சனி, டிசம்பர் 15, 2012

வளரும் பாரதம். ஆண்டவன் காக்கும் பாரதம்.

பாரத நாட்டில் ஊழல் ,ஊழல் என்றாலும் ,
மக்களும்,மந்திரிகளும் ஊழலுக்கு ஆதரவு என்றாலும்,

நாட்டின் முன்னேற்றம் ,அயல்நாட்டினரை அசரவைக்கிறது.

நாடு என்பதற்கு வள்ளுவன் காட்டிய இலக்கணம்,
மற்றவர்களை நாடக்கூடாது என்பதே.

ஆனால் ,நம் நாட்டின் கல்விமுறை ,
ஆங்கிலேயர் வந்தபின் தான்
அனைவருக்கும் கல்வி என்ற நிலை.
சமவாய்ப்பு,சம அந்தஸ்து என்றாலும்,
அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும்,

புதிய தலைமுறையினர் சிந்தனைக்கும்,
பழைய தலைமுறையினர் சிந்தனைக்கும்
மலை-மடு வுக்கு உள்ள வேறுபாடு.

மதங்களால் மனிதனை  பிரிக்கும்
சுயநல ஆட்சியாளர்கள்,
ஜாதிவெறி தூண்டும் குறுகிய மனநிலையாளர்கள்,
சுய நலத்திற்காக   நாட்டைக்காட்டிக்கொடுக்கும்
நயவஞ்சகர்கள்,நா நயம் தவறுவோர்,
தன்  சகோதரனையே அழித்து  நாட்டின் ஆட்சி பிடித்தோர்,
பங்காளிப் பகைகள்,
மாமன்-மச்சான்  வெறுப்புகள்,
இரக் கமில்லா  ஒரு கூட்டம்,
தன்  மொழி தன் இனம் தன பண்பாடு
தன் கலைகள் அழிந்தாலும்
தன தனம் காக்கும் கூட்டம்,
ஆலயங்களின் ஆஸ்திகள்,
ஆஷ்ரமங்களின் ஆஸ்திகள்,
ஆண்டிகளின் கோலங்கள்,
தியாக உணர்வு,
சுய  நலமில்லா கூட்டம்,
  இதற்கு நடுவில் நாட்டின் முன்னேற்றம்,
அதுதான் இது ஆன்மீக பூமி.
அதிகாரம் இருந்தாலும்,
ஆஸ்தி இருந்தாலும்
இங்கேயே நரகவேதனை
மனவேதனை,
கலியுக தண்டனை.
பாரத பூமி, பழம்  பெரும் பூமி,
இந்நினைவு அகற்றாதீர்கள்,
என்ற பாரதியின் கூற்று.
ஆன்மீகத்தால் வளரும் பாரதம்.
ஆண்டவன் காக்கும் பாரதம்.




வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.

மனிதமனம்

மனிதன்  தன்  கடந்த  காலங்களை  மறந்து

உறவை விரும்பினாலும் சில உறவினர்களின்

பேச்சுக்கள் உறவை துண்டிப்பதாகவே அமையும்.

மலரும் நினைவுகளும்  சுகமளித்தாலும்.

கசப்பான அனுபவங்கள்

ஆழ்மனதில் இருந்து நீங்கி சாதரணமான  நிலைக்கும்

சஹஜ நிலைக்கும் வருவது

கடினம்.
இந்நிலையில் தான்  பட்டினத்தார்
அனைத்தையும் வெறுத்து
ஒட்டைஅப்பம்  வீட்டை சுடும் என்றார்.

இந்த விரக்தியில் தான் சித்தர்கள் நிலை.

சித்தர்த்தருக்கு  சமுதாயத்துன்பங்கள் துறவு நிலைக்குத் தள்ளியது.

மன்னர் பர்த்துஹரிக்கு ராஜசுகம் கசந்தது.

அருணகிரிக்கு நாரிசுகம் ரோகத்தை அளித்து  பக்தனாக மாற்றியது.

சிலர் பிறவியிலேயே தெய்வாம்சம் அடைகின்றனர்.

அசோகர் கொடுங்கோலனாக இருந்து

புத்தமதத்தைத் தழுவிய பின்

மக்கள் போற்றும்  பேரரசர்.

பலர் திருந்துகின்றனர். சிலர் இறுதிவரை அவப்பெயர் .

அவன் ஹரிச்சந்திரன்.அவன் விபீஷணன்.

இவன் கர்ணன். அவன் மைதாஸ் டச்.
பேராசை. இவன் இராவணன்.

இவன் ப்ருடஸ் .(துரோஹி)

எட்டப்பன் பரம்பரை.
செயல் எப்படி மனிதனை உயர்த்திதாழ்த்துகிறது .

காந்தியைத் தாத்தா என்கிறோம்.
நேருவை மாமா என்கிறோம்.
ஹிந்தியில் "சாச்சா "என்கின்றனர்.
காமராஜரை கர்மவீரர் என்கிறோம்.
படேல் இரும்புமனிதர்.
வினைப்பயன் ,மனமாற்றம் மனிதனை மகானாக்குகிறது.












--
Regards,
Anandakr