புதன், டிசம்பர் 10, 2014

இன்றைய மாணவர்களும் ஆசிரியர்களும் -விரிசல் ஏன்?

    மாணவர்கள்  ஆசிரியர்களை அடிப்பதும் ,

மாணவர்கள்  அடியாட்கள் வைத்து மிரட்டுவதும்

இதற்கு ஆசிரியர்கள்  திறமையின்மை  என்பதும்

மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதும்

இதற்குக் காரணம் ?பணிவு இன்மைதான்.


 ஒருஹிந்தியில் படித்த கதை :--

       ஒரு அரசனுக்கு  படிக்க வேண்டும் என்ற   எண்ணம் வந்தது.

அமைச்சரிடம்  அரசன்  தன் விருப்பத்தை வெளியிட்டதும்.

அமைச்சர்  ஒரு சிறந்த குருவைநியமித்தார்.

 குரு மிகுந்த அக்கறையுடன்  கற்றுத்தந்தார். ராஜா மிகவும்

பணிவுடன் இருந்தும்  கற்பதில் பின் தங்கியே இருந்தார்.

ஒரு நாள் அரசன் மிகவும் பணிவுடன்   குருவிடம்

கேட்டார் --எனக்கு ஏன் படிப்பு வரவில்லை?

 குரு சொன்னார்-- நீங்கள் அரசர் . பதவி அதிகாரம் ,செல்வம் அனைத்தும் உள்ளது.

நீங்கள் அரியணையில் அமர்ந்து ,நான் கீழ் அமர்ந்து கற்றுத்தருவதால்

படிக்க முடியவில்லை என்றார்.

பணிவு  என்பது இருந்தும் உங்கள் உயர்ந்த நிலை ,என் தாழ்ந்த நிலை

உங்கள் படிப்புக்கு இடம் தரவில்லை.

 இது சாதாரண கதை அல்ல.

இன்றைய மாணவர்கள் ஆசிரியர் உறவிலும்  இதே நிலை தான்.