதாசன்,வைரமுத்துவின் பாடல்களில் பழமையின் அரிய கருத்துக்கள் எளிய தமிழில் 
அறிந்து கொள்ள முடிகிறது.பொருள் அறியாமல் படித்த வடமொழி பேச்சுவழக்கற்றதாக   மாறியதற்கு ,அறிவியல் மொழியானது 
வெறுப்பிற்கும் ஆளானது அதன் கடினத்தன்மையும் ,தவறான உச்சரிப்பு பாவம் என்பதும்  பரந்த  மனப்பான்மையுடன் 
அனைவருக்கும் கற்பிக்காமல் இருந்தததே.அதன் பலனை நாம் இன்று  உணர்கிறோம்.
ஆங்கிலமும்  இந்தியும் வளர்ந்ததற்கு அதன் பரந்த மனப்பான்மையும் தனித்தன்மை அற்றதும் தான்.
தோய மொழிகள் காலப்போக்கில் அழிந்து விடுகின்றன.தமிழ் வாழ்வதற்கு  ஐம்பெருங்  காவியங்களும் ,ஆதி பகவன் என்ற பிரயோகமே.
சூரியனாரயனார் என்ற பரிதிமாற்கலைஞர்  தனிதமிழ்  நடைப்பற்றாளர்கள்  உறுதியாக இருக்க முடியாமல் இருக்க ஆங்கிலம் கலந்த தமிழுக்கு  மரியாதையும்,இந்திய மொழிச் சொற்கள் கலந்தால்  ஏற்காததும் இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.