திங்கள், ஏப்ரல் 01, 2013

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

  எனது  குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம். என் அம்மா. பெரியம்மா,சின்னம்மா
பெரியப்பா,சித்தப்பா,அப்பா,இதில் அப்பா மட்டும் சம்பாதிப்பவர். அடுப்படியில் தோசை ஊற்றும் போதே பிய்த்து சாப்பிடுதல்,தங்கள் குழந்தைக்கு முதலில் அழைத்தல், தட்டில் அதிகமாக பரிமாறிவிட்டு அந்த மீதியை சாப்பிடுதல்.இதில் சில சமயங்களில் சில குழந்தைகளும் அம்மாவும் பட்டினி.

இதற்குப் பொருளாதாரமும் சுயநலமும் காரணம். பின்னர் ஆடைகள் வாங்குதல்,பக்கத்துவீட்டுடன் நட்பு,எவ்வளவோ கஷ்டங்கள்.

இதில் சுயநலம் என்பதை விட பாதிப்புகள் அதிகம்.சிலர் செய்யும் கொடுமைகள் அவர்கள் பேச்சு, நடத்தை,நடிப்பு ஊரில் உள்ளவர்களும் சோம்பேறியாக  உழைக்காமல் இருப்பவர்களுக்கே.பாவம் நல்லவன். அவன் நேரம் வேலை கிடைக்கலே. அண்ணன் கள்  மனைவிதானே.குழந்தைகள்தானே என்று பேசும் அளவிருக்கு அக்கம் பக்கத்தில் சொல்லி  மயக்கும் உறவினர்கள். உழைக்கும் அப்பா,அம்மா,குழந்தைகள் தான் கஷ்டப்படுகின்றனர்.
நாங்கள் கூட்டுகுடும்பத்தில் தியாகம் தான் அதிகம். வேதனைகள் தான் மிச்சம்.
ரத்தபாசம் காணப்படவில்லை. பஞ்சபாண்டவர்கள் பங்காளிப்பகை  ஏன் ?
ராமன் காட்டுக்குச் சென்றது ஏன் ? ஔரங்க ஜீப் பேரரசர். ஆனால் அவர் கூட்டுக் குடும்பம் அதிகார வெறி.
ஒரு சிறிய குடும்ப சுற்றில்  எப்படி? வருமானம் வேலை இல்லா காலத்தில்
சரிப்பட்டுவந்தது  கூட்டுக்குடும்பம். ஆனால் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும்
காலத்தில்   சரிப்பட்டுவருமா? ஒருவர் பார்க்கும் தொலைக்காட்சியையே மற்றவர் பார்க்க முடியுமா? ஒருவர் விருப்பம் மற்றொருவர் விருப்பம்...
மிகப்பெரிய சகிப்புத்தன்மை இல்லாமல் இன்றைய சூழலில் கூட்டுக்குடும்பம்
சரிப்பட்டுவராது.