வியாழன், ஆகஸ்ட் 23, 2012

இறைவன்.

 
 
இறைவன்.
 
 
ஆறறிவு படைத்த மனிதன்,
 
அகந்தையுடன் வாழ்வதால் ,
 
 
புற மகிழ்ச்சியில்
 
 மதி மயங்கி,
 
நிறைவின்றி,
 
அக  மகிழ்ச்சி இன்றி ,
 
உள்ளத்தில் நிறைவின்றி,
 
உண்மையின்றி ,
 
நேர்மை இன்றி,
 
ஆறடி நிலம்  அல்லது ஒரு பிடி
 
சாம்பலில்  அழியும் 
 
விந்தையை  படைத்தவன்
 
 இறைவன்.
 
 


vinthai ulakam.விந்தை உலகம்


இந்த உலகைப்படைத்த ,
இறைவன் ,

இன்னல்கள் 
தரும் 
இன்பங்களை,
எளிதாக .
மயக்கம் தரும் 
காந்தக் கவர்ச்சியாக 
படைத்து,
மெய்  இன்பத்தில் ,
மெய்யான இ ன்பத்தை,

மறைக்கும்  மாயை படைத்து ,
ஆன்மீக மெய் மார்கத்தை ,
வனங்களில் தபம் செய்யும் 
சன்னியாசிகளிடம் 
நன்னெறி காட்டும் 
அறநெறி
எழுதவைத்து
மனிதனுக்கு  அறிவை கொடுத்து
அவனை அறிவிலி ஆக்கி,
துன்ப சாகரத்தில்
மூழ்கடித்து,
இன்பம் காணும் இறைவனை
ஞானம் பெற்றவன் மட்டும் காணும்
விந்தை உலகம் இது .