புதன், மே 15, 2013

பல்லுப் போனவயதில் பலம் கொடுக்கும் இடுகை.

இடுக்கண்  வாருங்கள் நகுக  என்பது போய் -இன்று

இடுக்கண் களைய  இடுகை இடுக என்று

ஓய்வுபெற்ற பின்   மனதில்  உள்ளதை


கொட்டித் தீர்க்க ,பொழுது போக்க

கூகுல்  வலைத் தளம்.

அரசியல் விருப்பு -வெறுப்பு

அன்றாட பிரச்சனைகள்


செய்தித்தாள் வாரமலர்கள்

வெளியிடவில்லை

நாமாக வெளியிட்டு  படிப்பவர்கள் இல்லை என்றாலும்

இடுகை இட்ட மகிழ்ச்சி முதுமையில்

அதைக் கூறும் போது   மனைவி முதல் மற்றவர்களின்

அலட்சியப்பார்வை, ஒதுக்கப்பட்ட

ஒய்வு பெற்றோர்  உளறல் ;உள்ளக்  குமுறல் ;

மற்றவர்கள் ஒதுக்கும் வயது என்று

இடுகை இடுவதில் இருந்து ஒதுங்கும்

  எண்ணம் வரும் போது

ஒரு பாராட்டும் கருத்துரை ;

ஓஹோ!! நம் இடுகையையும்  படிக்கிறார்கள் என்ற

எண்ணம்; எழுது; என்றாவது யாராவது  படித்துப்

பயன் பெறுவர்  என்ற எண்ணம்.ஒரு ஊக்கம்.

பல்லுப் போனவயதில்

பலம் கொடுக்கும்  இடுகை.

 I THANK THE BRAIN  WHO INVENTED GOOGLE AND BLOGSPOT.

WHICH GIVES HAPPINESS AND STRENGTH ,SELF-CONFIDENCE

FOR RETIRED PEOPLES. THE SOUL ALWAYS BLESS THEM ,