புதன், செப்டம்பர் 10, 2014

மனிதனின் அபூர்வ சக்திகள்.

          ஒரு முறை தேவதைகள் அனைவரும் மனிதனுக்கு  அனைத்தும்  செய்யும் அபூர்வ சக்தி தரும் சக்தி தத்துவத்தை எங்கே ஒழித்து வைப்பது என்று விவாதம் நடத்தினர். அதில் ஒரு தேவதை மலை குகையில் ஒழித்து வைக்கலாம் என்றது.அது மனிதனுக்கு கிட்டாது என்றது.
      மற்றொரு தேவதை கடலுக்குள் வைக்கலாம் .யாருக்கும் எளிதில் கிடைக்காது என்றது.
    இறுதியில் ஒரு தேவதை இல்லை ,இந்த சக்தியை மனதின் ஆழ்மனத்தில் ஒழித்துவைக்கலாம். மனிதனின் மேல் மனம்  பலவற்றை சிந்திக்கும் . ஆழ்மன ஆற்றல் எதுவும் செய்யமுடியும் என்ற சக்தியை உணரமாட்டான் .அதுவே பாதுகாப்பாக இருக்கும்  என்றது. அவ்வாறே   அந்த அபூர்வ  சக்தி  ஆழ்மனதில் புதைந்து உள்ளது.

இதைத்தான்  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கின்றனர்.