செவ்வாய், ஜனவரி 17, 2012

palanimalai murgan arputha arul

பழனி மலை முருகனை
பால முருகனை,

பரவசமடைந்து ,,
தரிசனம் செய்து,
கிரிவலம் சென்றால்,
கடம்பப்பூ மனம்
மகிழ்ச்சியும்
தெய்வீக உணர்வும்,
தெவிட்டா இன்பமும்
தெள்ளிய  மனமும்
தெளிவான சிந்தனையும்
தீர்க்க நோக்கும்,
பகதர்களின்
அவன் அருள் பெற்று
பரமானந்தம்  அடையும்
காட்சி அழகன் முருகனை
தஞ்சம் அடையும்
முருகன் அடிமைகள்.
இன்றும்  அதுபோல் ஆனாலும்
இயற்கை மனம் தரும்
இயற்கையோடு இணைந்த
பக்தி  வணிகமயமாக
பலருக்கு வாழ்வழிக்கும்
 மையமாக,
வணிக வளாகமாக,
ஏமாறும் ஏமாற்றும்,
குப்பை கூளங்களும்
கட்டுப்பாடற்ற கட்டுப்பாடும்
கையூட்டும்,கைப்பை இழப்போரும்,
நகை இழப்போரும்,புன்னகை
யோடும் பொன்னகை இழந்து,
உடைமைகள் இழந்தும்,
நம்பிக்கை மட்டும் இழக்காமல்,
திட மனதுடன் வரும்
அடியார்  கூட்டம்,
அவன் அருளும் போக்கு,
இருப்பினும்  அனைத்துமே
அவன் செயல்
கந்தன் கருணை
என
அவன் அடி தஞ்சம்
அடியார்கள் கூட்டம்.
அவன் அருளால் வாழும்
தேவஸ்தான ஊழியர்கள்,
அர்ச்சகர்கள்,
இசை விற்பன்னர்கள்,
போக்குவரத்துக் கழகம்
,கல்லூரிகள்
என ஆறுமுகக்கடவுள்
அருள் கடாட்சம்
சாதுக்கள்,
அவன் நாமம் கூறி யாசிப்போர்
அவன் அருள் பெற்ற சித்தர்கள்
ஆஹா!! அற்புதம்.!!
அவன் கருணை !!1





vanika